marshal nesamony

Father of Kanyakumari District


பின்னூட்டமொன்றை இடுக

மறைக்கப்பட்ட வரலாறு

தாங்கள் எழுதி வெளியிட்ட திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு என்ற நூலைப் படித்தேன். அதில், சுப்பிரமணியபிள்ளை (பி.எஸ்.மணி) கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரின் உறவினர் யோகீஸ்வரன் ஆகிய தாங்கள் நூல் எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த நூல் பி.எஸ். மணி எழுதிய நூலின் மறுவடிவமே தவிர வேறு ஒன்றும் இல்லை. உறவு உறவோடு சேரும், சாதி சாதியோடு சேரும் என்பதற்கிணங்க உங்கள் சாதி வெறியும், உறவும் பற்றும் (பி.எஸ். மணிக்கும் தங்களுக்கும் உள்ள) இந்த நூலில் தெளிவாகத் தெரிகிறது. நான் இதற்கு விளக்கம் எழுதும் போது, சாதிப் போராட்டத்தைத் தூண்டி விடாத மற்ற சாதிகளை அடக்கி ஒடுக்க நினைக்காத, அனைத்துப் பிள்ளைமாரையும் நான் வணங்குகிறேன், மதிக்கிறேன். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அறிஞர் சிதம்பரம்பிள்ளை, திரு. சிவதாணுபிள்ளை, எம்.எல்.ஏ., திரு. சுப்பிரமணியபிள்ளை, திரு. நாராயணபிள்ளை, திரு. சிவன்பிள்ளை, தளபதி காந்திராமன் போன்ற நல்லுள்ளம் கொண்டவர்களை நான் என்றுமே மதிக்கிறேன். வணங்குகிறேன். வரலாறு என்பது கதையோ, கற்பனையோ அல்ல. நடந்த சம்பவமே வரலாறு என்று மு.ஆ. அவர்கள் கூறியிருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது. திருவிதாங்கூர் போராட்டம் என்பது நம்பூதிரிமார்களிடமிருந்தும், நாயர்களிடமிருந்தும், நாஞ்சில்நாட்டுப் பிள்ளைமார்களிடமிருந்தும் விடுதலைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட போராட்டமே திருவிதாங்கூர்- தமிழர் விடுதலைப் போராட்டம். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் தமிழர்களுக்குச் செய்த கொடுமையைக் கண்ட கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள்கூட “நஞ்சினும் கொடியோன்” நாஞ்சில் நாட்டு வெள்ளாளன் என்று கூறினார். அன்று நம்பூதிரிகளின் நோக்கத்தை நிறைவேற்றும் கருவிகளாக நாயரும், வெள்ளாளரும் செயல்பட்டனர். இச்செயல் பாடுகளினால் தமிழ்மொழியுடன் சமஸ்கிருதம் கலந்து மலையாள மொழி உருவாயிற்று. தமிழரசர்கள் கொல்லப்பட்டு அல்லது அவர்களை வனவாசம் போகவைத்து மலையாளிகள் ஆட்சி பீடம் ஏறினர். இளவரசர்கள் களிப்பான்குளத்தில் கொல்லப்பட்டனர். தமிழ் மக்கள் விலங்குகளைவிடக் கேவலமாக நடத்தப்பட்டனர். மன்னர்கள் பலர் நஞ்டே;டிக் கொல்லப்பட்டனர். இவ்வாறு பல்வகையான கொடுமைகளி லிருந்து விடுதலையடைவதற்காக நடத்தப்பட்ட போராட்டமே திருவிதாங்கூர் தமிழர் போராட்டம். உங்கள் இன முன்னோர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் செய்த கொடுமைகளைச் சொல்ல முடியாது.
தாழக்குடி என்ற ஊரில் மாடத்தி என்ற பெண்மணியை ஏரில் மாட்டுடன் பூட்டி உழுது கொன்றுவிட்டார்கள். உங்கள் முன்னோர் நாடார், சாம்பவர், பறையர், மீனவர் மற்றும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த மக்களின் வீடுகளை நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள். இராஜாக்கமங்கலத்தில் வீட்டோடு வைத்து எரித்துக் கொன்ற ஏழை நாடார் குடும்ப நிகழ்வுகள் சாட்சி சொல்லும். எந்த அரசு வந்தாலும் அந்த அரசுக்குச் சாதகமாக நடந்து மற்றவர்களைக் காட்டிக்கொடுத்து உங்கள் பதவிகளைத் தக்க வைப்பீர்கள்.
அரசர் ஆண்டால் அரசர் பக்கம், காங்கிரஸ் ஆண்டால் காங்கிரஸ் பக்கம், தி.மு.க. ஆண்டால் தி.மு.க. பக்கம், அ.தி.மு.க. ஆண்டால் அதன் பக்கம், இந்து முன்னணி ஆண்டால் அதன் பக்கம், இப்படி ஆளும் பக்கத்தில் நின்று செழித்து வாழ்கிறீர்கள். கோவில் தெற்குத் தெரு முதல் சினிமா வரை நீங்கள்தாம். தமிழ் தேசியத்திலும் நீங்கள்தாம். இந்தியத் தேசியத்திலும் நீங்கள்தாம். இவ்வாறு பலமுகங்காட்டும் மந்திர வித்தை உங்களைத் தவிர இந்த உலகில் வேறு யாருக்கும் தெரியாது.

இப்போது கூடக் கேரளம் சென்றால் நாஞ்சில் நாட்டு வெள்ளாளன் “நாம் ஒரே இனம்” என்றும் தமிழகம் வந்தால் “தமிழர்கள் நாம்” என்றும், நடத்தும் பித்தலாட்டம் நாடகம் உலகில் நாஞ்சில்நாட்டுப் பிள்ளைமார்கள் தவிர வேறு எவருக்கும் கைவராது. திருவிதாங்கூர் போராளிகள் நாங்கள்தாம் என்றும் கூறுகிறீர்கள். நீங்;கள் அதிகம் வாழக்கூடிய தோவாளைத் தொகுதியில் என்றைக்காவது ஒருநாள் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதுண்டா? ஆனால் அதற்கு மாறாகத் தமிழரை அழித்த பட்டம் தாணுபிள்ளை வேட்பாளரே என்றும் வெற்றிபெற்றுள்ளார். இந்நிகழ்வு பாராளுமன்றத்தில்கூடக் கேள்வி கேட்கப்பட்டது. பாருங்கள் உங்களுடைய தமிழ்ப் பற்றும் திருவிதாங்கூர் தமிழர் போராட்டத்தின்பால் உள்ள பற்றும் இந்த நிகழ்வின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். பேரா. யோகீஸ்வரன் பிள்ளை அவர்களே, நீங்கள் தமிழர்களின் போராட்டக் காலத்தில் திருவிதாங்;கூர் தமிழ்நாடு காங்;கிரசிலிருந்து ராஜினாமா செய்த திரு. பி.எஸ்.மணி அவர்களைப் புகழ்ந்து எழுதுகிறீர்கள். திரு. பி.எஸ். மணி அவர்கள் எப்போதாவது திருவிதாங்;கூர் தமிழ்நாடு காங்கிரசில் நிரந்தர உறுப்பினராக இருந்ததுண்டா? சாதிப் பற்றால் எதையும் வரலாறாக எழுத முடியுமா? திருவிதாங்;கூர் போராட்ட வழக்கில் இவர் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இவர் சிறைக்குச் செல்லவில்லை. இவர் தொடுத்த “நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்” என்ற நூல் வழக்கில் சிறைச்சான்றிதழைக் காட்டலாம் என்று கூறியவர் முடிவில் சிறைச்சான்றிதழைக் காட்ட அவரால் முடியவில்லை. எப்படி இவர்களெல்லாம் தியாகியானார்கள் என்பதைப் பின்னால் எழுதுகிறோம். உங்கள் நூலிற்குப் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் எந்த மனதுடன் “நடுநிலை நூல்” என்று எழுதினார் என்பது எங்களுக்கு விளங்கவில்லை. அவர் ஏமாற்றப்பட்டிருப்பார் என்று தோன்றுகிறது.

தாங்கள் எழுதிய நூல் எங்களுக்கு வியப்பைத் தரவில்லை. நீங்கள் இப்படித்தான் எழுதுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். பி.எஸ். மணியின் 70 ஆவது பிறந்தநாள் விழா மலரில், தியாக வேள்வியில் தங்;களை ஒப்புக்கொடுத்த எங்;கள் தலைவர்களைப் பற்றி; நீங்;கள் எழுதும்போது எம்.எல்.ஏ.க்களை எம்.பி.க்களை மிக மட்டமாக எழுதியிருக்கிறீர். ஆகையால் நீங்கள் இப்படித்தான் எழுதுவீர்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். பி.எஸ். மணியின் வேண்டுதலுக்காக வரலாறு எழுதியிருக்கிறீர். அரசு உங்கள் கையில். அதிகாரிகள் உங்கள் கையில். நீங்கள் எதுவும் எழுதலாம். ஆனால், உண்மைகள் ஓர் நாளில் ஓங்காரம் செய்யும். அது உங்கள் காதில் நின்று ரீங்காரம் செய்யும். தமிழனையும் தமிழையும் ஏமாற்றாதீர்கள். குமரித் தந்தை மார்சல் நேசமணி மற்றும் அவருடன் பல்வேறு நோக்கங்களோடு இணைந்து வஞ்சகமாகச் செயல்புரிந்தவர்களின் தோல்களை உரித்துக்காட்டிய ஜனாப் அப்துல் ரசாக் எழுதிய “நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்” என்ற நூலை முழுமையாக படித்த பிறகு பழ. நெடுமாறன் அணிந்துரை
தந்திருப்பாரேயானால் அவர் ஓரளவுக்காவது நடுநிலைப்பாட்டை கடைப்பிடித் திருப்பார். ஆனால் அவர் செய்தது ஒரு தலைப்பட்சக் காதல்.

அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ்:-

நாஞ்சில் நாட்டு மத்திய வாலிபர் சங்கம் என்பது வெள்ளாளர் சாதி
கோட்பாடு கொண்ட ஒரு கூட்டம். சாதி வெறிப்பிடித்த ஒரு அரக்கக் கூட்டம்.
பிடாகைக் கூடும்போது, சுசீந்திரத்தில் யார், யாரை தண்டிக்கலாம் என்று ஆள்
தேடிக் கொண்டிருக்கும் ஒரு கும்பல். அந்தக் கும்பலிலிருந்து உருவான சங்கம்
மத்திய வாலிபர் சங்கம். இந்தச் சங்கம்தான் பிறிதொரு நாளில் நாஞ்சில்
தமிழர் காங்கிரஸ் எனப் பெயர் மாற்றம் பெற்றது. மாபெரும் தமிழறிஞர் திரு.
சிதம்பரம் பிள்ளை அவர்களின் ஆலோசனையோடு திரு. நதானியேல்
தலைமையில், தியாகி காந்திராமன் முன்னிலையில் அகில திருவிதாங்கூர்
தமிழர் காங்கிரஸ் எனப் பெயர் மாற்றம் பெற்றது. “டம்ளர் டம்ளர் பார்ட்டி” என்று
மற்றவர்கள் கிண்டல் செய்த காரணத்தினால் “அகிலத் திருவிதாங்கூர் தமிழன்
காங்கிரஸ்” எனப் பெயர் மாற்றம் பெற்றது. இந்தப் பெயர் நதானியேல் எழுதிய
கடிதங்கள் பல நூற்களில் வந்துள்ளன. இது ஒரு அரசியல் இயக்கம் அல்ல.
மருத்துவாழ் மலையில் 6.7.1947 அன்று கூடிய கூட்டத்தில் திவான் சர்.
சி.பி. இராமசாமி ஐயரின் கோட்பாட்டை ஆதரிப்பதா? வேண்டாமா? என்ற
கருத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு உடைந்து சிதறியது இந்த இயக்கம்.
இதன் தலைவர் நதானியேல் சோசியலிஸ்ட் பார்ட்டியில் சேர்ந்து தொழிலாளர் நலனுக்காகப் பாடுபடச் சென்றார். இதன் செயலாளர் வேலாயுதம் பிள்ளை ஆசிரியர் பணிக்குச் சென்றார். இதன் பொறுப்பாளர்களில் பலர் ஸ்டேட் காங்கிரசில் (மலையாளி காங்கிரஸ்) இணைந்தனர் . சில பொறுப்பாளர்கள் தமிழரசுக் கழகத்தில் இணைந்தனர். திரு. பி.எஸ். மணியும் தமிழரசுக் கழகத்தில் 21.07.1947 அன்று சேர்ந்தார். அகில திருவிதாங்கூர் தமிழன் காங்கிரஸ் மருத்துவாழ் மலை நிகழ்ச்சிக்குப் பிறகு
செயல்பட்டது என்று எந்த வரலாற்றுத் திருடனும் கூறமாட்டான். ஆனால்,
யோகீஸ்வரன் பிள்ளை ஆகிய நீங்கள், உங்கள் உறவினர் பி.எஸ். மணிக்கு
வேண்டிக் கற்பனையாகப் பி.எஸ். மணி எழுதியதையே மேற்கோளாகக்
காட்டி வரலாறு எழுதியுள்ளீர்கள். நீங்கள் எழுதலாம். உயர்சாதிக்காரர்கள்
எங்கும் பேசலாம், யாரும் தடை செய்யமாட்டார்கள்.
ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், மூதறிஞர் இராஜாஜி, ராம்
மனோகர் லோகியா, கிருபாலனி போன்ற தலைவர்களோடு சரியாசனத்தில்
இருந்து பேசும் எங்கள் இதயமெல்லாம் குடிகொண்ட ஜனாப் அப்துல் ரசாக்கின்
எழுத்தைக் கிண்டல் செய்திருக்கிறீர்கள். உங்கள் உறவினர் பி.எஸ். மணி
பிள்ளையும் நீதிமன்றம் வழியாக அவர்எழுதிய “நேசமணி ஒரு சரித்திரத்
திருப்பம்” நூலைத் தடைசெய்திட முயன்றார். நீதி நிலைத்தது. மணியின்
வழக்குத் தள்ளுபடியானது.
06.07.1947 மருத்துவாழ் மலைக் கூட்டத்திற்குப் பின்னால்,
கட்சி உடைந்து போன பிறகு, தலைவர்கள், செயலாளர்கள் கட்சியைவிட்டுச்
சென்ற பின்னால் பி.எஸ். மணி 21.07.1947 இல் சுமார் 15 நாட்க்களுக்குள்
தமிழரசுக் கழகத்தில் சேர்ந்தார். அங்கே அவருக்குப் பதவிகள்
கொடுக்கப்பட்டன. அதன் பிறகுப் பல இயக்கங்களில் இவர் தலையைக்
காட்டியுள்ளார். ஆனால் தமிழரசுக் கழக வளர்ச்சிக்காகத் தொடர்ந்து குமரிப்
பகுதியில் ஈடுபட்டார். பல இயக்கங்களில் உறுப்பினராக இருந்தார். இவற்றை
உங்களால் மறுக்க முடியுமா. பொய்யை வரலாறாக எழுதாதீர்கள். இந்தியத்
தலைவர்களில் ஒருவரான அப்துல் ரசாக்கையா நீங்கள் கிண்டல்
செய்கிறீர்கள்? உங்களால் தியாகி என்று சாதி மோகத்தால் வர்ணனை
செய்யப்படுகின்ற பி.எஸ். மணி திருவிதாங்கூர் தமிழர் போராட்டத்தில்
எங்கிருந்தார் என்பதை நீங்கள் படித்து மகிழுங்கள். இதையும் மறைக்க
முடியுமா என்று பாருங்கள். இவர் பல சங்கங்களின் உறுப்பினர்
பி.எஸ். மணியின் உறவினர்களான சில பேராசிரியர்கள் அவர் இறுதி
வரை திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசில் இருந்தார் என்று வரலாறு
எழுதுகிறார்கள். இது உண்மையல்ல.

1) 1938 ஆம் ஆண்டில் சமஸ்தான காங்கிரசின் உறுப்பினராகச் சேர்ந்தார்
(மணி 70 சிறப்பு மலர், 1987, ப. 6).
2) திரு. சோமையாஜுலு 1943 இல் நெல்லையில் தொடங்;கப்பட்ட
காங்கிரஸ் சங்கத்தில் தொடக்ககால உறுப்பினர்களில் இவரும்
ஒருவர். (சிறப்பு மலர், ப. 1)
3) 1943 இல் நாஞ்சில் நாட்டு வாலிபர் மத்திய சங்கம் என்ற அமைப்பில்
3 நபர்களில் பி.எஸ். மணியும் ஒருவர். 1943 ஆம் வருடம் பி.எஸ். மணி
4 அணா கொடுத்துக் காங்கிரசில் உறுப்பினர் ஆனார். (மணி 70
நிறைவு சிறப்பு மலர், 1987).
4) நாஞ்சில் தமிழர் காங்கிரஸ் அமைப்பாளர்களில் ஒருவர் (மேலது,
ப. 9).
5) நதானியேல் தலைமையில் உருவான (1945 டிசம்பர் 16 ) அகில
திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் கட்சியில் ஒருவர். (மேலது)
6) அகிலத் திருவிதாங்கூர் தமிழர் காங்கிரசை, அகிலத் திருவிதாங்கூர்
தமிழன் காங்கிரஸ் என்று பெயர் மாற்றம் செய்தபோது அதிலும்
உறுப்பினர். (நதானியேல் கடிதம், 11 மார்ச் 1946).
7) மருத்துவாழ் மலைக்கூட்டம் 06.07.1947 (திருவிதாங்கூர்
தமிழன் காங்கிரஸ் கலைக்கப்பட்டது). அதன் செயலாளர்
வேலாயுதம் ஆசிரியர் பணிக்குச் சென்றார். அதன் தலைவர்
நதானியேல் சோசியலிச இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்
கொண்டு தொழிலாளர் நலனுக்காகப் பாடுபடச் சென்றார்.
பொறுப்பாளர்களில் ஒருவரான பி.எஸ். மணி சில
நாட்களுக்குள் சுதந்திர திருவிதாங்கூர் இயக்கத்திலும் அதன்
பின் தமிழரசுக் கழகத்திலும் தன்னை இணைத்துக்
கொண்ட்டார்.;.;. (நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்,மணி 70 சிறப்பு மலர்)
8) 1947 இல் திவான் சர்.சி.பி. இராமசாமி ஐயர், சுதந்திர திருவிதாங்கூர்
என்ற இயக்கத்தை உருவாக்கிய போது 19.01.1947 இல் திரு. பி.எஸ்.
மணி அதில் கலந்து கொண்டார் (மணி 7,0 நினைவு சிறப்பு மலர்,
ப. 125).
9) 1947 ஜூலை 21 இல் தமிழரசுக் கழகத்தில் திரு. பி.எஸ். மணி குமரி
மாவட்டக் கன்வீனர். தமிழரசுக் கழகத்தின் தொடக்கக் காலத்தில்
உறுப்பினராகச் சேர்ந்தார். (மேலது). (அதாவது மருத்துவாள்
மலை கூட்டம் முடிந்த 15 நாட்களுக்குள்)

10) 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் நாள் ஆலன் மண்டபத்தில்
நேசமணியின் தலைமையில் கூடிய அரசியல் இயக்கக் கூட்டத்தில்,
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை ஆரம்பித்த போது, இதுதான்
தமிழரின் ஒரே ஸ்தாபனம் என்று வருணனை செய்தவர். ஞஅன்றைய
பெரும் தலைவர்களில் ஒருவரான _. எ. நேசமணி தலைமை தாங்க
_. எம். சிவதாணுபிள்ளை வரவேற்க பி. சிதம்பரம்பிள்ளை
பிரசங்கிக்கத் தமிழர்களின் ஒரே ஸ்தாபனம் தி.த.நா.கா. என்று
ஆரவாரத்துடன் தீர்மானிக்கப்பட்டது.ஞ என்று பி.எஸ். மணி வர்ணனை
செய்துள்ளார். (1954 ஆகஸ்ட் 15, தினமலர்)
11) 1947 நவம்பர் 9 இல் தமிழரசுக் கழக முதல் மாநாடு ம.பொ.சி.
தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 300
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். திரு. பி.எஸ். மணியும் அதில்
கலந்து கொண்டார்.
12) 1950 செப்டம்பரில் வட ஆற்காட்டில் திருப்பத்தூரில் தமிழரசுக் கழக
மாநாடு நடைபெற்றது. திரு. பி.எஸ். மணி அதில் கலந்து கொண்டார்.
13) குடம் சின்னத்தை உடைய திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசுக்கு
எதிராக 1951 இல் போட்டித் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற
கட்சி உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சியின் செயலாளார் பி.எஸ். மணி
ஆவார் (மணி 70 சிறப்பு மலர், ப. 127).
14) 1951 இல் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியில் உறுப்பினர் ஆனார். இதன்
சார்பாகச் சட்டசபைக்கும் போட்டியிட்டு டெப்பாசிட் இழந்தார். அங்கும்
கருத்து வேறுபாடால் வெளியே வந்தார்.
15) 1951 ஜனுவரி 14 ஆம் தேதி அன்று சென்னைச் சிந்தாதிரிப்பேட்டையில்
தமிழர் திருவிழா நடைபெற்றது. திரு. பி.எஸ். மணி அதில் கலந்து
கொண்டார்.
16) 1954 ஜுன் மாதத்தில் நாகர்கோவிலில் நடைபெற்ற தமிழரசுக் கழக
2 நாள் மாநாட்டில் திரு. பி.எஸ். மணி முக்கிய பங்காற்றினார்.
17) 1954 ஆகஸ்ட் 14 இல் திருச்சி மாநிலத் தமிழரசுக் கழகப்
பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதிலும் பி.எஸ். மணி கலந்து
கொண்டார்.
18) 1964 இல் காங்கிரஸ் உறுப்பினராக அன்றைய முதல்வர் காமராசரின்
முன்னிலையில் சேர்ந்தார் (மணி 70 சிறப்பு மலர், ப. 24).

19) திரு. பி.எஸ். மணி வெள்ளாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.
(மணி 70 சிறப்பு மலர், ப. 213).
20) திரு. பி.எஸ். மணி, இந்து முன்னணி மாநாட்டில் தலைமை தாங்கினார்
(மணி 70 சிறப்பு மலர், ப. 20).
21) தி.மு.க. விலும் திரு. பி.எஸ். மணி (மணி 70 சிறப்பு மலர், ப. 245)
தோழர்களே ழூ சிந்தித்துப் பாருங்கள். இவர் எங்கிருந்தார் என்று.
தமிழரசுக் கழகத்தில் கலந்து கொண்டது தவறு என்று யாரும்
கூறமாட்டார்கள். ஏனென்றால், வட எல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. யின்
பங்கு மகத்தானது.

 

நேசமணி தலைமையில் நடந்த விடுதலைப்

தோழர்களே ழூ சிந்தித்துப் பாருங்கள். இவர் எங்கிருந்தார் என்று.
தமிழரசுக் கழகத்தில் கலந்து கொண்டது தவறு என்று யாரும்
கூறமாட்டார்கள். ஏனென்றால், வட எல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. யின்
பங்;கு மகத்தானது. நேசமணி தலைமையில் நடந்த விடுதலைப்
போராட்டத்தில் சொற்பொழிவு ஆற்றி இங்குள்ள போராளிகளுக்கு ஊக்கம்
தந்துள்ளார் ம.பொ.சி. ஆனால், திருவிதாங்;கூர் தமிழ்நாடு காங்;கிரஸ்
போராட்டத்தில் பங்குபெற்றேன் என்று கூறிய பி.எஸ். மணி எங்குப் பங்கு
பெற்றார் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நேசமணியும்
ஜுனியர் வழக்கறிஞர்களும் எழுதிய சட்டத்தில் திருவிதாங்கூர் தமிழ்நாடு
காங்கிரஸ் உறுப்பினர்கள் வேறு இயக்கங்களில் இருக்கக் கூடாது என்று
கட்சியின் சட்டம் கூறுகிறது. ஆனால் இவர் எங்கு உறுப்பினராய் இருந்தார்
என்பதை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

காண்டிராக்ட் வேலையில் பி.எஸ். மணி (1956 வரை காண்டிராக்ட்
வேலையில் ஈடுபட்டார்)
திருவிதாங்கூர் போராட்டத்திற்காகத் தன்னுடைய காண்டிராக்ட்
வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு வந்ததாகக் கூறுகிறார். ஆனால்,
மதிப்புமிகு காந்திராமன் அவர்களுக்கு 18.3.1956 ல் எழுதிய கடிதத்தில்
“உங்களை வந்து பார்க்க வேண்டும் என்று நான் தினம், தினம் எண்ணுகிறேன்.
ஆனால் முடிவதில்லை. சில காண்டிராக்ட் வேலைகளில் மாட்டிக்கொண்டதே
காரணம்” என்று கடிதம் எழுதுகிறார். இதிலிருந்து அவர் 1956 வரை
காண்டிராக்ட் வேலைகளைச் செய்து வந்திருக்கிறார் என்பது தெளிவு.
ஆனால், தான் அந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டதாக அவரும்
எழுதுகிறார். அவருக்கு வேண்டியவர்களும் எழுதுகிறார்கள். அவர்
முதலிலிருந்து கடைசிவரை திருவிதாங்;கூர் தமிழ்நாடு காங்;கிரசில்
இருந்ததாக எழுதுகிறார்கள். ஆனால், அவர் கடைசி வரை திருவிதாங்கூர்
தமிழ்நாடு காங்கிரசில் இருக்கவில்லை. அவர் 15.03.1956 போராட்டத்தின்
உச்சக் காலக்கட்டத்தில் பி.எஸ். மணி திருவிதாங்;கூர் தமிழ்நாடு
காங்கிரசிலிருநது; இராஜினாமா செயது; விடடு; வெளியேறினாh.; மடடு; மலல் hமல்
தன்னுடைய பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பல தோழர்களுக்குக் கடிதம்
எழுதி விலகச் செய்தார். மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய காந்திராமன்
அவர்களுக்கும் கடிதம் எழுதினார். கொண்ட கொள்கையை வெற்றிபெறச்

செய்ய வேண்டும் என்ற நிலையிலிருந்த காந்திராமன் அவர்கள் இவருடைய
வேலைப் பாடுகளுக்குப் செவிசாய்க்க வில்லை.
இவ்வாறு பி.எஸ். மணி பல அரசியல் கட்சியில் உறுப்பினர். இதனை
ரசாக் எம்.பி. தன்னுடைய நூலிலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நூல் பெயர் – தியாக தீபங்கள், ஆசிரியர் ஆத்திவிளை தியாகி ஆ.
சிங்காராயர், வெளியிட்டோர் – ஆறுமுக ராகேல் பதிப்பகம், நெய்யூர், நாள்
25.12.2000. போராட்டத்தில் எந்தப் பங்கும் பெறாதவர்களான நாஞ்சில் நாட்டுப்
பிள்ளைகள் பலர் ஜெயில் அத்தாட்சி இல்லாமல் நூற்றுக்கும்
அதிகமானவர்கள் அரசிடமிருந்து பென்சன் வாங்குவதில் முந்திக் கொண்டனர்.
இதில் சிறப்பு என்னவெனில், போராட்ட வேளையில் வெறும் 5 வயதான ஒரு
பிள்ளைக்கும் தியாகிகள் ஊதியம் கிடைத்ததுதான் வேடிக்கை.
தியாகி ஆ. சிங்காராயரின் கண்ணீர் கடிதம்

“எனது கண்ணீர் வாழ்க்கையில் இதுவும் ஒன்று. இந்து மத பக்தரான
கு. ஆறுமுகம் நாடார் அவர்களுக்கும் கிறிஸ்தவ பக்தரான ஞா. ராகேல்
அம்மை அவர்களுக்கும் ஐந்தாவது மகனாக நான் நெய்யூர் ஆத்தி விளையில்
20.08.1921 ஆம் ஆண்டு பிறந்தேன். எனது அரசியல் பொது வாழ்க்கையில்
இந்திய நாட்டின் விடுதலைக்கு மதுரையில் 15.08.1942 இல் சிறை சென்று
விடுதலை பெற்றாலும் குமரி மாவட்ட விடுதலைக்கு 09.08.1954 இ;ல் சிறை
சென்று 13.08.1954 இல் திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடிபட்டுச்
சித்திரவதைக்கு உள்ளாகிப் பல்லுமிழந்து விடுதலைப் பெற்ற போதிலும்
07.09.1958 இல் தியாகிகள் வாழ்வின் நலனுக்காகக் குமரி மாவட்ட விடுதலைத்
தியாகிகள் சங்;கம் அமைத்த நாள் முதல் 42 வருடங்;களாக எனக்கு
ஏற்பட்டுள்ள சோதனைகள் வேதனைகள் பழிச்சொற்கள், இழிச்சொற்கள்,
புறங்கூறல், பரிகாசங்கள், கவலை, கண்ணீர், பசி, பட்டினி, கவலையின்
மிகுதியால் ஏற்பட்ட நோய்கள் மட்டுமா, மாத உதவி கிடைக்க நாட்கள்
சென்றதால் சில நன்றிகெட்ட தியாகிகள் என்னைப்படுத்திய கொடுமைகளும்
வேறுசிலர் என்னைக் கேவலமாகப் பேசியதும், பேசிவிட்டுச் சட்டையையும்
கிழித்துக் குடையும் முறித்துக் கீழே தள்ளிபோட்டதையும் நினைத்துப்
பார்க்கும் போது போராட்டத் தலைவர்களான மார்சல் நேசமணி,
குஞ்சன்நாடார், சிதம்பரநாதன் நாடார் போன்றவர்களை நினைத்துக்கூடப்
பார்க்காத தியாக தீபங்களை 1958 ல் நினைத்துப் பார்க்க வைத்த கடவுளிடம்
நான்தான் என் வேதனைகளைச் சொல்லிக் கண்ணீர் வடித்தேன். கடந்த 42
வருடங்களுக்குள் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சியில் 3 தடவையாக
300 க்கு அதிகமான திஜயாகிகளும், விதவைகளுமாக (தியாகிகளின்
மனைவிமார்) மாத ஓய்வூதியம் 3015 ரூபாயும் விதவைகள் 1515 ரூபாயும்
வாங்கி வருவதில் ஏழை விதவைகளைத் தவிர மற்றவர்கள் என்னை மறந்து
விட்டார்கள்.”
கலைஞர் கொடுத்த தியாகிகள் பென்சன், கலைஞர் ஆட்சி
கலைக்கப்பட்டவுடன் தமிழினத் துரோகிகளால் நிறுத்தி வைக்கப்பட்டது.
தியாகிகள் பென்சன் பட்டபாட்டை நாம் பார்ப்போம். இன்று தமிழ்த்தேசம் என்று

சொல்லிக் கொண்டு சாதி தேசம் பேசும் அரசியல்வாதிகள் பி.எஸ். மணி
(சுப்பிரமணிய பிள்ளை) அவர்களின் சொற்கேட்டு வரலாறு எழுதிய அவரது
உறவினர் பேராசிரியர் யோகீஸ்வரர், இவரைப் போன்ற பேராசிரியர்கள்
வரலாற்றைத் திருத்தி எழுதுகிறார்கள் என்பதை முந்தைய கட்டுரையில் நாம்
கண்டோம். பி.எஸ். மணி, ஆர்.கே. ராம் ஆகியோர்கள் அகில திருவிதாங்கூர்
தமிழன் காங்கிரஸ், மருத்துவாழ் மலையில் வைத்து உடைபட்டபோது மணி
தமிழரசுக் கழகத்தில் சேர்ந்தார். பல்வேறு அரசியல் கட்சிகளில் அங்கம்
வகித்தார். இடையிடையே நேசமணியால் உருவாக்கப்பட்ட திருவிதாங்கூர்
தமிழ்நாடு காங்கிரசில் தலையைக் காட்டினார். நேசமணிக்கு, ‘அன்ப்புளஜள்ள்ள
லீடர்’; என்று கடிதம் எழுதினார். குமரித் தந்தை என்று பெயர் டே;டினார். ஜீவா,
நேசமணி போக்குவரத்துக் கழக போராட்டத்திற்குப் பின்னால் அகண்ட
தமிழகத்திற்கு வித்திட்ட நேசமணியைத் தமிழை மறந்தவன் தாயை
மறந்தவன், வீட்டுக்கொரு தமிழன் நாட்டைக்காக்கப் புறப்படுக, என்று
சங்கநாதம் முழங்கிய நேசமணியை, பல கட்சிக்குத் தாவியவர்கள் நாய்
என்றும், அவர் வரலாற்றைச் சாக்கடை என்றும் வரலாறு எழுதியுள்ளனர்.
அப்படிப்பட்டவரை இனப் பற்றின் காரணமாகப் பி.எஸ் மணி 70 ஆவது
ஆண்டுவிழாவில் எழுதிய கட்டுரையைப் புத்கமாக எழுதியுள்ள திரு.
யோகீஸ்வாரன், புகழ்ந்து எழுதட்டும் கவலையில்லை. தமிழ்த் தேசியவாதிகள்
ஏன் புகழந்து எழுதுகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. இங்கேதான்,
தமிழ்த் தேசியம் பேசுவோர் சாதி தேசியத்திற்குள்ளும் அடைபட்டுக்
கிடக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இவர்களுக்கு இரு முகம். ஒரு முகம்
தமிழ்த் தேசியம், மறு முகம் சாதி தேசியம். இவர்களால் எப்படித் தமிழ்த்
தேசியத்தைப் பெற்றெடுக்க முடியும். ஆகையால்தான், மு.ஆ. அவர்கள்
தமிழ்த் தேசியம் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டுப் பிறக்க வேண்டுமானால்
சங்ககாலத்தில் உயர்நிலையிலிருந்து பிற்காலத்தில் தாழ்ந்த நிலைக்கு
ஆரிய இனத்தால் தாழ்த்தப்பட்ட பள்ளர், பறையர் இனத்தைச் சார்ந்த ஒரு
உண்மையான தியாகி தலைமை தாங்க வேண்டும் என்கிறார்.
திருவிதாங்கூர் போராட்டத்தில் இறந்துபோன தியாகிகளுக்கும்
சிறைசென்ற தியாகிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மதிப்பு அளிக்க
வேண்டும் என்று எண்ணிப் போராடுவதற்காகத் தியாகிகள் சங்கத்தைத்
தோற்றுவித்தார் தியாகி ஆ. சிங்காராயர். கலைஞர் கருணையுடன்
தியாகிகளைப் பாராட்டி ஓய்வூதியம் கொடுத்தார். ;சிறைச்சான்றிதழ் பெற்ற
தியாகிகளுக்கு மட்டுமே ஓய்வூதியம் இருந்தது. தியாகம் செய்யாத போலித்
தியாகிகள் தங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில்
அரசு அ;திகாரிகளைப் பிடித்துக் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டவுடன்
ஓய்வுதியத்தை நிறுத்தினர்.

அதன்பின் நடந்த கொடுமையைப் பாருங்கள். நீங்கள் கல்லூரி
அல்லது பல்கலைக்கழகத்தில் படித்து வெற்றி பெற்றால்தான் பி.எ. அல்லது
எம்.எ. பட்டம் கிடைக்கும் 2 பி.ஏ. படித்தவர்கள் என்னுடன் இவர் பி.ஏ. படித்தார்
என்று எழுதித்தந்தால் பி.ஏ. பட்டம் கிடைக்காது. இதுபோன்று எம்.ஏ. யும்
முறையாகப் படித்தால்தான் பட்டம் கிடைக்கும். 2 எம்.ஏ. படித்தவர்கள் இவர்கள்
என்னுடன் எம்.ஏ. படித்தார் என்று கூறினால், எம்.ஏ. பட்டம் கிடைக்காது.
அதைத் தயாரித்து யாராது வேலைக்குச் சென்றால், சிறைச்சாலை கதவு
திறந்து “வா மகனே வா” என்று வரவேற்கும். ஆனால் இங்கே பாருங்கள், 2
எம்.எல்.ஏ. க்கள் அல்லது 2 தியாகிகள் என்னுடன் சிறையில் இருந்தார் என்று
எழுதிக்கொடுத்தால் உடனே அவர்கள் தியாகிகள் ஆக்கப்பட்டார்கள். பி.எஸ்.
மணி அவர்களின் 70 ஆவது பிறந்த நாளில் வரலாற்றில் நிகழாத ஒரு
கொடுமை தமிழகத்தில் நடந்தது. இதற்கு வழியாட்டியாக இருந்தவர்கள்
திரு. ம.பொ.சி., திரு. அவ்வை நடராசன், திரு. சிலம்பொலி செல்லப்பன், பி.எஸ்.
மணியின் பிறந்த நாள் விழாவில் 1000 ரூபாய் கொடுத்தவரெல்லாம்
தியாகிகள். அதுவும் ஒரு குறிப்பிட்ட சிலரிடமிருந்து பிரிக்கப்பட்டது. அந்த
வேதனையைச் சிங்காராயரின் வாயாலேயே கேட்போம்.
படியுங்கள் 85 வயதான தியாகி ஆ. சிங்காராயர் (29.08.2005 திங்கள்
ஆத்திவிளை-நெய்யூர் – 629 802). நாட்டுப்பற்றும் தாய்மொழித் தமிழ்ப்பற்றும்
பாசமும் தன்னைப் போல் பிறரும் வாழ்ந்து வளம் பெற வேண்டும் என்று
நினைத்து நடக்கக்கூடிய தமிழகத்தின் தன்மானத் தமிழர்களுக்கு
“இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகியும், கன்னியாகுமரி மாவட்ட
விடுதலைப் போராட்டத் தியாகியும், குமரி மாவட்ட விடுதலைத் தியாகிகள்
தலைமைச் சங்கத் தலைவருமான தியாகி ஆ. சிங்காராயராகிய எனக்கு
இன்று (29.08.2005) 85 வயது பிறந்த நாள். இந்த நன்னாளில் என்னுடன் நின்று
சங்க வளர்ச்சிக்கு 07.09.1958 லிருந்து இரவு பகலாகப் பாடுபட்டு வந்த 45
தியாகச் செம்மல்களுக்கு ஒரு சாதி வெறியனின் சூழ்ச்சியின் கொடுமையினால்
மாத ஓய்வூதியம் கிடைக்காமலே கண்ணீரோடு இறந்து போன துயரச்
செய்திதான் எனது பிறந்த நாள் செய்தியாகும்.”

அன்புடையீர்,
“கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைய நடந்தப்
போராட்டத்தின் போது நான் 09.08.1954 ல் (என்னுடன் மூன்று பேர்கள்) தமிழை
ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்று இ;ரணியல் உதவிப் பதிவாளர்
அலுவலகம் சென்று மறியல் செய்தேன். போலீசார் என்னைக் கைது செய்து
இரணியல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் 13.08.1954 இல் என்னைத்
திருவனந்தபுரம் மத்திய சிறைக்குச் கொண்டு சென்றனர். அங்கு என்னைப்

போலீசாhர் அடித்து உதைத்துச் சித்திரவதை செய்ததில் பல்லுகளும்
உடைக்கப்பட்டுப் பின்னர் நான் ஒரு நோயாளியாக விடுதலைப் பெற்றேன்.”
“7.09.1958 இல் குமரி மாவட்ட விடுதலைத் தியாகிகள் சங்கம்
துவங்கப்பட்டது. என்னைப்போல் சிறையில் சித்திரவதை அடைந்தவர்க்கு
உதவிகள் பெறுவதற்காகத் தமிழக முதல்வரான காமராஜர், பக்தவல்சலம்,
அண்ணாத்துரை போன்ற முதல்வர்களிடம் சென்று உதவிகள் கேட்டும்
உதவிகள் கிடைக்கவிலலை. நான்காவதாகத் தமிழக முதல்வராக வந்த
கலைஞர் கருணாநிதி அவர்களிடம் சென்று உதவிகள் கேட்டதில்
18.10.1974 -ல் புதுக்கடையில் முதல்வர் வந்து இறந்த குடும்பத்தினர்களுக்கும்
சிறைச் சென்ற சான்றை வைத்து 64 பேர்களுக்கு உதவிகள் கிடைத்தன.
உதவிகள் கிடைக்காதவர்களுக்கும் விரைவில் உதவிகள் செய்து
தருகின்றேன் என்று முதல்வர் வாக்குறுதி தந்த நேரத்தில் கலைஞர் ஆட்சி
1976 ஏப்ரலில் கவிழ்க்கப்பட்டது. மாத ஓய்வூதியம் வாங்கி வந்தவர்களின்
பணமும், நிறுத்தப்பட்டது.”
“மேலும் உதவிகள் எல்லோருக்கும் கிடைப்பதற்காக நாங்கள் தமிழக
ஆளுநரிடமும் அரசு அதிகாரிகளிடமும் அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும்
குமரி மாவட்டச் சட்டமன்ற உறுப்பினர் அனைவர்களிடமும் வாரத்தின் திங்கள்
தோறும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் 50 பேர்கள் 60 பேர்கள் 100 பேர்கள்
150 பேர்கள் வரை (இதில் கணவரை இழந்த விதவைகளும் வருவார்கள்)
ஆட்சித் தலைவர்களிடம் சென்று மனுவும் கொடுத்துக் குறைகளைச்
சொல்வது மட்டுமா? இன்னும் ஆர்ப்பாட்டங்கள். இரண்டு தடவைகளில்
உண்ணாவிரதம் நடத்தி அரசிடம் உதவிகள் கேட்டோம். ஒருநாள்
ஆட்சித்தலைவரிடம் 15.07.1986 இல் கன்னியாகுமரியைத் தமிழ்நாட்டுடன்
இணைக்க நாங்;கள் அணு அணுவாகச் செத்துக் கொண்டிருக்கிறோம்.
இணைப்பிற்கு எங்களை மலையாள போலீசாரிடம் காட்டிக் கொடுத்தவர்கள்
இப்போது எங்களைப் பார்த்துக் கிண்டலும், கேலியும் செய்கிற நிலையில்
தமிழக அரசு எங்களை மறக்கலாமா? என்று நாங்கள் ஆட்சித் தலைவர்
எல்.கே. திரிபாதி அவர்களிடம் வேதனைப்பட்ட போது ஆட்சித்தலைவர்
கூறியது. நான் உங்களுக்காக அரசிடம் வேண்டிய நடபடிகள் எடுத்தாலும்
நீங்கள் தமிழக முதல்வரை நேரில் பார்த்து உதவிகள் கேட்பது உங்களுக்கு
மிகவும் நலமாக இருக்கும் என்றார்கள்.
“நாங்கள் ஏழு பேர்கள் அவரவர் செலவுகளில் சென்னை சென்று
19.11.1986 ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்த்து 435 பேர்களின்
பட்டியலைக் கொடுத்துக் குறைகளைப் பேசும் போது முதல்வர் கூறியதாவது,
நீங்கள் தந்த பட்டியல்படி எல்லோருக்கும் உதவிகள் செய்யத் தமிழ் வளர்ச்சிப்
பண்பாட்டுத் துறையிடம் இன்றே சொல்கிறேன் என்றார்கள். நாங்;கள்
சந்தோஷப்பட்டு வணக்கத்துடன் விடை பெற்றோம்.”

“முதல்வரைப் பார்த்த செய்தி பல பத்திரிகைகளிலும் வெளிவந்தது.
நாங்கள் முதல்வரைப் பார்த்தச் செய்தியைக் கேள்விப்பட்ட நாகர்கோவிலைச்
சார்ந்த பெருமாள் பிள்ளையின் மகன் சுப்பிரமணி என்ற பி.எஸ். மணி என்பவர்
எங்கள் கண்ணீரில் வளர்ந்து வரும் சங்கத்தின் பேரில் பொறாமையும்
எரிச்சலும் பட்டு; சென்னைக்கு ஒரே ஓட்டமாக ஓடித் தமிழ் வளர்ச்சிப்
பண்பாட்டுத் துறையிலுள்ள மிகப் பெரிய பொறுப்பான பதவியில் இருக்கும்
தலைவர் ம.பொ. சிவஞான கிராமணியும், அரசுச் செயலாளர் அவ்வை
நடராசரையும் இயக்குநர் சிலம்பொலி செல்லப்பா ஆகிய மூன்று
பேர்களையும் நாகர்கோவிலுக்குக் கூட்டி வந்து, ஒழுகினசேரியிலுள்ள
மணியின் தந்தையின் நினைவிலுள்ள பெருமாள் திருமணமண்டபத்தில்
வைத்து மணியின் 70-வது பிறந்த நாள் நாடகம் ஒன்றை 29.09.1987 –ல் நடத்தி
மூன்று அதிகாரிகளும் சகுனி மணியை வாழ்த்தி, புகழ்ந்து பாராட்டிப்
பேசியதோடு மணி கொடுத்த மிகப் பெரிய சுவைமிகுந்த விருந்திலும்
பங்குகொண்டு சிரித்து மகிழ்ந்து, பேச வேண்டியவற்றை எல்லாம் பேசிவிட்டு
வாங்;கவேண்டிய பரிசுகளையெல்லாம் வாங்;கிவிட்டுக் கன்னியாகுமரி
கடலையும் பார்த்துவிட்டு மறுநாள் காலையில், சூரியனின் உதயத்தைப்
பார்த்து வணங்கியபின், மூன்று அதிகாரிகளும் மாலைநேரம் சென்னைக்குப்
புறப்பட்டுச் சென்று, தமிழ்வளர்ச்சிப் பண்பாட்டுத் துறைக்குச்
சென்றடைந்தனர்.”

தியாகிகளைக் கண்ணீர் சிந்த வைத்தார் அரசுச் செயலாளர் அவ்வை
நடராசர்
“சென்னை வந்தடைந்த அரசுச் செயலாளர் அவ்வை நடராசர்
கையொப்பத்துடன் முன் தியதியிட்ட 141 பேர்களுக்கு 14.04.1997 முதல்
ஓய்வூதியம் ரூ.250 வழங்;கும் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
வெளிவந்த பட்டியலின் நகல் ஒன்று குமரி மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு. எல்.கே. திரிபாதி அவர்கள் எங்களுக்கும் (சங்கத்திற்கும்) தந்தார்கள்.
பட்டியலை நானும் சங்க உதவி செயலாளரான எஸ். ராமனும் படித்தோம்.
படித்ததில் 30 வருடங்களாக உதவிகள் கிடைக்க, அமைச்சர்களையோ,
ஆளுநர்களையோ, மாவட்ட ஆட்சித்தலைவர்களையோ பார்க்க
வந்தவர்களுடைய பெயர்களோ, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங் களில் பங்கு
கொண்டவர்களுடைய பெயர்களோ இந்த 141 பேர்களின் பட்டியலில் இடம்
பெறவே இல்லை.”
70 வயதை நினைவுப்படுத்தும் பெருமாள் பிள்ளையின் மகன் பி.எஸ்.
மணி என்ற வெள்ளாளருடைய பெயர் மேற்கூறிய 141 பேர்கள் பட்டியலில் 70
ஆவது எண்ணில் இருந்தன. 109 ஆவது பெயராக ரவீந்திரன், சித்திரஞ்சன்
தாஸ் பெயரும் இருந்தன. இன்னும் மணியின் நண்பர்களின் பெயர்களும்
இருந்தன. சங்கத்தைக் காட்டிக் கொடுத்த எதிரிகள் பெயர்களுமிருந்தது.

அரசிடமிருந்து உதவிகள் கிடைக்கப் பிந்தியதினால் சங்;கத்தையும்
என்னையும் கேவலமாகப் பேசித் திரிந்தவர்களுடைய பெயர்களுமிருந்தன.
சில விதவைகளின் பெயர்களுமிருந்தன. மணியின் கூட்டாளிகளுடைய
பெயர்களுமிருந்தன. வெளிவந்த பட்டியலினுள் மூன்று பெயர்களைத் தவிர
மீதமுள்ள அனைவர்களும் முன்னைய சட்டமன்ற உறுப்பினர்களின் சான்றை
வைத்துதான் மாத உதவிகளும் பஸ் பாசும் வாங்கி வருகின்றனர். அன்று 250
ரூபாய் வாங்கியவர்கள் இப்போது 3015 ரூபாய் வாங்கி வருகிறார்கள்.”
“மேற்கூறியவர்களுக்கு மாத ஓய்வூதியம் கிடைத்த நேரத்தில் தமிழக
முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் உயிரோடு இருந்திருப்பார் களேயானால் நான்
தந்த பட்டியலுக்கு என்ன நடபடிகள் எடுத்தீர்கள்? என்று கேட்டுவிட்டுச்
கடமையை விட்டு வழி தவறிப்போன அரசுச் செயலாளர் டாக்டர் அவ்வை
நடராசரை சாதி வெறியரான பி.எஸ். மணியோடு வீட்டிற்கு அனுப்பி
வைத்திருப்பார்கள். சண்டாளர்கள் செய்த துரோகச் செயல்களை மாவட்ட
ஆட்சித் தலைவரிடம் சென்று கூறி அழுதோம். ஆட்சித் தலைவர் எங்களை
ஆறுதல் படுத்தினார்கள்.

நடந்த அநியாயங்;களைச் சென்னைக் கோட்டைக்கு மனுவும்
தந்தியும் அடித்தும் எந்தவிதமான பதிலுமில்லை ழூ உதவிகளுமில்லை.
அநியாயங்களைச் செய்த சாதி வெறி கொடுமைகளினால் உதவிகள்
கிடைக்காத (நடந்த உண்மை நிலை தெரியாத) சில தியாகிகள் பி.எஸ்.
மணியிடம் சென்று எங்;களுக்குப் பென்சன் கிடைக்கவில்லை என்று
கேட்டபோது அவர் சொன்னது, சிங்;கராயனுக்கு நீங்;கள் பணம்
கொடுத்திருக்க மாட்டீர்கள். பணம் கொடுத்தவர்களுக்கு அவன் பென்சன்
வாங்கிக் கொடுத்திருப்பான் என்று சொன்னதைக் கேட்டவர்கள் வந்து
என்னைப் படுத்திய வேதனைகள், என்னைத் தக்கலையில் வைத்தும்
தொடுவெட்டியில் வைத்தும் கருங்கலில் வைத்தும் புதுக்கடையில் வைத்தும்
டே ழூ சிங்காரா . . . நீ கள்ளன்மார்களுக்கும் சிறையே காணாதவனுக்கும்
பென்சன் வாங்கிக் கொடுத்திருக்கா . . . எங்களைக் கொன்று போட்டாய் . . .
நீயும் பென்சன் வாங்கிவிட்டாய். உன்னைக் கொல்லாமல் விடவே மாட்டோம்
என்று . . . என்னைக் கேவலமாகப் பேசி அடிக்க வந்தர்களுமுண்டு.
வேறொருவன் எனது கையிலிருந்த குடையையும், வாங்கிப் பறித்து முறித்துப்
போட்டவனுமுண்டு. ஒருவன் எனது சட்டையையும் பிடித்து இழுத்துக் கிழித்துப்
போட்டுவிட்டு வாயில் வந்தவாறு பேசினதுமுண்டு. எனது வாழ்க்கையின்
ஆரம்பமே சிலுவைப் பயணம் தான். ஆகவே, என்னை ஒருவன்
கொல்லுவதைப் பற்றியோ . . . கண்ணீர் சிந்த வைப்பதைப் பற்றியோ எனக்குக்
கவலையே இல்லை எனது கவலையெல்லாம் என்னை நம்பி என்னுடன் நின்று
பல வருடங்களாக இருந்து பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும், பசி,
பட்டினி, கடன்களையும், வேதனைகளையும் அனுபவித்து வந்தவர்களுள் 45
பேர்களுக்கும் கொலை பாதகர்கள் பென்சன் கிடைக்காமல் ஆக்கியது
மட்டுமா? உங்களுக்குப் பென்சன் கிடைத்திருக்கிறது. எங்களுக்கு பென்சன்
கிடைக்கவில்லையே என்று கேட்டவர்களிடம் இந்தச் சதிகாரத் துரோகி
சொன்ன பதிலைக் கேட்டவர்கள் என்னை அடிக்கவும் கொல்லவும் வந்த
செயலை நான் நினைத்துப் பார்க்கும் போது இவனைத் தியாகி என்று
சொல்லவும் முடியாது. மனித வர்க்கத்தையே சேர்ந்தவனல்ல. சாதி வெறி
பிடித்த அரக்கன் என்றே சொல்வேன்”

பென்சன் வாங்காமல் இறந்த தியாகச் செம்மல்களின் பெயர்கள்
“1). பி. சின்னத்தம்பி, 2) ஏ. சண்முகம்பிள்ளை, 3) பி. சிதம்பரம்,
4) எம்.ஐ. மரிய செபஸ்தியான், 5. எஸ். மாணிக்கம், 6) எம். தாசையன்,
7) வி. ஜெபமணி, 8) என் மரியதாஸ், 9) எஸ். கணேசன், 10) ஓய் மாணிக்கம்,
11) எம். தாசையன், 12) பி. ஜெபமணி, 13) என். மரியதாஸ், 14) எஸ். கணேசன்,
15) ஒய். சகாயம், 16) பி. தற்மசகாயம், 17) டி. செல்வம், 18) டி. தாமஸ்,
19) ஏ. மரிய வியாகப்பன், 20) ஜெ.எல். சவுந்தரம், 21) ஏ. சாமிநாடார், 22) என்.
தேவதாஸ், 23) ஜீ. மோசஸ், 24) எஸ். ஆண்டார் பிள்ளை,
25) டி. ஜெபஸ்தியான், 26) கே. லூக்காஸ், 27) பி காசியுதயம்,
28) ஏ. சுப்பிரமணி வைத்தியர், 29) ஜெ. தங்கையன், 30) எஸ். முத்துநாயகம்,
31) சி. செல்லம், 32) ஏ. அருளப்பன், 33) எஸ். செல்வக்கண், வழக்கறிஞர் ஜெ.
நேசமணி, வழக்கறிஞர் எஸ்.டி. மோசஸ், ஜெ. பீட்டர் ஜாண்சன், வி.எம்.
ஜாண்றோஸ், எஸ். ஆரீஸ், ஒய். டானியல், ஏ.கே. செல்லையா, எஸ்.டி. மணி,
டி. ஜாண்சன், எஸ். கோவிந்தராஜ், வித்வான் ம. தாமஸ், எஸ். ஜொசப்.ஞ
ஞமேற்கூறிய 45 பேர்களும் ஒரு நாளாவது மாத ஓய்வூதியம் வாங்கி
சாப்பிட்டு விட்டு இறந்திருப்பார்களேயாகில் நான் கலைப்படவும் மாட்டேன்.
கண்ணீர் சிந்தவும் மாட்டேன். இவர்கள் சங்கம் தொடங்கிய நாள் முதல்
இவர்கள் ஒன்றோடொன்றாக இறப்பது வரையிலும் என்னுடன் சேர்ந்த
சங்கத்தைச் சாகவிடாமல் கட்டிக் காத்து வளர்த்தவர்களாகும். மேலும்
இவர்களில் சிலர் நான் இந்த வருவாய் இல்லாத சங்கத்தை எ;பபடி நடத்தப்
போகிறேனோ என்று கவலைப்பட்ட நேரங்களிலெல்லாம் என்னைக்
கவலைப்படாதீர்கள், நாங்கள் எப்போதும் உங்களுடனே இருந்து
வருவதினால் ஏன் நீங்கள் கவலைப்பட வேண்டும் என்று ஊக்கமும்
உற்சாகமும் சிறு உதவிகளும் பல தடவைகளில் தந்து என்னை வழிநடத்தி
வந்த தியாகச் செம்மல்களாகும்.”
ஞநானும் இறந்த இவர்களுடன் செல்வது வரையிலும் சாதி வெறியன்
சண்டாளன்யூதாஸ்-சகுனி மனித பண்பாடற்ற அரக்கன் பி.எஸ். மணி
செய்துள்ள துரோகச் செயல்களை எழுதிக் கொண்டும் சிறு-சிறு நூல்களாக
வெளியிட்டுக் கொண்டும் தான் இருப்பேன்.ஞ

மேற்கூறியவர்களின் மரணத்திற்குப் பின் கலைஞர் அரசு சகல
விதிமுறைகளையும் தளர்த்தி 01.01.2000 ம் முதல் கணவரை இழந்த
விதவைகளுடன் சேர்த்து 142 பேர்களுக்கு மாதஓய்வூதியம் ஆண்களுக்கு
3015 ரூபாயும் விதவைகளுக்கு மாத ஓய்வூதியம் 1515 ரூபாயும் வழங்க அரசு
ஆணையிட்டுள்ளது. அவர்களில் 1) வி. அரிச்சந்திரன், 2) ஏ. தாசையன்,
3) ஜெ.ஜெ. தாஸ், பி. தங்கராஜ், டி. ஜாண் பொன்னையா, வழக்கறிஞர் எம்.
சுப்பிரமணியபிள்ளை, ஆசான் ஏ. நாராயணன் நாடார், வி. முத்துவிநாயகம்,
டி. பிச்சையா, ஜெ. Nசை, டி. யோவான், ஜி. மரிய செபஸ்தியான், பி. ஜாண்
பாலையா, பி. ஆப்ரகாம், ஜெ. சத்தியதாஸ், கே.பி. ஆறுமுகம்,
17) ஓய். இரத்தினதாஸ், ஏ.டி. ராஜ், கே. தங்கப்பன், பி. தங்கமணி (பி.ற்றி. மணி)
விதவைகள் 21 முத்தாபரணம் செல்வம், கமலம் தங்கையன், ஜெபரெத்தின
அருள்ராஜ், மரிய புஷ்பம் தங்கையா, ஜெபரெத்தினம் அருள்ராஜ், மரிய
புஷ்பம் தங்கையா ஆகியோர்கள் பலமாதங்களாவது மாத ஓய்வூதியம்
வாங்கிச் சாப்பிட்டுவிட்டுத் தான் இறந்தார்கள். இவர்களைப் பற்றிச் சிறிது
நிம்மதி அடைந்தாலும் மேல்கூறிய 43 பேர்களும் மேற்கூறிய பட்டியிலிலுள்ள
சுட்டிக் கட்டிய வேறு சிலர் அரசு ஆணைகள் கிடைத்தும் ஓய்வூதியத்தை
வாங்குவதற்கு முன்னரே இறந்து விட்டவர்களும் இவர்களைப் போலாவது மாத
உதவிகள் வாங்கிவிட்டு இறந்திருப்பார்களேயானால் நான் கூடுதல்
கவலையும் வேதனையும் அடைந்திருக்கவே மாட்டேன்.”

குறிப்பாகச் “சண்டாளன் பி.எஸ். மணி என்பவர், சான்றோர் குல நாடார்களான
குமரித் தந்தை மார்ஷல் நேசமணி அவர்களுக்கும், கண்ணீரில் 1958 லிருந்து
வளர்ந்து வந்த தியாகிகள் சங்கத்திற்கும், எனக்கும் (சிங்காராயராகிய
எனக்கும்) செய்துள்ள கொலைப் பாதகச் செயல்கள் அவர் சாதியான
கவிமணி. தேசிகவிநாயகம் பிள்ளைக்கும் – முத்துக்கருப்ப பிள்ளைக்கும்
செய்திருப்பார்களேயாகில் இந்தச் சாத்தானை அவர் சாதியினர் அவர் பிறந்த
ஊரில் வைத்திருப்பார்களா? இதனைப் பகுத்தறிவாளர்கள் சிறிது சிந்தித்துப்
பார்க்க வேண்டும் என்பதுதான் எனது பிறந்தநாள் பரிசாகத் தமிழக மக்களின்
கமலப் பாதங்;களில் (19.08.2005) ல் கவலையோடும், கண்ணிரோடும்
படைக்கிறேன்.”
மார்சல் நேசமணி கைதாவதிலிருந்து தப்பித்துக் கொண்டார் என்ற
பொய்யைச் குமரி மாவட்டக் கெஜட்டியரில் பதிவு செய்துள்ளார்கள். அதற்குத்
தகுந்த சான்றிதழ் கொடுத்த பிறகும், இன்னும் திருத்தி எழுதப்படவில்லை.
ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு, தியாகம் இப்படித்தான் பதிவாகும் என்பதை
இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். தங்களின் நூலில் ம.பொ.சி. யுடன் பி.எஸ்.
மணியும் நேசமணி வீட்டிற்குச் சென்றதாகவும், ஆனால் ரசாக் நேசமணியின்
வீட்டிற்கு ம.பொ.சி. யும் தானும் சென்றதாகக் கூறுவது பொய் என்று

எழுதியிருக்கிறீர்கள். நாங்கள் அந்த வீட்டில் விசாரித்த போது ம.பொ.சி. யும்
அப்துல் ரசாக்கும் வந்ததாகக் கூறுகிறார்கள். இதனை நேரில் கண்ட
தியாகிகள் கூட இந்தச் செய்தியையே பதிவு செய்கிறார்கள். அது மட்டுமல்ல,
நேசமணி வீட்டிற்குப் பி.எஸ். மணி செல்ல முடியாது. காரணம், நேசமணியின்
தலைவர்களும் சிறையில் இருக்கும் போது திருவிதாங்கூர் தமிழ்நாடு
காங்கிரசைக் கலைத்துவிட்டு, தமிழரசுக் கழகத்தோடு இணைப்பதற்குப்
பெரிதும் முயன்றார். ஆனால், அது நடைபெறவில்லை. மேலும், தமிழகத்தில்
பிரித்த பணத்தைக் கட்சியின் தலைமைக்குக் கொடுக்கவோ, தான் செலவு
செய்தால் அதற்குரிய ரசீது கொடுக்கவோ இல்லை. ஆகையால், நேசமணி
வீட்டிற்குப் பி.எஸ். மணி செல்ல முடியாது. நேசமணி வீட்டில் அவர் மகனிடம்
விசாரித்தபோது ரசாக், ம.பொ.சி. வந்ததாகவே கூறினார். துப்பாக்கிச் சூடு
நடந்தபோது இன்றைய குமரி மாவட்டப் பகுதிகள் அனைத்தும் 144 தடை
உத்தரவு போடப்பட்டிருந்தது. காவல்துறையினர் நகரசபைத் திடல்,
நாகராஜாகோயில் திடல், இப்போதைய பொன்னப்பநாடார் திடல் போன்ற
பகுதிகள் எல்லாம் காவல்துறையினர் தாவளம் அடித்துத் தங்கினர். நான்கு
பேர் நின்றாலே கைது செய்வார்கள். மதிப்புமிகு தோழர் ஜீவா அவர்கள்
பீதியுற்று இங்குள்ள நிலைமையைக் கண்டு கடுக்கரை மலைப்பகுதிகள்
வழியாக நெல்லை சென்றார். அப்படிப்பட்ட கொடூரமான காலம். போலீசார்
துப்பாக்கியுடன் தென் திருவிதாங்கூர் முழுதும் சுற்றித்திரிந்த நேரம்.
இப்படிப்பட்டநேரத்தில் பி.எஸ். மணி தலைமை தாங்க ம.பொ.சி. பேசினார்
என்றால் உலகத்தில் இதைவிட நகைச்சுவை வேறு ஒன்றும் இல்லை. ஆனால்,
திரு. யோகீஸ்வரன் அவர்கள் இக்கூட்டத்தைக் கண்டதாகத் தன்னுடைய
நூலில் எழுதுகிறார். இந்த நகைச்சுவைக்காக நாமும் சிரிப்போமா? நீங்கள்
பதில் தந்தால் அந்தப் பதிலையும் சேர்த்து நூலாக வெளியிடுவோம். உங்கள்
பதிலை எதிர்பார்க்கிறோம்.
நேசமணியையும் மற்றவர்களையும் விடுதலை செய்ய வேண்டி
நடந்த போராட்டத்திற்குத் தலைமை ஏற்றவர்கள்
திரு. எம். வில்லியம், டி.டி. டானியல், பி. தாணுலிங்கம் நாடார்,
ஆர். பொன்னப்பன் நாடார், பி. ராமசாமி பிள்ளை, எஸ்.எஸ். சர்மா, எம்.டி.
அனந்தராமன், சி. கோபால கிருஷ்ணன், என். நூருமுகமது (துணை
வேந்தர்), ஏ.எம். சைமன், ஏ. குஞ்ஞன் நாடார் (சர்வாதிகாரி),
ஏ. காந்திராமன், வி. அருளப்பன் போன்றோர் போராட்டத்திற்குத் தலைமை
ஏற்றுச் சிறைச் சென்றனர். இப்போராட்டம் 11.08.1954 வரை நடைபெற்றது.
சின்னையன் பட்டாளம், பொன். சின்னத்தம்பி போன்றோரைப் பிடித்து
அடித்து மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கொண்டுபோய்
விட்டனர். போராட்ட வீரர்களுக்குத் திருவிதாங்கூர் நீதிமன்றத்தில்
ஜாமீன் கிடைக்காத காரணத்தால் உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்று
மைNர் நீதிமன்றத்தில் வாதாடி ஜாமீன் வாங்கினார் நேசமணி. ஒரு
மாநில வழக்கை இன்னொரு மாநிலத்தில் நடத்தலாம் என்று முதல்
முதல் வழிகாட்டியவர் மார்ஷல் நேசமணி. இந்தப் போராட்டத்தில் தாக்குப்
பிடிக்க முடியாத பலர் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசிலிருந்து
ராஜினாமா செய்தனர். அவர்ளில் ஒருவர் திரு. பி.எஸ். மணி.
தமிழ் மண்ணுக்காக உயிர்நீத்த தியாகச் செம்மல்கள்
1948 ஆம் ஆண்டு பெப்ருவரி 8 ஆம் நாள் மூன்று பேர்
பலியாயினர். 1. ஏ. தேவசகாயம், மங்காடு, 2. தி. செல்லையா, கீழ்க்குளம்,
3. கத்திக்குத்தில், பாகோடு என்னும் ஊரைச் சார்ந்த ஒருவரும்
பலியானார். 1954 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் நாள் நேசமணி
விடுதலையை, நாடு விடுதலைத் தினமாகக் கொண்டாடிய போது
துப்பாக்கிச் டே;டில் பலர் பலியானார்கள். 1. புதுக்கடை ஏ. அருளப்பன்
நாடார் 2. கிள்ளியூர் எம். முத்துசாமி நாடார் 3. தோட்டவாரம் எம். குமரன்
நாடார், 4. புதுக்கடை எம். செல்லப்ப பணிக்கர், 5. தேங்காய்ப்பட்டணம்
ஏ. பீர்முகமது, 6. தொடுவட்டி சி. பப்புப் பணிக்கர், 7. நட்டாலம் எஸ்.
இராமையன் நாடார், 8. மணலி, தோட்டவிளை ஏ. பொன்னப்பன் நாடார்
9. தோட்டவிளை, மணலி எம். பாலையன் நாடார். மேலும்
இப்போராட்டத்தில் சங்கரன்நாடார் என்பவர் கிணற்றில் வீசிக்
கொல்லப்பட்டார். வண்டி ஏற்றி ஒருவர் கொல்லப்பட்டார். பனை
உச்சியிலிருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார். மொத்தம்
36 பேர் பலியானதாகச் சான்றுகள் கூறுகின்றன. இவர்கள் தவிரப் பல
தியாகிகள் வயிற்றில் மிதிபட்ட காரணத்தால் திருமணம் செய்ய முடியாத
நிலையை அடைந்தனர். பலருடைய கை, கால்கள் முடமாக்கப்பட்டன.
பலருடைய பற்கள் அடிபட்டுத் தெறித்தன. இத்தகைய மாபெரும்
போராட்டத்தின் காரணமாக 1956 நவம்பர் 1 அன்று திருவிதாங்கூர் தமிழ்ப்
பகுதிகளில் நாலரைத் தாலுகாக்கள் தமிழகத்தோடு இணைந்தன.
கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம்,
செங்கோட்டையில் பாதி. இணைந்த பகுதிகளுக்கு நேசமணி
கன்னியாகுமரி என்று பெயர்டே;ட அன்றைய முதல்வர் காமராசரிடம்
வேண்டினார். காமராசரும் கன்னியாகுமரி என்று பெயர் டே;டி மகிழ்ந்தார்.
குமரித் தந்தை நேசமணி அவர்கள் 1968 ஆம் ஆண்டு ஜுன் 1 ஆம் நாள்
நம்மை விட்டுப் பிரிந்தார்.

நேசமணிக்கு, பட்டப்பெயர்கள் டே;டியவர்கள்
மாவீரன் – ம. பொ. சி.
மார்சல் – ஜனாப் எ. அப்துல் ரசாக், எம்.பி.
திருத்தமிழகச் சிற்பி – மாதேவன்பிள்ளை
குமரித்தந்தை – பி. எஸ். மணி
பெரியவர், வக்கீல் – வழக்கறிஞர்கள்
தமிழரின் நேசமணியே- கல்கி
தென்னெல்லைக் காவலன்- தியாகி. ஆ. சிங்காராயர்
(விடுதலைத் தியாகிகள் சங்க
அமைப்பாளர்)
அப்பச்சி – திருவிதாங்கூர் தமிழ் மக்கள்
இராஜா – திருவிதாங்கூர் தமிழ் மக்கள்
அரசியல் மேதை – சங்கரலிங்கம், எம்.பி.
ஞதந்தை நேசமணிஞ – ஜெம்ஸ், எம்.எல்.ஏ.,
கொட்டில்பாடு துரைசாமி
திரு. முத்துக்கருப்பன்
யார் தியாகி என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். தமிழ் மக்களே
சாதியை அடிப்படையாக வைத்து மதத்தை அடிப்படையாக வைத்துப்
போராடாத நபருக்குத் தியாகிகள் பட்டம் கொடுக்காதீர். வாழ்க தமிழ்
வாழ்க தமிழகம் வாழ்க தமிழன்
தலைவர் பழ. நெடுமாறன் “பேரா. யோகீஸ்வரன்பிள்ளை ;அவர்கள்
விருப்பு வெறுப்பின்றி வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு எழுதியிருக்கிறார்”
எனத் தனது சான்றை நூலில் பதிவு செய்துள்ளார். ஒரு மாமனிதன் அப்துல்
ரசாக்கைக் கிண்டல் செய்வது நடுநிலையா? என்பதை அறிய
விரும்புகிறேன். பேரா. யோகீஸ்வரனுக்குத் திருவிதாங்கூர் போராட்ட
வரலாறு தெரியாது. மார்சல் எ. நேசமணி கேட்டது 9 தாலுகா. பேரா.
யோகீஸ்வரன் கூறுவது 8 தாலுகாக்கள் என்று. சிற்றூரை விட்டுவிட்டார்.
இதுகூடத் தெரியாதவரை நடுநிலை நூலாசிரியர் என்று தலைவர் பழ.
நெடுமாறன் பதிவு செய்கிறார். என்னே இவர் தமிழ்ப் பற்றும் நேர்மையும்.
ஈழப்போராளிகளைப் பிரித்து வைத்து வாழ்வை ஓட்டியவர் பழ. நெடுமாறன்
என்று கூறிய அரசியல்வாதிகளின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள்
நாங்கள். சாதி வெறியர்கள் உங்களைச் சூழவிடாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்.

பெறுநர்
திரு. அ.கா. பெருமாள்
ஆசிரியர்
தென்குமரியின் சரித்திரம்
நாகர்கோவில்.
ஐயா,
தாங்கள் ஒரு வரலாற்றாசிரியர் என்பது என் எண்ணம்.
“தென்குமரியின்சரித்திரம்” என்ற தங்களுடைய நூலைப் படித்தேன். அதில்
பல செய்திகளைத் தாங்கள் தந்துள்ளது சரித்திரத்தை அறிவதற்கு உதவும்.
ஆனால் அந்த நூலில் வரலாற்றுக்கும் உண்மைக்கும் முரணாகக்
கற்பனையான சில தகவல்களைக் கண்டேன். இன்றுள்ள அரசியல் வாதிகள்
போலல்லாமல் வீட்டுக்கு வறுமையும் நாட்டுக்குத் தன்னையும் தந்த தலைவர்
நேசமணி. அப்படிப்பட்ட தலைவர்களைக் கேலி செய்து எழுதுவது மிகவும்
வேதனைக்குரிய ஒன்று. எடுத்துக்காட்டாக, தென்குமரியின் சரித்திரம் ப. 96,
97ஞதி.த.நா.வின் தொடர்போராட்டம் எந்த வெற்றியையும் தரவில்லை என்ற
குரல் நேசமணியின் வாய்வழிக் கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில்
ஒலிக்க ஆரம்பித்தது மட்டுமன்றிப் போராட்டத்தைவிடப் பதவியைப் பெற்றுக்
காரியத்தைச் சாதிப்பதே சிறந்த வழி. ஆகவே தி.த.நாவை சமஸ்தானக்
காங்கிரசுடன் இணைத்து விட வேண்டும். அதுவே நல்லது என்று நேசமணி
கருதினார். அவரது கொள்கை, கட்சியையும் நோக்கத்தையும் பூண்டோடு
அழித்து விடும் என்ற கோஷம் ஒலிக்க ஆரம்பித்ததும் கட்சிக்குள் பூசல்
வந்தது”உங்களுக்கு முன் வரலாறு எழுதிய உயர் இனத்தவர்கள்
பாளையங்கோட்டை ஒப்பந்தத்தால் கட்சியில் பிளவு ஏற்பட்டது என்று
எழுதியுள்ளனர். அதுவும் உண்மையல்ல. நத்தானியேல் ராஜினாமா செய்த
பின்னர் நடந்த தலைவர் தேர்தலில் போட்டி ஏற்பட்டது. இதில் தோல்வியுற்ற
சிலர் புதிய கட்சியை ஆரம்பித்தனர்.
தாங்கள் தங்கள் நூலில் கூறுவது கற்பனைக்கும் எட்டாத ஒன்று.
வரலாற்றில் இப்படிப்பட்ட முரண்களை எழுதினால் உண்மை வரலாற்றை
மறைத்து விடலாம் என்று எண்ணாதீர்கள்.
தென்எல்லைக் காவலன் நேசமணி தாங்கள் எழுதியிருப்பது போன்று
கூறியிருந்தால் அன்றுள்ள மலையாளம், தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில்
தலைப்புச் செய்தியாகப் போடப்பட்டிருக்கும். எனக்கும் இங்குள்ள
தியாகிகளுக்கும் அப்படி ஒரு பதிவு பத்திரிகைகளில் பதிவானதாகத்

தெரியவில்லை. பல தியாகிகளிடம் விசாரித்த போது எந்த மடையன் அப்படிச்
சொன்னான் என்று கேட்கிறார்களே தவிரத் தாங்கள் கூறியது போன்று யாரும்
கூறவில்லை.
கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை தமிழ் மக்களிடம்
சென்று ஸ்டேட் காங்கிரசில் சேரலாமென்று நீங்கள் எழுதியிருப்பது போன்று
தென்எல்லைக் காவலன் நேசமணி கூறியிருந்தால் அன்றே அவர்
நத்தானியேலைப் போன்று மக்களிடமிருந்து தூக்கி எறியப்பட்டிருப்பார்
நதானியேல் (பட்டம் தாணு பிள்ளையின்)சமஸ்தானக் காங்கிரஸ் கட்சியில்
சேர்ந்ததும் அன்றே அவருடைய அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
ஸ்டேட் காங்கிரசைக் கில்ட் காங்கிரஸ் (மினுமினுப்பு காங்கிரஸ்) என்று
நேசமணி கூட்டங்களில் பேசினார். மாணவராக இருந்த போதுகூட அவர் அகில
இந்தியக் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார்.
திரு. நத்தானியேல், திரு. பி.எஸ்.மணி ஆகியோர்தாம் சமஸ்தான காங்கிரசில்
உறுப்பினராய் இருந்தனர். தோவாளையில் உள்ளோர் சிலர் அமைச்சாராகவும்
இருந்தனர்.
ஸ்டேட் காங்கிரஸ் மன்னரின் கீழ்த் திருவிதாங்கூருக்குச் சுதந்திரம்
வேண்டுமென்று கூறியது. ஆனால் நேசமணியோ மன்னரும் போக வேண்டும்,
வெள்ளையனும் போக வேண்டும் இதுதான் அவரது தாரக மந்திரம். சுதந்திரப்
போராட்டக் காலத்தில் 1943 இல் இவர் எம்.எல்.ஏ. ஆகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முக்கியப் பொறுப்புகள் கொடுக்க அரசு
முன்வந்தது. அதை ஏற்க மறுத்துவிட்டார். பட்டேல் இவரை அடிக்கடி சந்தித்தார்.
அப்படிப்பட்ட ஒருவர் ஸ்டேட் காங்கிரசில் உறுப்பினராக இணைந்து பதவிகள்
பெற விரும்பினார் எனக் கூறுவது தங்களுடைய சாதி வெறியைக் காட்டுமே
தவிர இது உண்மை இல்லை என்பது திருவிதாங்கூர்த் தமிழ் மக்கள்
அனைவருக்கும் தெரியும். உங்களைப் போன்றோர் எந்தக் கட்சி ஆட்சிக்கு
வருமோ அந்தக் கட்சியின் ஆதரவாளராக மாறி,பலனடையும் மந்திரம்
நேசமணிக்குத் தெரியாது. கல்குளம், விளவங்கோடு தமிழ் மக்களுக்கும்
தெரியாது.
கல்குளம் விளவங்கோடு மக்களைப் பற்றி உங்களுக்கு எதுவும்
தெரியாது. அவர்கள் நம்பூதிரிகளோடும், பிள்ளைமார் சமுதாயத்தோடும்
மலையாள அரசோடும் சுமார் 250 ஆண்டுகள் போராடியவர்கள். அதற்குக்
காரணம் தமிழ் மொழிக்குப் பதிலாக மலையாள மொழி ஆட்சிபீடம் ஏறியது.
தமிழ் மன்னனுக்குப் பதிலாக மலையாள மன்னர்கள் பதவிக்கு வந்தனர்.
மன்னர்கள் பதவி ஏற்றதும் நீங்களெல்லாரும் உறவு கொண்டு மிகுந்த சுகம்
அனுபவித்தீர்கள் இதனை‘ஆய்வுக் களஞ்சியம்’ மாத இதழில் டாக்டர் எஸ்.
பத்மநாபன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியின்

போது நாஞ்சில் நாட்டு மக்கள் சொர்க்கத்திலும் வெளிச்சத்திலும்
இருந்தார்கள் என்றும்மக்களாட்சியின் போது நரகத்திலும் இருளிலும் வாழ்ந்து
வருவதாகக் கருதுகின்றனர் என்றும் மன்னர் தெய்வமாக இருந்து நாட்டை
ஆண்டார் என்றும் எழுதியுள்ளார். இதிலிருந்து திருவிதாங்கூர் மன்னர்களுக்கு
எதிராகவும் மலையாள மொழிக்கு எதிராகவும் திருவிதாங்கூர்த் தமிழ்நாடு
காங்கிரஸ் போராட்டத்தில் நாஞ்சில் நாட்டில் உள்ள உயரின மக்களின் பங்கு
என்ன என்பது பற்றியும் தமிழ் உலகம் அறிந்து கொள்ளட்டும்.
மேலும், பிள்ளைமார் மிகுதியாக உள்ள தோவாளையில்
குமரித்தந்தை நேசமணி பிரச்சாரம் செய்தும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள்
ஆதரவு கொடுத்தும் திருவிதாங்கூர்த் தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர்
வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் ஸ்டேட் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி
பெற்றார். இதன் எதிரொலி பாராளுமன்றத்தில் நேசமணியிடமே கேட்கப்பட்டது.
இவர்களுடைய மொழிப் பற்றை எண்ணிப் பாருங்கள்.
இதே நேரம் கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை மற்றும் பிற
தமிழ் மக்களின் நிலையைப் பாருங்கள்.
நாடான் நீசன், அவனுடைய பாஷை தமிழ்,அது நீச பாஷை என்று
கூறினர். ஒரு தெருவில் நாய் போகலாம், பன்றி போகலாம். ஒடுக்கப்பட்ட
தமிழன் போகமுடியாது. ஏட்டைப் பிரித்துப் படித்தால் கலைமகளைப்
பார்த்துவிட்டான் என்று கண்கள் பிடுங்கப்பட்டன. வரி கொடுக்க முடியாத
மக்கள் துன்புறுத்தப்பட்டார்கள். மேலாடை அணிந்த பெண்களின் மார்புகள்
துண்டிக்கப்பட்டன. எருமையோடு இணைத்துப் பெண்களை வயலில் உழ
வைத்தனர். தாலி அணிந்து சந்தைக்குச் சென்ற பெண்களின் தாலிகள்
அறுக்கப்பட்டன. இதனால் அங்கு அடிதடி நடந்தது. இன்றும் சந்தையடி என்றும்
தலியறுத்தான் சந்தை என்றும் இடங்களின் பெயர் இப்போதும் உண்டு.
ஒடுக்கப்பட்ட தமிழனின் உடமைகள் தேவதானம், பிரம்மதேயம், அம்மச்சி
வீட்டு வகை, தங்கச்சிமடம், வெள்ளச்சி மடம், சாகுடி, போகுடி, நிறுத்தக்குடி
என்று கூறிப் பிடுங்கப்பட்டன. இன்று இலங்கையில் நடக்கும் கொடுமையைப்
போல அன்று திருவிதாங்கூர்த் தமிழ் மக்கள் துன்பம் அனுபவித்தனர். ஆனால்,
தோவாளையிலுள்ள உயரினத் தமிழ் மக்கள் எந்தவிதத் தொல்லைக்கும்
ஆளாகவில்லை. பிடாகைப் பிள்ளைமார்களால் அனுபவித்த தொல்லைகளை
இங்கு நான் விளக்கவில்லை. அவ்வாறு அதை விளக்க வேண்டும் என்று
சொன்னால் தனி நூல் எழுத வேண்டும்.
இத்தகைய துன்பத்திலிருந்து விடுபட, திரு. இசக்கிமாடன், திரு.
வைகுண்ட சுவாமிகள், திரு. நாராயணகுரு, திரு. ஐயங்காளி, திரு. நேசமணி
போன்றோர் தோன்றி மக்கள் விடுதலைக்காகப் பாடுபட்டனர். விடுதலையின்
பொருட்டு 19 இயக்கங்கள் தோன்றின. அதில் ஒன்றுதான் நேசமணியால்

ஆரம்பிக்கப்பட்ட திருவிதாங்கூர்த் தமிழ்நாடு காங்கிரஸ். இவ்வளவுஜ
துன்புறுத்தலுக்கும் ஆளான தமிழ் மக்களிடம் பட்டம் தாணுபிள்ளையின்
சோசியலிஸ்ட் கட்சியில் சேர்ந்து பதவி பெறுவோம் என்று கூறியிருந்தால்
நேசமணி அப்போதே மக்கள் உள்ளங்களிலிருந்து நத்தானியேலைப் போலத்
தூக்கி எறியப்பட்டிருப்பார்.
நீங்கள் நேசமணியைப் பற்றிக் கற்பனையாக எழுதியுள்ளது எப்படி
இருக்கிறது என்றால், இந்தியாவைச் சுரண்டிய வெள்ளைக்காரனின்
கொடுமையைக் கண்ட நம் தேசத் தந்தை காந்தியடிகள் வெள்ளையனிடம்
போராடி வெற்றி பெறுவதைவிட அவனிடம் இணைந்து பதவி பெற்றுச் சுதந்திரம்
அடையலாம் என்று கூறியது போல் உள்ளது. தயவு செய்து உங்கள்
சாதியாரையும் உங்களோடு இணைந்த உயர் இனத்தவரையும் எவ்வளவும்
புகழ்ந்து எழுதுங்கள். அதற்காக எங்கள் தியாகத் தலைவர்களைக் கொச்சைப்
படுத்தாதீர்கள். அவர்கள் பேசாததைப் பேசியதாகக் கற்பனை செய்யாதீர்கள்.
அரசியல்வாதிகள் உங்களுக்கு ஆக்கம் தரலாம். நேசமணியோடு போராடித்
தோற்றுப்போன குடும்பத்தார் திரைமறைவிலிருந்து உங்களுக்கு ஊக்கம்
தரலாம். தமிழன்னை உங்களை மன்னிக்க மாட்டாள்.
பக்கம் 96-ல் 1949 இல் திருவிதாங்கூர் – கொச்சி சமஸ்தானங்களின்
இணைப்பு நடந்தது. இந்நிலையில் தமிழ்ப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன்
இணைக்க வேண்டும் என்ற தி.த.நா.கா. வின் போராட்டம் வலுப் பெற்றது.
அன்றைய உதவிப் பிரதமர் அறிகின்ற அளவிற்குப் பரவியது. உடனே காமராசர்
தலையிட்டார். நத்தானியேலுடன் பேச்சுவார்த்தை நடந்தது. கைது
செய்யப்பட்டவர்கள் விடுதலை பெற்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு எதிரானவர் காமராசர் என்றும், குளமாவது
மேடாவது என்றும் கூறினார் என்று திரு. பி.எஸ். மணி போன்றோர் எழுதி
வந்தனர். ஆனால் இப்போது நீங்கள் காமராசருக்கும் பங்கு உண்டு எனக்
கூறியிருக்கிறீர்கள். நன்று.
அடுத்த வரியில் காமராசர் நத்தானியேலுடன் பேசினார் என்று உலகில்
பெரும் பொய்யைக் கூறியிருக்கிறீர்கள். காரணம் அன்றைய நிலையில்
காமராசர், நத்தானியேலோடு பேசவில்லை. நேசமணிதான் காமராசர், ஈ.வெ.ரா.
பெரியார், ராஜாஜி ஆகியோரை சந்தித்து நிலைமையைக் கூறி அவர்களது
ஆலோசனைப் படி காங்கிரஸ் பொதுச்செயலாளர் சீனிவாச
மல்லையாவையும் பட்டேலையும் சந்தித்து மக்கள் விடுதலைக்காகப் பெரும்
முயற்சி செய்தார்; பல கடிதங்களும் எழுதினார்.
இந்திய சரித்திரத்தில் ஒரு வழக்கு இன்னொரு மாநிலத்திற்கு
மாற்றலாம் என்று கூறக்கூடிய ஒரு நியதியை முதல்முதலாக இந்திய அரசுக்கு
எடுத்துக் காட்டியவர் நேசமணி. நேசமணி ஏறி, இறங்காத நீதிமன்றங்களே

இல்லை. அவருக்குத் துணையாக அப்துல் ரசாக்கும், தைக்காடு சுப்பிரமணிய
ஐயரும், பாஷ்யம் ஐயங்காரும் தமிழர் விடுதலைக்காக நேசமணி
பயன்படுத்திய வழக்கறிஞர்கள். தைக்காடு சுப்பிரமணிய ஐயரை
‘நேசமணியின் குஞ்ஃ போகுன்னு’ என்று கிண்டலும் கேலியும் செய்தார்கள்.
அதையெல்லாம் மறைத்திருக்கிறீர்கள். போரில் மாண்டவர்களின்
பெயர்களையும் மறைத்திருக்கிறீர்கள். தி.த.நா.கா. -வின் சின்னம் குடம்.
நத்தானியேலின் ராஜினாமாக்குப் பின் நடந்த தலைவர் தேர்தலில்
தோல்வியுற்றோர் உருவாக்கிய புதிய கட்சியின் தேர்தல் சின்னம் வண்டி.
இவர்கள் தாங்கள் போட்டியிடாத இடத்தில் ஸ்டேட் காங்கிரசை ஆதரித்தனர்.
எனினும் ஒரு இடத்திலும் அவர்கள் கட்சி வெற்றி பெறவோ, கட்டி வைத்தத்
தொகை கிடைக்கவோ இல்லை. நதானியேலுக்கும் கிடைக்கவில்லை.
பி.எஸ்.மணிக்கும் கிடைக்கவில்லை. ஆனால் நேசமணி தலைமையில்
இயங்கிய தி.த.நா.கா. கட்சி பெரும் வெற்றி பெற்றது. தோல்வியுற்ற நிலையில்
அவர்கள் நேசமணியிடம் வருத்தம் தெரிவித்து மீண்டும் நேசமணி
தலைமையேற்று தி.த.நா. கா. கட்சியில் இணைந்தனர். உங்களுக்கு உண்மை
தெரியும். ஆனாலும் நீங்கள் உண்மை வரலாற்றை மறைத்தீர்கள். வரலாற்றில்
உண்மையை மறைக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். தி.த.நா.கா.
வை மக்கள் அழைக்கும் பெயர் நேசமணி காங்கிரஸ் என்பதாகும்.
திருவிதாங்கூh தமிழ்நாடு காங்கிரஸ் தோற்றம்
திருவிதாங்கூர்த் தமிழர்களை மீட்க 19 இயக்கங்கள் தோன்றின.
அதில் ஒன்றுதான் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ். இது திருவிதாங்கூர்த்
தமிழ்ப் பகுதிகளில் விதைக்கப்பட்டு நெய்யூர் எட்வின் மண்டபத்தில் முளைத்து
ஆலன் மண்டபத்தில் பூத்து 1956 நவம்பர் 1 இல் கனியாகப் பலன் தந்தது.
மார்ஷல் நேசமணி, தோழர் ஜீவா, பேருந்துப் போராட்டத்திற்குப் பின்னால்
நேசமணியைப் பற்றிக் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்து உண்மை
வரலாற்றுக்குப் புறம்பாகப் பல வரலாற்று நூல்கள் எழுதப்பட்டன. அந்த
வரலாற்றில் ஆலன் மண்டபத்தில் நேசமணி திருவிதாங்கூர் தமிழ்நாடு
காங்கிரசைத் தொடங்கவில்லை என்றும், நதானியேல் தலைமையில்
தொடங்கியதாகவும் திரு. பி.எஸ். மணி அவர்கள் பல நூற்கள் எழுதினார்கள்.
இதனைக் கண்டு வேதனையுற்ற தென்னெல்லைக் காவலன்
நேசமணியுடன்தோளோடு தோள் நின்று போராடிய ஜனாப் அப்துல் ரசாக்,
எம்.பி. அவர்கள் நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம் என்ற ஒரு நூலை
எழுதினார்கள். அதில் மார்ஷல் நேசமணியும் திரு. சிதம்பரம் பிள்ளையும்,
திரு. சிவதாணு பிள்ளையும் ஆலன் மண்டபத்தில் கூடித் திருவிதாங்கூர்-
தமிழ்நாடு காங்கிரசை அரசியல் இயக்கமாகத் தொடங்கியதாகத் தெளிவாக
எழுதியுள்ளார். இந்தத் தொடக்கத்தைப் பற்றித் திரு. பி.எஸ். மணி அவர்கள்

கூறுகையில் அன்றைய பெருந்தலைவர்களில் ஒருவரான _. ஏ. நேசமணி
தலைமை தாங்க, _. எம். சிவதாணு பிள்ளை வரவேற்க, _. பி. சிதம்பரம்
பிள்ளை பிரசங்கிக்கத் தமிழர்களின் ஒரே ஸ்தாபனம் தி.த.நா.க. என்று
ஆரவாரத்துடன் தீர்மானிக்கப்பட்டது என்று தினமலரில் கூறியுள்ளார். ஜனாப்
அப்துல் ரசாக் தன்னுடைய நூலில் (நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்)
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசின் தொடக்கத்தைப் பற்றி எழுதினார்.
ஆனால் அதை திரு.பி.எஸ். மணி அப்துல் ரசாக்-கின் நூலுக்கு எதிராக 2
லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடுத்தார். மதிப்புமிகு நீதிபதி
அவர்கள் அந்த வழக்கை நன்கு விசாரித்து உரிய ஆவணங்களை
எதிர்மனுதாரர் தாக்கல் செய்து இவருடைய ராஜிஜனாமாக் கடிதங்கள், இவர்
அந்தக் காலத்தில் எழுதிய கடிதங்கள், பத்திரிகைகளில் கொடுத்த பேட்டிகள்
ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த காரணத்தால் வழக்கு நூலுக்குச்
சாதகமாக அமைந்தது. மேலும், 19.01.1947 ஆம் ஆண்டுத் திருவிதாங்கூர்த்
திவான் சர்.சி.பி. ராமசுவாமி ஐயரால் சுதந்திர திருவிதாங்கூர் இயக்கம்
ஆரம்பிக்கப்பட்டது. இவ்வியக்கத்தில் திரு. சாம் நதானியேல் தலைமையில்
திரு.பி.எஸ்.மணி உட்பட ஐவர் சென்று கலந்து கொண்டனர். யார் கட்சித்
தாவுகிறவர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலே கூறிய உண்மைகளைத் தாங்கள் உணர்ந்து தங்கள் நூலில்
சாதிக்கு அப்பாற்பட்டுத் திருத்தம் செய்து வெளியிடுமாறு வேண்டுகிறோம்.
‘மார்ஷல் நேசமணி’அவர்கள், திரு. நத்தானியேல், திரு. ஆர்.கே.ராம்,
திரு. பி.எஸ்.மணி ஆகியோர் போன்று கட்சித் தாவுகிறவர் அல்லர்.
இவர்களெல்லாம் கட்சித் தாவியும் நேசமணி கொண்ட கொள்கையில்
நிலையாக இருந்து போராடி வெற்றி பெற்றவர். தாங்கள் தின நாளிதழில்
வெளியிடுவதாக இருந்தால் போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் திரு.பி.எஸ்.
மணிராஜினாமா செய்த கடிதம் எங்களிடம் உள்ளது.
வரலாற்றை மறைக்காதீர் ; இரத்தக் கறை படிந்த ஆகஸ்ட்
பதினொன்று
தமிழர்களின் வடஎல்லைப் போராட்டம் தமிழ்நாட்டுடன் இருந்த
பகுதிகளை (சென்னை மாகாணம்) இழக்காமல் இருப்பதற்காக நடந்த
போராட்டம். திருவிதாங்கூர் தமிழர் போராட்டம் இன்னொரு நாட்டிலிருந்த
தமிழ்ப்பகுதிகளை மீட்பதற்காக நடந்த போராட்டம். இந்தப் போராட்டத்தைத்
தலைமை தாங்கி நடத்தியவர் தென்எல்லைக் காவலன் குமரித்தந்தை
மார்ஷல் நேசமணி.
திருவிதாங்கூர் தமிழர்கள் சமூகநீதி, பெண்ணுரிமை, மண்காப்பு,
ஆலயநுழைவு, ஓட்டுரிமை, மொழிகாப்பு ஆகியவற்றிற்காகச் சுமார் 300

ஆண்டுகள் போராடி வந்தனர். 1921 லிருந்து 1956 வரை நேசமணி
வழிகாட்டுதலிலும் தலைமையிலும் இந்தப் போராட்டம் நடந்தது. தேவிகுளம்,
பீருமேடு தமிழர்களை மிகவும் துன்புறுத்தியது திருவிதாங்கூர் அரசு.
தமிழ்த்தலைவர்களைக் கையில் விலங்குபோட்டு அழைத்துச் சென்றனர். 650-
க்கு மேல் வழக்குகள் போட்டனர். குப்புசாமி என்ற இளைஞரை அடித்துச்
செவிப்பறையைக் கிழித்து விட்டனர். சுப்பையா என்பவரை விலங்குபோட்டுக்
கடைவீதியிலே நடக்கச் செய்தனர். 434 தமிழர்களையும் 20 தமிழ்ப்
பெண்களையும் ஒரே சிறையில் அடைத்தனர். எங்கும் கதறலும்
கண்ணீருமாக இருந்தது. அவர்களின் அபயக்குரல் கேட்ட தலைவர் நேசமணி
ஜனாப் அப்துல் ரசாக், மாண்புமிகு சிதம்பரநாதன் ஆகியோர் தேவிகுளம்
சென்றனர். 4.7.1954 அன்று அவர்கள் மூணாற்றில் வைத்து பி.சி.
அலெக்சாண்டரால் கைது செய்யப்பட்டனர்.
தென்எல்லைக் காவலன் நேசமணியையும் உடன்சென்றவர் களையும்
விடுதலை செய்யப் போராட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 9-ம் தேதி அவர்கள்
விடுதலை செய்யப்பட்டார்கள். நேசமணி விடுதலை தினமும் நாடு விடுதலை
தினமும் இணைந்து கொண்டாட, தியாகி குஞ்சன் நாடார் தலைமையில்
திருவிதாங்கூர் தமிழ் மக்கள் திட்டம் போட்டனர். இங்கும் ஊர்வலமும்
கூட்டமும் நடைபெற்றன. இதனால் விளவங்கோட்டில் துப்பாக்கிச் Nடு
நடந்தது. இந்தத் துப்பாக்கிச் டே;டில் இறந்த தமிழ் தியாகிகள் தினம்தான்
ஆகஸ்ட் 11.
இவண்,
(தியாகி ஊ. குமாரதாஸ்
1954 ஆகஸ்ட் 11
ஆகஸ்ட் 11 அன்று துப்பாக்கிச் Nடு நடந்தது. திருவிதாங்கூர்
நாட்டிலுள்ள எல்லா காவலர்களும் தமிழ்ப் பகுதிக்கு அனுப்பப்பட்டனர்.
குறிப்பாக நாகர்கோவில், மார்த்தாண்டம், ஆற்றூர், அருமனை, கருங்கல்,
குளச்சல் போன்ற பகுதிகளுக்கு காவலர்கள் மிகுதியாக அனுப்பப்பட்டனர்.
நாகர்கோவிலில் மட்டும் எக்ஸ்பிரஸ் பஸ் ஸ்டாண்ட், இப்போதைய நகர்மன்றத்
திடல், நாகராஜா கோயில் திடல், வடசேரி, வெட்டூர்ணிமடம் போன்ற
பகுதிகளிலெல்லாம் போலீசார் தாவளம் அடித்து தங்கியிருந்தனர். ஒவ்வொரு
போலீஸ் நிலையத்திலும் படைகள் குவிக்கப்பட்டிருந்தன. போலீஸ்
வாகனங்களில் போலீசார் சுற்றி வந்து கொண்டிருந்தனர். போலீஸ் வாகனம்
ஒன்று எரிக்கப்பட்டது என்று பொய் தகவல்களை சிலர் கிளப்பிவிட்டனர்.
போலீசார் கடந்தை கூட்டில் கல்லெறிப்பட்டது போன்று கையில்
கிடைத்தவர்களையெல்லாம் கைது செய்தனர். கண்டால் அறியாம் புள்ளி
என்று பலரை கைது செய்தனர். மக்கள் ரோட்டில் நடமாட பயந்தனர்
அப்படிப்பட்ட நேரத்தில் பி.எஸ். மணி தலைமையில் நாகர்கோவிலில் ம.பொ.சி.
அவர்கள் பேசினார்கள். பேரா. யோகீஸ்வரர் இவற்றைப் பார்த்துக் கொண்டு
நின்றார் என்று கூறுவது கற்பனைக் கதையாக இருக்கலாமே ஒழிய உண்மை
சம்பவம் அல்ல என்று தியாகிகள் அனைவரும் கூறுகின்றனர். அன்று
தமிழகத்திற்கு வந்த தலைவர்கள் தோழர் ஜீவா காடு வழியாக நெல்லை
சென்றார். ம.பொ.சி. அவர்கள் ஜனாப் அப்துல் ரசாக்கை துணைக்கு
அழைத்துக் கொண்டு நேசமணி இல்லம் சென்று திருநெல்வேலி போய்
சேர்ந்தார். நேசமணி ம.பொ.சி. அவர்களை கூட்டத்தில் பேசும்படி
கேட்டுக்கொண்டார். இன்னொரு நாள் தான் பேசுவதாகப் பதில் கூறிக்கொண்டு
நாகர்கோவிலை விட்டு காட்டுப்பாதை வழியாக நேசமணியின் ஏற்பாட்டில்
திருநெல்வேலி சென்றார். இது இங்குள்ள எல்லா தியாகிகளுக்கும் தெரிந்த
ஒன்று. ஆனால், பேரா. யோகீஸ்வரன், ம.பொ.சி. பேசியதை தான்
பார்த்ததாகக் கூறுகிறார். வெடிச்சத்தம் கேட்டவுடன் தமிழகத்திலிருந்து
வீராவேசத்துடன் பேச வந்த தலைவர்கள் தப்பி ஓடியதைக் கண்ட, கேட்ட
நேசமணி இதனைப் பற்றிக் கூறுகிறார் ்
ஞஅறப்போர் ஆரம்பித்தது தமிழகத்தில் (திருவிதாங்கூர் தமிழ்ப்
பகுதிகள்) உணர்ச்சி பிரவாகம் பொங்கியது. அந்த உணர்ச்சிக் கடலிலே
மிதந்து செல்லும் நப்பாசையுடன் எத்தனையோ கட்சிகளும் தலைவர்களும்
இங்கே வந்தார்கள். பேசினார்கள். விண்ணதிரப் பேசினார்கள். ஆனால்,
விளவங்கோட்டிலே, வெடிச்சத்தம் கேட்டதும், திதநாகா-வைத் தவிர இங்கு
வேறு யாரையுமே காணவில்லையே. தமிழர்கள் அறியமாட்டார்களா இதை?
போருக்குப் பின் இங்கு என்ன நடந்தது? தலைவர்கள் சிறைக்கம்பிக்குள்ளே
அடைக்கப்பட்டார்கள். எண்ணற்ற இளைஞர்களின் எல்லுகள்
நொறுக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் மனை இழந்து
மக்களையும் நல்லாளையும் பிரிந்து நாடுவிட்டு ஓடினார்கள்.
நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. அன்னைமார் அழுத
கண்ணீர் ஆறாக ஓடியது. மனைவிமார்களின் கதறல் விண்ணைப் பிளந்தது.
தொழில் இல்லை. உணவு இல்லை. வியாபாரம் இல்லை. சுடுகாடாக,
பாலைவனமாகக் காட்சி அளித்தது திருவிதாங்கூர் தமிழகம். இதற்குப் புகல்
சொல்லித் தீரவேண்டுமே ழூ யாரைக் கண்டது இந்த நாட்டில், வெத்துப்பேச்சுகள்
அன்று தேவைப்படவில்லை – காரியம் அவசியமாக இருந்தது. யார் வந்தார்கள்
இந்த நாட்டிலே?ஞ (ஏ. நேசமணி, தினமலர், 25.02.1955). தமிழ் மக்களே
உண்மையை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களெல்லாம் உயர் இனத்தவரின்
போராட்டமாகக் கற்பனையாக தமிழகத்தில் சில பகுதிகளில் எழுதப்படுகிறது.
அவற்றைத் தடுத்து நிறுத்தி உண்மை வரலாற்றை வெளிக்கொண்டு வருவது
ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.
வணக்கம் ழூ
அரசால் தேவிகுளம் பீருமேடு மக்கள் துன்புறுத்தப்படுவதைக் கண்டு
அவர்களுக்கு ஆதரவாகப் போரடச் சென்ற மார்சல் நேசமணி, ஜனாப்
அப்துல் ரசாக்கும், மாண்புமிகு சிதம்பரநாதன் நாடாரும் சிறையில்
அடைக்கப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய மாபெரும்
போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்திற்கு எம்.எல்.ஏக்கள்
தலைமை தாங்கினர். ஆயிரக்கணக்கான தியாகிகள் சிறை
சென்றனர். போராட்ட வீரர்களில் தீவிரப் போராட்டத்தால் தலைவர்கள்
விடுதலை பெற்றனர். உடன் தலைவர்கள் விடுதலை தினமும் நாடு
விடுதலை தினமும் கொண்டாடப்பட்டது. குஞ்சன்நாடார், நாராயணன்
நாடார், ஜெம்ஸ் எம்.எல்.ஏ, காந்திராமன் ஆகியோர் போராட்டத்தைத்
தீவிரப்படுத்தினர்

திருவிதாங்கூர் போராட்டம் உச்சநிலையில்
இருக்கும்போது, 15.03.1956 அன்று பி.எஸ். மணி
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசிலிருந்து ராஜினாமா
செய்தார். பலரை ராஜினாமா செய்யத் தூண்டினார்

பேரா. அரசு ஆறுமுகம், தமிழ் விரிவுரையாளர், இந்துக்கல்லூரி
அருந்தமிழன் நேசமணி
அவர்தம் நாமம் என்றும் வாழ்க
இத்தாலிக்கு ஒரு கரிபால்டி
துருக்கிக்கு ஒரு கமால்பாஷா
அயர்லாந்திற்கு ஒரு டிவேலரா
நம் தாயகத்திற்கு ஒரு காந்தி
குமரித் தமிழகத்திற்கு ஒரு நேசமணி
– இவை அழியாத நினைவுச் சின்னங்கள்
என்றும் உலகம் போற்ற வளர்க ழூ
(மார்சல் நேசமணி சிறப்பு மலர், 1969)

பி.எஸ். மணி, ராமவர்மபுரம்
நாகர்கோவில், 25.09.1953
திரு. யு. நேசமணி, டீ.யு.இ டீ.டு.இ ஆ.P. அவர்கள்
அன்புமிக்க லீடர் அவர்களே ழூ வணக்கம்
திரு-கொச்சி அரசியலில் தி.த.நா.கா. வின் சக்தி என்ன? என்பதனைத்
தௌ;ளத் தெளிவாக உலகிற்குக் கர்ட்டும் ஒரு மகத்தான சந்தர்ப்பத்தைத்
தாங்கள் சிருஷ்டி செய்து விட்டீர்கள். தி.த.நா.கா. சரித்திரத்தில் தாங்கள்
எடுத்திருக்கும் இத்தகைய உறுதியான நடவடிக்கைகளுக்குத் தனி இடம்
உண்டு. உங்கள் திடமான போக்கைக் காணும் ஒவ்வொருவரும் உங்களை
நெருங்கியிருப்பவர்களைவிட சற்றுத் தூரமாக இருப்பவர்கள்தான்
உங்களிடம் பெரும் மதிப்பை வைக்க ஆரம்பித்துள்ளனர். உங்களை
சந்தேகக்கண் கொண்டு பார்த்தவர்களை ஏமாறச் செய்துவிட்டீர்கள்.
எப்படியும் இன்னும் இரண்டொரு ஆண்டுகளில் நமது பிரச்சினை
ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். அதுவரை தி.த.நா.கா. சற்று
முன்னேற்றப்ப hதையில் விரைவாகச் செல்லத் தாங்கள் வழிகாட்டுவதோடு
அதற்கு அஸ்திவாரமாகவும் இருக்க வேண்டும்.
சீக்கிரமே தி.த.நா.காங்கிரஸை தக்கதொரு ஜனநாயக
ஸ்தாபனமாக உருவாக்க வேண்டும். இதற்கு என் உழைப்பில் ஒரு
பகுதியைத் தரத் தயாராக இருக்கிறேன். திரு. P. ராமசாமி பிள்ளை
அவர்களிடம் ஏழ்பித்திருக்கிறேன். தயவு செய்து தாங்களே இப்பொறுப்பை
(கட்சித் தலைவர்) ஏற்று என்னைப் போன்றவர்களையும் அணைத்துக்
கொண்டு செல்ல வேண்டுகிறேன்.
எனது மகிழ்ச்சிகரமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றுமுங்கள்,
பி.எஸ். மணி

காண்டிராக்ட் வேலைகளில் ஈடுபட்டு வந்த திரு. பி.எஸ். மணி
அவர்கள், போராட்டத்தின் உச்சநிலையில், 15.03.1956 அன்று
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசிலிருந்து ராஜினாமா செய்தார். இவர்
ராஜினாமா செய்யத் தூண்டியது ம.பொ.சி. என்று அவர் தனது கடிதத்தில்
குறிப்பிடுகிறார். இவரைத் தொடர்ந்து இவருடைய நண்பர்கள் பலர்
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசிலிருந்து ராஜினாமா செய்தார்கள்.
ஆனால் காந்திராமன் ராஜினாமா செய்யவில்லை.

அன்புடையீர் ழூ
வணக்கம். இன்று 12.06.1964-ல் உங்கட்கு எழுபதாண்டு ஆரம்பம்.
உங்கள் பிறந்த தினத்தில் என் அன்பு வணக்கத்தையும் வாழ்த்தையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.
கழிந்த 30 ஆண்டுகளாக நான் உங்களை அறிவேன். இதில்
கழிந்த 17 ஆண்டுகளாக நான் உங்களுடன் சேர்ந்தும், பிரிந்தும், தூர
நின்றும் உங்களைக் கவனித்திருக்கிறேன். குமரி மாவட்ட மக்களில்
பெரும்பான்மையோர் உங்களிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருப்பதைக்
காணுகிறேன். நீங்கள் விரும்பியிருந்தால் வேறு வேறு துறைகளில் மிகமிக
உயர இருந்திருக்க முடியும். எனினும் மக்கள் தொண்டு அரசியல்
இவற்றைக் கைக்கொண்டு குமரி மாவட்டத்தில் முதன்மை வகிக்கிறீர்கள்.
இம்மதிப்பிற்குரிய தன்மைக்காகத்தான் என் வணக்கத்தையும்
வாழ்த்தையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதுமை அடைந்திருக்கிறீர்கள். கட்சி சார்பில்லாமல் அனைவரும்
உங்களை இந்நேரத்தில் பாராட்டுகிறார்கள். மகிழ்ச்சி. நீங்களும் இனி
சட்சி சார்பற்ற உயரிய நிலையில் குமரி மக்களின் தந்தையாக அறிவுரை
கொடுப்பவராக இருக்க வேண்டுமென்று என் எதிர்பார்ப்பு.
தேக நலத்துடன் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன். வணக்கம்.
என்றுமுங்கள்,
பி.எஸ். மணி.

ம.பொ.சி.-யை நேசமணியின் வீட்டுக்கு அழைத்து வந்தவர் ஜனாப்
அப்துல் ரசாக், நுஒ. ஆ.P. நேசமணி ஜெயிலில் இருந்த நேரம் கட்சியை
கலைத்துவிட்டு தமிழரசுக் கழகத்தோடு இணைக்க வேண்டும் என்று
கூறிய காரணத்தாலும் தமிழகத்திலிருந்து பணம் பிரித்து கட்சித்
தலைமைக்கு கொடுக்காத காரணத்தாலும் பி.எஸ். மணி
போன்றவர்கள் நேசமணி வீட்டிற்கு போகமுடியாது. அதனால்தான்
ம.பொ.சி. ரசாக்கின் துணையை நாடியிருக்கிறார்.. தியாகிகளும் ரசாக்
ம.பொ.சி.-ஐ அழைத்து வந்ததை பார்த்துள்ளனர். நேசமணி வீட்டிலும்
இதையே கூறுகின்றனர்.

தித.நா. காங்கிரஸ் தலைவர் அவர்களுக்கு
(தி.த.நா.கா. தலைவர் பி. சுப்பிரமணிய பிள்ளை)
தி.த.நா.காங்கிரஸின் தலைமையை நீங்கள் நீண்ட நாட்களாகத்
தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு எங்கள் வந்தனம்.
சமீப காலத்தில் தி.த.நா.காங்கிரஸில் பெரும்மாற்றங்கள்
ஏற்பட்டிருப்பதைக் காணுகிறோம். அதன் முன்னேற்றகரமான செயல்களை
எண்ணும் தோறும் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியிலே திளைக்கிறது. எனினும்,
தி.த.நா.காங்கிரஸ் ஜனநாயகரீதியாக உருவாவதற்குத் தலைமையில்
மாற்றம் வேண்டுமென நம்மிடையே பலர் விரும்புகின்றனர். எப்போதுமே
ஜனநாயகத்தில் ஒரே தலைமை நீண்ட நாட்கள் இருப்பது
விரும்பக்கூடியதுமல்ல. தேர்தல் நெருங்கிவரும் இச்சந்தர்ப்பத்திலே, பல
அரசியல் கட்சிகள் மோதும். இச்ழே;நிலையிலே தலைமை மாறுதல்
அவசியமெனக் கருதுகிறோம்.
தி.த.நா.காங்கிரசின் கழிந்த கால வாழ்வைத் துருவிப்பார்க்கும் போது,
நமது லீடர் திரு. யு. நேசமணி அவர்கள் பெரும் பங்குகொண்டு
வந்திருப்பதையும், ஒரு தலைவர் என்ற நிலையில் வளர்ந்து வந்திருப்பதையும்
நாம் அறிவோம். அன்னார் தி.த.நா. காங்கிரசின் தலைமையை ஏற்கும் நன்னாள்
வந்துவிட்டதாகவே நாங்கள் எண்ணுகிறோம்.
தி.த.நா. காங்கிரஸ் உதயமாகி எட்டு ஆண்டுகள் 15.12.1953 யோடு
முடிவடைகிறது. இவ்வெட்டு ஆண்டுகளில் நாம் அற்புதங்களைச்
செய்திருக்கிறோம். அதே சமயம் அவமானம் அடையக்கூடிய விதத்தில் பல
விஷயங்களையும் ஒற்றுமையின்மையால் செய்திருக்கிறோம்.
இவ்வொற்றுமையின்மையை முறியடித்து ஒற்றுமையைக் கொண்டுவர
சாதகமாக இருந்தவர் திரு. யு. நேசமணி அவர்கள் என்பதில் சந்தேகம்
ஏதுமில்லை. நம்மிடை எவருக்கும் இல்லாத சக்தியும் தி.த.நா.காங்கிரசினுள்
செல்வாக்கும் அவருக்கு இருக்கிறது. இதனை, தி.த.நா.காங்கிரசினராகிய நாம்
ஸ்தாபன வளர்ச்சிக்காக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டாமா? ஆகவே,
அவர்களை தி.த.நா. காங்கிரஸின் தலைவராக நாம் ஆக்க வேண்டும். இதற்கு,
தாங்கள் தங்கள் தலைமை ஸ்தானத்தை ராஜினாமா செய்து லீடர்
அவர்களைத் தலைவராக்குவதற்கு எங்களுக்கு உதவி செய்ய
கேட்டுக்கொள்கிறோம்.
திரு. யு. நேசமணி அவர்கள் தலைமையை விரும்பக் கூடியவர் அல்ல.
எனினும் நாம் அவரை நிர்பந்தத்திலேனும் தலைவராக்கி மகிழ வேண்டும்.
இதற்கு உங்கள் உறுதுணைதான் வழிவகுக்கும் என நம்புகிறோம்.
நாகர்கோவில், தங்கள்,
10.12.1953. திp.த.நா.காங்க்கிரஸ்க்கமிட்டி;டி அங்க்கத்த்தினர்க்கள்
P.ளு. மணி (கன்வீனர்). மேலும் 25 பேர்

வரலாறு எழுதுவோருக்குக் குறைந்தது நான்கு பண்புக் கூறுகள் இருக்க
வேண்டும் என்றும் நிகழ்வுகள் குறித்த உண்மைத் தகவல்களைத் தம்மால் முடிந்த
வரை திரட்ட வேண்டும் என்றும் திரு. பெ. மணியரசன் கூறுகிறார். ஆனால், பேரா.
பி. யோகீஸ்வரன் அவர்கள் அட்டையிலேயே அவருக்குத் திருவிதாங்கூர் வரலாறு
தெரியாது என்பதைக் காட்டியுள்ளார். குமரித் தந்தை நேசமணி கேட்டது 9
தாலுகாக்கள். தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு,
நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு, சிற்றூர். இவற்றினை
எல்லை மாநாட்டிலும் பாராளுமன்ற உரையிலும் நேசமணி பதிவு செய்துள்ளார்.
ஆனால், பேரா. யோகீஸ்வரன் அவர்கள் சிற்றூரை விட்டு நெய்யாற்றின்கரைத்
தென்பகுதி என்றும், நெடுமங்காடு கீழ்ப்பகுதி என்றும் கூறியிருப்பது தவறான
வரலாறு ஆகும். கோரிக்கை வைத்துக் கேட்ட தாலுகாக்கள் எத்தனை என்று
தெரியாதவரை பழ. நெடுமாறன் அவர்கள் சிறந்த நூலாசிரியர் என்று கூறியுள்ளார்.
இதில் என்ன சிறப்பைக் காண்கிறார் பழ. நெடுமாறன்.
பண்டிதர் ஜவகர்லால் நேரு, இரும்பு மனிதர் பட்டேல், லால் பகதூர்
சாஸ்திரி, மூதறிஞர் இராஜகோபாலாச்சாரியார், இராம் மனோகர் லோகியா,
கிருபலானி, இவர்களோடு சம இருக்கையில் இருந்து பேசும் ஜனாப் அப்துல் ரசாக்
திருத்தமிழகப் போராட்டத்தில் தன்னுடைய உடமைகளை இழந்தவர். அத்தகு
தியாகசீலரை, பெரியவரைக் கிண்டல் செய்து நூல் எழுதப்பட்டுள்ளது. அதை
நடுநிலையோடு எழுதிய நூல் என்று கூறியுள்ளார் பழ. நெடுமாறன் அவர்கள்.
திருவிதாங்கூரில் ஒடுக்கப்பட்ட தமிழர்களின் போராட்டம் என்பது
நம்பூதிரிகளிடமிருந்தும் பிள்ளைமார்களிடமிருந்தும் நாயர்களிடமிருந்தும்
விடுதலைப் பெறுவதற்காகவே நடந்த சமூகநீதிப் போராட்டம் என்பதை வரலாறு
கூறும். ஒடுக்கப்பட்ட தமிழர்களின் பூமியை, இன்று இலங்கையில் நடப்பது போன்று,
மலையாளிகளுக்கும் உயர் இனத்தவர்களுக்கும் கொடுத்த காரணத்தால் மண்
காப்புப் போராட்டமாக அது மாறியது. மகளிருக்கு உரிமை வேண்டிப் போராடிய
போராட்டமும் இணைந்த காரணத்தால் மகளிர் உரிமைப் போராட்டமும் இத்துடன்
இணைந்தது. கோவில் வழிபாட்டிற்குத் தடை செய்த காரணத்தால் கோவில்
நுழைவுப் போராட்டமும் இத்துடன் இணைந்தது. தமிழ் மொழி இருந்த இடத்தில்
மலையாள மொழி ஆட்சிபீடம் ஏறியதால் இனப்போராட்டம், மொழிப்
போராட்டத்தையும் உடன் இணைத்துக் கொண்டது. கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலேயே,
தனி மனிதர்கள் தலைமையில் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் பல
இயக்கங்களாக மாறியது. இறுதியாக, நேசமணியால் உருவாக்கப்பட்ட
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியால் 9
தாலுகாக்களுக்குப் பதிலாக 4½ தாலுகாக்கள் மட்டுமே தமிழகத்திற்குக்
கிடைத்தன. எப்படி ஈழப் போராளிகளைப் பிரித்து வைத்துத் தன் வாழ்க்கையை
வளமாக நடத்திய சில தமிழர்கள் போல் அன்றும் இச்செயலிலேயே இறங்கினார்கள்
பலர். அனைவரும் ஒரே முகமாகப் போராடியிருப்பார்களேயானால் 9 தாலுகாக்களும்
தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும். ஏன் 9 தாலுகாக்களும் கிடைக்கவில்லை
என்பதை இங்கு நான் கூறியிருக்கிறேன். சிறிய நூலாக இருந்தாலும், இன்று
வரலாற்று உலகத்திற்குத் தேவையான நூல். தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் சாதி
தேசியத்தையும் மத தேசியத்தையும் விட்டுத் தமிழ் மக்களை ஏமாற்றாமல்
இருந்தால் தமிழும் வாழும் தமிழகமும் வாழும் தமிழனும் வாழ்வான்.
01.02.2014 நூலாசிரியர்


1 பின்னூட்டம்

குமரி மாவட்டத்தில் நம்பூதிரி, நாயர், நாஞ்சில் நாட்டுப் பிள்ளைகள், கிருஷ்ணன் வகையினர் பல்வேறு சமுதாயங்கள் பற்றிய தகவல் (சேரர் வரலாறும் மக்கள் வாழ்வியலும் )

                     வேதகாலத்துக்கு முன்பிருந்தே தென்னகத்தை மூவேந்தர்கள் சிறப்புடனே ஆண்டுவந்தனர் என்ற வரலாற்று உண்மையை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். இம்மூவேந்தர்களில் முதல் வேந்தன் சேரவேந்தன் ஆவான். பரப்பளவிலும் சேர நாடு எண்பது காதங்களைக் கொண்டு பாண்டிய நாட்டைவிட ஒன்றரை மடங்கு பொரியதும், சோழநாட்டைவிட மூன்றரை மடங்குமாக அமைந்திருந்தது. இமயத்தை வரம்பாகக் கொண்ட இமயவரம்பன் சேரலாதனையும், பாரதப்போரில் இரு சாரர்படைகளுக்கும் பெருஞ்சோறு அளித்த பெருஞ்சோற்று உதியனையும், ஆரிய மன்னர்களைக் கொண்டு கல் சுமந்து வரச்செய்து கற்புக்கரசி கண்ணகிக்கு சிலைவடித்து சிறப்பித்த சேரன் செங்குட்டுவனையும், தமிழ்த்தாய்க்கு சிலப்பதிகாரத்தை தந்து சிறப்புறச் செய்த இளங்கோ அடிகள் போன்றோர்களைத்தந்து பண்புடனே இம்மண்ணில்  கோலோச்சியவர்கள் சேரர்களே. எனினும் இவர்களது வரலாறுகளை முறையாகவும், விரிவாகவும் இதுகாறும் எழுதப்படவில்லை என்ற ஒரு குறை உண்டு. மக்கள் வாழ்வியலாக சேரநாட்டு சான்றோர் குலத்தைக் குறித்தும், அவர்கள் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களைக் குறித்தும், ஆரிய தாக்கத்திற்குப் பிறகு சேரநாட்டில் உருவான சில முக்கிய புதிய சமுதாயங்களைக் குறித்தும், அவர்களது பண்பாடுகளைக் குறித்தும் இயன்ற அளவு விரிவாக எழுதியுள்ளேன்.

 
               சேரர் வரலாறும் மக்கள் வாழ்வியலும் என்ற இந்நூலை எழுத வேண்டும் என்ற எண்ணம் என்னிடத்தில் எழுந்ததேயில்லை. ஒரு தருணத்தில் “அஜந்தாவின் ஆன்மீக வினா – விடை” என்ற புத்தகத்தில் 1309-வது வினாவாக “நாயன்மார்களில் ‘சாணார்’ எத்தனைபேர்” என்று தொகுப்பு ஆசிரியர் (கிருஷ்ணன் வகையினன்) ஒரு வினா எழுப்பியிருந்தார். சான்றோர் சமுதாயமாகிய நாடார் இனத்தவரைச் சிறுமைப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்குடனே எழுப்பப்பட்ட மேற்படி ‘வினா’ என் மனதில் ஒரு உறுத்தலை உருவாக்கிவிட்டது. இவரைப்போன்று பிற  சமுதாயங்களைச் சார்ந்த பலரும் நாடார் சமுதாயத்தை கொச்சைப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக நின்று செயல்பட்டனர், செயல்பட்டும் வருகின்றனர். நாடார் மக்களுக்கு மட்டுமல்ல, ஏனைய அவர்ண இந்து மக்களுக்கும் கோவில் நுழைவு அன்று தடைசெய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து 1854-ல் வெள்ளையன் நாடாரும் மற்றும்
அவருடன் சுமார் பன்னிரண்டாயிரம் நாடார் பக்தர்களும் “அக்கினிக்காவடி”யேந்தி குமாரகோயில்  உள்பிரவேசத்தை வலுக்கட்டாயமாகச் செய்தனர். இந்த நிகழ்ச்சியைக் குறித்து உயர்சாதியான் என்று முத்திரை குத்தப்பட்ட நாயர் சமுதாயத்தைச் சார்ந்த நெல்வேலி நீலகண்டப்பிள்ளை என்பார் நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தி “அக்கானிக் காவடி” என்றொரு கவிதையை மலையாள மொழியில் எழுதி வெளியிட்டார். “அக்கினிக் காவடியை” “அக்கானிக் காவடி” என்ற கூற்றும் நாடார் சமுதாயத்தை சிறுமைப்படுத்துவதாக அமைந்துள்ளது என்பது நோக்குதற்குரியது. இவரைப்போன்று 1891-ல் சி. வி. ராமன்பிள்ளை (நாயர்) மார்த்தாண்ட வர்மா என்ற வரலாற்றுக் கதையை எழுதினார். அந்நூலிலும் நாடார்களை சாணார் என்றும், பிராந்தன் (கிறுக்கன்) என்றும் குறிப்பிடுகின்றார். இந்நூலை B. K. Menon என்பவர் 1936-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, மறுபதிப்பை 1998-ல் புதுதில்லியில் சாகித்திய அக்கடமியினர் வெளியிட்டுள்ளனர். இதிலும் நாடார்களை இழிவு வார்த்தைகளால் பழிக்கத் தவறவில்லை. “stupid face” ‘idiot’ – ‘mad channan’ – ‘low born chanars’ ‘strange looking channars’  போன்ற இழிவு வார்த்தைகளால் குறிப்பிடுகின்றார். இருவரும் நாயர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்பதால் நாடார்களை இழிவுபடுத்தியுள்ளனர். அதைப் போன்று குமரித் தந்தை மார்ஷல் நேசமணியை ‘பொய்யர்’ என்று வெள்ளாள பிரமுகரான் பி. சுப்பிரமணி தனது நூல் நாடர் சமூகத்தாரை கொச்சைப்படுத்தும் நோக்குடனே எழுதியுள்ளார்.

 
                          திரு. பி. கே. கோபாலகிருஷ்ணன், தனது நூலான Keralathinte Samskarika Charithram (A Cultural History of Kerala – 1974 (Malayalam) நாடார் சமுதாயத்தை “சான்றோர்” என்று எழுதுகிறார். பக்கம் – 293 – ஆறாவது பதிப்பு – 2000) மற்றவர்களைப் போன்றல்லாமல், சான்றோர் சமுதாயத்தை கொச்சைப்படுத்தாதது வரவேற்கத்தது. ஆயினும் நம்பூதிரி, நாயர், ஈழவர், நாஞ்சில் நாட்டுப் பிள்ளைகள், கிருஷ்ணன் வகையினர் போன்றோரின் இயல்பான பண்பாடுகளை முற்றிலும் மறைத்துவிட்டு அவர்களுக்கு உயர்வான பண்பாடுகள் உண்டு என்று  தோன்றும்படியாக குறிப்பிட்டிருப்பது வரலாற்று இருட்டடிப்பே.

 

                         எனவே, மேட்டுக்குடியினரின் இத்தகைய மனப்போக்குகள் என்னில் ஒரு நெடும் நெருடலை உருவாக்கியதில் வியப்பொன்றுமில்லை. மற்றவர்களைப் போன்று எனக்கும் சமுதாயப்பற்று இருக்கத்தானே செய்யும். இருப்பினும், இத்தகையவர்களின் ஏளனப் பேச்சுகளுக்கும், எழுத்துக்களுக்கும் ஏதேனும் வரலாற்று உண்மைகள் இருக்கின்றனவா? என்று ஆய்வதில் எனது முயற்சி திரும்பியது. இதைக் கண்டறிய சுமார் 100 வரலாற்று நூல்களை நான் படிக்க வேண்டியதாயிற்று. இவ்வரிசையில் முதல் தெம்பை எனக்கு அளித்த
நூலான வி. நாகம் அய்யா எழுதிய “The Travancore State Manual Vol. – 2(பக்கம் 392)-ல் “இச்சமுதாயத்தின் சாரியான பெயர் “சான்றோர்” என்பதேயாகும் . . . தொல் பழங்காலத்தில் இவர்கள் இந்நாட்டின் பல பாகங்களை ஆளுகின்றவர்களாக குடிஅமர்ந்தனர் என்றும் தெரிகிறது. நாடார் அல்லது நாடாள்வார் என்ற சொற்றொடர்களால் மட்டுமல்லாமல், இவர்களின் தனிச்சிறப்புடைய பழக்க வழக்கங்கள் மற்றும் சடங்குகளினாலும் ஒரு காலத்தில் இவர்கள் ஆளும் இனமாக இருந்தனர் என்பதை அறுதியிட்டுக் கூறலாம்” என்று அவர் எழுதுவதிலிருந்து,
சேரநாட்டில் நாடார் இன மக்களின் தன்மையும், தொன்மையும் எது என அறியமுடிந்தது. தவிரவும், கேரளநாட்டு வரலாற்று ஆய்வாளரான இளம்குளம் குஞ்சன்பிள்ளை (நாயர் சமூகத்தவர்) அவர்களும் “சேரமன்னர்கள்
செறுமராயிருக்கலாம்” என்பது கே. பி. பத்மனாப மேனன் கருத்து. பி. தி. சீனிவாசய்யங்கார் அவர்களை குறவர் என்கிறார். அவர்கள் வில்லவர்களாக (நாடார்கள்) இருக்கலாம் என்று நான் கூறியிருக்கின்றேன். காசர்கோட்டுப்
பகுதிகளில் பதனீர் இறக்கும் தொழில் செய்யும் நாடார் சாதியினரை வில்லவர் என்று இப்போதும் அழைக்கின்றனர். சேரமன்னர்களின் க்ஷுரகர்கள் காவிதிகளாயிருந்ததும், வில்லோன், சான்றோன் முதலிய வழக்குகளும், சின்னம் பனம் பூவாயிருந்ததும் என் கருத்துக்காதாரங்கள்” என தனது நூலான “பண்டைய
கேரளம்” பக்கம் 198-ல் கூறியிருக்கிறார். இவைகளினாலும் சேரமன்னர்களும், அன்னாட்டு மக்களும் சான்றோர் மரபில் வந்த நாடார்கள் என்பது உறுதி செய்யப்படுகிறது. ஆரிய சனாதன முறையில் நாடாண்டவர்களை சத்திரியர்கள் என்றனர். ஆனால் தமிழர் மரபுப்படி மன்னர்களையும் அவர்கள் வழி வந்தோரையும் சான்றோர் என்றனர். ஆகையால் சேரமன்னர்கள் சான்றோர் குலத்தவர்கள் என்பதால் அம்மன்னர்களைக் குறித்து விரிவாக ‘பாகம் ஒன்றில்’ கூறப்பட்டுள்ளது.   இரண்டாம் பாகத்தில் வேணாட்டு மன்னர்களைக் குறித்தும், மூன்றாம் பாகத்தில் சான்றோர் குலத்தைக் குறித்தும், நான்காம் பாகத்தில் புதிய சமுதாயங்களைக் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளன.

 
                           இதே வரலாற்று ஆசிரியர் குஞ்சன்பிள்ளை மேற்படி நூலில் 50-வது பக்கத்தில், நம்பூதிரிப் பிராமணர்களின் இயல்பான பண்பாடுகள் எது என்பதைக் கூறுகிறார்.
“வட இந்தியாவில் அந்தணர்கள் சாதாரணமாக இன்றும் ஊண் உண்கின்றனர். தென்னிந்தியாவிலும் ஏழாம் நூற்றாண்டு வரை அந்தணர்கள், சாதாரணமாக இறச்சி சாப்பிட்டு வந்தனர். கபிலர் ஐந்தாம்  நூற்றாண்டிலிருந்தவர். ‘இறச்சித் துவையலும், ஊண் சோறும் தின்று வருந்திய தொழிலன்றி வேறு தொழில்
செய்து பழக்கமில்லாததால் கைகள் மிகவும் மென்மையாக இருக்கின்றன’ என்று புறம் 14-ல் கூறுகின்றார்.
“ஊண்றுவை கறி சோறுண்டு வருந்து தொழிலல்லது
பிறிது தொழிலறியவாகலில் நன்றும் மெல்லிய . . .”, என்பதே அப்பாடல். கபிலர் ஒரு அந்தணர்.
தவிரவும், நம்பூதிரிப் பிராமணர்கள் திருவிதாங்கூர் கடலோர மீனவர்கள் என்ற கீழ்ச்சாதி மக்களினின்று உற்பத்தியானவர்கள் என்று W.W. Hunter கூறுகிறார். (Dr. W.W. Hunter-Orissa-Vol.I-Page : 254).  மலையாள பிராமணர்களான  நம்பூதிரிகளில் ஒரு பிரிவினர் திருமணத்தில் ஒரு முக்கிய சடங்காக “மாப்பிள்ளை
மீன் பிடிப்பதில் வல்லவன்” என்று பறைசாற்றுவதாகும் என தலித் பந்து என். கே. ஜோஸ் ‘குட்ட நாட்டின் இதிகாசம்’ என்ற மலையாள நூலில் கூறுகிறார். (பக்கம் 148). இவைகளினால் கேரளத்து நம்பூதிரிப்  பிராமணர்களின் பண்பாடுகள் மற்றும் குலப்பெருமைகள் எவையென அறிகிறோம்.
                        “உண்மையைக் கூறுவதாயின் நாயர்களுக்கு பரம்பரை சிறப்புகள் ஒன்றும் இல்லை, நியதியற்ற திருமண உறவும், மிருகப்புணர்ச்சி கோட்பாடு மற்றும் பல கணவர்களோடு வாழ்கின்ற பண்பாடுகளுடனே வாழ்ந்ததைத் தவிர அவர்களுக்கு  வேறு சிறப்புகள் எதுவும் இல்லை” என காணிப்பையூர் சங்கரன் நம்பூதிரிப்பாடு
என்ற சமுதாய வரலாற்று ஆசிரியர் ‘நாயர்களின் பூர்வ கால வரலாறு’ என்ற நூலில் கூறுகிறார். ((Vol-II – Page iii)
அவர் மேலும் கூறுகையில் ்

                      “ஒரு பெண்மணி பத்து ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது என்பதை உயர் பண்பாடு எனக் கருதுவதாலும், தனது சொந்த தாய் மற்றும் சகோதகளை அத்தகைய அநாகரீகத்திற்கு எவ்வித சங்கோஜமுமின்றி விட்டுக் கொடுக்கின்ற நீங்கள் (நாயர்கள்) அனைவரும் சாரியான தந்தைக்கு பிறக்காத குழந்தைகளாகவும், மேய்ச்சல் வயல்களில் மேய்ந்துத் திரிகின்ற மிருகங்களைவிட வெட்கமில்லாதவர்களும் ஆவர் என டிப்புசுல்தான் ஒரு விளம்பரம் வாயிலாக சுட்டியுள்ளாராம்.” (பக்கம் – 72) எனக் கூறுவதிலிருந்து நாயர்களின் பண்பாடுகள் என்ன என்பதையும் யாம் அறிந்து கொண்டோம். ஆனால் இவர்களுடைய இன்றைய நிலையைக் காணும் வேளையில் அவர்கள் ஏதோ தேவலோகத்து நாயன்கள் என்ற மட்டில் அலட்டிக் கொள்ளுகின்றனர். நேற்றைய உண்மையென்றாலும், அவர்களது வரலாறுகளுக்கு நாலோ அல்லது ஐந்தோ நூ ற்றறாண்டுகள் பாரம்பரியமே உண்டு என்பது மட்டும் உண்மை. இதையும் காணிப்பையூர் சங்கரன் நம்பூதிரி வெளிச்சமிட்டுள்ளார்.

 

                      கல்குளம் மங்கலம் என்ற ஊர் தொட்டு அகஸ்தீஸ்வரம் மணக்குடி காயல்வரையிலான நெல்கொழிக்கும் நீர் வள நாட்டை “நாஞ்சில் நாடு”  என்கின்றனர். இந்நாட்டை நாஞ்சில் வள்ளுவனும் அவன் வழியினரும் ஆண்டு  அனுபவித்து வந்தனர் என்பது வரலாற்று உண்மை. வடுகர்களான நாயக்க மன்னர்களின் வஞ்சனையால் மதுரையில் பாண்டியப் பேரரசு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, விசுவநாத நாயக்கனின் அமைச்சனான அரியநாத முதலியாரின்  முயற்சியால் இந்த நாஞ்சில் நாட்டிலும் முதலியார்களை  குடியமர்த்தினார். இவர்கள் 12 பிடாகைகளில் குடியமர்ந்தனர். இவ்வாறு குடியமர்ந்தவர்கள் பிந்திய காலத்தில்
“வெள்ளாளர்” என்ற உழுதுண்போரின் குலப்பெயரை பிடுங்கியெடுத்து,  “நாஞ்சில் வெள்ளாளர்கள்” என்ற சிறப்புப் பெயரை எடுத்துக்கொண்டனர். இதனால் முதலியார்கள் வெள்ளாளர்கள் ஆயினர். இவர்கள் குடியிருக்கின்ற
இடத்தை “பிடாகை” என்றும் வகுத்துக்கொண்டனர். இந்த பிடாகை என்ற சொல் துளுவ நாட்டு மொழியில் உள்ள ‘படாகை’ என்ற சொல்லின் மருஊ ஆகும். ‘படாகை’ என்ற சொல்லுக்கு தமிழில் ‘பொரிய’ என்று பொருள்படும். எனவே இந்த சொல்லால், இன்றைய நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் பூர்வீகம் எந்த ஊர் என்பதை வெளிச்சமிடுகிறது. இவர்கள் துளுவ நாட்டில் உருதுமொழி பேசப்படுகின்ற நாட்டைச் சார்ந்தவர்கள் என்ற  உண்மையையும் இதன்பால் காண முடிந்தது. இந்த விளக்கத்தை ‘தமிழறிஞர்கள் பார்வையில் கவிமணி’ என்ற தொகுப்பு நூலில் ‘கவிமணியின் மருமக்கள் வழி மான்மியம், ஒரு கருத்தாய்வு’ என்ற கட்டுரையில், பக்கம் 134-ல் எடுத்தாளப்பட்டுள்ளது. எனவே நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் பூர்வீகம் துளுவ மொழி பேசுகின்ற துளுவ நாடு என்பதையே இது சுட்டி நிற்கிறது.

 

                         கிருஷ்ணன் வகையினர் துவாரகையில் இருந்து வந்து இங்கு குடியேறியவர்கள் என்ற புராணம் ஒரு புழுகுக் கதை என்று வரலாற்று ஆசிரியர் மாஸ்டேர்லிமைந்தன், ‘யார் இந்த கிருஷ்ணன் வகையினர்’ என்ற நூலில்
நிறுவியுள்ளார். தவிரவும் இவர்கள் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சிக் காலத்தில், எஞ்சிய மறவர் படையாளிகளுக்கும் உள்ளூர் நாயர் பெண்களுக்கும் உருவான ஒரு சங்கரச்சாதி என்றும் அவர் எழுதுகிறார்.  ஆகையால் இவர்களின் பூர்வீகம் யாது, அவர்களது பண்பாடுகள் அனைத்தும் மறவர் வழிக் குருதி குணங்களே என்பதையும் அறிந்து கொண்டேன். இவர்களின் குணநலன்களை நன்கு அறிந்து வைத்துள்ள கல்குள வட்ட மக்கள் இவர்களைக் குறித்து ‘முதுமொழியாக’ இவ்வாறு கூறியுள்ளனர்்
“இணங்கினால் நக்கிக் கொல்வான் (நாயர்)
பிணங்கினால் ஞெக்கிக் கொல்வான் (குறுப்பு)
(குமரி மாவட்டப் பழமொழிகள் – எம். செபஸ்டீனாள்)

(ஞெக்குதல் என்றால் நொரித்தல் என்று பொருள்)

விளக்குத்தலை நாயர்கள் என்பார் மேலே குறிப்பிட்ட புதிய  சமுதாயங்களைவிட பழமையானவர்களும், சேர, சோழ நூற்றாண்டுப் போரில் ஈடுபட்டிருந்த சோழப் படையின் எச்சங்களாகும் என்று நான் நிறுவியுள்ளேன். இத்தகைய இழிவு பண்பாடுகளையும், பாரம்பாரியமில்லாத பல  சமுதாயங்கள் சேர நாட்டின் முதன்மை குடியினரை இழிவுபடுத்தியிருப்பது இரண்டு காதற்றவள் மற்றவர்களை “மூளி” என்று சிறுமைப்படுத்துவது
போன்றதாகும்.

 

              எனவே, பிராமண நம்பூதிரிகள் தொட்டு, விளக்குத் தலைகள் வரையிலான அனைத்து சமூகங்களும் சேர நாட்டில் பிந்திய காலங்களில் குடியேறிய இனத்தவர்கள் எனவும், இவர்கள் கி. பி. பத்தாவது நூற்றாண்டுக்குப்
பிறகு நாட்டு ஆதிக்கத்தை வென்றெடுத்தவர்கள் எனவும், வென்றவன் சொன்னதே வேதம் என்றாகி விட்டதென்ற உண்மை வரலாறுகளை ஆய்ந்து கூறுவதுதான் இந்நூலின் முக்கிய நோக்கம். இந்தப் புத்தகத்தை எழுதி முடித்த பிறகு எங்காவது நான் வரம்பு மீறிவிட்டேனோ என்பதை கண்டறிய திரும்பத் திரும்பப் படித்துப்பார்த்தேன். வரம்பு மீறி போய்விடவில்லை என்பதைக் காணமுடிந்தது.  இவ்வாறு ஆய்ந்து எழுதப்பட்டச் செய்திகளினால் அச்சமுதாயங்களைச் சார்ந்த இன்றைய தலைமுறையினர் நூல் ஆசிரியாரின் பால் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆனால் இவர்களையெல்லாம் சிறுமைப்படுத்த வேண்டும் என்றோ அல்லது இழிவுப்படுத்த வேண்டுமென்ற நோக்குடனோ இந்த நூல்  எழுதப்படவில்லையென்று ஆணையிட்டுக் கூறுவேன். ஆயினும் எவர் மனதாவது புண்படும்படியான செய்திகள் யாதேனும் இந்நூலில் காணப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டி, ஆதாரங்களுடனே மறுப்பதாக இருந்தால் யாம் அதை திருத்திக் கொள்வதற்கு தயாராக உள்ளோம்.

 

                தொன்மையில் நடந்தவைகள் யாதும் இன்றைய தலைமுறையினருக்கு பரிச்சயம் இல்லாதவைகள்  ஆகிவிட்டன. எனவே வருங்காலங்களில் இத்தகைய உண்மைகள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிடும் என்பதால் அத்தகைய விவரங்களையெல்லாம் பதிவு செய்வதற்காகவே, பல சிரமங்களினூடே இந்நூல்  எழுதப்படுகிறது. இதனைப் படிக்க நேருகின்ற இளைஞர்கள் உண்மைகளை தெரிந்துகொண்டு தெளிவடைய வேண்டும் என நான் விரும்புகிறேன். “ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்” என்ற உண்மையை ஆய்வு கண்ணோட்டத்தில் படித்தறிந்து இவர்கள் தௌpவடைவர் என நம்புகிறேன்.  சில வரலாற்று மேற்கோள்களை ஒன்றுக்கு மேற்பட்டு, நிலைக்கு ஏற்றவாறு எழுத்தாளப்பட்டுள்ளன. அவைகளை கூறுவதைத் திரும்பக்கூறுதல்
(Repetition) என்று கொள்ளவேண்டாம்.

“பூர்வ நாட்களை நினை ; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற
வருஷங்களை கவனித்துப் பார் ; உன் தகப்பனைக் கேள் ;
அவன் உனக்கு அறிவிப்பான் ; உன் மூப்பர்களைக் கேள் ,
அவர்கள் உனக்குச் சொல்வார்கள்.”
(உபாகமம் – 32-7)

என்பது விவிலியம் நமக்குத் தருகின்ற அறிவுரை.
இளந்தோட்டம் கு. சுகுமாறன்


பின்னூட்டமொன்றை இடுக

தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!

தில்லியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கேரளாதான் அனைத்து நன்மைகளையும் அள்ளிக் கொண்டு போகும்! காரணம் அனைத்துத் துறைகளையுமே அவர்கள் தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்! கருணாநிதி தன் கட்சிக்கு அமைச்சர் பதவிகளைத் தேடும்போது இரண்டு காரியங்களை மட்டுமே கருத்தில் கொள்வார்.

முதலாவதாக தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அந்தப் பதவிகள் வேண்டும் இரண்டாவதாக அப்பதவிகள் காசு பார்க்கக்கூடியதாக அது இருக்க வேண்டும்! இனமாவது மண்ணாங்கட்டியாவது!ஆட்சி அதிகாரத்தை வந்தேறிகளிடம் விட்டால் இதுதான் கதி! கருணாநிதியைச் சொல்லிக் குற்றமில்லை! வாக்களித்து ஆட்சியில் குந்த வைத்த நீயும் நானுமே இதற்குக் காரணம்!

தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்! உறிகிறார்கள்! நாட்டின் குருதியை உறிஞ்சி எடுத்து தன் மக்களுக்கும் மாநிலத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்கிறார்கள்!

மலையாளிகளின் முதல் எதிரி தமிழர்கள்தான்! ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கும் கொடூரத்திற்கும் முற்றாகத் துணைபோனவர்கள் அவர்களே! நமது மாநிலத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் வண்டிகளை அவர்கள் நடத்தும் விதம் அடிமையினும் கேடு கெட்டது! ஆனால் நாமோ தமிழகத்தில் அவர்களின் நிறுவனங்களுக்குச் சென்று பொருள் வாங்கி, சாயா குடித்து கொழுக்க வைக்கிறோம்! சிந்தியுங்கள்

  1. என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்,
  2. வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்,
  3. டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்,
  4. என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்,
  5. பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்,
  6. கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்,
  7. ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்,
  8. மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்,
  9. நிருபமா மேனன் ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்,
  10. சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்,
  11. ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்,
  12. சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்,
  13. கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்,
  14. பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்,
  15. சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,
  16. சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்,
  17. வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்,
  18. ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்,
  19. கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்,
  20. கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்,
  21. ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்,
  22. வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்,
  23. பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்,
  24. ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம்,
  25. சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்,
  26. ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்.
  27. பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
  28. கே.எம். சந்திரசேகர்- அமைச்சரவைச் செயலாளர்,
  29. சி.கே. பிள்ளை – உள்துறைச் செயலர் ,
  30. நந்த குமார் – கூட்டுறவுத்துறைச் செயலாளர்,
  31. பி.கே. தாமஸ் – தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர்,
  32. ரகு மேனன் – செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ,
  33. ராமச்சந்திரன் – நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ,
  34. ரீட்டா மேனன் – ஜவுளிச் துறை செயலாளர்,
  35. கங்காதரன் – கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர்,
  36. சாந்தா ஷீலா நாயர் – குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்,
  37. விசுவநாதன் – சட்டத்துறை செயலாளர்,
  38. மாதவன் நாயர் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்.

‘‘நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.

அவர்கள்:

  • ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி,
  • வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
  • விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ்,
  • உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
  • ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது,

வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்!

சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான். சோனியாவின் ஓட்டுனர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ், சந்தைக்குப் போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தில்லிக் காவல்துறையினர் அறுபது பேர் இருக்கிறார்கள்.

அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள் அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது.

இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர், வேறு மாநிலங்களில் பணியாற்றி, மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.

இத்தகைய நிலையில் இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம்? என்ற சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான் இன்றைக்கு கேரளாவுக்கு சாதகமாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது


பின்னூட்டமொன்றை இடுக

அனந்த விக்டொரியா மார்த்தாண்ட வர்மன் கால்வாய்

அனந்த விக்டொரியா மார்த்தாண்ட வர்மன் கால்வாய் என்பதை சுருக்கமாக ஏ.வி.எம்.கால்வாய் (A.V.M Chanal) என்று கூறுகின்றனர். இந்த கால்வாயின் முக்கிய நொக்கம், திருவிதாங்கூர் நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தையும நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியையும் நீர்வழித் தொடர்புக்காக இணைப்பது என்பதாகும். இதை உத்திரம் திருநாள் மார்த்தாண்டவர்மா (1847-1860) ஆல் 1860-ல் தொடங்கப்பட்டது. மன்னர் 1860-ல் காலமாகவே அவரது வாரிசு மன்னரான ஆயில்லியம் திருநாள் ராமவர்மான (1860 – 1880) இப்பணியைத் தொடர்ந்தார். இதன் முதல் கட்டமாக புவாறில் இருந்து தேங்காப்பட்டணம் தாமிரபரணி நீர்த்தெக்கம் வரை சுமார் 10 கல் தூரம் வெட்டப்பட்டு 1864 பிப்ரவரி மாதம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கால்வாய் குளச்சல் வரையிலும் அதாவது மண்டைக்காடு பொன்னம்மை நாடாத்தி கோயில் வளாகம் வரை வெட்டப்பட்டது. 1867-ல் இத்திட்டம் பல காரணஙகளால் நிறுத்தி வைக்கப்பட்டது. அன்று திவானாக இருந்த சர்.மாதவராவ் குறிப்பிடுகிறார்:‐

“It is to be regretted that the necessity arose for suspending the extension of the

Southern canal towards the capital after clearing the line and making some progress in blasting and excavation. The Wurkullay (tu;fiy) junction canal was certainly entitled to prior attention, but it would have been more satisfactory if provision could have been made for simulataneoulsy carrying on both the works. But it seems that it could not be made at the time. It is to be hoped however, that the Chief Engineer will be in a position to resume erelong the work suspended”.

 (V. Nagam Aiya – The Travancore State Manual – Vol.III Page 231 & 232)

     வர்கலை கால்வாய் பணி தொடங்கிவிட்டதால் எ.வி.எம். கால்வாய் பணியை அரசு நிறுத்திவிட்டது என்று தெரிகிறது. பணமுடைதான் முக்கிய காரணம் என்பது இதனால் புலனாகிறது. இருப்பினும் இந்த கால்வாயின் தேவையையும்,  முக்கியத்துவத்தையும் அரசு உணர்ந்திருந்தது.

கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரையிலும் அங்கிருந்து கொல்லம் வரையிலும், அஙகிருந்து கொச்சி வரையிலும் நீர்வழி பொக்குவரத்துக்காகவே மேற்படி திட்டத்தை திருவிதாங்கூர் மன்னர்கள் தொடங்கினர்.

 இந்த திட்டம் நிறைவெறியிருந்தால் இன்று குமரி மாவட்டத்தில் உருவாகியிருக்கின்ற போக்குவரத்து நெருக்கடியை இந்த  நீர்வழி  பொக்குவரத்து வசதி சுலபமாக தீர்த்து வைத்திருக்கும். தவிரவும் சுற்றுலாத்துறையும் இதனால் பெரும் பயன் அடைந்திருக்கும். கேரளாவில் கால்வாய்கள் வெட்டி நீர்வழி   போக்குவரத்தை வளரச் செய்தமையால் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவில் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் கேரளம் முதல் இடத்தில் இருப்பதற்கு மூலக்காரணம் இந்த கால்வாய்களும, அதில் ஓடிக் கொண்டு இருக்கின்றஉல்லாச படகுகளும்தான். காஷ்மீரத்தின் படகு வீடு கலாச்சாரத்தை கேரளம் இன்று தட்டியெடுத்துவிட்டமையால் அங்கே சுற்றுலாத்துறை பல மடங்கு வளர்ந்து இருப்பதையும் காணலாம்.

 இதைப்பொன்று தமிழ்நாடு குமரி மாவட்டத்திலும் உல்லாச படகு சவாரியை ஊக்குவிப்பதற்கு நின்றுபொன இந்த ஏ.வி.எம். கால்வாய் திட்டத்தை மீண்டும் தொடங்கப்பட்டு, கால்வாயை தொடர்ந்து வெட்டி கன்னியாகுமரி வரைக் கொண்டு செல்ல வெண்டும். நாளடைவில் இந்த கால்வாயை கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி மற்றும் அதாவது நெல்லை தாமரபரணி ஆறு கடலில் சங்கமிக்கின்ற இடமான காயல்பட்டிணம் வரையும் நீட்டுவதற்கும் வாய்ப்பு உண்டு. இந்த கால்வாயை தேங்காப்பட்டணத்தில் இருந்து மீண்டும் அகலமாக வெட்டி மணக்குடி வரை நீட்ட வெண்டும். இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்திலும் இத்திட்டத்தை திரும்பவும் எந்த அளவுக்கு மீண்டும் செயல்படுத்தலாம் என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

“There are proposals to examine how best this Inland water way can be developed”  (Second F.Y.P. (1956‐61) K.K. District – Page – 53)

இந்த கால்வாயை மீண்டும் வெட்டுவதன் மூலம் மாவட்டத்திற்கு கிடைக்கின்ற பயன்கள் அதிகம். அவைகளாவன:‐

 1. கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரையில் நீர்வழிபோக்குவரத்து அதிகரித்து மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து நெரிசல் பெருவாரியாக குறையும்.

2. இதனால் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.

3. சுற்றுலா வாய்ப்பு அதிகரித்து பலருக்கு மேலும் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

4. நிலத்தடி நீரின் மட்டம் உயர்ந்து கடல் நீர் உட்புகுவதை தடுத்து நிறுத்தி நன்னீர் விவசாயம் வளரும்.

5. மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உப்பு இல்லாத நல்ல குடிநீர் கிடைக்கும் மற்றும் கடல்அரிப்பு இயற்கையாக குறையும்;.

 வேண்டுகொள்

1.    ஏ.வி.எம். கால்வாயை தேங்காப்பட்டணத்திலிருந்து மீண்டும் விரிவாக வெட்டி முதல் கட்டமாக கன்னியாகுமரி வரை (மணக்குடி) அமைக்க வேண்டும். இத்திடத்தை நடுவன் அரசின் சுற்றுலா வளர்ச்சித் திட்டமாக எடுத்து அவர்களே இதை செயல்படுத்த வேண்டும்.

2.    சுற்றுலாவுக்காக அந்த கால்வாயில் படகு சவாரி ஏற்படுத்த வெண்டும். ஏ.வி.எம். கால்வாய் நீர்வழிப் பொக்குவரத்துத் திட்டம் என்பதால் இதை மத்திய அரசு கப்பல் போக்குவரத்துத்துறையைக் கொண்டு நிறைவேற்றிடச் செய்தல் வெண்டும். அதன் பொறுப்பை கன்னியாகுமரி  நாடாளுமன்ற உறுப்பினர்  ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு ஆவன செய்தல் வெண்டும்.

(Dr. D. Peter)

Chairman,
Kanyakumari Institute of Development Studies (KIDS),
266, Water Tank Road, Nagercoil-629001
Phone : +91 4652 279745

Mobile : +91 9043952430

 


பின்னூட்டமொன்றை இடுக

FIRST UPRISING: AGAINST NAIR DOMINANCE IN TRAVANCORE (1822-1859)

FIRST UPRISING: AGAINST NAIR DOMINANCE IN TRAVANCORE (1822-1859)

Introduction

The educational and social services rendered by the Protestant Christian Missionaries, in addition to their usual evangelism among the oppressed community of South Travancore opened the eyes of the Nadar Community which suffered most, towards liberation.  In the persecutions which followed in various places in South Travancore the Hindus, Romanists and Muslims united together against the Protestant Christians particularly Nadars.  The Nairs were foremost in action, but the Brahmins and others were behind the scenes.  Samuel Mateer observedThe Land of Charity, Madras, 1991, p.278, “On the whole then, it was determined, that by some means or by any means a stop must be put to the progress of Christianity and to the spread of the reforms and innovations already in progress and impending.”  The Christians, particularly the Nadar Protestants rose up to break the yoke of bondage imposed on them by the high castes, particularly by the Nairs.

The Nadars who embraced Protestant Christianity with the help of the missionaries managed to obtain many a relaxation from the government.  In all, the relief from the Ooliam service hurt much the Nairs directly.  For the Nairs lived by the exploitative labour freely rendered by the Nadars at their beck and call.  Nadars began to refuse their invitation and often demanded wages for the work doneC.M. Agur, Church History of Travancore (1903) App. XVIII (3). A Proclamation exempting Christian from compulsory duties connected with Pagodas, Moorajebam and other,  Hindu religious festivals and Devasam work, dated 16th Margali 991 (1815).  Hence the Nairs were infuriated.

Secondly, the women of those who embraced Christianity were allowed to use upper garment to cover bosom like the high caste Nair ladiesIbid., App. XVIII (4). Order from Colonel J. Munro, Resident Dewan to the Sarvadicariacars of Trivandrum and Neiyattangurry Taluq dated Quilon the 19th of Dhanoo 988 (1812).  This was considered an insult by the Nairs.

Thirdly, the economic and social progress of the Christian Nadars under the patronage of the missionaries irritated the Nairs.  Their anger was mainly on the missionaries who were responsible for the progress and courage of the Nadars.  Therefore the Nairs decided to wipe out the missionaries, their mission churches the schools and the Nadar convertsD. Peter (Ed) Years of Challenge, 1828-1853 (1994) pp.38-44. Revd. C. Mead to Captain Sibbald Officer Commanding stationed at Udayagiry on the subject of disturbances.  In all these struggles, Nadars of Kalkulam and Vilavancode taluks of South Travancore suffered much, since the Nair settlements were comparatively high in those taluks.

Kalkulam Struggle

The struggle first started in Kalkulam taluk. In May 1822, a few Nadar women went to the church covering the upper part of their body with a jacket.  They were molested by the Nairs, their jackets were torn to pieces and filthy words were used against themR.N. Yesudhas, The History of London Missionary Society in Travancore – 1806-1908,Trivandrum, 1980, p.175.  Retaliation proceeded from the Nadars.  The missionary, Charles Mead reported the matter to the British Resident in Travancore.  The Resident directed the Padbanabapuram Court to study the matter and report. The judgement came in favour of the ChristiansC.M. Agur, op.cit., App. XVIII (2). Decree of the Court of Palpanabapuram relating to the upper cloth dress worn by Christian women, Vakeel No.177 dated 7th Vykasi 998 (1823).

Jubilant over the judgement the Christian ladies gained confidence and boldly began to use upper garments and freely moved to market places and to the church. The Nairs were determined to assault those who violated their wishes.  In the year 1828, struggle burst out at Attoor, Kannanoor, Thirparappu, Arumanai, Udayarvilai and Pulippanam in Kalkulam TalukD. Peter (Ed), op.cit., pp.38-44.  Under the leadership of Eswara Pillai, the Revenue Inspector of those places in collusion with Pidagaicars plotted against the Christians.  Christian churches were burnt, Christians were caught, tied together, thrashed and put in jail.  To hunt the Christians, they used bow and arrow, sticks, swords and guns.  They came round and round with all these weapons to spread fear over the Christian areas. The Christians were branded as terrorists and traitors and their movements were watchedD. Peter (Ed) op.cit., pp.58-62. Summary of Complaints lodged at the Padbanabhapuram Cutchery in January 1829.

As Kalkulam taluk had a sizable number of Nairs, the Christians of that taluk had to suffer a lot.  Kaisapillai, Neelakandapillai and Madhavan Pillai of the Attoor locality terrorized the Christians and placed their lives and properties under insecurityD. Peter (Ed), op.cit., pp.172-174. Letter of Autoor Adigaram Christians to the Acting Resident of Travancore.  Raman Pillai said, “What business have the gentlemen in this country?  What can these Kaluvaris(Naughty) fellows do?  If we burn down all the chapels so that no one should remain, these Kaluvaris will return to their country”D. Peter (Ed), op.cit., pp.38-44.

Attoor Church and the houses of Christians were burnt down.  Their paddy, jaggary,clothing, ornaments, etc. were destroyed.  Attoor school master and some Christians were tied together and elephants were employed to drag them to Thuckalay jailIdem.  A dead man’s body was lying on the road side.  Responsibility for his death was thrust on some Christians and they were arrested and brought under custody.  The ears of a woman aged 90 were cut and the ornaments were stolen.  One Vedamonikam of Pampadikonam was murdered by the Nairs.  They threatened to destroy the bungalow of Resident Colonel MecaulayIdem.

Even though the Christians were exempted from Ooliam services on Sundays, they were caught and compelled to do Ooliam services on Sundays in order to prevent them from going to the ChurchIbid., p.33, Letter of Revd. Mault and Revd. Mead.  A Christian from Kannanoor refused to do Ooliam service on a Sunday.  He was caught by the furious Nairs on a Sunday 21 December 1826 and was forced to carry coconut leaves to Padbanabapuram to feed the elephants in the Fort.  On hearing this a Nadar named Esakimadan who embraced Christianity with the co-operation of certain others relieved that Christian who was loaded with coconut leaves. The same leaves were loaded on a Nair and transported back to Kannanoor Church.  This incident shook the Nair society very badlyIbid., p.158, An Arzee from the Tassildar of Kalkulam District, Dated 18th Kartigay 1004.

With a view to punish the Nadar Christians who were responsible for such an incident, some Nairs of Attoor Adigaram, after two days assembled one mile away from Kannanoor Church with sticks, swords, guns and other weapons.  Hearing this the Christian Nadars of Kannanoor Church left their houses and ran away.  Those who remained in the houses were beaten and the houses were plundered and the Church was burntC.M. Agur, op.cit., p.834.

After this incident, during nights, the Nair terrorists used to go round with deadly weapons and torches, shouting slogans against the missionaries.  Wherever they went, the churches and schools of the mission were burnt down and the Christians were severely beaten.  On 22 December, the servant of Charles Mead went to Trivandrum to get bread for Mead.  On his way he was stopped and enquired.  He said that he was from the Army Camp.  The Nairs who stopped him said that he would have been killed if he was associated with MeadIbid., pp.840 & 841.

Vilavancode Struggle

In the Vilavancode taluk region, the Nairs prevented the Christians from going to the Church and giving sermons in the ChurchD. Peter (Ed), op.cit., pp.58-62.  Packianathan of Kanjiracode Church was prevented from preaching the gospel.  He was threatened by saying that his house and the Church would be burnt if he violated their wish.  Savarial Gnanappu and Annal of this village were teased and their jackets were torn to pieces while going to the market.  Mallam Pillai of the same village, under the instigation of Nattalam Pakuthi Provartikar and the head of the same village did all these thingsIbid., pp.9-12: Petition from the Chanoo and Cauvathy inhabitants of Eraniel, Kulicoolum, Coolitorah Talooks of Travancore Sircar to the Resident.  When this matter was complained to the Provartikar by the Reader of the Church, he was warned that he would also be beaten if these women wore jackets any moreIbid., pp.58-62.

Gunamudayal and Neetiyudayal of Kunnathoor went to the market at Kallankuzhi.  They were beaten and their jackets were torn to pieces.  Likewise Yesudial who went to the Kuzhivilai market was also beaten and her jacket was torn to pieces by Poothamadan Chetty and Mallan Pillai.  Women of Vetha Madan’s and Arumugam’s house went to the market wearing the jacket Ibid., pp.9-12.  Sankara Pillai threatened them saying that they were violating the usual custom.  Those ladies went to the house and returned with broom stick in their hand and their men followed them with stick and other weapons.  Seeing this, Sankara Pillai ran awayIbid., pp.162&163 An Arzee by the Padagaicars of Madalam Adigaram in Yaraniel District Dated 14th Margaly 1004.  This was complained to the Midalam Pidagaikar.

The climax in this struggle was that an attempt to the life of the missionary, Charles Mead was made.  On 3 January 1829, the Nairs planned to attack his residence at Mondaicaud.  Knowing this, Mead secretly informed the matter to Captain Sibald who was stationed at Oodayagiri Fort.  Captain Sibald came in time and rescued the life and properties of MeadC.M. Agur, op.cit., p.838.

Nanjil Nadu Struggle

Vellalas who enjoyed social status on par with the Nairs lived in Thovalai and Agasteeswaram taluks in Travancore.  They also oppressed the Christians.  Vellalas of Bhoothapandi, Maravas and certain others joined together and attacked the Christians of Thittuvilai area.  One school teacher and thirteen other Christians who were in their houses were dragged out and put into the Bhoothapandi Satram Jail.  Some of them confessed that they were not ChristiansIbid., pp.98-100, A letter to Col. Morrison, Resident, dated January 27th, 1829 by Revd. C. Mault.  Those who recanted were released and others were tortured.  Watching this tragedy, the Muslims and the Catholic Christians of the area rejoiced.  The reason was that the growth of the Protestant Christians was considered as a menace to themIbid., p.32.

In 1828, rioting started and extended for six months.  Hence the missionaries, Mead and Mault requested the British Resident Colonel Morrison to give protection to the ChristiansIbid., p.36.  The Resident requested Dewan Venketa Rao to enquire the matter.  Accordingly Dewan came to Padmanabapuram Fort on 11 January 1829 and made an enquiry.

Government Order

Dewan Venkata Rao conducted an enquiry, accordingly an order was released in February 1829 Ibid., p.110-112, Proclamation by Her Highness the Ranee dated the 23rd Tye 1004 corresponding with the 3rd February 1829, putting numerous restrictions on the dress of Christian women. Those woman converts to Christianity were allowed to wearKuppayam, (a loose jacket) only and were prohibited from wearing dresses like those of the Nair women.  Next, those who embraced Christianity were exempted from Ooliam duties only on Sundays and they had to do Ooliamduties on other days.  But they were not bound to do Ooliam service to the Hindu temples and Devasams.  Thirdly, it was declared that low castes of all categories were prohibited to follow or imitate the high caste customs and manners.  Construction of worship places without the permission of the Government was barred.  Again the order insisted that the complaints, if any, should be lodged only to the government officials and not to any non-governmental officer or personIdem.  The officials were Nairs and they supported always the Nairs.  So the low caste people lost confidence in them.  The order was intended only to prohibit the Christians from complaining to the missionaries.

1829 order was painful to the Protestant Christians and to the missionary, Charles Mead in particular who fought for the liberation of low castes from the clutches of high caste Nairs.  Mead considered that this order was an attempt to suppress the growth of Christianity.  By this order the Christians did not get any relief.  Those who languished in jail due to false case lodged by the high caste Nairs were suffering from diseases also.  Their families were in starvation.  Considering the sufferings of his converts, Mead had to fight with the Government for longIbid., pp.113-115. Letter of Revd. C. Mead to the Resident of Travancore, February 13, 1829.

By the 1829 order, the Government could neither stop the growth of Christianity nor find solution to the problems of Christians.  Christians were occasionally and here and there attacked by the Nairs and it was a continuing story.  Under such circumstances, in the year 1855 the order relating to the abolition of slavery was proclaimed.  The Nairs who were benefitted much by the slaves were severely affected by the proclamation for which the Christian Missionaries were instrumental.  The slaves attained the ownership of the land which they cultivated.  The control the Nairs had over the slaves vanished.  This order put the Nairs in shame and they began to crush the Christians and the Missionaries who were responsible for their pitiable plightSamuel Zachariah (Reprint Tamil), Then Thiruvithankottu Thiruchabai Charithira Churukkam, Part-II, p.14.

The Proclamation of Queen Victoria of England in the year 1858 confused both Nairs and the Nadars.  The Nairs considered that the Proclamation was in their favour.  With the help of the Nair officials, the Nairs took the law into their hands and started oppressing the Nadars.  The Nadar community thought that they were given the right to disobey the existing social customs and traditionsV. Nagan Aiya (Reprint), The Travancore State Manuel, Vol.I, New Delhi, 1989, p.526.  The Hindu Nadar women also began to dress like the Christian Nadar women covering the upper part of their body.  For this, the Christian Nadars helped the Hindu Nadars.  The Nairs began to attack brutally the Christian Nadars with the assistance of other low caste communities R.N. Yesudhas, A Peoples Revolt in Travancore (1975) pp.190 & 191. Letter from Rev. John Cox to the Resident on 21 Jan. 1859 about the disturbances in Neyyatinkara.  As a result in Neyyatinkarai, Kalkulam, Vilavancode.  Thovalai and Agasteeswaram rioting burst out severely in December 1858V. Nagam Aiya, op.cit., p.526.

Struggle Renewed

Rioting vigorously cropped up in Neyyoor region on 25 December 1858F. Baylis, Report of the Neyyoor Mission District for the year 1859, UTC Archives, Bangalore, (Referred by J.W. Gladston, Protestant Christianity and People’s Movements in Kerala, Trivandrum, 1984, p.88).  The Nairs entered into the Neyyoor village and manhandled all those Christians whom they came across.  The women who wore jackets were attacked and jackets were torn to pieces.  Fearing the Nair attack the Christian Nadars of that village ran away.  Children and women found shelter in the Mission Bungalow. This struggle reflected in almost all the Neyyoor Mission villages.  Under the pretext of service to the government, the Nairs captured four people from the Kallankuzhi village, tied them together, beat them severely, put them under lock-up and released them after many daysJohn A. Jacob (Tamil) Then Thiruvithancore London Missionary Sankra Charitran – 1806-1956, Nagercoil, 1956, pp.68 & 69.  After two days, the Kallankuzhi Church was burnt down.  On 27 December the Meicode Church was also burnt downC.M. Agur, op.cit., p.932.

The taluks of Agasteeswaram and Thovalai were also affected severely.  Houses of three Nadars were burnt down in the James Town village on 29 December 1858Samuel Mateer, op.cit., p.302.  On 4 January 1859 rioting started at Kottar near Nagercoil.  Nairs and Vellalas joined together and attacked the Nadar Christians and their properties.R.N. Yesudhad, Ibid.  The Christian women were beaten up and their upper garments were torn to pieces. Under the leadership of Vaidiyalingam Pillai and Neelam Pillai nearly 200 Vellalas and Nairs assembled and marched towards Thazhakudy village with sticks and cutting knives.  The party attacked the Christians, beat and tore the jackets of the women.  They planned to burn the church and the school and to kill the catechist and the school teacher.  Hence the Church and the school were closed for many weeks.  Christians of Thazhakudi evacuated the villageIbid., pp.196-198, Letter from Rev. James Russel to the Resident of Travancore regarding the disturbances in Nanjil Nad. Three days prior to the Thazhakudi incident, nearly 500 Vellalas along with the government officers marched to Kumarapuram, Iraviputhur and Marungoor villages, entered into the houses of the Christians and plundered.  Men ran away and women were dragged out of their houses, molested and the upper garments were torn to piecesIdem. Such type of rioting happened at Aralvaimozhi, Chemponvilai and Kattuputhoor villages.

On 10 January 1859, the Church at Vadakkankarai and the Resident’s Bungalow at Nagercoil were burnt down.  On the same day about 50 Vellalas met catechist of Chellamthuruthi and ordered him not to open the church and preach.  If he obeyed their order, they promised him to offer half a kottah, a local measure of paddy per monthIdem.  Between 11 and 16 January, two churches and schools were burnt down.  In Thittuvilai a Nadar Christian and his wife were assaulted severely and his house and the adjoining 27 houses were set on fireV. Nagam Aiya, op.cit., p.529.  In many places, Christians were dragged to render Ooliam services to the Hindu Temples on Sundays.  They were compelled to give up Christianity and to mark Hindu symbols on their foreheadIdem.  As there prevailed insecurity to the Christian missionaries and to their family members, special guards were arranged to watch their living places.Samuel Mateer, op.cit., p.303.  In Agasteeswaram, the Nadar Christians gathered people and raised funds to give a counter attack to the brutal deeds of the Vellalas and Nairs.  They sought the support of the Tirunelveli Nadars alsoV. Nagam Aiya, loc.cit.

In Neyyatinkarai, two women went to Aralumoodu market.  They were beaten up by a last grade government servant and brought before the Neyyatinkarai jail officer.  The jacket of one woman was torn into pieces, pulled off and hung on the tree near the jail.  A group of nearly 400 people consisting of Muslims, Chetties and others were roaming about Aramanoor, Puthenkarai and Thirupuram markets on 15 and 19 January 1859 with a view to attack ChristiansIdem.

Interference of Missionaries

When rioting was at its peak, the Missionaries, John Cox, Russel, Whitehouse, Lewis and Baylis jointly complained to the British Resident in TravancoreCover File No. 2115, F. Baylis to Cullen, Neyyoor, January 1859, English Records, Kerala State Archives, Trivandrum.  They wrote and met the king directly and explained to him the sufferings of the ChristiansPetition of the LMS Missionaries, dated February 7th, 1859, Madras Political Proceedings 27th August to 2nd September 1859 Referred by J.W. Gladston, op.cit., p.90.  As the missionaries could not get any solution from the King of Travancore, they sought the help of the British Governor at Madras, Charles Trevelyan.  On 6 May 1859, Trevelyan wrote a letter to the British Resident in Travancore, General Cullen expressing his dissatisfaction over the unlawful customs and traditions followed in Travancore.  He asked General Cullen to impress upon the Maharaja regarding the painful dress regulations adopted against the traditions of Christians and othersCopies of Official Papers sent from India Touching the Recent Disturbances in Travancore, p.39-47, Minutes of the Hon. President, 7th May, 1859, Tamil Nadu Archives, Madras.

On the compulsion of the government of Madras, the Dewan and Maharaja had half a mind to agree to the demand of the Nadars.  Accordingly on 26 July 1859, the Travancore Government permitted all the Nadar women to wear Kuppayam like the Christian Nadar women, irrespective of religion.  The Nadar women of any religion were permitted to cover the upper part of the body by any means excepting the style of the Nair womenProclamations from 1858 to 1874 A.D., Proclamation of 1859 A.D., Kerala State Archives, Trivandrum.  Even though this order was not satisfactory to the Nadars, this privilege was not granted to the other low castes.

Missionaries were not satisfied with the 1859 order of the Government.  As the other low caste women were not permitted to cover the breast, the missionaries expected clash in the future.  Hence regarding the dress, they again wrote a letter to the Governor of Madras condemning the attitude of the Travancore Government.  The Governor summoned the Resident to his office and had a talk on the subject.  The Governor advised the Resident, Maltby to use all his influence on the Maharaja to remove all dress restrictions imposed on all castes.  Maltby reported the wish of the British Government to the MaharajaPolitical Proceedings 28th August 1860, Despatch from the Rt. Hon. Sir. C. Wood, Secretary of State for India, to His Excellency the Hon. Governor in Council. Fort St. George, 24th July 1860, No.17, Tamil Nadu Archives, Madras.  Maharaja felt that if he did not oblige, there would arise strained relationship between Travancore and the British.  Hence in 1865 an order was released permitting all low castes to dress like the Nadar women.  Even then the low caste women were not permitted to dress like the Nair womenNeetu, Vol.71, pp.210 & 211, Proclamation of Mithunam 1040 ME (1865 A.D.) Kerala State Archives, Trivandrum.

            As time passed by, all the restrictions imposed on the low castes vanished one by one.  However the enmity that arose between the Nairs and the Nadars remained submerged and unresolved.  It re-emerged after one century and the Nadars had to fight again during the middle of the twentieth century to reclaim their liberation.  This liberation is neither the gift of the Travancore Kings nor the generosity of the Nairs and Vellalas but was the preragative attained Travancore Kings by the sustained efforts of the oppressed community, the Nadars, unrelenting support of Protestant Christian Missionaries and the unrestricted co-operation of the British Residents in Travancore.

 

Pedagogi Strategy: An interactive question
for DESS of NCERT to find out information,
if any, on Aiya Vaikunder – Ref: F.N. 583/DESSH/2012/Hist/Correspondence/1031 dt. 11 Feb. 2013                             – KIDS

 

 

(Dr. D. Peter)

Chairman,
Kanyakumari Institute of Development Studies (KIDS),
266, Water Tank Road, Nagercoil-629001
Phone : +91 4652 279745

Mobile : +91 9043952430


பின்னூட்டமொன்றை இடுக

ஸ்ரீபத்மநாபர் கோவில்

கேரள உயர்நீதிமன்றத்தின் ஆணையால் ஸ்ரீபத்மநாபர் கோயிலில் பாதாள இரகசிய நிலவறைகளைத் திறந்து பார்த்ததில் (ஒரு அறை நீங்கலாக) இதுவரையிலும் சுமார் இரண்டு லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளும், இதர பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திறக்காமல் இருக்கின்ற ஆறாவது அறையைத் திறந்தால் அதில் விலை மதிப்பற்ற தங்கத்தினால் ஆன சாமி சிலைகள் ஏராளம் இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

    “C” பாதாள அறையில் இருந்த தங்க நகைகள், பாத்திரங்களில் குறிப்பிடத்தக்கவை, கழுத்துக்குடம், தங்க எழுத்தாணி, இதுகள் தவிர சிறியதும் பெரியதுமான ஏராளமான மோதிரங்கள், தங்க வளையல்கள், நெற்றிச்சுட்டி ஆகியவைகளும் கிடைத்தன. இந்த அறையின் ஒரு மூலையில் தங்கக்கட்டி, தங்க்கயிறு, நெல்மணி அளவிலான தங்க குண்டுமணிகள். நூற்றுக்கணக்கான தங்கச் செயின்கள், தங்கச் கம்பிகள், 50 பைசா அளவிலான தங்க நாணயங்கள், ஒரு பைசா அளசவிலான தங்க நாணயங்கள் காணப்பட்டன. 18 அடி நீளம் கொண்ட 214 கிலோ எடை கொண்ட 4 ராசட்த தங்கச் செயின்கள் இருந்தன. ஒரு சாக்கு நிறைய பெல்ஜியம் ரத்தினங்கள் இருந்தன”. (தினகரன் – 02.07.2011 – பக்.12)

    இந்த நகைகளைப் பார்ககும் போது வேணாட்டுப் பெண்களோ, அல்லது வேணாட்டு தெய்வங்களோ அணிகின்றவைகளாகத் தோன்றவில்லை. இத்தகைய நகைகள் தமிழர்கள் மட்டுமே அணிகின்றவைகளாக உள்ளன. சிலப்பதிகாரக் காவியத்தில் தமிழ்ப் பெண்கள் அணிகின்ற அணிகலன்கள் குறித்த விவரம் காணப்படுகிறது.

    “கால்விரல் மோதிரம், பரியகம், நூபுரம், அரியகம், பாடகம், சதங்கை, அரையில் அணியும் முத்துவடம், முப்பத்திரண்டு வடத்தாலான முத்து மேகலை, மாணிக்கமும் முத்தும் இழைத்ததோள் வளையங்கள், மாணிக்கமும் வைரமும் அழுத்திய சூடகம், செம்பொன்வளை, நவமணிகள், சங்கவளை, பவழவளை, மாணிக்க மோதிரம், ஆகியவைகளே”.

    “யவனம் ஏற்றி வந்து இறக்கிய பொன்னும் பகைவர்களிடமிருந்து கவர்ந்து கொண்டு வந்த பொன்னும், நாட்டிலேயே மண்ணைத் தோண்டியும், அரித்து எடுத்த பொன்னும், தமிழகத்தில் எங்கும் மலிந்து கிடந்தன”. (டாக்டர் கே.கே. பிள்ளை – தமிழக வரலாறு–1972 – பக் 142, 143)

    ஸ்ரீபத்மனாபர் கோயில் இரகசிய அறைகளில் காணப்படுகின்ற நகைகள் மேலே சொல்லப்படுகின்ற நகைகளைப் போன்றே காணப்படுகிறபடியால், அவைகள் தமிழர்களுக்குச் சொந்தமானவைகள் என்பதில் வேறு கருத்திருக்க முடியாது.

    இத்தங்க நகைகளுக்குப் பின்னால் பாண்டிய நாட்டு வரலாறு ஒன்று மறைந்து காணப்படுகின்றது. இத்தகையத் தங்க நகைக் குவியல் ஸ்ரீபத்மனாபசுவாமிக் கோவிலில் இருப்பதற்கு எக்காரணமும் இல்லையென்பது வரலாற்று ஆய்வாளர்களிடம் கணிப்பு. ஏனெனில் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் சாத்வீகத்தில் பற்றுடையவர்களும், பிறநாடுகளின் சொத்துக்களை கொள்ளை அடித்து தங்கள் கருவூலகத்தை நிறைக்க வேண்டும் என்ற பேராசை உடையவர்களும் அல்லர். இறைபக்தி மிக்கவர்களான இக்குடும்பம் தங்களது நாட்டை “தர்மபூமி”யாக கோலோச்சி வந்தவர்களும் ஆவர். அகண்ட திருவிதாங்கூரை உருவாக்கிய மார்த்தாண்டவர்மா மகாராஜாவும் சிறு நாடுகளின் மீது படை நடத்துகின்ற வேளைகளில் அந்நாட்டு செல்வங்களை கவர்ந்து வரவில்லை. அவரக்குப் பிறகு நாட்டை ஆண்ட மன்னர்களும், ராணிமார்களும் ஆங்கில அரசின் பாதுகாப்பில் இருந்தமையால் ஆங்கிலேயர்களுக்கு கட்ட வேண்டிய திறையைக்கூட உரிய காலத்தில் கட்ட இயலாமல் திக்குமுக்காடியதாக வரலாறு கூறுகிறது. வேலுத்தம்பிதளவாய் திறை செலுத்த இயலாததால் ஆங்கிலேயர்களுடன் போர் செய்து தோல்வியைத் தழுவினார். இப்பேர்பட்ட இக்கட்டான நிதி நெருக்கடிகளிலும் இக்குவியல் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் நிச்சயமாக அதை எடுத்து வேலுத்தம்பிதளவாய் கப்பம் கட்டுவதற்காகப் பயன்படத்தியிருப்பார். ஆங்கிலேயருக்கு இவ்வாறு புதையல் இருப்பது தெரிந்திருந்தால் அவர்கள் இதை கைப்பற்ற முயன்றிருக்கலாம். ஆனால் இவர்களுக்குத் தெரியாமல் இந்த நகைப் புதையல் இருந்தமையால் அவைகள் இவர்கள் காலங்களுக்கு முன்பே இங்கே பத்திரமாக இருந்துள்ளன என்பது உறுதியாகிறது. கர்னல்மன்றோ அவர்கள் திருவிதாங்கூருக்கு ஆங்கிலப் பிரதிநிதியாகவும், திவானாகவும் பணியாற்றிய காலத்தில் இராணி லட்சுமிபாய் அம்மையாருக்கு தங்கக் குடை ஒன்றை அன்பளிப்பாக அளித்தார் என்று வரலாற்றுப் புத்தகங்களில் குறிக்கபட்டுள்ளதாக செய்தி வெளியானது (தினகரன்- 02.07.2011- பக். 12) ஆனால் இந்த தங்கக்குடை மேற்படி புதையல்களில் காணப்படவில்லை. ஆகையால் இந்த தங்கப் புதையலுக்கு வேறு வரலாறு உண்டு என்பது உறுதியாகிறது. எனவே தங்கக் குவியலுக்கும் வேணாட்டிற்கும் சம்பந்தமில்லை என்பது உறுதியான ஒன்றாகிறது.

    பாண்டிய நாடு தெற்கே கன்னியாகுமரி முதல் கிழக்கே காவிரி ஆற்றங்கரை வரையிலும், வடக்கே கோயம்புத்தூர், நெல்லூர் வரையிலும் பரந்து கிடந்தது. அதன் தலைநகர் மதுரைப் பட்டணம் ஆகும்.

    மதுரையை சடையவர்மன் சுந்தரபாண்டியனையடுத்து மாறவர்மன் குலசேகர பாண்டியன் முடிசூட்டிக் கொண்டான். (கி.பி. 1268 – 1310) “ …… பாரசீக வளைகுடாவின் மேல் உள்ள தீவுகள் துருக்கி, ஈராக்கு, குராசான் ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் காணப்படும் செல்வங்கள் பாண்டிய நாட்டினின்றும் பெற்றவையாம். அவனுடைய ஆட்சியும், நாட்டுவளமும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்துள்ளன. இவ்வாட்சி காலத்தில் அன்னிய நாட்டு மன்னரின் படையெடுப்பு ஒன்றேனும் நிகழ்ந்ததில்லை. பாண்டிய மன்னனும் ஒரு முறையேனும் நோய்வாய்ப்பட்டிலான். மதுரை அரசு பண்டாரத்தில் ஆயிரத்து இருநூறு கோடிப் பொன் சேர்ப்புக்கட்டி வைக்கப்பட்டுள்ளது. அஃதன்றி மத்து, மாணிக்கம், நீலம், பச்சை போன்ற நவரத்தினங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன. மேலும் விளக்குவதற்கு சொற்கள் இல்லை…”. எனறு வெனீஸ் நாட்டு வழிப்போக்கனான மார்கோ பாலே பாண்டிய நாட்டு செல்வக் கொழிப்பை குறித்து எழுதுகிறார். (டாக்டர் கே.கே. பிள்ளை – தமிழக வரலாறு, மக்களும் பண்பாடும் – 1975- பக். 375, 377)

    மார்க்கோபோலோ மேலும் குறிப்படுகையில், “பாண்டியநாடு இந்தியாவிலேயே, மிகச் சிறந்த நாடு என்றும், அது பண்பும் மாண்பும் வாய்ந்ததென்றும், அந்நாட்டை ஐந்து பாண்டியர்கள் அரசாண்டு வந்தனர் என்றும், அவர்களுள் ஒருவன் சொண்டர் பாண்டாவர் (சுந்தரபாண்டி வேர்) என்பவன் முடிசூடிய மன்னன் என்றும், பாண்டி நாட்டில் மிகப் பெரிய வனப்புமிக்க முத்துக்கள் கிடைத்தனவென்றும், தாமிரபருணியின் கூடல் முகத்தில் இருக்கும் காயலபட்டணம் மிகப் பெரிய நகரம் என்றும், ஹார்மோஸ், கிரீஸ், ஏடன் அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து குதிரைகளையும், வேறு பலபண்டங்களையும் ஏற்றிக்கொண்டு வந்த மதக்கலகங்கள் அனைத்தும் காயலுக்கு வந்துதான் போகின்றன என்றும், காயல் பட்டினத்தில் வாணிகம் செழித்தோங்கி நடைபெற்று வந்ததாயும், பாண்டிய மன்னனிடம் அளவு கடந்த பொன்னும், மணியும் குவிந்து கிடந்ததெனவும், அவன் நீதியுடனும், நேர்மையுடனும் ஆட்சி புரிந்து வந்தான் எனவும், அவன் அயல் நாட்டு வணிகருடன் மிகுதியும் கண்ணோட்டம் உடையவன் என்றும் மார்கோ பொலோவின் குறிப்புகள் தெரிவிக்கின்றன”. (அதே புத்தகம்-பக் 376)

    இதனைப் போன்றே பேராசிரியர் கே. இராஜைய்யன் அவர்களும் எழுதுகிறார்கள், காண்க:

 “ The foreign travelers who visited the pandya empire during the reign of Maravarman gives an account of the country. Marco polo, the Italian traveler, has stated”, the king possesses vast treasures and wears upon his person great store of rich jewells… An Arab traveler by name wassaf too visited the country . According to him the king was healthy and wealthy. His treasury was filled with gold and pearls.(Dr.K.Rajayyan – History of Tamil Nadu, past to present – 1995 – page 103).

இக் குறிப்புகளிலிருந்து பாண்டிய நாட்டின் மிகுதியானச் செல்வச் செழிப்பை அறிய முடிகிறது. அன்றைய மதிப்பில் 1200 கோடிப்பொன் சேர்ப்புக்கட்டி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிகின்றது. பொற்கட்டிகளின் மதிப்பு மட்டுமாக இது கருதப்படுகிறது. அதற்கு மேல் நவரத்தினங்கள். அதற்கு மேலும் விளக்குவதற்கு சொற்கள் இல்லை என்று டாக்டர் கே.கே. பிள்ளை எழுதுகிறார்.

வெளிநாடுகளில் இருந்து இத்தனைச் செல்வங்களும் பாண்டிய நாட்டுக்கு எப்படி வந்தடைந்தது? பாண்டியநாடு மேற்கத்திய மற்றும் சீனாவுடன் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தது. அதன் மூலமாக கிடைத்த திரவியங்களால் நாடு செழித்தது என்பதுதான் நிலை. அதற்காக இந்நாட்டிலிலுந்து என்ன என்னப் பொருட்கள் ஏற்றுமதியாயின என்பதற்கும் குறிப்புகள் உண்டு.

“மேற்கே கிரீஸ், ரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரையில் கடலோடிப் பிழைத்தார்கள். எகிப்து, பாலஸ்தீனம், மெசப் பொட்டோமியா, பாபிலோனியா, சீனம் ஆகிய நாடுகளுடன் பண்டைத் தமிழர்கள் வாணியத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர். தமிழகத்துப் பண்டங்களான ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு ஆகியவற்றிற்கு மேற்காசிய நாடுகளில் பண்டைய நாட்களிலேயே வேட்மையுண்டு.” (கே.கே. பிள்ளை – தமிழக வரலாறு – பக். 50)

“தமிழகம் ஏற்றுமதி செய்த சரக்குகளில் சாலச் சிறந்தவை இலவங்கம், இஞ்சி, மிளகு, ஏலம், அரிசி, நுண்வகைக் கலிங்கங்கள், தேக்கு, கருங்காலி, நூக்கு, சந்தனம் ஆகிய கட்டமரவகைகள் முதலியன” (கே.கே. பிள்ளை-தமிகை வரலாறு-1973 – பக். 5, 59)

அரிக்கமேட்டில் ஏராளம் உரோமானிய தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உரோமா புரியோடு வாணியம் இருந்தழமையால் மேலை நாட்டு வைரங்களும் கிடைத்தன. அவைகளும், பெற்காசுகளும் இப்பொழுது திறக்கப்பட்ட தங்கக்குவியல்களில் காணக் கிடைக்கின்றன. பாண்டிய நாட்டுடன் வாணியம் செய்ய நியமிக்கபட்டிருந்த உரோமானியர் ‘யவனர்’ எனப்பட்டனர். முதலாம் நூற்றாண்டில் அகஸ்டஸ் சீசர் தமிழ்நாட்டுடன் வாணியத் தொடர்பு கொண்டிருந்தார். முதலாம் நூற்றாண்டின் இடைப்பாகத்தில் பொறுப்பேற்ற ரோமைச் சக்கரவர்த்தி டைபிரியாஸ், கிரேக்கஸ் வாணிப்பத்தால் ரோமாபுரிச் செல்வம், ரோமைப் பெண்களின் வாசனைப் பொருட்கள் ஆசையால் கொடுக்கப்படுவதை தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்று ரோமை சட்டமன்றமான “செனட்” சபைக்கு வேண்டுதல் விடுத்தார். அந்த அளவிற்கு ரோமிலிருந்து செல்வம் தமிழகம் வந்தள்ளது.. அவைகள் இன்று பத்மனாபர் கோயிலில் காணப்படகின்றன.

இந்த குறிப்புகளை வைத்துப் பாhக்கும்போது, மதுரையில் காணப்பட்ட நகைகள், முத்துக்கள், வைர வைடூரியங்கள், கிர்pடங்கள், போன்றவைகள் அனைத்தும் கேரளம் ஸ்ரீபத்மநாபர்கோயில் பாதாள நிலவறைகளில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்களுடன் ஒத்திருப்பதைக் காணலாம்.

இவைகள் அனைத்தும் கேரளத்தின் ஸ்ரீபத்மநாபர் கோயில் இரகசிய நிலவறைகளுக்குச் எவ்வாறு சென்றடைந்தன என்பதை விரிவாக ஆராய்ந்தால் உண்மையை அறிந்து கொள்ளலாம்.

“மாறவர்மன் குலசேகரனுக்கு இருமக்கள் இருந்தனர். ஒருவன் சடையவர்மன் சுந்தரபாண்டியன், மணந்த மனைவிக்குப் பிறந்தவன்;: மற்றவன் மாறவர்மனின் வீர பாண்டியன், மன்னனுடைய வைப்பு மனைவிக்குப் பிறந்தவன். மாறவர்மன், பட்டத்துக்குரிய சுந்தரபாண்டியனை புறக்கணத்து வீரபாண்டியனுக்கு இளவரசர் பட்டம் சூட்டினான் (கி.பி 1296). சுந்தரபாண்டியன் இந்த அநீதியைப் பொறானாய் வெகுண்டெழுந்து தன் தந்தையைக் கொன்று தானே அரியணையெறினான் (கி.பி.1310). கைக்கெட்டியது வாய்க்கெட்டாத வாய்ப்பைப் பெற்ற வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் மேல் போர் தொடுத்தான். சுந்தரபாணடியன் மதுரையை கைவிட்டு ஓடிவிட்டான்”. (கே.கே. பிள்ளை – பக். 377)

ஆனால் மதுரையை சுந்தரபாண்டியனிடமிருந்து திரும்பப் பிடித்துக் கொள்வதற்கு வீரபாண்டியன் வேணாட்டு அரசனான இரவிவாமன் குலசேகரனிடமிருந்து படைத்துணை பெற்றான். (பேராசிரியர் மு. இராஜய்யன் – பக். 104)

“Maravarman Kulasekara has two sons. Jathavarman Sundara Pandya and Jayavarman Veera Pandya/ of these the former was the son of the king by his lega queen/ and the latter by a mistress. Kulasekara/ with some partiality for the latter arranged for his succession after him. Enraged at this outrage, the elder Sundara Pandiya assassinated his father, drove his half brother from Maduraiand ascended the throne. This led to a great civil war between the two brothers and to the interference of Malikkafur, during his invasion of Ma bar”. (A. Krishnaswamy Iyengar, Annamalai Nagar – Topics in South Indian History from Early Times upto 1565 – 1978 – Page 217)

எனவே, மதுரையில் அரசு கட்டிலுக்காக தாயாதிச் சண்டைத் தொடர்ந்தது. தன்னிடமிருந்து, வீரபாண்டியன், மதுரையை திரும்பவும் பிடித்துக் கொண்டமையாலும், அவனுக்கு வேணாட்டு அரசர் படைத்துணை அளித்து விட்டமையாலும், வேறு வழியின்றி சுந்தரபாண்டியன் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினான்: தென்னகத்தை கொள்ளையப்பதற்கான முழு முயற்சிகளில் ஈடுபட்டிருந்த அலாவுதீன் கில்ஜிக்கு இந்தப் பொன்னான வாய்ப்பை தானே உருவாக்கித் தந்தது.

அலாவுதீன் கில்ஜி, தளபதி மாலிக்கபூரிடம் மாபாரை (மலபாரை) கொள்ளையடித்து, தனது படையில் யானைப் படைப் பிரிவை வலுப்படுத்துவதற்காக ஏராளம் யானைகளை கவர்ந்து வர வேண்டும் என ஆணை பிறப்பித்தார். இந்த ஆணையை சிரமேற்கொண்டு, மாலிக்கபூர், பெரும்படையுடன் தென்னகம் புறப்பட்டான். வரலாற்று ஆய்வாளர் ஆர். சத்தியநாய்யர் இவ்வாறு குறிப்படுகிறார்.

“சுந்தரபாண்டியர் உதவிக்கு அழையாதிருப்பினும், மாலிக்கபூர் மாபாரில் படையெடுத்திருப்பாரென்பது உறுதி. ஏனெனில், அலாவுதீன் கில்ஜி, மாபாரின் வளம், செல்வம், சிறந்த யானைப்படை முதலியவற்றால் தூண்டப்பட்டு அப்பகுதியைக் கைப்பற்ற ஆர்வம் கொண்டிருந்தார்”. (இந்திய வரலாறு – பக். 112)

இதனால், மாலிக்கபூரின் முக்கிய நோக்கம் மாபாரைக் கபை;பற்றி முடிந்த அளவு யானைகளை கவர்ந்தெடுப்பதேயாகும். அந்த வேளையில் தான் மதுரையில் சுந்தரபாண்டியன் அழைப்பை ஏற்று, தனது பாதையை மதுரை நோக்கி மாற்றினால், மதுரையை மீட்டு சுந்தரபாணடியனுக்கு கொடுத்துவிட்டு, தஞ்சை, கும்பை, சிதம்பரம் போன்ற கோயில்களை கொள்ளை அடித்துவிட்டு திரும்பவும் மதுரையைக் கவருவதற்காக வந்தவனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. மதுரைப் பொக்கிஷங்களையெல்லாம் வீராபண்டடியனும், சுந்தரபாண்டியனும், மீனாட்சி அம்மன் கோயில் பூசாரிகளும் கடத்தி மேற்கு சென்றுள்ளனர் என்று கேள்விப்பட்ட உடனே, மாலிக்கபூர் தன் படையை வேணாட்டு மீது நடத்தினான். இப்படையை வேணாட்டு அரசன் முதலில் களக்காட்டிலும், தொடர்ந்து ஆரல்வாய்மொழியிலும் எதிர்த்து பேரிட்டார். தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த மாலிக்கபூர், ஆவணாட்டுடன் சமரசம் செய்து கொண்டு 500 யானைகளைப் பெற்று, ராமேஸ்வரம் சென்றான் என்று புலனாகிறது. மதுரைச் பொக்கிஷங்களைத் தேடி எடுக்கும் முயற்சியை கைவிட்டு, யானைகளுடன் திருப்தியடைந்து, வேணாட்டை விட்டுவிட்டான்.

“அச்சமயம் டெல்லி சுல்தன் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதியான மாலிக்கபூர் ஒரு செரும் படையுடன் தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தான். சுந்தரபாண்டியன் அவனை அணுகி படைத்துணை அளிக்கும்படி விண்ணப்பித்துக் கொண்டான். மாலிக்காபூர் மதுரையை தாக்கினான். வீரபாண்டியன் மதுரையைவிட்டு வெளியேறப் பல இடங்களுக்கும் ஒளித்து மாலிக்காபூருக்கு தொல்லை கொடுத்தான்…”

“பலமுனைகளிலும் வீரபாண்டியன் மாலிக்காபூரை கடும் போர்களில் கலக்கி வந்தான்… மாலிக்காபூர் உறையூருக்கு அண்மையிலிருந்த வீரபாண்டியனின் தலைநகரான “பீர்வில்” என்ற இடத்தை நோக்கி தன் படையை செலுத்தினான். வீரபாண்டியன் படைகளில் பணிபுரிந்து வந்த 20,000 முஸ்லீம் படைவீரர்கள் தக்க சமயத்தில் தம் கடமையையும் நன்றியையும் மறந்தவர்களாய் மாலிக்காபூர் படையினருடன் சேர்ந்து கொண்டனர். வீரபாண்டியன் ஊரைவிட்டே ஓடிவிட்டான். நகரமும் மாலிக்காப+ரின் கைக்குள் விழுந்தது. அடை மழை வேறு பெய்யத்தொடங்கியது. அதனால் போரைத் தொடர இயலாதவனாய் மாலிக்காபூர் கண்ணணுரை நோக்கி விரைந்தான். அங்கே வீரபாண்டியன் காணப்பட்டான் எனச் செய்தி வந்தது. வழியில் பொன்னும் மணியும் ஏற்றிக் கொண்டு சென்ற பாண்டி நாட்டு யானைகள் நூற்றியிருபதை கைப்பற்றிக் கொண்டான்”. (கே.கே. பிள்ளை – 1975 – பக். 377 ரூ 378)

ஆனால் வேறு சில வரலாற்று ஆசிரியர்கள், வீரபாண்டியன் மதுரையை விட்டு வெளியேறுகின்ற வேளையில். அரண்மனை பொக்கிஷங்கள் அனைத்தையும் 120 யானைகளில் ஏற்றிச் சென்று, மேற்குக் காடுகளில்  சென்று காணாமற் போனான் என்று கூறுகின்றனர். பாண்டிய நாட்டின் மேற்குக் காடுகள் வேணாட்டின் கிழக்கு காடுகளாகும். அங்கிருந்;து, பாதுகாப்பு நிமித்தம் பொக்கிஷங்களை வேணாட்டிக்கு எடுத்துச் செல்வதற்கே அதிக வாய்ப்பு, ஏனெனில், மதுரையை சுந்தரபாண்டியனிடமிருந்து மீட்டு, வீரபாண்டியனுக்கு அரியணையை அளிப்பதில் படைத்துணை கொடுத்தவன் வேணாட்டு மன்னன். இரவிவர்மன் குலசேகரன் ஆவான். ஆகையால் வேணாட்டு மன்னர்கள் பாண்டியர்களுக்கு உறுதுணையாகவே என்றும் இருந்தள்ளனர். எனவே இந்த 120 யானைப் பொக்கிஷங்களும் வேணாட்டுக்கே சென்றடைந்தன என்று கருத அதிக வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையில் மாலிக்காபூர் வீரபாண்டியனைத் தேடிக்கொண்டு சிதம்பரம் சென்றடைந்தான். அங்கும் கோயில் பொக்கிஷங்களை சூறையாடினான். இடையில் காணப்பட்ட கோயில்களை இடித்து தரைமட்மாக்கினான். திருவரங்கத்தையும் அவன் விட்டு வைத்தானில்லை. அடுத்த மதுரையை குறி வைத்தான். அவன் தாக்குதலை முன்னரேயறிந்த சுந்தரபாண்டியனும் மதுரையை கைவிட்டு அரண்மனை பொக்கிஷங்களுடன் ஓடிவிட்டான்.

ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்சிலைகளையும் சாமிஆவரணங்களையும், பொக்கிஷங்களையும் கோயில் அர்ச்சர்களும், பிராமணப்பணியாளர்களும், மிகவும் இரகசியமாக எடுத்து ஆரல்வாய்மொழிக் கோட்டைக்கு வந்துவிட்டனர். அங்கே அவைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதை வரலாற்று அறிஞர் J.H. Nelson இவ்வாறு குறிப்படுகிறார்.

“The golden idol named Mathurai – Nayana – Veittha – Perumal, which graced the festal processions of god Siva, had been carried for safety to the Malabar country, when Parakrama fled for his life and there mysteriously lost together with much treasure. (J.H. Nelson, The Madura Country – A. Manual – 1868 page 81)

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கச் சிலையையும், பொக்கிஷங்களும் மலபார் நாட்டில் காணாமற் போயிற்று என்று கூறுவதிலிருந்து, அவைகள் எங்கோ அறியபடாத இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது என்பதையே காட்டுகிறது.

“The golden idols which graced the festival procession of god Siva had been carried for fafety to Kerala. The golden idols were installed and worshipped in Kilukiluppaikadu in Aramboly. Malik kfur would have come to take back the golden idols, as Aramboly was well guarded the Muslim invasion of Travancore was averted. (Prof: N. Rajappan, unpublished Ph. Dthesis Chapter IV – page 69)

ஆரல்வாய்மொழியில் கிலுகிலுப்பைக்காடு என்ற இடம் மலைச்சரிவு ஆனதினால் அங்கே ஒரு சாஸ்தா கோயில் இருந்தது. அதில் மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரை பிரதிஷ்டை செய்தமையால், அந்த கோயில் “மீனாட்சி சுந்தரேஸ்வர் கோயில்” என்று பெயர் மாற்றம் கண்டது. இக்கோயில் இன்றும் ஆரல்வாய்மொழி வடக்குத் தெருவில் பிள்ளைமார் சமூகத்தார் வாழ்விடத்தில் காணலாம். இங்கே நிறுவப்பட்டிருந்த இந்த தங்க விக்கிரகங்களும், அதன் ஆபரணங்களும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தமையால், அவைகளை அங்கிருந்து எடுத்து திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பாதுகாப்புக்காக வைத்தனர்.

மாலிக்காபூர் மதுரையை வீரபாண்டியனிடமிருந்து மீட்டு, சுந்தரபாண்டியனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, வேறு போர் இல்லாத நிலையில் தஞ்சை மற்றும் சிதம்பரம் கோயில்களில் படையெடுத்து செல்வங்களையும், யானைகளையும் கவர்ந்துவிட்டு மீண்டும் மதுரை திரும்பினான். அவனது நோக்கம், மதுரையையும் கொள்ளை அடித்துவிட்டு, டெல்லி திரும்ப வேண்டும் என்பதாயிருந்தது. இவனது நோக்கத்தை அறிந்து கொண்ட சுந்தரபாண்டியன், அரண்மனை மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டான். வீரபாண்டியனை எப்படியாவது பிடித்து, அவன் கவர்ந்து சென்ற பொக்கிஷங்களை பிடித்தெடுப்பதற்காக மாலிக்கப+ர் வனப்பகுதிகளுக்கு படையெடுத்தான்.

“Kaffur went in pursuit of Veera Pandiya, who had fled into deep forest, but soon he gave up the chase because of incessant rain and the difficult forest terrain… There after he made a sudden raid on Madura, but found that Sundara Pandya had got news in advance and has fled with all his treasure. Some Chroniclers like Firistha and Haji – ud- Dabir, mention that Kaffur reached the extreme south, of Indian Peninsula. It could be that he was able to go upto Rameswaram, for in his work entitled ‘Ashiga’ Amir Khusrav speaks of an invasion against Veera Pandya upto the coast of Ceylon”. (A History of Indian Civilization – Vol. II Part – I K.P. Bhjadur – 1980 – Page 61,62).

னவே பாண்டிய சகோதரர்களைத் தேடி மாலிக்காப+ர் தென்னகமெங்கும் ஜல்லடை போட்டு அலசியிருக்கிறான். ஆனால் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் வேணாட்டுக்குத்தான் தப்பியிருக்க வேண்டும். இந்த தேடுதல் வேலையில் அவன் ஆரல்வாய்மொழிக்கும் வந்திருக்கிறான். ஆனால் வேணாட்டு அரசனின் படைகள் அவனை எதிர்த்து நின்று போர் புரிந்ததனால், அவன் வேறு வழியின்றி சமாதானப் பேச்சு மூலம் 500 யானைகளைப் பெற்றுக் கொண்டு தெற்கே சென்றான். இதனால் பாண்டியநாட்டு பொக்கிஷங்களும் வேணாட்டும் தப்பித்துக் கொண்டன.

பாண்டிய நாட்டை ஒட்டு மொத்தமாகக் கொள்ளையடித்துச் சேர்த்த பொக்கிஷங்களைக் கொண்டு, மாலிக்காப+ர் 1311 – ல் டெல்லி திரும்பினான்.

“After these exploits he returned to Delhi in 1311 with enormous spoils which included 312 elephants, 20,000 horses, 2750 pounds of gold, equal in value to ten crores of tanks and chests of jewels. No such booty had ever before been brought fo Delhi”. (History ofIndia (1000 – 1707) – Ashirbadilal Sri Vastava- 1971- Page 126 & 124) இந்த எண்ணிக்கைகளிலும் வரலாற்று ஆசிரியர்கள் ஒத்த கருத்துடன் இல்லை.

பாண்டிய நாட்டு வாரிசுகளான சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தான தங்கச் சிலைகளும், நகைகளும் அவனுக்கு கிடைத்திருந்தால் அவன் கவர்ந்து சென்ற பொக்கிஷங்கள் பல மடங்கு உயர்ந்திருக்கும். ஆனால் முன் கருதலுடன் சேர நாட்டில் இவைகள் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டதால், அவைகள் தப்பித்துக் கொண்டன.

மாலிக்காப+ருக்குப் பிறகு, டெல்லி சுல்தான் முகமதுபின்துக்ளக் தனது பிரதிநிதிகளை மதுரைக்கு அனுப்பி வைத்து, இசுலாமியர்களின் ஆட்சியை பாண்டிய நாட்டில் நிறுவினான். இவர்களது ஆட்சி 1367 வரைத் தொடர்ந்தது. அவர்களை விரட்டுகிறேன் என்று கூறிக் கொண்டு விசய நகரப் பேரரசு தனது ஆட்சியை மதுரையில் (1367 முதல் 1565 வரை) நிலை நிறுத்தியது. ஆகையால் பாண்டிய மன்னர்குல வாரிசுகளால் பாண்டிய நாட்டைத் தொடர்ந்து ஆட்சிச் செய்ய இயலாமற் போகவே, அவர்களது குலம் அழிந்தது. இதனால் சேர நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பாண்டியநாட்டு பொக்கிஷங்களை பிற்காலத்தில் உரிமை கொண்டு மீட்டுச் செல்வதற்கு யாரும் வராத காரணத்தால், இன்று வரை அவைகள் கேரளாவில், ஸ்ரீ பத்மனாபர் கோயிலில் ரகசிய பாதாள அறைகளில் நிரம்பிக் கிடைக்கின்றன.

இந்த செல்வங்களை அங்கே பதுக்கிப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ரகசியத்தை அறிந்து, பிற்காலங்களிலும் அதைக் கைப்பற்றுவதற்குப் பல முயற்சிகள் நடந்துள்ளன. 1544 – ல் விஜய நகரத் தளபதி அச்சுதராயரும், 1634 – ல் மதுரை மன்னர் திருமலை நாயக்கரும், 1680- ல் முகிலனும் திருவிதாங்கூரை தாக்கினர். 1680 – ல் படை நடத்திய முகிலன் எவ்வித எதிர்ப்புமின்றி திருவனந்தபுரம் சென்று நகைகளை கைப்பற்றுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியில் தோல்வியுற்றான். அவனுக்குப் பிறகு 1697–ல் ராணி மங்கம்மாளின் படைத்தலைவன் நகரசப் பையனும், 1712 – ல் அனந்தோசி நாயக்கனும் தொடர்ந்து படையெடுத்து நகைகளைப் பெற முடியாது திரும்பினர், இவனுக்குப் பிறகு திருவிதாங்கூர் வட எல்லை வழியாக, நகைகளைக் கவருதல் என்ற நோக்குடன் மைசூர் டிப்பு சுல்தானின் முயற்சியும் பயனளிக்கவில்லை. இதனால் ஸ்ரீபத்மனாபர் கோயிலில் அந்த பாண்டிய நாட்டுச் செல்வங்கள் சேதப்பாடுகள் இன்றி பாதுகாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஸ்ரீபத்மனாபசுவாமி கோயிலில் ரகசிய நிலவறைகளில் பாதுகாக்கப்பட்டு வரும் பொரும்பாலான செல்வம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நகைகளும், பாண்டிய நாட்டின் செல்வங்களும் ஆகும். அதை திரும்ப பெறுவதற்கு தமிழக அரசுக்கு முழு உரிமையுண்டு.

மதுரையில் தாயதிச் சண்டையால் நாடு அழிந்தது. சுந்தரபாண்டியன் மதுரையை மீட்பதற்கு டெல்லி சுல்தான் படைத்தளபதி மாலிக்கப+ரை விரும்பி அழைத்தான். அதை ஏற்ற மாலிக்கப+ர் வீரபாண்டியனை விரட்டிவிட்டு சுந்தரபாண்டியனை மதுரைக்கு அரசானாக்கினான். பிறகு தென்னாடு புகுந்து அனைத்துக் கோயில்களையும் கொள்ளையிட்டான். ஆனால் மதுரையை விட்டு வெளியேறுகின்ற வேளையில் வீரபாண்டியன் 120 யானைகளில் பாண்டிய நாட்டின் பொன்னையும், தங்கத்தையும், மாணிக்கங்களையும் கூடவே எடுத்துச் சென்றான் என்று கே.கே.புpள்ளை கூறுகிறார் (பக்கம் 378) மீதமிருந்தை சுந்தரபாண்டியன்  எடுத்துக் கொண்டு தெரியாத இடத்துக்கு சென்று விட்டான் என்று பெராசிரியர் கே.இராஜய்யன் எழுதுகிறார்(பக்கம் 111)

 “While Veera Pandya fled to the woods, Sundara Pandya, collected his treasures and escaped to some unknown place. There is a tradition that Ravivarma Kulasekara, the ruler of Venad fought against the Afghans and forced them to retreat” (Prof: K. Rajayyan – History of Tamil Nadu, past to present – 1955 – page 111).

இதிலிருந்து நம் அறிவுக்கு ஒரு உண்மைப் புலனாகிறது. வேணாட்டு அரசர்கள், பாண்டிய அரசுக்கு ஆதரவும், அடைக்கலமுமாக இருந்தனர் என்பதே. அறியப்படாத இடத்துக்கு, மதுரை பொக்பிஷங்களுடன் சுந்தரபாண்டியன் சென்றுவிட்டான் என்று குறிக்கப்பட்டிருப்பது, அவைகளை வேணாட்டுக்குத்தான் சுந்தரபாண்டியன் எடுத்துக் சென்றுள்ளான் என்பதை ரகசியமாக வைத்து, அவைகளை வேணாடு பாதுகாப்பதை வெளி உலகிற்குத் தெரியாமல் இருப்பதற்குச் செய்த தந்திரம் என்றே கருத வேண்டும். எனவே ஸ்ரீபத்மநாபர் கோவில் பாதாள ரகசிய அறைகளில் காணப்படுகின்ற தங்க நகைகள், வைர வைடூரியங்கள், பொற்காசுகள், தங்க கீரிடங்கள், சிலைகள் அனைத்தும் பாண்டிய நாட்டு உடமைகளும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உரியவைகளும் ஆகும்.

இவைகளைக் குறித்த விவரங்கள் அனைத்தும் மதிலகம் ஆவணங்களில் காணலாம். ஆனால் அவைகள் அழிக்கப்பட்டிருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. எனென்றால் மலையாளிகள் முன் கருதலுடன்தான் எப்போதும் செயலாற்றுவர். இருப்பினும் தமிழக அரசு கேரள அரசுடன் இது குறித்து தொடர்பு கொண்டு, பாண்டிய நாட்டுக்கும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கும் சொந்தமான இந்த நகைகள் அனைத்தையும் மீட்டெடுக்க வேண்டும். தேவைப்பட்டால், கேரள உயர்நீதிமன்றத்தில் திரு. சுந்தரராஜ் ஐயர் தொடர்ந்திருக்கின்ற நீதிமன்ற வழக்கில், தமிழக அரசம் தன்னை இணைத்துக் கொள்வது தேவையாகிறது. அல்லது தனியாக ஒரு வழக்கை டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தொடரலாம். அவ்வாறு தொடர்ந்து தமிழர்களுக்கு, குறிப்பாக பாண்டிய நாட்டிற்குச் சொந்தமான நகைகளை மீட்டெடுத்திட வேண்டும்.


பின்னூட்டமொன்றை இடுக

சிரித்து வாழ வில்லையானாலும் உடன்பிறப்பே! பிறர் சிரிக்க வாழ்ந்து விடாதே! ……………………..

சிரித்து வாழ வில்லையானாலும் உடன்பிறப்பே! பிறர் சிரிக்க வாழ்ந்து விடாதே! ……………………..

ஒரு பிச்சைக்காரன் தன் தாத்தா யானை வைத்துக் கொள்ளும் அளவில் வசதி படைத்தவர் என்று சொல்லித் திரிந்தானாம். ஏன்? பிச்சை எடுக்கும் நிலைக்கு அவன் வந்து விட்ட வேதனை. நாடான் நாடாண்டான் நாடாண்டான் என உடன்பிறப்புகள் பிதற்றுகிறார்கள். ஏன்? நாம் நாடாளும் அளவில் இல்லை – ஆளப்படுகிறோம் என்ற வேதனையின் புலம்பல் தான். ஆகண்டபாரதத்தின் 56 தேசங்களையும் கடல் கடந்து 127 நாடுகளையும் ஆண்டவன் நாடான் என்று எதுகிறோம். ஏன்? நாடாளும் நிலைக்கு நாடான் வர வேண்டும் என்று ஒரு ஆதங்கம். மனு பெற்று வந்த இனம் மனு கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாலும், கொடுத்த மனு கவனிக்கப்படும் நிலையிலாவது சக்திவாய்நதவர்களாக இல்லையே.?

                  தமிழகத்தை ஆளும் அளவில் சட்டசபையில் நாடார் பெரும்பான்மை இல்லையேயாயினும், இனபிரதி நிதித்துவம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் 234-ல் 62 நாடார் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இன்று, 14 உறுப்பினர்களே உள்ளனர். அவர்களும் நாடார் நலன்நாடி இயங்க இயலாது. எனவே, நாம் ஆளப்படுகிறோம் – நம் குரல் அரசியல் வானில் இல்லை. நம் விடுதலை வாழ்வு ஒரு தொடர் போராட்டம் என்பதை ஏற்க ரெடியா?

    நாம் தொன்று தொட்டே இந்த மண்ணில் வாழ்ந்து வருகிறோம் – ஆரியர்கள் வந்தேறிகள் என்ற கோட்பாடை ஏற்றுக் கொண்டால், நாம் பெரும்பான்மையினராகவும் அவர்கள் சிறுபான்மையினராகவும் தான் இருக்க முடியும். சிறுபான்மையினரான ஆரியர்கள் பெரும்பான்மையினரான பூர்வ குடிகள் மத்தியில் வாழ தங்களை மேன்மையானவர்களாக சித்தரித்து பூஜிக்கப்பட வேண்டியவர்களாக்கிக் கொண்டு தான் ஆக வேண்டும். சதியை புரிந்து கொள்ள இயலாத மந்த புத்திக்காரர்களான பூர்வ குடிகள், ஆரியர்களை மேன்மையான இடத்தில் வைத்து, அவர்கள் கலாச்சாரத்தை ஏற்று, ஆரியர்களின் எடுபிடிகளாயினர். இது அறிவுத்தாழ்ச்சியால் பூர்வ குடிகளுக்கு ஏற்பட்ட ஒரு விபத்தும் வீழ்ச்சியும். பூர்வகுடிகள், ஏமாற்றப்பட்டுவிட்டார்கள் – இவர்கள் ஏமாற்ற முடியாமல் போனார்கள்.

            மனிதன் பல பொருளாதார நிலைகளைத் (Economic Stages) தாண்டி வந்து கொண்டிருக்கிறான். முற்காலத்தில் இயற்கையாக இலவசமாகக்கிடைத்த பழங்களையும் கிழங்குகளையும் சேகரித்து புசித்து வாழ்ந்தான். இலவசமாகக் கிடைத்த மிருக மாமிசங்களையும் மீனையும் உண்டு வாழ்ந்தான். இதை சேகரித்தல் நிலை (Collection Stage) என்பர். இந்நிலையில் சேகரிப்பு வேலை மட்டுமே உண்டு. உற்பத்திச்செலவு (Cost of Production) அதனோடு தொடர்புடைய விலை (Price) பரிமாற்றத்தை வசதிப்படுத்துகின்ற பணம் (Money) ஆகியவை இல்லை. அடுத்தது மேய்த்தல் நிலை (Pastural Stage) மிருகங்களை மனிதன் பழக்கி அவைகளின் உணவுக்காக புல்வெளிகளையும் நீர்வசதிகளையும் தேடி ஓடிக்கொண்டிருந்தான். அடுத்தது விவசாய நிலை (Agricultural Stage) மனிதன் ஓரிடத்தில் அமர்ந்திருந்து விவசாயம் செய்தான். விளை நிலத்தை சொந்தமாக்கி நலவுடைமையாளன் ஆனான். உற்பத்திச் செலவு, விலை, பணம் முதலியவை உருவாயின. அடுத்த வணிக நிலை (Commercial Stage) –ல் இவை முக்கியத்துவம் பெற்றன.

                   விவசாய நிலையில் நிலவுடைமையாளர்கள் தலை காட்டத்துவங்கினர். உடல் வலிமையுடையவர்கள் உடல் வலிமையில்லாதவர்களை பயன்படுத்தி விஸ்தாரமான இடங்களை வளைத்துப் போட்டு விவசாயம் செய்து பொருளாதார வலிமையும் பெற்றனர். நில உடைமையாளர்கள் என்று ஒரு இனம் பூர்வகுடிகள் உருவானது. ஆரியர்கள் இங்கு கால் பதித்தும் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு பூர்விக நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலங்களைகைப்பற்றி அவர்களை தங்கள் அடியாட்களாக வைத்துக் கொண்டனர். அவர்களே சத்திரியர்கள். நிலங்களை இழந்த சிலர் புதிய புதிய இடங்களுக்குக் குடிபெயர்ந்து முன்போல வலுவுற்றவர்கள் நிலவுடைமையாளர்களாகிக் கொண்டனர். இதைத்தான் ஆரிய மயமாதலும் அடிமைத்தனமும் என்று சொல்கிறோம். இது ஆதிகுடிகளின் அறிவுத்தாழ்ச்சியால் விளைந்த ஒரு விபத்தும் வீழ்ச்சியும்.

                இந்நிலையில் தான் 1600 –ல் ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் கால் பதிக்கிறது. அவர்கள் கொள்கை வியாபாரம் என்ற அளவோடு நின்றுவிட்டதால் இங்கு நிலவியிருந்த சமுதாயச் சீர்கேடுகளை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அதனால் பகைமை இல்லாமல் வியாபாரம் செய்தனர். இவர்களுக்கு முன்னரே கத்தோலிக்கப்ப போதகர்மார் இங்கு கால்பதித்த அவர்களும் சமுதாயச் சீர்கேடுகளைக் கண்டுகொள்ளாததால் பகைமையில்லாமல் தங்கள் காலங்களைக் கழித்தனர்.

                     18-ம் நூற்றாண்டின் துவக்கம் முதலே புரோட்டஸ்தாந்து கிறிஸ்தவ மிஷனெரிகள் இங்கு கால் பதிக்கத் துவங்கினர். அவர்கள் இயேசுவை ‘மாடல்’ – ஆக ஏற்று சமுதாயத்தின் அடித்தள மக்களைத் தங்கள் திருப்பணித்தளமாகக் கொண்டனர் – விடுதலைப் பணியைச் செய்தனர். நிலவில் இருந்த கேடுவிளைவித்துக் கொண்டிருந்த சமுதாயப் பழக்க வழக்கங்களை உடைத்தெறியத் துவங்கினர். அதனால் ஆரிய கொள்கைகளில் அடிவிழுந்தது. ஆரியர்கள் பகைவர்களானார்கள். அவர்களோடு இணைந்திருந்த சத்திரியர்களைக் கொண்டே மிஷனெரிகளின் முயற்சிகளை முறியடிக்க முற்பட்டனர்.

                   தென்னகத்தில் திருப்பணியாற்ற வந்த புரோட்டஸ்தாந்து கிறிஸ்தவ மிஷனெரிகளில் மிக முக்கியமானவர் டாக்டர் ராபர்ட் கால்ட்வெல் ஐயர் அவர்கள். பூர்வ குடிகளை மீட்க ஆரியத்துக்குச் சாவு மணி அடிக்கத்துணிந்து களம் இறங்கியவர் அவரே. பூர்வகுடிகளை அவர் திராவிடர் என விலாசப்படுத்தினார். ஆரியர்களின் சமஸ்கிருத மொழியும் அலக்கியங்களும் திராவிடர்களின் தமிழ் மொழிக்கும் இலக்கியங்களுக்கும் கீழானவை என தன் ஆய்வு மூலம் கால்ட்வெல் நிறுவினார். தமிழை செம்மொழி எனவும் அறிவித்தார். ஆரியர்கள் தங்கள் மேன்மையை நிலைநாட்ட திராவிடர் மனங்களில் கட்டி வைத்திருந்த கோபுரம் சாய்ந்தது. சாய்ந்த கோபுரத்தை வீழ்த்தி உடைத்துத் தரை மட்டமாக்கினார் தந்தை பெரியார். மொழி என்ற வடிவில் சமஸ்கிருதத்துக்குப்பிறந்த இந்தி தமிழகத்தில் நுழைந்துவிடா வண்ணம் காத்தவர் அண்ணாத்துரை.

              திருவிதாங்கூரில் அரசி கௌரி லட்சுமி பாயி-ன் ஆணையில் 1811-ல் ஆரியமயத்துக்குக்கல்லறை கட்டியவா ஆங்கிலேய அதிகாரி கர்னல் மன்றோ அவர்கள். மூன்றே மூன்றாண்டுகளில் ஆரிய மயத்துக்கு முடிவு கட்டினார். பூர்வ குடிகளுக்கு உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கொடுத்தார். அதை இன்றும் அந்த மக்கள் நினைவுகூருகிறார்கள். அவரைத் தொடர்ந்து அங்கு ஆரிய மயத்துக்குச் சாவு மணியடித்தவர் ஈழவ சழுதாயத்தின் தந்தை ஸ்ரீ நாராயண குரு அவர்கள். இதனால் ஆரியர்கள் மிஷனெரிகளில் காலட்வெல் மீதும் ஆங்கில அதிகாரிகளில் கர்னல் மன்றோ மீதும் இன்றும் காழ்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதை தோள் சீலைக் கலகம் என்ற நூலில் காணலாம்.

              காலட்வெல் நெல்லையில் நாடார் இனத்தவர் இடையில் திருப்பணியாற்றிக்கொண்டிருந்தார். தன் கீழிருந்த மக்களை விழிப்படையச் செய்ய, நாடார்கள் மந்தபுத்திக்காரர்கள் என்றும், உயர் ஜாதிக்காரன் இவர்களை ஏமாற்றுகிறான் என்றும், இவர்களால் அவர்களை ஏமாற்ற முடியவில்லை என்றும் சொன்னார். உங்களை மந்தபுத்திக்காதரர்கள் என்று சொல்வதா – நீங்கள் நாடாண்டவர்கள் – சான்றோர்கள் எனச் சொல்லி கிறிஸ்தவம் தழுவாத நாடார்களை தீமூட்டி விட்டான். கிறிஸ்தவத்துக்குத் தாவியவர்கள் கீழ்மட்ட சாணார்கள் என்றும் தாவாதவர்கள் உயர்மட்டச்சாணார்கள் என்றும் மேல் மட்டச் சாணார்களை ஆரிய சாணார்கள் என்றும் அழைக்கலாம். அடிக்கடி இவ்விருவரும் போர்கோலம் பூண்டு விடுகின்றனர்.

     இப்போது அரசியல் கட்சிகளில் சிலவும், சில அமைப்புகளும் ஆரிய மயமாக்குவதில் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளன. மீடியாக்களைப் பயன்படுத்தி, ஆரியத்துக்கு எதிராகப் போரிட்டவர்களைக் கெடுத்துப் பிரசாரம் செய்து வருகிறார்கள். நாடார்களை பெலவீனப்படுத்த ஆரிய சாணார்களை திராவிடச்சாணார்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டு: தோள் சீலைக் கலகம் என்ற நூல் – மற்றும் ராமசந்திரனுக்கு ஆதரவாக கணேசன். சிரித்து வாழவில்லையானாலும் உடன்பிறப்பே! பிறர் சிரிக்க வாழாதே. உன் இனம் அரசு வேலைகளில் போதுமான அளவில் உண்டா? சட்டசபையில் போதுமான அளவு உண்டா? உன் ஆய்வை இந்த திசைக்குத் திருப்பு கண்ணா!.

விமர்ச்சனம் தொடரும்
(Dr. D. Peter)
Chairman,
Kanyakumari Institute of Development Studies (KIDS),
266, Water Tank Road, Nagercoil-629001
Phone : +91 4652 279745
Mobile : +91 9043952430


பின்னூட்டமொன்றை இடுக

MULLAI – PERIYAR DAM BELONGS TO TAMIL NADU

MULLAI – PERIYAR DAM BELONGS TO TAMIL NADU
PARLIAMENT SPEECH BY Kumari Thanthai MARSHAL A. NESAMONY
Thursday, 15 December 1955.

Shri Nesamony: This is according to the Travancore State Manual. The historian of the Travancore-Cochin State says that the Raja of Punjar was the descendant of the Pandyan kings and that he used to sign as ‘Meenakshi Sundaram’. It is in evidence that tax was being collected by the Raja of Punjar through petty chieftains called Manadirs, and receipts had been issued under the seal of ‘Madurai Meenakshi Thunai’. So this area had been under the sway of the Naiks of Madura under the Pandyan kings, and it had never been a territory of Travancore till 1889. The precursors of the modern KDHP Kannan Devan Hill Products Company—when they first entered into an agreement, executed the agreement with the Raja of Punjar. That was in 1879. The Secretary of State for India when he executed the agree ment on behalf of the Periyar Lake Project, executed it in favour of the Maharaja of Travancore. When the agreement was renewed and the lease was extended in 1889, it was executed in favour of the Maharaja of Travancore. So it is clear that during that period -1879 – 1889 – this change took place. It is said that the Maharaja of Travancore got it ona lease from the Raja of Punjar. What ever that may be, till 1935, there was absolutely no access from the Travancore area to this area of Devikulam and Peermede. It is borne out by the Census Report of 1951,that this area is approachable from the Madurai district through the passes of Thevaram, Kudalur, or Kumli, Bodinakkannur, Kambam, and Shivagiri. These are the passess through which trade flowed. That is admitted. As it formed part of Madras State, these people came and settled there and have now their habitation there.

The Commission has stated that the population there is migrating, that it is a floating population. I say it is not stated as to who stated that viewpoint before the Commission. It is not stated how they got the figures whereas in the case of other matters, they have indicated that such and such State or such and such organizations have stated a certain viewpoint. We are led to believe that interested capitalists who make themselves rich by the labour of this population, and the anti-Tamil Praja-Socialist Government, which was then in power in Travancore-Cochin, might have submitted these things to the Commission. They say that this will relieve congestion in the littoral area. The area of the Kerala State has now been increased. It is 14,080 sq. miles. The area of Travancore – Cochin is 9,154 sq. miles and more than 5,000 sq. miles of territory is being added to this area. There is no room for colonisation of Devikulam and Peermede. In the northern portion of Devikulam is the Anjanad.

This Anjanad consists of the villages of Maraiyur. Kizhanthur, Kottakornber, Vattavada, Kanthalur and Nachivayal consisting of 112 sq. miles and the KDHP company 215 sq. miles, the cardamom area 215 sq. miles the Game Sanctuary 305 sq miles and the tea gardens 97 sq. miles and the Periyar lake has a water spread area of 13 sq miles the Catchment area being 305 sq miles, and that constitutes the game sanctuary as we1l. It is a very small area of forests and grass land that remains and so the argument that the people .living in the littoral area
will be relieved of congestion is absolutely unfounded. On the other hand, the P.S.P. Government started a colonisation scheme in Maraiyur in Anjanad with the evident intention of ousting the Tamil population from there. The same government started a coloniation in the cardamom area with the intention of ousting the Tamil people there—at Kallar—so that all these things have been done with the idea of ousting the Tamilians and that has been made clear on the floor of the Legislative Assembly by the then Chief Minister, when he said’, If that programme of the PSP government had been pushed through Shri. Kamaraj Nadar would not have claimed these for Madras’. That was the attitude of the Praja Socialist Government then in power. It did not stop with that. In the debate on the States Reorganisation Commission’s Report in the Travancore-Cochin Legislative Assembly, Shri Pattom Thanu Pillai has said that the labourers from Madurai must be stopped, not now, but for ever, because the Malayalees and the people from Travancore-Cochin must secure work there. That is the attitude that lies behind the whole thing. That is the attitude that prompted them to demand the Devikulam and Peermede taluks.

Now, I would just refer to what made these protagonists of Aikya Kerala to start this movement for Aikya Kerala. Our hon. friend Shri Kelappan, as President of the Kerala Provincial Congress Committee and the Aikya Kerala Committee presented a memorandum or an explanatory note on the answers to the questionnaire of the Linguistic Provinces Commission. I will refer to a certain passage which will show the animosity that dominated the Keralites at that time against the Tamilians:

“The multi-lingual miscellany called the Madras Province will have to be liquidated. It is a mere accident of British Indian History. It was never meant as an arena for Parliamentary Self – Government. Its recent history must teach us the lesson that Parliamentary autonomy ill suits its incongruous being. The competition among the linguistic groups transcends all party alignments and endangers its efficiency and usefulness. A Tamilian majority cannot continue for all time to be the arbiter of the destinies of the people of Kerala.”

It is that spirit that dominates the colonisation scheme, that dominates the request that was made that Peermede and Devikulam must go to the Kerala State. It is said that Kerala would not be a viable State; if Devikulam and Peermede are taken away. It will be a deficit State or economically backward. In the Five Year Plan that is now proposed for Travancore—Cochin State the revenue surplus for the coming five years is estimated at Rs. l4.7 crores. I say that the anticipated deficit or the statement that it will not be viable is absolutely unfounded. It is said by the Commission that the Travancore Tamil Nadu Congress granted that the two pakuthis—especially this area—are absolutely necessary for the economic well-being of this place. May I be permitted just to quote a line or a few sentences from the memorandum which we submitted to the States Reorganisation Commission which has now turned out to be an argument against us?


“The Assembly Constituency of Devikulam comprises the whole of Devikulam Taluk except Pallivasal Pakuthy where the Hydro-Electric Works are located. It comprises also the whole of Peermede Taluk except Peruvanthanam Pakuthy which includes the township of Mundakayam and the rubber estates owned by Syrian Christians mostly. The Travancore Tamil Nadu Congress has no objection to exclude these two Pakuthis from the area that is now sought to be merged with the Madras State for purposes of a settlement.”

This passage is now being taken hold of by the States Reorganisation Commission and that is being used as an argument against us to say that we have more or less granted that this area is absolutely necessary for the economic development of the proposed Kerala State. I submit that it is a twisting of the facts that we have put forward before the Commission. This area is absolutely necessary for the development of the projects of the Madras State.

As I submitted, the Periyar Dam has 13 sq. miles of water spread area plus a catchment area of 305 sq. miles. It becomes an absolute necessity for Madras because it pays a royalty for the waters that have been impounded at the Periyar lake to irrigate 190 thousand acres of paddy land in the Madurai district. The Government of Madras wanted to start a Hydroelectric project in the Periyar head – works near Peryakulam but the Praja Socialist government in charge at that time would not give them sanction unless they paid another royalty for the use of the water to develop electricity. The foundation stone for the Periyar Hydro-electric scheme has been laid at Peryakulam. There are two other schemes which are to be included in the Second Five Year Plan of the Madras Government; the Alady Dam Upper Periyar Project at an estimated cost of Rs. 7.75 crores and the Pambaiyar Scheme at an estimated cost of Rs. l4.5 crores and the Periyar Hydro-electric project for which the foundation stone has been laid is estimated to cost Rs. 7.98 crores. There is yet another project, the Parambikulam Upper Alayar project at a cost of Rs. 13.2. crores. I understand that the Travancore-. Cochin Government would not allow the officers of the Madras Government to pass through their territory to go to the Upper Alayar project or to make a survey and fix the site to put up a dam within the Madras territory itself. I find, on the other hand, the Travancore – Cochin Government has absolutely no scheme included in the Second Five Year Plan for the development of the waters of any of the streams that are flowing down from this area. Therefore, it is an actual necessity -for the Madras State and I submit that these two taluks should be merged with the Madras State.

Finally, it is the human problem in this area that we want to be considered in this matter. You go and ask the tea bushes of the Devikulam Taluk and they will tell you how they were planted by the tender fingers of the Tamilians fed by the bones and ashes of their ancestors, nurtured by the blood of the Tamilians and watered by the sweat of their brow. They would say that is Tamil nadu.

Lok Sabha Debates
14th to 23th December 1955
Vol.1, pp.141 to148.

 

(Dr. D. Peter)
Chairman,
Kanyakumari Institute of Development Studies (KIDS),
266, Water Tank Road, Nagercoil-629001
Phone : +91 4652 279745


1 பின்னூட்டம்

குமரி மாவட்ட வரலாறு திருடர்கள் ? ஜாக்கிரதை !

குமரி மாவட்ட வரலாறு திருடர்கள் ? ஜாக்கிரதை !

                         குமரி மாவட்ட காங்கிரசார் சுயநலம் நேடும் நோக்கில்  காமாராசரை தந்தையாக ஏற்று பாண்டிக்காட்டான்களுக்கு அடிமைகளாகிவிட்ட நாளிலிருந்து குமரிக் காங்கிரசின் சுயநிர்ணய அதிகாரம் பறிபோய் விட்டது. எம்.பி. மற்றும் எம்.எல்.எ. தொகுதிகள் வந்து நிலை கொண்டுள்ளனர். அதுவாவது மிஞ்சுமா என்பதை வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகே சொல்ல முடியும்.

    குமரி மாவட்ட காங்கிரஸ் அதன் தந்தை நேசமணிக்கு தகுந்த நினைவுச்சின்னம் அமைக்க முன்வரவில்லை. காமராசருக்கு அமைப்பதிலேயே தீவிரம் காட்டி வருகின்றது. குமரியில் காங்கிரஸ் கட்சிக்கு சமாதி கட்டும் நோக்கில், மார்ஷல் நேசமணி மணிமண்டபம் என்ற கோஷத்துடன் தி.மு.க அரசு களம் இறங்கியது. 2011 ஜனவரி 18-ல் அதற்கான அடிக்கல் நாட்டுவிழாவும் நடந்தது. இதை ‘தேர்தல் ஸ்டன்ட்’ என்று அ.தி.மு.க. சிறுபான்மைப் பிரிவு தலைவர் திரு. ஜஸ்டின் செல்வராஜ் வருணித்தார்;. குன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு தி.மு.க. அரசு அடிக்கல் நாட்டியதையும், அந்த திட்டத்துக்கு நிதியும் ஒதுக்கி அ.தி.மு.க. அரசு செயல் வடிவம் தiவேண்டி வந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

    கல்நாட்டு விழா அழைப்பிதழில் மார்ஷல் நேசமணி மண்டபம் என்றிருந்தது. நட்டப்பட்ட கல்லிலும் அவ்வாறு தான் இருந்தது. “குமரித்தந்தை” என்று எங்குகும் குறிப்பிடவில்லை. இது ஒரு திட்ட மிட்ட கூட்டு சதி என்பதை திட்டவட்டமாகக் கூற முடியும். வரலாறு திருடர்களின் இந்த பொக்கை உன்னிப்பாகக் கவனித்துக் கொடிருந்த மூத்த குடிமக்கள் பலர், 2007 டிசம்பர் சமுதாய சிந்தனை இதழில் வெளி வந்த, இளந்தோட்டம் சுகுமாறன் அவர்களின் ஆய்வுக்கட்டுரையை பிரசுரிக்க வேண்டிக் கொண்டனார். எனவே மீண்டும்…

குமரித்தந்தை காமராஜரா? நேசமணியா?

தமிழ் மண்ணை இழந்தவரா? மீட்டவரா?

குமரித் தந்தை காமராஜரா? நேசமணியா?

தமிழ் மண்ணை இழந்தவரா? மீட்டவரா?

    குமரி மாவட்டம் உருவாகி 54 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த மாவட்டம் உருவானதன் நோக்கம் என்ன என்பதை அனேகமாக அனைவரும் மறந்து விட்டனர்;. குறிப்பிட்டுக் கூறுவதென்றால், நாடார் சமுதாயமே இந்த வரலாறை மறந்து விட்டது என்பதை நினைக்கும் போது என்னைப் போன்ற மூத்த குடிமக்களுக்கு வேதனையாக உள்ளது. இம்மாவட்டம் 01.11.1956 அன்று உருவாயிற்று என்றாலும் நாயர்கள் மற்றும் தமிழ் வெள்ளாhளர்களின் அடக்கு முறைகளுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும் நாடார் சமுதாயம் ஆளாக்கப்பட்டிருந்தது. பெண்களை அரை நிர்வாணமாக்கி, மிருகங்களைவிட கேவலமான நிலையில் வைத்து மகிழ்ச்சியடைந்தனர் உயர் ஜாதியினர். இந்த சூழ்நிலையில் தான் சீர்திருத்த கிறிஸ்தவ இறைத் தூதுவர்கள் கி.பி. 1806-ல் இம்மண்ணில் கால் பதித்தனர். இவ்வமையம், இங்கு வாழ்ந்து இறைத் தூதுவர்கள் விடா முயற்சியால் இந்த தாழ்த்தப்பட சமூகம், குறிப்பாக நாடார் மக்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் நாகரிகத்திலும் எதிர்பாராத வண்ணம் வளர்ச்சியடைந்தனர். அறிவுபூர்வ வளர்ச்சியால், 1822 –ல் புலிப்புனம் இசக்கி மாடன் தண்டல்காரன், மருதூர்குறிச்சி குஞ்சுமாடன் மண்டல்காரன், ஆற்றூர் கருமன், தச்சன்விளை வேதமாணிக்கம் போன்றோர் நாடார் மக்களின் விடுதலை வேண்டி உயிர்த்தியாகம் செய்ய வேண்டியதாயிற்று, எனினும் நாடார்களுக்கு மலையாளி மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் அடக்கு முறைகளிலிருந்து, முழுமையான விடுதலையைப் பெற்றுத்தந்தவர் விளவங்கோட்டு வீரன் ஏ. நேசமணி ஆவார். எனவே ம.பொ. சிவஞான கிராமணியார் எண்ணுகின்றதைப் போன்று, இது தெற்கெல்லை மீட்பு போராட்டமோ, அல்லது தமிழகத்தின் எல்லை விரிவாக்கத்திற்கான போராட்டமோ, அல்லது தமிழ் மொழியின்பால் உருவான பாசமோ அல்ல. அது மலையாளி ஆதிக்கத்திற்கு எதிராக நாடார்களால் நடத்தப்பட்ட இறுதிப் போராட்டமாகும். அப்போராட்டதை தலைமையேற்று செல்வனே நடத்தி விடுதலையை பெற்றுத் தந்தவர் மார்ஷல் எ. நேசமணி அவர்கள்.

    ஆனால் இன்று, வேறு பலரை குமரித் தந்தையாக்குவதற்கான முயற்சியில் பலர் இறங்கியிருக்கின்றனர். முக்கியமாக களமிறக்கி விடப்பட்டுள்ளவர்கள் மூவர். அவர்களில் இருவர் நாஞ்சில் நாட்டு வெள்ளாள சமுதாயத்தைச் சார்ந்தவர்களும், மற்றவர் வெளிமாவட்டத்தவரும் ஆவார். பிள்ளைகளில் ஒருவர் திரு. மூக்காண்டியாவார். ஆம்! இவரேதான் “மூக்குக்குத்தி மூக்காண்டி என்று பெயர் சூட்டப்பட்டு பின் குல தெய்வப் பெயரான சொரிமுத்தாகி, அதன் பின் ஜுவானந்தம், ஜுவா”, ஆனார், (பெருந்தலைவர் காமராசர், அரு. சங்கர்)

    தி.த.நா.கா. சர்வாதிகாரி திரு. குஞ்சன் நாடார் 09.08.2954-ல் விடுதலை நாள் கடைபிடிப்பதற்கு நிச்சயித்திருந்தார். ஆனால் ஜுவாவின் பேச்சை நம்பி, அதை 11.08.1954 க்கு மாற்றினார். “கம்யுனிஸ்டு கட்சியின் திருவிதாங்கூர் சமஸ்தான கிளையால் அனுப்பப்பட்டே ஜுவா இந்த ஆலோசனையைச் சொன்னார் … இதனால் ஏதோ பெரிய விபரீதம் நடக்கப் போகிறது என்று ஐயுற்றேன். என் ஐயம் பொய்யாகவில்லை. 11.08.1954-ல் நடக்கவிருந்த பொது வேலை நிறுத்தத்தை ஒத்திப்போட்டு விட்டதாக கம்யூனிஸ்டு செல்வாக்கிலிருந்த – கேரளர்களால் நடத்தப்பட்டு வந்த தொழிற்சங்கங்கள் கடைசி நேரத்தில் – அதாவது ஆகஸ்டு 10-ல் அறிக்கை விட்டுவிட்டன – கதையை வளர்ப்பானேன். ஆகஸ்டு 11-ல் மார்த்தாண்டம் என்னும் ஊரில் – ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் மீது மலையாளப் போலிசார் சுட்டனர். ஆதனால் 11 தமிழர்கள் இறந்தனர்.” (எனது போராட்டம்- ம.பொ.சி)

    ஜுவாவின் இந்த கைங்கரியத்தால் 11 தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டது. இதில் நாஞ்சில் நாட்டார் எவருமில்லை. ஜுவாவை நம்பி களத்தில் இறங்கிய குஞ்சன் நாடார் மலையாள போலீசாரால் அடித்து நொறுக்கப்பட்டு குற்றுயிரானார். தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக ஜுவா குமரியில் தங்கியிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாவது கூறியிருக்கலாம். ஆனால் அவரோ தலைமறைவாகிவிட்டாராம். “நாகர்கோவிலிலிருந்து புறப்படும் முன் திரு. ப. ஜுவானந்தம் அவர்களைச் சந்திக்க முயன்றேன். அவர் தலைமறைவாகி விட்டார் என்று சொல்லப்பட்டது. புரட்சிக்கு மக்களைத் தூண்டிவிடும் தலைவர்கள் தலைமறைவாகி விடலாம். ஆனால் அவர்களை நம்பிப் புரட்சியில் ஈடுபட்ட மக்களெல்லாம் தலைமறைவாகிவிடுவது சாத்தியமில்லையல்லவா” (எனது போராட்டம்- ம.பொ.சி)

    ஜுவானந்தம் தலைமறைவாகி விட்டதாக ம.பொ.சி. இங்கே கூறுகிறார். ஆனால் மு.டு.ளு.சந்தானமோ ஜுவா, காடும் மலையும் கடந்து பணகுடி சென்று, சென்னைக்கு ஓடிவிட்டார் என்று கூறுகிறார். “கடுக்கரை தொண்டு வழியாக காலில் கொப்புளங்கள் ஏற்பட நடந்து பணகுடி வந்து பின் வள்ளியூர் கலா ஸ்டுடியோவிற்கு வருகை தந்தார்.” (ஆய்வு களஞ்சியம்- ஏப்ரல் 2007)

    ஆக ஜுவா, கலவரத்தைத் தூண்டி விட்டுவிட்டு, ஒளந்தோ, ஓடியோ, நடந்தோ, திருவவிதாங்கூரை விட்டு வெளியேறி தன்னுயிர் காத்துக் கொண்ட வீரனானார். இதுதான் திரு-தமிழகப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பெரும் பங்கு. ஆனால் திரு. நேசமணியோ, எங்கும் ஓடிவிடாமல், தலைமறைவாகாமல், தனது நாட்டில், வருவதை எதிர்கொள்ள தயார் நிலையில், பிரசினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு செயலில் இறங்கி அதில் வெற்றி வாகை சூடி குமரிக்குத் தந்தையானார். ஆனால் ஓடிவிட்டவருக்கு மணிமண்டபம், உருவச்சிலை, மற்றும் சிறப்புகள் அளிக்கப்பட்டுவிட்டன. மேலும் சிறப்புகள் வேண்டுமாம். அன்னாரை குமரித்தந்தையாக்கும் முயற்றியும் தொடர்கிறது.

    இரண்டாவதாக நாஞ்சில் நாட்டாரால் தூக்கிப்பிடிக்கப்படுகின்றவர் சுப்பிரமணிப்பிள்ளை என்ற பி.எஸ்.மணி. அவர் தனது வாயாலே கூறுகிறார்: “கழிந்த 30 ஆண்டுகளாக நான் உங்களை (நேசமணியை) அறிவேன். இதில் கழிந்த 17 ஆண்டுகளாக நான் உங்களுடன் சேர்ந்தும், பிரிந்தும், தூர நின்றும் உங்களை கவனித்திருக்கிறேன். குமரி மாவட்ட மக்களில் பெரும்பான்மையோர் உங்களிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருப்பதை காணுகிறேன்- நீங்களும் இனி கட்சிசார்பற்ற உயரிய நிலையில் குமரி மக்களின் தந்தையாக அறிவுரை கொடுப்பவராக இருக்க ணே;டுமென்று என் எதிர்பார்ப்பு”. (பி.எஸ். மணி 12.06.1964-ல் திரு. நேசமணிக்கு எழுதிய கடிதத்திலிருந்து)

    திரு. பி.எஸ் மணியே நேசமணிக்கு “குமரித் தந்தை” என்ற சிறப்பை அளித்து விட்ட நிலையில் மணியவர்களை குமரித் தந்தையாக்குவதற்கு இந்த நாஞ்சில் நாட்டார் முயற்சிப்பானேன்? இதிலிருந்து குமரி மாவட்டம் பிரிவதற்கு திரு. பி.எஸ் மணி ஆற்றிய பணிகளின் பரிணாமம் என்ன என்பதை நாம் யூகித்தறியலாம்.

    துப்பாக்க்சி சூடு 11.08.1954-ல் நடைபெற்றது. 11 உயிர்கள் பலியாயின என்று ம.பொ.சி.யும் கூறுகிறார். இவர்களில் ஒருவர் கூட நாஞ்சில் நாட்டான் இல்லை. இப்படியொரு பெரும் இழவு இங்கே நடந்திருக்கின்ற வேளையில், மனித நேயம் படைத்த எந்த மனிதனுக்காவது திருவிழா, திருவிழர் சார்ந்த விருந்து உண்பதற்கு மனம் இடம் தருமா? ஆனால் அந்த மனம் திரு. பி.எஸ். மணிக்கு வந்தது. “1954 ஆகஸ்டு 14-ல் திருச்சியில் தமிழரசுக் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு திரு. தமிழகப்பிரதிநிகளாக கலைஞர் டி.கே. சண்முகம், பி.எஸ். மணி, தோவாளை சி. சிவதாணு மற்றும் பி. வீரபத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.” (மபொ.சி. – “தமிழரசுக் கழகத்தில் பி.எஸ்.மணி”, மணி சிறப்பு மலர் 1987) ஜுவாவும் மணியும் வெள்ளாம் பிள்ளைகள்.

    ஆனால் நேசமணி எந்த மாநாட்டுக்கும் ஓடிச் சென்று விருந்து உண்டு மகிழவில்லை. அவர் துயருற்றவர்களின் கண்ணீரைத் துடைப்பதில் இங்கே ஈடுபட்டிருந்தார். சிறைச்சாலைகளிலிருந்து தமிழர்களை எவ்வாறு விடுவிக்கலாம் என்பதில் அவர் சிந்தித்தவராக இருந்தார்.

    இவர்களிருவருக்கும் பிறகு மூன்றாவதாக, பெருந்தலைவர் திரு. கு. காமராசரை “குமரித் தந்தை” என்ற தோரணையில் இன்று புகழாரங்கள் பாடித்திரிகின்றனர் சிலர். அவர் நாடார் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதுமல்லாமல் தமிழ்நாட்டிற்கு 1954 முதல் 1963 வரை சுமார் ஒன்பதரையாண்டு காலம் முதலமைச்சராக இருந்தார் என்பதற்காகவும் அவரை இங்குள்ளோர் மகிமைப்படுத்துகின்றனர் போலும்.

    பெருந்தலைவர் கு. காமராசர், நாடார் சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் சமுதாயத்திற்கு சிறப்பு என்பதில் வேறு கருத்தில்லை. ஆனால் இச்சமுதாயத்திற்கு எத்தகைய நன்மையும் இவரால் கிடைக்கவில்லை என்பதை அன்னாருடன் பல காலம் வாழ்ந்தவரும், மணவாளக்குறிச்சியைச் சார்ந்த இசுலாமிய சமுதாயத்தைச்சார்ந்தவருமான திரு. ராஜ்மீரான் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிடுகிறார்: காமராசர் அவர் சர்ந்த நாடார் சமூகத்திற்கு அவர் பதவியில் இருந்த கால கட்டத்தில் அதிகமாக உதவி செய்தார் என்று ஒரு கருத்து நிலவுகிறதே? (இது நிருபரின் கேள்வி) “அது உண்மையே கிடையாது, கமராசர் அனைத்து மக்களையும் ஒன்று போல் தான் நேசித்தார். ஒரு வேளை, காமராசர் எனக்கு சொந்தக்காரர் என்று கூறி சிலர் லாபம் கண்டிருக்கக் கூடும். காமராசர் தனது சமூகம், தனது குடும்பம், என்று உதவி செய்த நிகழ்வுகள் ஒன்று கூட கிடையாது” “… அதே நேரம் அவர் அதிகம் நம்பியது பிராமணர்களையே! காரணம், அன்று அவரிடம் நம்பிக்கையாக இருந்தவர்கள் அவர்களே. பிராமணர்கள் அவருக்கு அப்பழுக்கற்ற உதவிகளைச் செய்தனர். அதுவும் மறுக்க முடியாத உண்மை”. சக்திய மூர்த்தி என்ற பிராணனின் வழிக்காட்டலில் காமராசர் ஆட்சி செய்தார் என்பது உலகறிந்த உண்மை.

    நாடார் சமூகம் கீழ் நிலையில் இருந்து அவரால் தான் மேல் நிலைக்கு வந்தது என்றும் ஒரு கருத்து உண்டுமே? “அதுவும் பொய். நாடார் சமூக மக்கள் உழைப்பு, உழைப்பு என்று உழைத்து முன்னேறிய சமூகம். அவர்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள். காமராசரும் அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான். காமராசர் முதல்வராக இருந்த போது அந்த சமூகம் அதிக வளர்ச்சி கண்டிருக்கலாம். அதற்கு காமராசர் உதவினார் என்பதில் இம்மி அளவுக்குக் கூட உண்மையில்லை.”

    (திரு. ராஜ் மீரான் அவர்களை பேட்டி கண்டவர் கல்லை அன்சாரி என்பவர். இவர்கள் இருவரும் இசுலாமியர்கள். பேட்டி வெளியான பத்திரிகை “குமரிக்கடல்” – 2007 பிப்பரவரி மாதம், ஆசிரியர் – திரு. வு. பீட்டர் தாஸ், இவர் குமரி மாவட்ட மீனவச்சமுதாயத்தைச் சார்ந்தவர். இந்த திரு. ராஜ் மீரான் நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் இன்னும் வாழ்ந்து வருகின்ற 75-வயதான பக்கவாத நோயாளியாவார்.)

    நாஞ்சில் நாட்டு பிள்ளையவாள் கூட காமராசரிடமிருந்து பேருதவி பெற்றுள்ளார் என்ற விவரத்தை அரு. சங்கர் நமக்குத் தருகிறார். முறைதவறிய உதவி என்று இதைக் கூறலாம். உதவி பெற்ற ஜுவானந்தம் அப்போது ஒரு காங்கிரஸ்காரர்.

    “தாம்பரத்தில் ஒரு பள்ளித் திறப்பு விழாவிக்குச் சென்ற காமராஜர் அப்போது அங்கு வசித்த ஜுவாவையும் அழைத்துச் செல்லலாம் என நினைத்து அவரில்லம் சென்ற போது ஜுவா வாழ்ந்த நிலை கண்டு அதிர்ந்து போனார். உடுத்த மாற்றுடை கூட இல்லாத நிலையில் துவைத்த ஆடையை உலர்த்திக் கொண்டிருந்தார் ஜுவா.”

    “அவருடைய இல்லற ஓடத்தை ஓரளவேனும் இன்பம் ஏந்திச் செல்லும் வகையில் ஜுவாவின் துணைவiயார் திருமதி. பத்மாவதி அம்மையாருக்;கு ஓர் அரசுப்பணி தந்து ஆதரித்தார் காமராஜர்” (அரு.சங்கர் – பெருந்தலைவர் காமராசர்) இத்தகைய உதவியை காமராசர் ஒரு நாடாருக்குச் செய்தது இல்லை. குறிப்பாக அவரது தங்கை மகனுக்குக் கூட செய்வதற்கு மறுத்தவர்தான் அவர் (ம.பொ. சிவஞானகிராமணியார் – எனது போராட்டம்)

    இச்சூழ்நிலையில், 1938-ல் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த திரு. இராசகோபாலாச்சாரியார் (ராஜாஜி) மக்களுக்கு கோயில் நுழைவு உரிமை அளித்தார். இதனை வரவேற்று காங்கிரஸ் அரசுக்கு நன்றி தெரிவிக்க நாடார் மகாஜன சங்கம் தவறிவிட்டது. இதனால் வெறுப்புற்ற தேசீயவாதிகளான சில நாடார் பிரமுகர்கள் அச்சங்கத்திலிருந்து வெளியேறி, “தேசீய நாடார் சங்கம்” என்ற தனி அமைப்பை நிறுவி 1938-ல் மதுரையில் தேசீய நாடார் மாநாட்டை நடாத்தினர். “நாடார் சமூகத்தின் தேசீய எழுச்சிக்கு இம்மாநாடு எடுத்துக்காட்டாக விளங்கியது. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளராக இருந்த திரு.கு. காமராசர், மாநாட்டு நிர்வாகிகள் அழைத்திருந்தும் அதில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். வியப்பென்னவென்றால் மாநாடு நடைபெற்ற நாளன்று அவர் மதுரையில் இருந்தும், மாநாடு நடந்த பக்கம்கூட அவர் தலைகாட்டாததாகும்.” (அதே புத்தகம்) ஆனால் திரு. நேசமணியவர்கள் இரண்டு நாடார் மகாஜன சங்க மாநாடுகளில் தலைமை தாங்கியுள்ளார் என்பது வியப்பளிப்பதாக உள்ளது. இதனால் நேசமணி நாடார் சமுதாயத்தைப் பெரிதும் மதித்தார் என்பது வெளிப்படை.

    இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பெருந்தலைவர் நாடார் சமூகம் மற்றும் நாடார் மக்களிடத்தில் தனிப்பட்ட பற்றுதல் ஏதும் வைத்துக் கொண்டவர் அல்ல என்பதை உணர்த்தவேயாகும். இவர் சென்னை மாநில அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த அதே வேளையில் ம.பொ.சி. சென்னை மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்தார். கிராமணியாரும் நாடார் சமூகத்தில் ஒரு கிளைப் பிரிவான “கிராமணி” சமுதாயத்தைச் சார்ந்தவர். மேடைப் பேச்சிலும், எழுத்துப் பணியிலும் காமராசரை விட கிராமணியார் சிறப்பான நிலையில் இருந்தார். ஒரு வேளை கிராமணியர் தனது இடத்தைப்பிடித்து விடுவாரோ என்ற அச்சத்தில் கிராமணியாரை காங்கிரஸ் அமைப்பிலிருந்து வெளியேற்றுவதற்கு பெரும் முயற்சியை காமராசர் எடுத்துக் கொண்டதன் பயனாக 08.08.1954 அன்று ம.பொ.சி. காங்கிரசிலிருந்து வெளியேறினார். “நானும் என்னுடைய நண்பர்களும் காங்கிரஸ் கட்சியிலிருந்து கொண்டே கழகத்தை நடத்துவதால், உங்களுக்கோ, காங்கிரசுக்கோ என்ன நஷ்டம்” என்று ம.பொ.சி. கேட்க, “….. தமிழரசுக் கழகத்தின் பலத்தைக் கொண்டு, நீங்கள் காங்கிரசை கைப்பற்றிவிடலாமல்லவா, என்று திரு. காமராசர் சட்டென பதில் கூறினார்.” (எனது போராட்டம் – ம.பொ.சி)

    தனது பதவி ம.பொ.சி. யால் பறி போய் விடுமோ என்ற அச்சத்தை மனதில் கொண்டே அவரை வெளியேற்றினார் என்பது இதனால் உறுதி. பதவி ஆசை காமராசரையும் விட்டு வைக்க வில்லை. ம.பொ.சி.யின் இழப்பால் காங்கிரஸ் தனது பிரச்சார பீரங்கிகளை ஒட்டு மொத்தமாக இழந்தது. அதன் தாக்கம் பின்னாட்களில் காங்கிரஸ், தி.மு.க. விடம் தமிழ்நாட்டை இழப்பதற்கு ஏதுவாகி விட்டது.

    “ஆயினும், கழகத்தார் காங்கிரசிலிருந்து வெளியேறியதால் வலிமை மிக்க ஒரு பிரச்சார யந்திரத்தை தமழ்நாடு காங்கிரஸ் இழந்து விட்டது என்பதை மட்டும் இங்கு அழுத்தம் திருத்தமாக சொல்ல விரும்புகின்றேன், திறன்மிக்க பேச்சாளர்களாகவும், புகழ்மிக்க நடிகர்களாகவும் இருந்த பலருடைய சேவையை தமிழ்நாடு காங்சிரஸ் கட்சி இழந்தது. திராவிட முன்னேற்றக்கழகத்தின் பிரச்சாரயந்திரத்தின் தாக்குதலை சமாளிக்கும் திறனை இழந்து விட்டது.” (அதே நூல்)

    தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக திரு. காமராசர் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக பிற்காலத்தில், தமிழ்நாட்டை தி.மு.க.வினரிடம் இழக்க நேர்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இதுவே உண்மை. குhமராசரின் இந்த மதியீனத்தால் தமிழகம் வடுகர்கள் ஆட்சிக்கு வந்தது.

    இதைப்போன்ற அணுகுமுறையே பெருந்தலைவர், மார்ஷல் நேசமணியிடமும் கடைபிடித்தார். 01.11.1956 – அன்று குமரி மண் தாய்த்தமிழகத்துடன் இணைந்தது. தேர்தல் நிச்சயிக்கப்பட்டுவிட்ட நிலையில், குமரித்தந்தை நேசமணி பாராளுமன்றத்திற்கு மீண்டும் போட்டியிடுவதற்கு எண்ணியிருந்தார். ஆனால் இங்கே ஒரு ‘மாயமான’ விளையாடிற்று, ப. தாணுலிங்க நாடார் களத்தில் இறங்கி சகுனி விiளாட்டு ஆடிக் கொண்டிருந்தார். எவ்வாறேனும் திரு. நேசமணியை சட்டமன்றத்தில் நிறுத்திவிட்டு, தான் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே அந்த மாயத் திட்டம். இதைக் குறித்து திரு. அப்துல் ரசாக் எழுதுகிறார்: “இவர் தானே இப்போதெல்லாம் கமihஜுக்கும் நேசமணிக்கும் இடையே நம்பிக்கைத் தூதராக போய் வந்து கொண்டிருக்கிறார். காமராஜர் என்ன நினைக்கிறார் என்பதை நேசமணிக்கும், நேசமணி என்ன நினைக்கிறார் என்பதை காமராஜருக்கும் எடுத்தியம்பி இருவருடைய நம்பிக்கையையும் பெற்றிருந்தார். வசதியைப் பொறுத்தும் சந்தர்ப்பத்தைப் பொறுத்தும் இருவருமே இவர் பேச்சை நம்பினார்கள்.” (நேசமணி ஒரு சரித்திரப் திருப்பம்) – அப்படி என்ன தூது சொன்னார்? “….அதைப் பயன்படுத்தி நேசமணியிடம், காமராஜர் அவர்களிடத்தில் செயல்படுவதற்கு இவரை விரும்புகிறார் என்றும், அதனால் இவர் அசம்பிளிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும், ஒரு கற்பனைச் சித்திரத்தைக் கட்டி எழுப்பி விட்டார்.” (அதே புத்தகம்)

    எப்படி இந்த கற்பனையை நேசமணி ஏற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை. தான் தமிழ்நாட்டு மந்திரி சபையில் இணைந்து விட்டால், கன்னாயாகுமரி மாவட்டத்திற்கு பல நன்மை தரும் ஆக்கப் பணிகளைச் செய்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று திரு. நேசமணி எண்ணியிருப்பார் போலும். “முதலில் மறுத்த நேசமணியும் அதற்கு இசைந்து விட்டார்.” (அதே புத்தகம்)

    எதிர்பார்த்தபடி கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து எதிர்ப்பின்றி ஏகமனதாக திரு. நேசமணி தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக நுழைந்தார். இதனால் ப. தாணுலிங்கம் நாடார் நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்வு பெற்று டெல்லி சென்றார். ஆனால் அவர் கூற்றுக்கு எதிர் மறையாக காமராஜர் செயல்பட்டார். திரு. நேசமணியை அவர் கண்டு கொள்ளாதது மட்டுமின்றி, அரசியலில் கத்துக்குட்டியாக நுழைந்து, குளச்சல் தொகுதியிலிருந்து சட்டமன்றம் சென்ற திருமதி, லூர்தம்மாள் சைமனை காமராசர் தனது மந்திரி சபையில் அமைச்சராக்கி, நேசமணியின் முகத்தில் கரியைப் பூசினார். திரு. நேசமணிக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லையென்றாலும் பரவாயில்லை. திருமதி. லூர்தாம்மாளுக்கு அப்பதவியை அளித்தது குமரி வாழ் நாடார் மக்களை ஒட்டு மொத்தமாக காமராசர் இழிவுபடுத்தி விட்டதை யாராலும் சீரணித்துக் கொள்ள இயலவில்லை.

    இதற்கும் காரணமுண்டு, திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் திரு. நேசமணியின் தலைமையின் தலைமையில் இணைப்புப் போராட்டம் நடத்துகின்ற வேளையில் போராட்டத்தை கைவிட்டுவிட்டு, மலையாளிகளுடன் இணைக்கமாக நடந்து விடும்படி காமராசர் பலமுறை யோசனைக் கூறினார். ஆனால் இந்த யோசனையை நேசமணி ஏற்றுக்கொள்ளவில்லை. நேசமணி ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை சிந்திப்பதற்கு காமராஜர் தவறிவிட்டார். இந்த போராட்டம் தமிழ் மண்மீட்கும் போராட்டமோ அல்லது தமிழ் நாட்டின் எல்லை விரிவாக்கம் போராட்டமோ அல்ல என்பதை காமராசர் எண்ணிப்பார்க்க தவறிவிட்டார். சுமார் 200 ஆண்டு காலமாக நாடார் சமுதாய மக்கள் மலையாளி நாயர்களிடமிருந்தும், தமிழ் வெள்ளாளர்களிடமிருந்தும் எதிர் கொண்டுள்ள அடக்கு முறைகளுக்கு எதிராக விடுதலை வேண்டி நடத்தப்படுகின்ற இறுதிப் போராட்டம் என்பதை வரலாற்று அடிப்படையில் சிந்திப்பதற்கு காமராசர் தவறிவிட்டார். இந்த நீண்ட வரலாறு தெரியாத நிலையில் தான் காமராசர் திரு. நேசமணியை தனது பகைவனாக எண்ணிச் செயல்பட்டார் என்பது உண்மை. இருப்;பினும் தொடக்கக் காலங்களில் திரு. நேசமணி காமராசரின் உதவியை நாடுவதற்குத் தவறவில்லை. இது குறித்து திரு. நேசமணி கூறும்போது:

“It was at the time that the Tamilnadu Congress appealed tp Sri. Kamaraj Nadar to Visit Travancore and see for himself the condition the Tamilians in Travancore. He arrived in Travancore and tried to induce the state congress to come to terms with the Tamilnadu Congress. His attempts failed  ……… He issued a statement tp the Associated Press of India advocating tp start with the formationof the Southern Taluks of Travancore into a separate Revenue Division, with necessary safe guards for the Tamilians” (A. Nesamony – Inside Travancore Tamilnadu)

தென் திருவிதாங்கூரில் அன்று நிலவி வந்த அசாதாரண நிலையை நேரில் பார்த்து அறிந்து கொண்ட நிலையிலும், தென் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளைக் கொண்டு தமிழ் வருவாய் கோட்டம் ஒன்றை அமைத்து, அத்துடனே திருப்தியடைந்து, திருவிதாங்கூருடனே தொடர வேண்டியதுதானே என்று சொன்னாரே தவிர, அப்பகுதிகள் தாய் தமிழகத்துடன் வந்திணையட்டும் என்று கூறுவதற்கு அவருக்கு மனம் வரவில்லை. மலையாளிகளுடன் இணக்கமாக வாழ்வதற்கு முடியாது என்பதால் தானே இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது என்ற உண்மையை அறிந்திருந்தும், அறியாதவர் போன்று பாவனை செய்து கொண்டார் என்றால் குமரி வாழ் நாடார் சமூக மக்கள் மேல் எந்த அளவுக்கு இவர் பரிவு வைத்திருந்தார் என்பது புலனாகிறது. எனவே திருவிதாங்கூரில் தமிழ்     மக்கள் குறிப்பாக நாடார்கள் பெருவாரியாக வாழுகின்ற தமிழ் பிரதேசசங்களை தமிழ்நாட்டில் ஏற்றுக் கொள்வதற்குக்கூட பெருந்தலைவர் தயாராக இல்லை என்பதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

    அண்ணாத்துரை கூட இவரது இத்தகைய மனப்பாங்கைக் குறித்து இவ்வாறு கூறினார் : “ ……. எனவே நேருவாகப் பார்த்து, நியாத்;துக்குக் கட்டுப்பட்டு தமிழர்களின் உரிமைகளை தந்;தால் உண்டே தவிர, தம்பி! காமராசர் தமது திறமையினால் தமிழரின் உரிமையைப் பெற்று தருவார் என்று என்னால் துளியும் நம்ப முடியவில்லை. கேட்பார், புள்ளிவிபரம் தரப்படும். அதைத் தபாலில் அனுப்புவார். டில்லி இணங்க மறுத்தால், சரி போனால் போகட்டும், தேவிகுளம் இருந்தால் என்ன? அங்கு இருந்தால் என்ன? என்று கூறி விடுவாரேத் தவிர, தமிழர் உரிமை, தமிழகம் இவை பற்றி துளியும் அக்கறை காட்டமாட்டார். நாம் அவரை பச்சைத் தமிழர் என்று பாராட்டுகிறோம். அவர் மொழி, இனம், நாட்டு உணர்ச்சிகளுக்குத் தமது உள்ளத்தில் இடமளித்து பழக்கப்பட்டவரே அல்ல.” (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் – பாகம் – 1, கடிதம் 25, 6-11-1955 யள ஙரழவநன டில அரு, சங்கர், பெருந்தலைவர் காமராசர்)

    எனவே தமிழ், தமிழ் இனம் (நாடார்கள் உட்பட) போன்ற உணர்ச்சிகள் இவரிடம் காண்பது அரிது, அப்படியிருந்தால் நாடார் சமுதாயம் அன்னாராது ஆட்சி காலத்தில் இமயமலையளவில் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு உரிய பங்கு இவரது ஆட்சி காலத்தில் கூடக் கிடைக்கவில்லை.

    “இந்த நிலையில் திருவிதாங்கூரில் 1954 ஜனவரி – பிப்பரவரி மாங்களில் பொதுத் தேர்தல் வந்தது. இடது சாரிக் கட்சிகளான கம்யூனிஸ்டுகள், ரெவலூஷனரி சோஷியலிஸ்டுகள், கேரள சோஷியலிஸ்டுகள், பிரஜா சோஷியலிஸ்டுகள் போன்றோர் கூட்டணி அமைத்து காங்கிரசை எதிர்த்தனர். எனவே இவர்கள் தகுந்த முறையில் எதிர் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களான திரு. லால்பகதூர் சாஸ்திரியும், திரு. மல்லைய்யாவும், தி.த.நா. காங்கிரஸ் பிரதிநிதிகளை கன்னியாகுமரியில் சந்தித்து தே.த.நா. காங்கிரசின் கோரிக்கைகளில் ஒன்றான, திருவிதாங்கூர் தமிழ் பிரதேசங்களை சென்னை தமிழ்நாடு காங்கிரசின் வரம்பிற்குள் கொண்டு வருவதைக் குறித்துத் தேர்தலுக்குப் பிறகு சாதகமாக தீர்வு காணலாம் என்றும், அதற்கிடையில், திருவிதாங்கூர் தமிழ்த்தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்தும் பொறுப்பை த.நா. காங்கிரஸ் தலைவர் காமராஜரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர். இந்த வேண்டுகோளை நேசமணியின் தலைமையிலான தி.த.காங்கிரசார் ஏற்கவில்லை. இதனால் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.”

    “திருவிதாங்கூர் ஸ்டேட் காங்கிரஸ் (எ.ஜே. ஜாண் தலைமையில்) தனது வேட்பாளர்களை (14 பேர்) தி.த.நா. காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக தமிழ் பிரதேசங்களில் களமிறக்கியது. இவர்களுக்கு ஆதரவு தேடி காமராசர் திருவிதாங்கூர் தமிழ்ப் பிரதேசங்களில் பல நாள் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். “அவரைத் தொடர்ந்து சென்னை தமிழ்நாடு காங்கிரஸ் பேச்சாளப் பீரங்கிகள், பெரிய தோக்குகள், சிறிய தோக்குகள், கைத் தோக்குகள் என பல தரப்பட்ட வெடி வேட்டுகள் தங்கள் கோப்புகளோடும், பிரச்சார வண்டிகளோடும் இங்கே படையெடுத்து வந்தனர். எதற்காக? இங்குள்ள தமிழ்ப் பிரதேசங்கள் தாய் தமிழகத்தோடு இணைய வேண்டுமென்று ஆறு தலைமுறைகளுக்கு மேலாக ஆர்பரித்து வந்திருக்கும் தமிழ் சமுதாயத்தின் எதிர்காலத்தை திருவிதாங்கூர்- கொச்சி காங்கிரஸ் கட்சியின் குதிகாலில் கட்டி விடுவதற்காக! பரந்த தமிழகத்தின் தானைத் தலைவராக தன்னைப்பாவித்துக் கொண்ட காமராஜரோ நேசமணியைப் பழித்துக் கூறி குறைத்துக் கூறும் படலத்துக்கு துவக்க உரையாற்றினார். வடிவீஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில், “நேசமணி, எந்த யுத்தக் களத்திற்கு போனார்? மார்ஷல் பட்டம் அவருக்கு எவன் கொடுத்தான்? விலைக்கு வாங்குவதற்கு அது என்ன கடைச்சரக்கா?” என்றெல்லாம் இகழ்ந்து பேசினார். மதராஸ் கார்ப்பரேசன் வக்கீல் வு. செங்கல்வராயன், நேசமணிக்குக் குடியரசுச் சட்டம் மூன்றாவது ஆர்ட்டிக்கிள் சம்பந்தமாக பாடம் சொல்லி வைக்க முன் வந்தார். அவர் வளர்ப்பு மகள் அனந்தநாயகி அம்மாள் “தம்பி நேசமணி-க்கு தங்கள் எதிர்ப்பை தாள முடியுமா என்று கேட்டு வைத்தார். (அந்த அம்மாளுக்கு நேசமணியின் மூத்த மகளின் வயது கூட இருக்காதது).” (எ.எ. ரசாக்- நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்)

    காமராசரின் இந்தப் பிரச்சார வேளையில், தி.த.நா. காங்கிரசுக்கு எதிராக சில இந்து நாடார்களை அவர் தூண்டியதாகவும் தெரிகிறது. சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியின் தலைமை குரு திரு. பாலகிருஷ்ண நாடாரை காமராசர் தன்வயப்படுத்தி, நேசமணிக்கு எதிராக ஒரு நாடார் அமைப்பை உருவாக்கியிருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.

    திரு. காமராசர், “நேசமணிக்கு எவன் மார்ஷல் பட்டம் கொடுத்தான்” என்ற கேள்வியை அன்னாரது பிரச்சார வேளையில் எங்கும் கேட்டு வந்தார். அதற்கான விடையை காமராஜ் பக்தனான திரு அரு. சங்கரே தருகிறார்: “பழைய திருவிதாங்கூர்- கொச்சி மாநிலத்தின் ஓர் அங்கமாக வரலாற்றுப் புரட்டால் ஆக்கப்பட்டிருந்த இம்மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க மார்ஷல் நேசமணியும் அவரது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் கொடுத்த விலை, மதிப்பு போட்டுப்பார்க்கக்கூடிய ஒன்றல்ல. அதைக் கேரள தலைவர்கள் மேற்கொண்ட கொடுமையான அடக்குமுறைகளையும், சிறைத்தண்டனைகளையும் போராட்டங்கள் பலவற்றின் மூலம் தோல்வியுறச் செய்தவர் நேசமணி அவர்கள். அதன் காரணமாகவே “மார்ஷல்” என்ற பட்டம் சூட்டப்பட்டு மக்களால் அழைக்கப்பட்டார்” (பெருந்தலைவர் காமராஜர்- அரு. சங்கர்)

    “காமராசரின் தரம் கெட்ட வசை மொழிக்கு பதில் தராமல், மக்கள் பார்த்துக் கொள்வர் எனக்கூறி நேசமணி ஒதுங்கிவிட்டார். அதற்கு மக்கள் சரியான பதிலடியை திரு. காமராஜ் அவர்களுக்குத் தந்து திரு. நேசமணி அவர்கள் தான் “மார்ஷல்” என்று மீண்டும் நிருபித்தனர். திரு-கொச்சி தமிழ் பிரதேசங்கிளல் திரு-கொச்சி தேசீய காங்கிரசால் போட்டியிட வைத்த 14 – வேட்பாளர் அனைவரும் வைப்புத் தொகையை (னுநிழளவை) இழந்தனர். ஆனால். தி.த.நா.கா.வின. பலம் 9-ல் இருந்து 12 அக உயர்ந்தது. தவிரவும் முன் சட்ட மன்றத்தில் 44 பேரைக் கொண்ட காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்குப் பிறகு 117 – மொத்தம் அங்கத்தினர்களுக்கு 45 –ஐ மட்டும் பிடித்தது. ஆதனால் காங்கிரசால் அமைச்சரவை அமைக்க முடியாத நிலையில்?, மீண்டும் பட்டம் தாணுபிள்ளையை (பி.எஸ்.பி) அமைச்சரவை அமைப்பதற்கு வாய்ப்பை காங்கிரஸ்காரர்கள் அளித்தனர். இவ்வாறு திரு. காமராசரை தென் திருவிதாங்கூர் நாடார் மக்கள் புறக்கணித்தனர்” (அதே புத்தகம்)

    பட்டம் தாணுபிள்ளை இரண்டாம் முறையாக முதலமைச்சர் ஆனதும் அன்னாரது நாடார் விரோத அடக்கு முறைகளை மீண்டும் தொடங்கினார். இதனை எதிர்த்து நாடார் சமுதாயம் 11.8.1954 – அன்று விடுதலை நாள் கடைபிடித்தது. இதில் கம்யூனிஸ்ட்களின் குறிப்பாக ஜுவாவின் கட்சி ஆட்கள் தொடுவட்டியில் புதுக்கடையிலும் வன்முறையில் இறங்கினர். அதன் காரணமாக தொடுவட்டியிலும் புதுக்கடையிலும் மலையாளி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 பேர் பலியானார்கள். தவிரவும் போலீஸ் படையினரின் அத்து மீறல்களும், அட்டூழியங்களும் தாங்கொணா அளவிற்கு விளவங்கோடு மற்றும் கல்குளம் வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக குறிப்பாக நாடார்களுக்கு எதிராக அவிழ்த்துவிடப்பட்டன. பலர் காட்டு பகுதிகளுக்கும், அனேகர் எல்லையைக் கடந்து தமிழ்நாட்டிற்கும் சென்று தஞ்சமடைந்தனர்.

    இந்த நிலையில் ம.பொ.சி. நாகர்கோவிலில் வந்து (13.08.1954) வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த திரு. நேசமணியும் அவரது வலதுகரமான திரு. எ. அப்துல் ரசாக்கையும் கண்டு பேசி நிலைமையை முற்றிலும் அறிந்தவராகச் சென்னை சென்று எழுதுகிறார்: “நெல்லையில் ஒரு நாள் தங்கி விட்டு சென்;னை திரும்பிய பின்னர், முதல்வர் காமராசரைச் சந்தித்து, தென் திருவிதாங்கூர் நிலைமையை விவரித்தேன். பிதமருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பட்டம் தாணுவின் ஆட்சி நடத்தும் அடக்கு முறைக் கொடுமைகளை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு வற்புறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். தெற்கெல்லை கிளர்ச்சி காரணமாகத்தான் இவ்வளவும் நேர்ந்ததென்றும் அது தேவையற்ற கிளர்ச்சியென்றும் அவர் கூறினார். “(எனது போராட்டம் -ம.பொ.சி.)

    துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் பெரும்பாலோர் நாடார் சமுதாய மக்கள். முலையாளி போலீசாரின் வன்கொடுமைகளுக்கும், வெறியாட்டங்களுக்கும் உள்ளாக்கப்பட்;டவர்கள் அனைவரும் நாடார்கள். நாடார்களை நொறுக்குகிறார்களே என்ற ஆதங்கத்தால் அதற்கு உடனடி பரிகாரம் தேட வேண்டும் என்று திரு. காமராசரிடம் எடுத்துக் கூறியவரும் ஒரு நாடாரே ஆவார். ஆதரவு கேட்கப்பட்டதும் ஒரு நாடாரிடத்தில் தான். அதற்கு அந்த நாடார் அளித்த பதில் வேதனை தருவதாக இலலையா? காமராசரின் இனப்பற்றுஇவ்வளவு தான் என்பது இதனால் தெரிந்து கொண்டோம்.

    ஒரு வேளை சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரி அவர்களோ, அண்ணாவோ, அவ்வமையம் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்திருப்பார்களேயானால் பட்டம் தாணுபிள்ளையின் நிலைமை இக்கட்டானதாக இருந்திருக்கும். திருவிதாங்கூர் தமிழர்களுக்கு பக்க பலமாக நின்று அவர்கள் செயல்பட்டிருப்பர். ஆனால் காமராசர் அன்று முதலமைச்சராக இருந்தது திருவிதாங்கூர் தமிழர்களின் துரதிர்ஷடமே.

    காமராசர் நமக்காக மனம் உருகவில்லை. அதைக் குறித்து ம.பொ.சி. கூறுகிறார்: “தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது பழமொழி. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ்க்கு சதை கிடையாது. அதனால் தென் திருவிதாங்கூர் தமிழர்களுக்கிழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக அது ஆடவேயில்லை.” “தமிழகத்தின் முதல்வர் – தமிழகத்தின் பெருந்தலைவர் – என்ற முறையில் திரு. காமராசர் தென் திருவிதாங்கூர் தமிழர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஒரு அனுதாப மொழி கூடக் கூறவில்லை” (அதே புத்தகம்)

    இவரால் எந்த வித்தில் நமக்குப் பெருமை? நாம் துயரப்பட்டிருக்கும்வேளை நமக்கு ஆறுதலுக்காவது ஒரு வார்த்தை கூறுவதற்கு மனமில்லாதவரை என்னவென்பது? இருதயமில்லாதவரென்று சொல்லலாமா? அல்லது கல் நெஞ்சமென்று கூறலாமா? சேர நாட்டு நாடாருக்கு எதிரான பாண்டிய நாட்டு நாடார் என்று கூறுவதே சாலப்பொருத்தம். ஆனால் குமரி மாவட்ட நாடார்கள் காமராசரை துதி பாடித் திரிகிறார்கள்.

    “பிறர் வளர்ச்சியைத் தடுப்பதால்தான் தனது வளர்ச்சி இருக்கிறதென்பது அவரது (காமாராஜரது) சித்தாந்தம்” என்றும் ம.பொ.சி. கூறுகிறார். ஒரு வேளை நேசமணி தன்னை விட வளர்ந்து விடுவாரோ என்றொரு அச்சம் காமராசரின் மனதில் இருந்திருக்கலாம். அதனால்தான் என்னவோ, “திரு. காமராசர் தெற்கெல்லை கிளர்ச்சி நடந்தபோது, அதற்கு எதிராக எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்தவர். பச்சையாகச் சொல்வதானால், கேரள ஆதிக்கத்திற்கு தமிழர் அடிமைப்பட்டிருக்கும் நிலை நீடிக்கச் செய்ய அவர் அரும்பாடுபட்டவர்” என்று ம.பொ.சி. கூறுகிறார். (அதே நூல்)

    இந்த அசாதாரண நிலையில் குழம்பியிருந்த நேசமணி யாரையும் நம்பிப்பயனில்லை என்ற நிலைக்கு வந்து விட்டார். தாணுபிள்ளையின் சிறையில் 234 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை வெளிக்கொண்டு வருவதற்கு திருவிதாங்கூரில் உள்ள அனைத்து நீதிமன்ற வாயில்களும் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், நேசமணி, சென்னை சென்று இராஜாஜி அவர்களிடம் அலோசனை கலரும் படி எ. அப்துல் ரசாக்கை அனுப்பி வைத்தார். அவர் காமராசை நம்பாமல், இராஜாஜியை நம்பினார். அவரை சந்தித்த ரசாக: “இது விஷயமாக நான் முதலில்சந்தித்தது மூதறிஞர் ராஜாஜியை, திருவிதாங்கூர் – கொச்சி நிலைமையை மிக நன்றாகவே அறிந்திருந்த அவருக்கு நான் சொன்ன விளக்கத்தை மிகசுலபமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. எடுத்த எடுப்பிலேயே, ‘இந்த பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் (ளுரிசநஅந ஊழரசவ) ஒன்று தான் புகல் சொல்ல முடியும் என்று சொல்லி விட்டார்”. (எ.எ. ரசாக. – நேசமணி ஒரு சரித்திர திருப்பம்)

    திரு. காமராசரால் தீர்வுகாண இயலாத நிலையில், ஒரு பிராமணாள் தென் திருவிதாங்கூர் நாடார்களின் இன்னல்களுக்கு தீர்வு என்ன என்பதைப் கோடிட்டுக் காட்டினார். அறிவாளி என்றும் அறிவாளி தான். ஆயினும் ரசாக், ராஜாஜியிடம் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்: “திருவிதாங்கூர் – கொச்சி உயர் நீதிமன்றம் வரையுள்ள எல்லா நீதிமன்றங்களும் அளித்த தீர்ப்புகள் எங்களுக்கு எதிராகப் போயிருக்கின்றன. அந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அவர்கள் தீர்ப்புகளை புறக்கணத்து விட்டு எங்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்குமா வென்று பலர் ஆசங்கை கொள்கிறார்கள் என்று நான் சொன்னேன். அதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகாமல் வேறு என்ன வழியைத் தேடுவீர்கள் என்று என்னைக் கேட்டார்கள். உச்ச நீதிமன்றம் தான் இதற்கு சரியான நீதி வழங்க முடியும். அதற்காக குற்றவியல் வழிமுறைச் சட்டத்தில் ஒரு பிரிவு ஊறங்கிக் கொணடிருக்கிறது. அதைப்பயன்படுத்தி நீங்களும் உங்கள் முறையீட்டை தெரியப்படுத்தலாம்” என்று மூதறிஞர் ராஜாஜி அப்துல் ரசாக்குக்கு அறிவுரை வழங்கினார் (அதே புத்தகம்)

    இந்த ஆலோசனையை மார்ஷல் நேசமணியின் அங்கீகாரத்திற்கு என எ. ரசாக் சுமந்து வந்தார். தி.த.நா.கா. தலைவர் பி. ராமசாமி பிள்ளை, பொதுச் செயலாளர் ஆர். பொன்னப்ப நாடார், மற்றும் நீதிமன்ற வழக்குகளை முன்னின்று கவனித்து வந்த பக்குருதீன் ஆதத்தையும் வரச் செய்து ஆலேசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பி. ராமசாமிப் பிள்ளையும், பக்குருதீன் ஆதமும் உடன்படவில்லை. அவர் எடுத்துரைத்த வாதம் விசித்திரமாக உள்ளது. “- உச்ச நீதிமன்றத்தில் நடவடிக்கைகள் தொடரப்பட்டால் பி.எஸ்.பி. சர்க்கார் (பட்;டம் தாணுபிள்ளையின் அரசு) மேலும் ஆத்திரப்பட்டு மேற்கொண்டு எந்த சமாதான முயற்சியிலும் ஈடுபடாது என்று அச்சம் தெரிவித்தார்.” (அதே புத்தகம்) ஆனால் திரு. நேசமணிக்கு, அரசு ஒரு கண்ணியமான உடன்பாட்டுக்கு வரும் என்பதில் நம்பிக்கை இல்லை. உச்சநீதி மன்றத்தில் தாவாக்களை எடுத்துச் செல்லாம் என்றும், தேவைப்பட்டால். அதை பிறகு பின் வலிக்கலாம் என்றும் ஆலோசனை சொன்னார், தலைவரின் இந்த ஆலோசனையை பிறகு அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் வழக்கறிஞர் தைக்காடு திரு. சுப்பமைணிய ஐயரைத் தொடர்பு கொண்டு, இராஜாஜியின் அறிவுரையையும் அதன் மீது தங்களது முடிவும் அறிவிக்கப்பட்டது. குற்றவியல் நடவடிக்கைச் சட்டம் 527 (ஊ.சு.P.ஊ) –ன் அடிபபடையில் திரு – கொச்சியில் நடந்து வருகின்ற பதினொரு வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதற்கான மனுக்களைத் தயார் செய்யும் பொறுப்பை திரு. நேசமணியிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் மேல் முறையீடு விண்ணப்பங்கள் தயார் செய்வதில் நேசமணி ஈடுபட்டிருந்ததைக் குறித்து திரு. யு. அப்துல் ரசாக் கூறுகிறார்: “ஆனாலும் இரவு பகலென்று பராமல், அணுகி வந்து கொண்டிருந்த கிறிஸ்துமஸ்ஸையும் எண்ணாமல் பம்பரமாக் கறங்கினார். அப்போது அவர் காட்டிய இயக்க வேகத்தை அவரிடம் நான் எப்பொழுதுமே கண்டதில்லை. புயலில் சுற்றும் காற்றாலை போல இயங்கினார் என்றால் அது தகும்”. (அதே புத்தகம்)

    சிறையில் வாடுகின்ற நமது மக்களையும், நாடு விட்டு நாடு கடந்து அபயம் கொண்டிருந்தவர்களையும், காடு மேடுகளில் ஒளிந்து பட்டினிப் பசியால் வாடுகின்ற நாடார் மக்களின் தீராத்துயரை விரைவாகத் துடைக்க வேண்டும் என்ற ஏக சிந்தனையில் திரு. நேசமணி இராத் தூங்காமல் கடமையில் கண்ணாக இருந்து செயல்பட்டார். ஆனால் தமிழகத்தின் தானைத் தலைவரும், முதலமைச்சராகவும் இருந்த காமராஜ் நாடாரின் சதை. துயருற்ற அல்லல்பட்டிருந்த தென் திருவிதாங்கூர் தமிழர்களின்பால், குறிப்பாக நாடார் மக்களின்பால், ஆடவேயில்லை.

    உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சுப்பிரமணிய ஐயர், கணபதி ஐயர் ஆகியோர் தி.த.நா. காங்கிரஸ் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை 27-01-1955 – க்கு நாள் குறிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.சி சாட்டர்ஜி அவர்களையும் நேசமணி அமர்த்தியிருந்தார். வாதப் பிரதிவாதங்கள் கனல்பறக்கும் முiயில் அங்கே நடந்தது. நேசமணியும், அப்துல் ரசாக்கும் (இவர்களைத் தவிர வேறு எவரும் அங்கு செல்லவில்லை) உச்ச நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர். வாதத்தினூடே தலைமை நீதிபதி பி.கே. முக்கர்ஜி (டீ.மு. ஆரமநசதநந)இ “அனைத்துக் குற்றச்சாட்டுகளின் சுருக்கத்தை ஒரு வாக்கியத்தில் சொல்லுங்கள்” என்று மனுதாரர் வழக்கறிஞரிடம் கேட்டுக் கொண்டார். ஆகவே மனுதாரர் வழக்கறிஞர் சொன்னார்…”

    “திருவிதாங்கூர் – கொச்சி தென் பாகத்தில் ஒரு ஸ்தடபித்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பஞ்சாயத்து அலுவலகங்கள், முனிசிபல் செயலகங்கள், நீதி மன்றங்கள் முதலியவை சரியாக செயல்படவில்லை. இந்த ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்கள் பலரும், வழக்கறிஞர்களில் சிலரும் சிறையிலிருக்கிறார்கள். இது போலவே சட்டப்பேரவையில் இருக்க வேண்டிய மக்கள் பிரதிநிகள் சிறையிலிருக்கிறார்கள். இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தால் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை குலைத்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களுக்குத்தான் இப்படியென்றால் திருவிதாங்கூர் – கொச்சிக்கு வெளியே தவித்துக் கொண்டிருக்கும் 3000-க்கும் அதிகமான உள்ளுர் தமிழர்களுக்கு உள்ளே வர முடியவில்லை. நிலைமை அவ்வளவு சீர் கெட்டு இருப்பதால் நேர்மையான நீதிபூர்வமான விசாரணை அங்கு நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை” என்று பதில் இறுத்தார். இந்த நிலையில் திரு-கொச்சி அட்வகேட் ஜெனரல் மாத்யூ முறிக்கனைப்பார்த்து நீதிபதி விவிலியன் போஸ் கேட்டார்…

    “எதிர் மனுதார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட உங்கள் உறுதிமொழியிலும் தமிழக மலையாளிகளுக்கிடையே போட்டி பூசல்களும், வஞ்சகமும், நிலவுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நிலையில் அண்டை மாநிலத்திலுள்ள ஒரு கோர்ட்டில் தமிழரோ, மலையாளியோ அல்லாத ஒரு நிதிபதியைக் கொண்டு விசாரணை நடத்துவதில் உங்களுக்கு மறுப்பு என்ன? அதற்கு அவர், “அங்கேயும் மலையாளி விரோதமனப்பான்மை மேலோங்கி நிற்கிறது. ஆகவே நேர்மையான, நடுநிலைமை வாய்ந்த விசாரணைக்கு அங்கேயும் வாய்ப்பிருக்க முடியாது” எனப் பதில் கூறினார். சற்று நேரத்திற்கு பிறகு மீண்டும் கூடிய நீதிமன்றம்- “மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட திருவிதாங்கூர் –கொச்சி கேசுகளை மைசூர் ஹைகோர்ட் அதிகார வரம்பிற்குட்பட்ட கோர்ட்டுகளுக்கு மாற்றல் ஆகும்படி உத்தரவு பிறப்பித்தது.” (அதே புத்தகம்)

    தாவாக்கள் மைசூர் – நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. முதலில் காவலில் இருந்த 7 சட்ட மன்ற உறுப்பினர்களுக்காக ஜாமீன் மனுக்கள் தாக்கலாயின. ஏழு பேரும் ஜாமீனில் விடுதலையானார்கள். அந்த வேளையில் நேசமணியின் உள்ளக்கிடக்கையைக் குறித்து எ. அப்துல் ரசாக் எழுதுகிறார்: “கோர்ட் ரூமிலிருந்து (டெல்லி) நாங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் போதெ என்.சி. சாட்டர்ஜி மார்ஷல் நேசமணியோடு கைகுலுக்கிப்பாராட்டினார். சில மாதங்களாக அவர் முகத்தில் காணாத பொலிவை அப்போது நான் கண்டேன்”. (அதே புத்தகம்)

    விளவங்கோடு துப்பாக்கிச் சூட்டுக்கு (11.08.1954) வழிவகுத்துக் கொடுத்துவிட்டு, காலில் கொப்பளங்கள் ஏற்பட கடுக்கரையிலிருந்து மலைவழியாக தப்பி ஓடிய ஜீவாவின் கோழைத்தனத்தை பாராட்டுகின்ற நாஞ்சில் நாட்டார். நேசமணியின் இந்த நீதிமன்ற வெற்றியால் பல்லாயிரக்கணக்கில் பொது மக்களும், எம்.எல்.எ.க்களும் விடுதலையடைந்த வரலாற்றுச்சிறப்புமிக்க நிகழ்ச்சியை புகழாவிட்டாலும், அது குறித்து ஒரு வரி கூட எழுதுவதற்கு மனமில்லாத நாஞ்சில் நாட்டானை எவ்வாறு கணிக்கலாம். சாதி வெறியன் என்றா? அல்லது சந்தர்ப்பவாதியென்றா? இவைகள் இரண்டும் பொருந்தாது என்று நினைக்கிறேன். தேரூர் தேசிக விநாயகம் பிள்ளை கூறுகின்ற, “நாஞ்சினும் கொடியவன்” என்பதே இவர்களுக்கு உகந்த வியாக்கியானம். ஜீவா, மக்களை சிறைப்படுத்துவதற்கு துணை புரிந்து விட்டு ஓடி ஒளிந்து கொண்டார். ஆனால் அவர்களையெல்லாம் நேசமணி சிறை மீட்டு வந்தார். எனவே யார் பொய், யார் குமரித் தந்தை, என்று நஞ்சில் நாட்டானே உனது நெஞ்சில் கைவைத்து நீயே சொல்!

    இந்த நிலையில் மைசூர் நீதிமன்றத்தில் 7 எம்.எல்.எ.க்கள் முதலிலும் மற்றவர்கள் தொடர்ந்தும் விடுதலையானார்கள். அங்கே “கூட்டத்தில் ஒருவராக கோர்ட்டுக்குள் நுழைந்த நேசமணி ஒரு மார்ஷலாகத் தலை நிமிர்ந்து வெளியே வந்தார்.” (அதே புத்தகம்) காமராசரின் கேள்வியான “யார் இவருக்கு மார்ஷல் பட்டம் கொடுத்தான், அது வாங்குவதற்கு என்ன கடைச்சரக்கா?” என்பதற்கான விடையை அவர் இங்கே கண்டார். ஆனால் கண்டும் காணாதது போல் பாவனை செய்தார்.

    மொழி வழி மாகாணங்கள் புனரமைப்புக் குறித்து பரிந்துரைக்க 1954-ல் பசல் அலி கமிட்டியை மத்திய அரசு நியமித்தது. தமிழக அளவில் திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தானங்களிலுள்ள தமிழ் தாலுகாக்கள் பற்றியும் பசல் அலீ கமிஷன் விசாரணை நடத்தியது. முடிவாக தென் திருவிதாங்கூரில் நான்கு தாலுகாக்களையும், செங்கோட்டைத்; தாலுகாவை முழுமையாகவும் தமிழகத்துடனே இணைக்கலாம் என்று அக்கமிஷன் பரிந்துரைத்தது. இதில் தேவிகுளம் – பீர்மேடு முற்றிலும் விடுபட்டிருந்தது.

    “அப்போது முதலமைச்சர் பதவியிலிருந்த காமராசர், பொதுவாக பசல் அலி கமிஷன் பரிந்துரையை வரவேற்றார் என்றாலும் தென் திருவிதாங்கூரின் தமிழ்த் தாலுகாக்கள் தமிழகத்தோடு சேர்க்கப்பட வேண்டுமென்று கமிஷன் பரிந்துரைத்தது குறித்து களிப்படையவில்லை” –தவிரவும், “அங்குள்ள மக்கள் விரும்பினால், இனியும் அவர்கள் தமழகத்தில் சேராமல் கேரளத்திலேயே இருந்து விடலாம்” என்ற செய்தியை நிருபர்களிடம் கூறினார். ஆம் தென் திருவிதாங்கூர் தமிழர்கள் நடத்திய கடுமையான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியைத் தோல்வியாக்கி, அதனை அவர்கள் மீது திணிப்பதற்கு திரு. காமராசர் விரும்பினார். (எனது போராட்டம் – ம.பொ.சி) காமராசரின் இந்த செய்தியால், குமரி மாவட்ட தமிழர்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள் தமிழகத்துடனே வந்து இணைவதை அவர் மனமார வெறுத்தார் என்பதை எடுத்தியம்புகின்றது. தவிரவும் 01.11.1956 அன்று குமரி மாவட்ட இணைப்பு ஏற்பு விழாவில் “திரு – கொச்சியில் இருந்த நீங்கள் எல்லா துறைகளிலும் நன்றாக வளர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்காக மதராஸ் அரசு எதையும் செய்வதற்கில்லை. தமிழர்கள் தமிழர்களோடு இணைந்தார்கள் என்ற அளவோடு நீங்கள் நின்று விட வேண்டும் என்று கூறினார். “(சமுதாய சிந்தனை, அக்டோபர் 2006)       

    இது தான் குமரி வாழ் நாடார் மக்களின் பால் பெருந்தலைவர் காமராசர் கொண்டிருந்த மனநிலை. அழையாத விருந்தாளி என்ற அந்தஸ்தில் தான் அவர் நம்மை வைத்திருந்தார். அதே நிலை இன்று வரையிலும் தொடர்கிறது.

    பசல் அலி கமிஷனின் ஆணைப்படி தேவிகுளம் – பீர்மேடு பகுதிகளும், நெய்யாற்றின்கரையும் கேரளத்துக்கு விட்டுத் தரப்பட்டிருந்தன. ஆனால் இங்கேயும் தமிழர்கள் பெருவாரியாக வாந்திருந்தனர். முக்கியமாக மதுரை மாவட்டத்தில் 1,90,000 ஏக்கர் நஞ்சைநிலங்களுக்குப் பாசன வசதிகயைத் தருகின்ற முல்லை- பெரியாறு நீர் தேக்கத்தையும் கேரளத்திற்கு விட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது. இவைகளைக் கண்டு நேசமணி அதிர்ச்சியடைந்தார் பாராளுமன்றத்தில் இந்த மசோதாவின் மீது விவாதம் நடக்கும் போது விடுபட்டுப் போன இந்தத் தமிழ் பிரதேசங்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்று மூன்று நாட்கள் வாதாடினார் நேசமணி. வரலாறுகளை முன் நிறுத்தியும், பொருளாதாரத்தை சுட்டிக்காட்டியும், மக்கள் வாழ்வியலை எடுத்துக் காட்டியும், தாய் மொழியின் அடிப்படையிலும் அந்த அஞ்சா நெஞ்சன் தன்னந்தனியாக நின்று வாதாடினார். இவருக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு பாராளுமன்றத்தில் அன்று இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் முன் வரவில்லை. தமிழ்நாட்டிலிருந்து 40 எம்.பி.கள் அங்கே இருந்தனர். இவர்களுக்கு பெருந்தலைவர் வாய்ப்பூட்டு போட்டதின் காரணத்தால் அவர்கள் நேசமணிக்கு பக்க பலமாக நின்று உதவ முன்வரவில்லை. இதனால் நாம் இழந்தவைகள் ஏராளம். நெய்யார் அணைநீரை இழந்தோம். புத்மநாபபுரம் கோட்டையில் பெரும் பகுதியை இழந்தோம். இங்கே கட்டப்பட்டிருந்த பழம் பெரும் தமிழ் மன்னர் அரண்மனையை இழந்தோம். சேங்கோட்டைத் தாலுகாவில் பாதியை இழந்தோம். தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற தமிழர்களால் கட்டப்பட்ட முல்லை-பெரியாறு அணையையும் இழந்தோம். இந்த இழப்புகளுக்கெல்லாம் யார் காரணம்? அன்று தமிழகத்தில் முதலமைச்சராக வீற்றிருந்த காமராசர் தானே? அன்று பாரதப் பிரதமாராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேருவிடம் பெருந்தலைவருக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தியிருந்திருப்பாரேயா

னால், நியாயமாக, மொழி அடிப்படையில் கிடைக்க வேண்டிய இடங்களை (மேலே குறிப்பிட்ட இடங்களை) தமிழகம் பெற்றிருக்கும், ஆனால் காமராசர் இதைக் கண்டு கொள்ளாமல், வாழ வெட்டியாக இருந்து விட்டார்.

    இவரது ஆட்சிக் காலத்தில் நெய்யார் அணைக்கட்டும், குமரி மாவட்டத்தில் 10,000 ஏக்கர் பாசன வசதிப் பெறுவதற்கான இடது கரை சானலும் உருவாக்ப்பட்டது. இதை 21.07.1958-ல் காமாரசர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு மொத்தம் 248 லட்சம் செலவு பிடிக்கும். அதற்கான ஒப்பந்தத்தில் கால வரம்பு சரியாக வரையறுக்கப்படாததால் அந்த திட்டத்தால் இன்று குமரி மாவட்டம், குறிப்பாக விளவங்கோடு தாலுகா விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி விட்டனர். இடது கரை கால்வாயில் தண்ணீர் விடாமல் கேரளம் அடைத்துவிட்டது. இந்த அரை குறை திட்டத்தில் நாம் பாசன வசதியை இழந்தோம். (கன்னியாகுமரி மாவட்டம் விவரச் சுவடி)

    தவிரவும் பட்டணம் கால்வாயும், அத்துடனே இராதாபுரம் கால்வாய்க்கான திட்டமும் பெருந்தலைவர் காலத்தில் தீட்டப்பட்டு, பக்தவத்சலனார் காலத்தில் வேலை தொடங்கப்பட்டு 1970-ல் முடிவடைந்தது. தீட்டப்பட்ட திட்ட வரைவின் அடிப்படையில் பட்டணம் கால்வாயால் விளவங்கோடு தாலுகாவில் 60073 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் என்று கூறப்பட்டது. ஆனால் திட்டம் முழுமையடைந்த போது வெறும் 3791 ஹெக்டேர் நிலம் தான் பாசன வசதி பெற்றது.

    இதற்குக் காரணம், இத்துடனே தீட்டப்பட்ட ராதாபுரம் கால்வாய் திட்டத்தால் வந்த வினைதான். இத்திட்டத்தால் இராதாபுரம் பகுதியில் 17,000 ஹெக்டேர் தரிசு நிலம் பாசன வசதியைப் பெற்றது. இந்த கால்வாய் 33.50 கி.மீ. நீளமும், 70 கி.மீ. பகுந்தளிப்பு கால்வாய்களும் அடங்கியதாகும். பட்டணம் கால்வாயால் பயன் அடைகின்ற நஞ்சை, புஞ்சை நிலங்களைவிட 3 மடங்கு நஞ்சை, புஞ்சை, நிலங்கள் இராதாபுரம் கால்வாயால் பயனடையும் விதத்தில் தமிழக அரசு திட்டம் தீட்டியதை இங்குள்ளவர் அறிந்து கொள்ளவில்லை. ஆனால் இவைகளுக்குப் போதிய தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும் என்ற ஆதாரத்தை கணக்கில் கொள்ளாமல் இந்த ராதாபுரம் கால்வாய்த்திட்டத்தைத் தீட்டினர். ஆதனால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டணம் காலவாய் கடை வரம்பு விவசாயிகளும், நாஞ்சில் நாட்டு கடைவரம்பு விவசாயிகளும் ஆவர், இவர்களின் இழப்பில் பயனடையந்தவர்கள் ராதாபுரம் விவசாயிகள்.

பட்டணம் கால்வாய் திட்டம் தீட்டிய உடனே நாஞ்சில் நாட்டு வெள்ளாளப்பண்ணையார்களும், நாடார் சமூக நில உடமைகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் இராதாபுரம் கால்வாய் திட்டத்தை எதிர்க்கவில்லை. இத்திட்டத்தால் பாண்டி நாட்டினர் அதிக பயன் அடைவர் என்பதால் திட்டத்தை எதிர்க்காமல், ஆதரித்தனர் என்று கருதலாம். ஆனால் நாஞ்சில் நாட்டவருக்கு அதிக பாதிப்பை உருவாக்கியது இந்த இராதாபுரம் கால்வாய் திட்டம் ஆகும்.

    இராதபுரம் கால்வாய் திட்டம் தீட்டப்பட்ட வேளையில், பேச்சிப்பாறை அணையின் கொள்ளளவைக் கூட்டுகின்ற வகையில் அதன் உயரத்தை 6 அடி உயர்த்தினார்கள். பிரதான அணையின் உயரத்தை கூட்டியதால் அதன் நீர்வடிப்பு மதகுகளின் உயரத்தை ஆறு அடி உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் அதை உயர்த்தவில்லை. தவிரவும் அணையின்; வடபாக பள்ளங்களையும் சிறு சிறு தடுப்பு அணைகள் கட்டி தண்ணீர் அதன் வழி வீணாவதைத் தடுத்திருக்க வேண்டும். அவைகளைச் செய்யாமல் அணையின் உயரத்தை மட்டும் கூட்டினால் போதுமா? அதனால் அதிக மழைபெய்தால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. ஆனால் அதை அணையில் தேக்கி வைப்பதற்கு இயலாததால் வெளியேற்றும் மதகுகள் அவசர அவசரமாக திறக்கப்பட்டு, கோதையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு உருவாகி பெரும் அழிவை உண்டுபண்ணியது. அதற்குப் பிறகு பேச்சிப்பாறை அணை நிரம்பவெயில்லை. ஆயினும் இராதாபுரம் கால்வாயில் தண்ணீர் எடுத்துச் செல்வது தொடர்ந்த வண்ணமிருக்கிறது. இந்த தண்ணீர் குறைப்பாட்டைச் சரி செய்வதற்காக தடையாறு அணைத்திட்டத்தையும், பறளியாறு நீர் உந்துத் திட்டத்தையும், செயலாக்கும் செய்யாமல் விட்டுவிட்டனர். அதனால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் இந்த இராதாபுரம் திட்டதால் வஞ்சிக்கப்பட்டனர். இந்த திட்டத்திற்கு ஏற்பளித்தது திரு. காமராசர் ஆட்சிக் காலத்தில் தான் என்பது கவனத்திற்குரியது. ஆகையால் இராதாபுரம் பகுதிகளுக்கு கன்னியாகுரியின் இழப்பில் திட்டம் தீட்டியவர் காமராசர் ஆவார்.

    இந்த சூழ்நிலையில், அதில் இந்தியா அளவில் காயங்கிரசின் வளர்ச்சி சரிந்து வரத் தொடங்கியது. இதை சரி செய்து மீண்டும் காங்கிரசை புத்துயிர் ஊட்டுவாதற்காக காமராசர் தனது கே-திட்டத்தை (மு-Pடயn) அறிவித்தார். அதன்படி காமராசர் முதலமைச்சர் பதவியிலிருந்து 1963- ஆம் ஆண்டு இறங்கி அகில இந்திய அளவில் பணியாற்றுவதற்கு டில்லி சென்றார். மீண்டும் 1967-ல் விருதுநகர், திரு. காமராசர் பிறந்து வளர்ந்த ஊர். நாடார் சமுதாயத்தில் வசதி படைத்தவர்கள் நிறைந்த ஊர். ஆனால் காமராசரின் பால் அவர்களுக்கு மனத்தாங்கல் உண்டு. ஏனெனில் சமுதாய வளர்ச்சியில் காமராசர் துளியும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்றொரு மனத்தாங்கல். இது தேர்தல் களத்தில் பிரதிபலித்தது. தவிரவும் பச்சைத்தமிழனை அவன் மண்ணிலேயே வீழ்த்த வேண்டும் என்று சூளுரைத்துக் கொண்டு, தினத்தந்தி அதிபர் சி.ப. ஆதித்தனாரின் பின் துணையுடன் கருணாநிதியும் களத்தில் இறங்கியிருந்தார். “எப்படியோ தலைவர் ஒருமாணவனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனால் இதை குமரி மாவட்டத் தந்தை மார்ஷல் நேசமணியால் பொறுக்க முடியவில்லை. அவர், தான். வெற்றி பெற்ற நாகர்கோவில் தொகுதியை பெருந்தலைவருக்காக விட்டுக் கொடுக்க முன் வந்தார். ஆனால் காமராசர் மிக அடக்கமாக மறுத்து விட்டார்.” (அரு. சங்கர் – பெருந்தலைவர் காமராசர்)

    பெருந்தலைவர் அடக்கமாக மறுத்துவிட்டார் என்பதை விட அவரது குற்ற உணர்வு திரு. நேசமணியின் உதாரத்துவத்தின் முன்பு வெட்கிப் போயிற்று. அதனால் அவரது கொடையை திரு. காமராசரால் ஏற்றுக் கொள் முடியவில்லை. இதில் கவனத்திற்குரியது என்னவென்றால், காமராசர் தன் சொந்த வீட்டிலேயே வீழ்ந்துவிட்ட அதே வேளையில் திரு. நேசமணயவர்களோ தனது மாவட்டத்தில், தொகுதிக்குச் செல்லாமலே, வாக்காளர்களிடம் சென்று வாக்கு கேட்காமலே, தன்னை எதிர்த்துப் போடடியிட்ட பிரபலங்கள் பெற்ற கூட்டு வாக்குத் தொகையை விட அதிகம் பெற்று அமோக வெற்றியைப் பெற்றார். ஆனால் காமராசரோ ஒரு மாணவரிடம் தோற்றுப் போனார். இது தான் மார்ஷலுக்கும், காமராசருக்கும் உள்ள வேறுபாடு. காமராசருக்கு தன் தொகுதியை விட்டுக் கொடுக்க முன் வந்ததன் காரணமே இனப்பற்று தானே தவிர, ஐயோ! பாவம் என்பதனாலல்ல. எனவே நேசமணியடம் காணப்பட்ட சமுதாயப்பற்று, காமரசரிடம் என்றும் காண முடிந்ததில்லை. 1967- தேர்தல் வேளையில் மார்ஷல் நேசமணி உடல் தளர்ந்த நிலையில் தான் காணப்பட்டார். ஆயினும் மக்கள் அவரை விடுவதாக இல்லை. அவர் தொகுதி பக்கம் வரவில்லையானாலும், வாக்காளர்களை சந்திக்காமலே, தங்களது தலைவனை வெற்றி காமராசருக்காக, தான் வெற்றிபெற்ற தொகுதியை விட்டுக்கொடுக்க வேறு எந்த காங்கிரஸ்காரனோ, நாடானோ முன்வரவில்லை என்பதே. அந்த நிலையில் தான் நாடார் சமூகம் அவரை அன்று வைத்திருந்தது.

    1968 ஏப்ரல் மாதம் நேசமணி படுத்த படக்கையாகி விட்டார். நெய்யூர் C.S.I மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறிது உடல் நலம் தேறி, அன்னாரது சொந்த ஊரான பள்ளியாடி, நேசர்புரம் காடுபுரயிடம் குடும்ப வீட்டில் இளைப்பாறிக்கொண்டிருந்தார். அவ்வேளையில் பெருந்தலைவர் காமராசர் அவரைப் பார்ப்பதற்காக அங்கே வந்திருந்தார். பெருந்தலைவர் காமராசரை கண்ட உடனே கூடியிருந்தவர்களுக்கு கடுங்கோபம் உருவாயிற்று. அவரது முகம் பார்த்து திரு. நேசய்யன் என்பவர் “ஏ! துரோகி, எங்கள் தலைவருக்கு துரோகம் இழைத்து விட்டு அவர் இப்போது செத்தாரா, இ

ருக்கிறாரா என்று பார்க்கவா இங்கு வந்தாய்? ஒரு கடற்கரைக் காரியை மந்திரியாக்கி எங்கள் தலைவரை மூக்கறுத்து விட்டாயே! துரோகி, வெளியே போ!” என்று ஆவேசமாக கத்தினார். இதை சற்றும் எதிர்பாராத திரு. காமராசர் உறைந்து போனார். சுதாகரித்துக் கொண்டு நேசமணியின் படுக்கைக்குச் சென்று மனக்கலக்கத்துடன் நலன் விசாரித்து சால்வை அணிவித்தார். அப்போது திரு. நேசமணி அவர் கரம்பற்றி, “பையன்கள் என் மீது வைத்திருக்கும் அன்பால் ஏதோ ஆத்திரத்தில் அவ்வாறு சொல்லி விட்டார்கள். மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம். அது குறித்து நான் வருத்தப்படுகிறேன.” என்று சொல்லி அவரை சமாதானப்படுத்தி விடைக் கொடுத்தார் (நேர்முகப் பேட்டியின் போது என்னிடம் திரு. N. நேசய்யன் கூறினார். அவருக்கு தற்பொழுது 80 வயது. படுக்கையாகி விட்டார். பேட்டியின் போது உடனிந்தவர் திரு. குமாரதாஸ், கொடுமுட்டி, தி.த.நா.கா. பேராட்டத்தியாகிகள் சங்க தலைவர், பேட்டி நாள்: 06.05.2007)

    உடல் நலம் மேலும் மோசமாகி, குமரித் தந்தை நேசமணி 01.06.1968 அன்று காலமானார்கள். இதைத் தொடர்ந்து நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. செத்தும் கொடுத்தான். சீதக்காதி என்பர். அதே போன்று நேசமணியும் செத்து தன் சொந்த தொகுதியை, அரசியல் வியத்தில் சிக்கி முடாகிப் போன காமராசருக்கு விட்டுச் சென்றார்.

    குமரி நாட்டு மக்களுக்கு இன உணர்வு அதிகம். வெள்ளாள சமுதாய மக்களின் இன உணர்வு மிக மிக அதிகம். அதே போன்ற உணர்வு மீனவ சமுதாயத்திடமும் உண்டு. கத்தோலிக்க சமயத்தில் இருக்கின்ற நாடார் இன மக்களை மீனவ சமுதாயத்தைச் சார்ந்த சமய பாதிரிகள் இரண்டாம் கிறிஸ்தவனாகக் கருதி வருவதற்கும் இந்த இன உணர்வு காரணமாகிறது தலித் மக்களும், கிறிஸ்தவன் ஆனாலும் இந்து சமயத்தைச் சார்ந்தவன் ஆனாலும், இன உணர்வு அவர்களிடத்திலும் அதிகமாகக் காணப்படுகிறது. கேரள முதலி என்ற இனத்தாரும் அவ்வாறே காணப்படுகின்றனர். நாயர் சமுதாயத்தவர்கள், குறுப்பு இனத்தவர்களின் நிலையும் அவ்வாறே, ஆகவே நாடார் இனத்தவர்களும் நாடார் இன உணர்வு கொண்டுள்ளதில் தவறில்லை. இதனடிப்படையில் விருதுநகரில் தோல்வியுற்ற காமராசரை, நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட குமரி வாழ் நாடார் மக்கள் விரும்பி வேண்டினர். அவரும் அதை ஏற்று போட்டியிட்டார். குமரி மக்களுக்கு குறிப்பாக நாடார் இன மக்களுக்கு அவர் செய்யத் தவறியவைகளை மனதிpல் கொண்டு பகைமை பாராட்டாமல், பெருந்தலைவரை பிற இனங்களான வடுகர்கள், தேவர்கள், நாயர்கள், மேளக்காரர்கள் போன்ற சாதியினர் ஒன்று சேர்ந்து தோற்கடித்து விட்டனரே என்ற குமரித் தந்தை நேசமணியின் ஆதங்கத்தை நன்கு அறிந்திருந்த நாடார் மக்கள் காமராசரை வருந்தி அழைத்து வந்து இங்கே போட்டியிட வைத்தனர். பச்சைத் தமிழன் ஒருவன் வஞ்சனையால் விழ்த்தப்பட்டுவிட்டானே என்ற ஆதங்கத்தாலும் நாடார் ஒருவரை அரசியல் வானில் மீண்டும் உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற ஒரே எண்ணத்திலும் அன்னாரை இங்கு வரவழைத்து வெற்றி பெறச்செய்தனர் குமரி வாழ் நாடார் மக்கள். இன்று இம்மாவட்ட நாடார்களில் சிலர் வடுகர்களை சுமக்கிறார்கள். பலர் பாண்டிக்காட்டான்களை சுமக்கிறார்கள்.

    திரு. காமராசருக்கு எதிராக இங்கே யாரும் போட்டியிடுவதற்கு முன் வராத நிலையில், கருணாநிதி அவர்களும், தினத்தந்தி நாளிதழ் அதிபர் ச.ப. ஆதித்தனாரும், நேசமணியை அண்ணன், அண்ணன் என்று சதா காலமும் கூப்பட்டு பின்பற்றி வந்த டாக்டர் எம்.மத்தியாசைக் கண்டெடுத்தனர். இந்த நிகழ்சியைக் குறித்து அரு. சங்கர் கூறியிருப்பதை வாசகர்களின் பார்வைக்கு இங்கே தரப்படுகிறது.

    “தமிழக முதல்வர் அண்ணா அவர்களோ நோய்வாய்ப்பட்டு சிகிட்சை பெற்று வருகிறார். தேர்தல் மன்னன் என்ற பெயரைக் காமராஜரிடமிருந்து தட்டிப் பறித்துக்கொண்ட கருணாநிதியாரோ மீண்டும் ஒரு தேர்தல் தோல்வியைக் காமராசருக்குத் தரத் திட்டம் தீட்டுகிறார்”. இன்று கருணாநிதி காமராசருக்கு சிலை அமைக்கிறார். நாடார்கள் கருணாநிதி கையில்.

    “ஒரு காலத்தில் காங்கிரஸ் காராக இருந்து எப்படியும் அந்த இயக்கத்தில் தனக்கென ஒரு தனியிடம் பெற்றுக் கொள்ள துடித்து அது நிறைவேறாத நிலையில் எதிரணியில் சேர்ந்து தன் பத்திரிகைச் செல்வாக்கால் காங்கிரஸ்காரர்களை கார்ட்டூன் கோட்டே காமராரை வீழ்த்திய தினத்தந்தி ஆதித்தனாரின் புதிய நட்பு கருணாநிதிக்கு ஒருவரப்பிரசாதகமாக அமைந்திருந்;தது. எனவே காமராசரைப் பலி கொள்ள நாகர்கோவில் தொகுதியிலேயே ஒரு கரியான ஆளைத் தேடத் தொடங்கினார். அவருடைய கழுகுப் பார்வையில் சிக்கியவர் டாக்டர் மத்தியாஸ். பொது வாழ்க்கையில் மார்ஷல் நேசமணிக்கு உற்ற தம்பி. தலைவர் நேசமணியை ‘அண்ணன்’ என்றே பகிரங்கமாக கூறிக் கொண்டவர். ஆனால் அவர் எக்கட்சியையும் சாராதவர். தலைவர் நேசமணியன் வசதுகரமாக இயங்கி அவர் தேர்தல்களில் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய படுபட்டவர். 19530-ஆம் ஆண்டில் குளச்சல் முதல் கொல்லங்கோடு வரை பரவி மக்கள் உயிரைச் சூறையிட்ட வாந்தி பேதி நோயினின்று மக்களைக் காப்பாற்ற திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைத்த மருத்துவ முகாம்களில் கைமாறு கருதாமல் பணியாற்றி மக்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர். மார்ஷல் நேசமணியின் அன்புக்குப் பாத்திரமாக இருந்தவர். ஆயினும் ஏதோ மனத்தாங்கலால் அவரையே 1967- தேர்தலில் எதிர்த்து நின்று தோன்றிருந்தவர். மக்கள் இவரை மார்ஷலின் மறுவுருவமாக ஏற்றுக் கொள்வர் என்று கருணாநிதி கணக்குப் போட்டார். ஆனால் டாக்டர் மத்தியாசுக்குத் தலைவர் காமராசரை எதிர்த்து நிற்க விருப்பமில்லை என்றும், அடி மேலடித்து நகர்த்தப்பட்ட அம்மியாகத் தான் கடைசியில் ஒப்புதல் தந்தாரென்றும் அப்போதே பேசப்பட்டது.” (அரு. சங்கர் – பெருந்தலைவர் காமராசர்)

    பிறிதொரு வேளையில் டாக்டர் மத்தியாஸ் திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து எம்.எஸ். சுpவசாமையை கருணாநிதி தி.மு.க. சார்பில் களமிறக்கினார். வாக்குகள் எண்ணப்பட்டன. டாக்டர் மத்தியாஸ் முன்னிலை பெற்றார். ஆனால் அவர் தோற்கும் வரை வாக்குகள் மீண்டும் மீண்டும் எண்ணப்பட்டன. முடிவாக, வெற்றியடைந்த நிலையில்இருந்த டாக்டர் மத்தியாஸ் தோல்வியடைந்தார். அச்சமயம் தமிழக முதல்வராக கருணாநிதி தான் இருந்தார். நாகர்கோவில் பாராளுமன்ற தொகுயில் திரு. காமராசருக்கு எதிராகக் களமிறக்க டாக்டர். மத்தியாஸைத் தேடிச் சென்ற கருணாநிதி திருச்செந்தூர் தொகுயில் டாக்டர் மத்தியாஸைத் தோற்கடிப்பதற்காக பதிவான வாக்குகளை பல தடவைகள் மறு எண்ணிக்கைக்கு வழிகோலியது ஏன்? அங்கே எம்.எஸ். சிவசாமியை எதிர்ப்பதற்கு டாக்டர். மத்தியாஸ் தேவையில்லை. அது ஏன்? சந்தர்ப்ப அரசியல். திரு. சிவசாமி கருணாநிதி ஆள். ஆனால் டாக்டர் மத்தியாஸ்..?

    இங்கே டாக்டர் மத்தியாஸ் அல்ல, காரியம், பச்சைத் தமிழன் தான் முக்கியம். அதனால் டாக்டர் மத்தியாஸ் எங்களுக்கு பகைவன் அல்ல. நாடார் இனப்பகைவர்களின் வலையில் அவர் வீழ்ந்து விட்டது தான் அம்மாவட்ட மக்களுக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. மற்ற விஷயங்களில் டாக்டர் மத்தியாஸ் குமரி மாவட்ட மக்களுக்கு ஆற்றிய பணி காமராசர் ஆற்றிய பணிகளை விட பல மடங்கு சிறப்புடையதாகும்.

    “பொதுவாகக் கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் இயக்கத்தின் கோட்டையாக மார்ஷல் நேசமணியவர்களால் ஆக்கப்பட்டிருந்தது. அதனால் காமராசருக்கு மக்கள் வெள்ளம் அளித்த வெற்றியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை ………….. இந்திய அரசியல் வரலாற்றில் இந்தத் தேர்தல் வெற்றி ஏற்படுத்திய தாக்கத்தை இதற்கு முன்னரோ, அன்றி பின்னரோ எந்தத் தேர்தல் முடிவும் ஏற்படுத்தியதில்லை”, என்று சங்கர் எழுதுகிறார். (அதே புத்தகம்)

    இந்த ரீதியான வாக்குப்பதிவு தான் காமராசரின் தேர்தலின் போதும் நடந்தது. இந்த இடைத் தேர்தலுக்குப் பிறகு அடுத்த தேர்தல் 1971-ல் நடந்தது. அதிலும் பெருந்தலைவர் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிட்டார். இச்சமயம் டாக்டர் மத்தியாஸ் இவரை எதிர்த்து நிற்பதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. இவரை எதிர்ப்பதற்கு யாரும் முன் வராத்தை உணர்ந்த தி.மு.க. அரசு (அப்போது கருணாநிதி முதலமைச்சர்) திரு. ஏம்.சி. பாலனை போடடியிடச்செய்தது.

    “பின்னாளில் திரு. பாலன் அவர்களைச் சென்னையில் நான் நிறைவு செய்த திருமண மேடையில் சந்தித்த போது கேட்டேன். “காமராசரை எதிர்த்துத் தேர்தலில் நிற்க மாட்டேன்; என்று சொல்லியிருக்கலாமே? அதற்கு அவர் புன்முறுவலுடன் கூறினார் “கட்சியின்- கலைஞரின் நிர்ப்பந்தம்.” (அதே புத்தகம்)

    இவைகளை ஏன்? இங்கே விரிவாக எடுத்துரைத்துள்ளேன் என்றால், கருணாநதியின் நாடார் குரோதம் எவ்வளவு ஆழமானது என்பதை விளக்கவேயாகும். ஆனால் இன்று! காமராசரை தன் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு வலம் வருகிறார். எதற்காக? காமராசரின் பெயரைச் சொல்லி நாடார் சமூக மக்களின் அரசியல் ஆதரவுக்காக மட்டும்! நாடார் மக்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

    பெருந்தலைவர் 02.10.1975-ல் எதிர்பாராமல் காலமானார்கள். அவ்போது நாட்டில் அவசரகால நிலை இந்திரா காந்தி அம்மையாரால் பிரகடனப்படுத்தப்பட்டடிருந்தது. மீண்டும் தேர்தல் 1977-ல் நடத்தப்பட்டது. அவ்வமையம் நாகர்கோவிலில் நாடாளுமன்றத் தொகுதியில் குமரி அனந்தன் போட்டியிட்டார். அவர் 1977 முதல் 1980 வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். தவிரவும் காந்தி-காமராஜ் என்ற அரசியல் கட்சியை அவர் உருவாக்கி செயலற்றி வந்தார்.

    பெருந்தலைவர் கு. காமராஜ் அவர்கள் 1969 – 1971 மற்றும் 1971 – 1975 ஆகிய இருமுறைகளும், குமரி அனந்தன் 1977 – 1980 ஒருமுறையும் நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களது காலத்தில், குமரி மாவட்டம் அடைந்த நன்மைகள் அல்லது வளர்ச்சிகள் தான் என்ன என்று கேட்டு 25-08-2006 அன்று குமரி அனந்தனுக்கு நான் கடிதம் எழுதினேன். இந்த நிருபத்துக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியுள்ளது. இதிலிருந்து ஒன்று புலனாகிறது. அவர்களது காலத்தில் குறப்பிடும் படியான எந்த நன்மையும் குமரி மக்களுக்கு அவர்கள் செய்யவில்லை என்பது வெட்ட வெளிச்சம். ஆனால் நேசமணி இந்த குமரி மண்ணுக்காக ஆற்றிய பணி இமயமலை போன்றது ஆகும். அதன் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டுமாயின்,” குமரி சிற்பி நேசமணியும் தென் குமரித் தமிழ் மக்களும் – 2004” என்ற எமது புத்தகத்தை பார்த்துக் தெளிவடைந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

    அண்ணாத்துரை, கருணாநிதி ஆகியோரைப் போல காமராசரும் ஆட்சி சுகம் அனுபவித்தவர். “ஆகட்டும் பார்துக்கலாம்” என்ற ஒரு ஆட்சி முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார் காமராசர். தமிழ் மண்ணை அன்னியர்கள் அபகரிக்கத் துணை நின்றார் காமராசர். நேசமணியோ மகாத்மா காந்தியைப் போல ஒரு விடுதலை வீரன் – ஆட்சி சுகம் அனுபவித்தவரல்ல. இந்திய மண்ணை ஆங்கிலேயரிடமிருந்து காந்தியார் மீட்டுத் தந்தது போல, நேசமணியும் தமிழ் மண்ணை மலையாளிகளிடமிருந்து மீட்டுத்தந்தார். காந்தியாரே தேசத்தந்தை – ஆட்சி சுகம் அனுபவித்த ஜவகர்லால் நேரு அல்ல. அதுபோல, ஆட்சிசுகம் அனுபவித்த காமராசரல்ல- தமிழ் மண்ணை மீட்டுத்தந்த நேசமணியே குமரித்தந்தை.

குமரி மாவட்டத்து அனைத்து மக்களின் அன்புக்குப் பாத்திரமான நேர்மையாளர்; குமரி மக்களின் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற்றவர்; குமரித்தந்தை என்ற புகழ் மகுடம் பெற்றுத் தமிழக வரலாற்றில் தமக்கென தனியிடம் பெற்றவர் நேசமணி அவர்கள்- மு. கருணாநிதி, 5.3.1992.

தந்தையை நிராகரித்த குமரி காங்கிரஸ் கட்சி அனியும் நமக்கு வேண்டுமா? –குமரி மக்களே ! சிந்தியுங்கள் – செயல்படுங்கள் !!அன்புமிக்க ரசாக்,

    நான் ஸி.ராஜகோபலாச்சாரியார், காமராஜ், கிராமணி, சுப்பையா ஆகியோரை சென்னையில் சந்தித்துவிட்டு நேற்றுமாலை நாகர்கோவில் திரும்பினேன். சுப்பையா என்னோடு தான் ரயிலில் பயணம் செய்தார். ஸி.ஆர் கருத்துப்படி, நாம் சென்னை தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியில் உருத் தெரியாமல் கலந்து விடாமல் ஒரு தனி கமிட்டியாக இயங்க வேண்டும் என்பதாகும், ஒரு தனி பிரதேச காங்கிரஸ் கமிட்டியாக இயங்க வேண்டும் என்பது தான் அவர் கருத்து என்று யூகிக்கிறேன்.

    ஆனால் தேவிகுளம், பீருமேடு, நெய்யாற்றின்கரை ஆகிய மூன்று தாலுகாக்களும் சேர்க்கப்படுவதில் திருவிதாங்கூர் – கொச்சி பிரதேச காங்கிரஸ் கமிட்டிக்கு மறுப்பு இருக்கிறது என்று காமராஜ் கூறுகிறார். காமராஜ் தீர்மானமாக ஏதும் சொல்ல வில்லை. நாம் அதிகமாக கல்வியறிவு பெற்றிருப்பதால் காமராஜ் நம் விஷயத்தில் விசேஷ அக்கறை எடுக்க மாட்டார் என்று கோயமுத்தூர் சுப்பையா அபிப்பிராயப்படுகிறார்.

    ஆகவே, மாறுபட்ட இந்த சூழ்நிலையில் நாம் நம்முடைய மார்த்தாண்டம் தீர்மான அடிப்படையில் தமிழ் தாலுகாக்கள் ஒன்பதிற்குமாக ஒரு தனி பிரதேச காங்கிரஸ் கமிட்டி அமைவதையே விரும்புகிறோம் என்று மாதவன் நாயரிடம் எடுத்துச்சொல்லுங்கள்.

கவுடியார் குன்று அரண்மணையில் காமராசர் !

    எல்லைகளை வரையறுக்க, 1955 ஜனவரி 16-ம் நாள் திருவனந்தபுரத்தில் இராஜபிரமுகர் அவர்களின் இருப்பிடமான கவுடியார் குன்று அரண்மனையில், ஸ்ரீசித்திரைத்திருநாள் மகாராஜா தலைமையில் ஒரு கூட்டுக்குழு ஆலோசனை நடந்தது. முதராஸ் மகாணத்தின் சார்பில் அதன் முதலமைச்சர் திரு. கு. காமராஜ் அவர்கள் கலந்து கொண்டார்கள். அங்கு விருந்து உபசரணைகள் கணிசமாக நடந்ததாம். பிறகு எல்லை நிருணயம் பற்றி பேசி காமராசரிடம் பலதை கேட்டு வாங்கிக் கொண்டார்கள் கேரளீயர். மயக்கத்தில் இவரும் தாராளமாக விட்டுக் கொடுத்தார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ் மன்னர்களின் பழங்கால அரண்மனையை விட்டுக் கொடுத்தார். குமரி முனையில் தமிழ் மன்னர்களுடைய ஓய்வுகால அரண்மனையை விட்டுக்கொடுத்தார். ஆணையம் முழுமையாக தந்திருந்தும் செங்கோட்டை தாலுகாவில் ¾ பாகத்தை விட்டுக்கொடுத்தார். கமிஷன் பரிந்துரைத்தபடி எங்களுக்கு வேண்டும் என்று நேசமணி பாராளுமன்றத்தில் வாதாடியும் பலன் இல்லாமல் போயிற்று. இதனால் சாணார்கணவாய், ஆரியங்காவு ஆகிய நீர் ஆதார இடங்களை தமிழகம் காமராசரால் இழந்தது.

                                    இளந்தோட்டம் கு. சுகுமாறன்     

இதை நாங்கள் சொல்லவில்லை…?

தமிழ் பகுதிகள் ஆற்று நீர் இழப்பு

    மாநிலங்களைச் சீரமைக்கும் பிரச்சினையை பரிசீலித்து அறிக்கை கொடுக்கும் பொருட்டு 1953 இல் இந்திய அரசு, பஸல் அலியைத் தலைவராகவும் ஹெச்.என். குன்ஸ்ருவையும் கே.எம். பணிக்கரையும் உறுப்பினர்களாகவும் கொண்ட மாநில சீரமைப்புக் குழுவினை நியமித்தது. நாயரும் உறுதியான மலையாளி சார்பினையுடையவருமான கே. ஏம் பணிக்கர் அக்குழுவில் இருந்தது தமிழர் நலனுக்கு ஊறுவிளைவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது: ஆனால் அது பற்றி காமராஜர் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. அக்கமிஷன் மலையாளப்பகுதி முழுவதையும் சென்னை மாநிலத்திலிருந்து மாற்றுவதற்குப் பரிந்துரை செய்தது. ஆனால் திருவிதாங்கூர், கொச்சி அரசிலிஜருந்து ஒரு சில தமிழ் பகுதிகளைத்தான் மாற்றியது. மலபார் கேரளாவோடும் தென்திருவிதாங்கூர் தமிழ்நாட்டோடும் இணைக்கப்பட்ன. ஆனால் பெரும்பாலும் தமிழர்களே வாழ்ந்த நெய்யாற்றின்கரை, தேவிகுளம், பீர்மேடு ஆகியவை இணைக்கப்படவில்லை.

    எழுபது சதவீதத்திற்கும் குறையாத மக்கள் ஒரு குறிப்பட்ட மொழி பேசினால் அப்பகுதி ஒரு மொழி சார்ந்த பிரதேசமாகும் என தார் குழு (னுயச ஊழஅஅளைளழைn) கருதியது. அதன்படிபார்த்தால் தேவிகுளம், பீர்மேடு தமிழ்ப் பகுதியாகும்; ஏனென்றால் எழுபது சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமிழ் பேசினர். புவியியல் முறையிலும் அப்பிரதேசம் தமிழ்நாட்டின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது. ஆரம்பகாலக் குடிகளும் தமிழர்களே. 1800-1801 தென்னிந்தியப் புரட்சியின் போது நாட்டுப்பற்றாளர்கள் இந்த உயர் மலைத்தொடர் பகுதிகளை தங்கள் நடவடிக்கைளின் மையமாக் கொண்டனர். அத்துடன் தேவிகுளம், பீர்மேட்டு பகுதிகளில் உள்ள ஆறுகளும் காவிரியைப் போன்று பெரிதான பெரியாறு, பத்பா ஆறுகள், உயர்மலைத் தொடர்களில் உற்பத்தியாகி கோயம்பத்தூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற மழை குறைந்த மாவட்டங்களின் நீர்ப்பசன வசதிகளுக்கு மூல ஆதாரமாயிருந்தது.

    சீரமைப்பு குழு உண்மையைத் திரித்துக் கூறியதாலும், காமராஜ் அமைச்சரவை இழைத்த தவறினாலும், தமிழ்;நாட்டு மக்கள் அதன் இன்றியமையாத் தன்மையை உணரத் தவறியதாலும் தமிழ்நாடு இந்த முக்கியமான இடத்தை அர்ந்ததது. இந்த குறிப்பிட்ட பிரச்சினையில் குழு கூறிய வாதமாவது: “ஒரு குறிப்பட்ட மொழிப் பிரிவினர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்டத்தக்க பெரும்பான்மையினராக இருந்தல் ஒன்றே அது பற்றி இறுதி முடிவெடுக்கப் போதுமான காரணமாகக் கொள்ளக்கூடாது.” இத்தகைய அவமானங்கள் போதாதென்று இப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் இடம் பெயர்ந்தவர்கள் என்றும் இடம் மாறுபவர்கள் என்றும், கேரள மக்கள் குடியேறுவதற்கும், ஆற்று நீர் தேக்கங்களுக்கும் அடிவாரத்தில் உள்ள பள்ளத்தாக்கு நெல்வயல்களின் பாதுகாப்பிற்கும் அப்பகுதி அவர்களுக்குத் தேவை என்றும் அறிவித்தது. இப்பெரும் ஆறுகளின் நீர் தமிழ்நாட்டின் வறண்ட பகுதிகளை விட கேரளாவில் நீர் நிறைந்த வயல்வெளிகளுக்குத்தான் தேவை எனநிலைநாட்ட முற்பட்டிருப்பது விந்தையாகும். நீர் பற்றாக்குறை மிகுந்த விருதுநகர் வாசியான காமராஜ் அப்பட்டமான அநீதி இழைக்கப்படும் இந்நிகழ்ச்சியில் தமிழர்களைக் கைவிட்டுவிட்டார்: தமிழர்களுக்கு உயர்மலைத் தொடர்கள் கிடைப்பதற்கு முயற்சி எடுக்காது மலபார் பகுதி முழுமையும் கேரளாவிற்கு கொடுக்க அமைதியாக சம்மதித்து விட்டார். இந்த சோக நிகழ்ச்சிக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் அறிவுக் கூர்மை மிகு கேரள முதலமைச்சர் கோவிந்த மேனனின் சூழ்ச்சிகளுக்கு எளிதில் இரையாகி, சீரமைப்புத் திட்டப்படி தமிழ்நாட்டடிற்கு ஒதுக்கப்பட்ட பகுதியான செங்கோட்டைத்தாலுகாவின் மேற்குப் பகுதியையும் பறிகொடுத்துவிட்டார். இது மற்றொரு முக்கிய ஆறான கல்லாடத்தின் உற்பத்தியிடமான அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாகும். கேராளாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கன்னியாகுமரி முனையின் சிகரத்தை குத்தகைக்கு விட்டு விட்டார். அது முக்கடல்களும் சந்திக்கும் காட்சியை எடுத்துக் காட்டும் மிகச் சிறப்பான இடம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

    1954 பெப்ரவரி 24 இல் தென் திருவிதாங்கூரும் செங்கோட்டையின் ஒரு பகுதியும் தமிழ்நாட்டுடன் இணைக்ப்பட்டன. உயர் மலைத் தொடர்கள் ஆற்று நிலையங்களின் இழப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழர்கள் கடையடைப்பு நடத்தி தங்கள் ஆட்சேபனையை வெளியிட்டனர். உண்மையில் காமராஜ் அமைச்சரவையின் தவறுகளால் தமிழர் நலன் காற்றில் பறக்கவிடப்பட்டது.

    தமிழ்நாட்டின் வட எல்லைப் பகுதியில் சில தமிழ்ப் பகுதிகள் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. ஐக்கிய தமிழ்நாட்டுக் கழகமும், தமிழ்நாட்டு வட எல்லைப் பாதுகாப்புக்குழுவும் இவ்விடங்களை மீண்டும் பெற ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தன. அதே சமயத்தில் ஆந்திர மாநிலமும் சில கிராமங்களைத் தமிழ்நாட்டிடமிருந்து கோரியது. நேரு அரசு இச்சிக்கலைத் தீர்க்க ஹெச்.வி.பதாஸ்கர் குழுவைப் பணித்தது. அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. திருத்தணி தாலுகாவின் பெரும்பகுதி தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டது. அதே சமயத்தில் அதற்கு சமமான பொன்னேரி, திருவள்ளுர் தாலுகாப் பகுதிகள் ஆந்திராவிற்குக் கொடுக்கப்பட்டன. இந்த பிராந்திய ஏற்பாடுகள் தமிழர்களுக்கு எந்தவித ஆதாயத்தையும் அளிக்கவில்லை. திருத்தணி கோவிலைப் பெற்றாலும் ஆரணியாறு நீர்ப்பாசனத்தை இழந்தனர்.

Kunjan Nadar pleaded with Kamaraj to take a strong stand on the issud of Devicolam and Permedu but the latter disissed his pleas remarkimng that it makes no difference whether some territory was with Kerala or Tamil Nadu. Sivagnana Gramini organized an agitation over this issue but it flittered asay (Interview with A. Nesamony dated 7-1-1957 and with Kunjan Nadar dated 14-7-1965.)

                     Dr. K. Rajayyan,

    Madurai University, 1978.

(Dr. D. Peter)

Chairman,

Kanyakumari Institute of Development Studies (KIDS),

266, Water Tank Road, Nagercoil-629001

Phone : +91 4652 279745

Mobile : +91 9043952430


2 பின்னூட்டங்கள்

திருவிதாங்கூர் தோள் சீலைக் கலகம் எது உண்மை? எது பொய்?

திருவிதாங்கூர் தோள் சீலைக் கலகம் எது உண்மை?  எது பொய்?
*********************************************************************************
அண்மையில் (டிசம்பர் 2010) திருவாளர்கள் எஸ். இராமச்சந்திரன் மற்றும் அ.கணேசன் போன்றவர்களின் கூட்டு முயற்சியால் “தோள் சீலைக் கலகம்:  தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூல் என்ற தோரணையில் வெளிவந்ததைக் காண நேர்ந்தது.  இதில் தெரிந்த பொய்கள்தான் என்ன? தெரியாத உண்மைகள்தான் என்ன? என்பதற்கு திட்டவட்டமாக விளக்கங்கள் எதுவும் காணப்படவில்லை.

தவிரவும், ‘தோள்சீலைக் கலகம்’ என்ற மக்கள் போராட்டம் தென் திருவிதாங்கூரில் 1859 முதல் 1922 வரை பல்வேறு நிலைகளில் நாடார் சமுதாயத்திற்கும், நாயர் சமுதாயத்துக்கும் இடையில் நடந்தது ஆகும்.  இது குறித்த ஆய்வு நூல்கள் பல பிரசுரமாகியிருந்தாலும், 1975-ல் திரு.ஆர்.என். இயேசுதாஸ் அவர்கள் ஆய்ந்து எழுதி பிரசுரித்த “A people’s Revolt in Travancore”  என்ற நூல்தான் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று (Authoritative book).   இந்நூல்லில் தரப்பட்டிருக்கின்ற நிகழ்வுகளை எதிர்த்தோ, தாங்கியோ ஒரு நூலை எழுதி மேலே குறிப்பிட்டிருக்கின்ற ஆசிரியர்கள் வெளியிட்டிருந்தால் அதில் பொருள் இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு இந்த போராட்டத்தின் நோக்கங்களை திருவிதாங்கூருக்கு வெளியில் நடந்தவைகளுடன் ஒப்பிட்டு உண்மை, பொய் என்று விமர்சனம் செய்திருப்பது பொருத்தமானதாக இல்லை.

திருவிதாங்கூர் என்ற இந்து மன்னர் நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவு வரை நிலைத்து இருந்த சமுதாய கோட்பாடுகளை இவர்கள் ஆய்ந்தறிந்தால் மட்டுமே இங்கே உயர் இந்துக்கள் என்று தாங்களாகவே வகுத்துக் கொண்ட நம்பூதிரிப் பிராமணர்களும், நாயர் தறவாட்டுக்காரர்களும், வெள்ளாளப் பண்ணைகளும் இழிவு அல்லது தாழ்ந்த இந்துக்களின் மேல் அடித்தேற்றியிருந்த சமூகச் சீர்கேடுகளை அறிந்து கொள்வதற்கு இயன்றிருக்கும்.  தீண்டாமை, காணாமை, நடவாமை போன்ற கோட்பாடுகள் ஆழமாக பதிந்திருந்த நாடு இந்தியாவில் திருவிதாங்கூர் மட்டும் தான் என்பதை இவர்கள் உணர வேண்டும்.
“நாடார் அல்லது ஈழவ இனத்தைச் சார்ந்த ஒருவன் பிராமனிடமிருந்து 36 அடி தூரத்திற்கப்பாலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திற்கப்பாலுமே நிற்க முடியும். புலையர் இனத்தைச் சார்ந்த ஒருவனுக்கும், பிராமணனுக்குமிடையில் இருக்க வேண்டிய குறைந்த அளவு தூரம் 96 அடியாகும்.  புலையன் ஒருவன் நாயர் இனத்தைச் சேர்ந்தவனிடமிருந்து 60 அடி அகன்று நிற்க வேண்டும்.  நாயடி அல்லது புலையன் ஒருவனை ஒரு பிராமணன் பார்க்க நேரிட்டால் அவன் தீட்டுப்பட்டவனாகக் கருதப்படுவான்.  இங்ஙனம் தீட்டுப்பட்டவன் ஆற்றிலோ, குளத்திலோ மூழ்கி நீராடி தன்னைச் சுத்தீகரிக்க வேண்டும்”.
(A. Sreedhara Menon – Social and cultural History of Kerala – 1979 – Page 68 – as quoted by Dr. Ivy Peter)

இது போன்ற சாதி கட்டுப்பாடு பிரிட்டீஷ் இந்தியாவில், குறிப்பாக சென்னை மாகாணத்தில் இருந்ததுண்டா? இருந்திருந்தால் திரு.எஸ்.இராமச்சந்திரன் ஐயருக்கு தெரிந்திருக்குமே. இத்தனை வருணாசிரமக் கொடுமைகள் நிறைந்திருந்த திருவிதாங்கூர் என்ற “தெய்வத்தின்றே” நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது மார்பகத்தை மறைத்து, மானமாக வாழ்ந்திருக்க முடியுமா?  என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நிலை தென் தாலுகாக்களான அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை போன்ற தாலுகாக்களில் நிலையில் இருந்தது என்பது உண்மை.
“Before the introduction of Protestant Christianity in Travancore, the Women, excluding women of the Brahmins, were prohibited from covering their bosoms”.
(R.N. Yesudhas – A people’s revolt in Travancore – 1975 – Page – 71)

அதே வேளையில் தென்திருவிதாங்கூர் நாடார்கள் இந்த கோட்பாட்டிலிருந்து விடுதலை வேண்டி, புரோட்டஸ்தாந்து கிறிஸ்தவம் இங்கே அறிமுகம் ஆவதற்கு முன்பே கலகம் செய்து வந்துள்ளனர் என்பதும் உண்மையே,
“The Nadars of South Travancore, who had migrated from the Pandiya country, had been agitating for the right to cover the bosoms of their women even before the arrival of the potestant missionaries”  (Ibid – Page – 3)

குறிப்பு : திருவிதாங்கூரில் ‘நாடார்’  என்பது ஒரு சமுதாயத்தின் பெயர் அல்ல.  திருவிதாங்கூர் மன்னர்களால் சில சாணார் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்று (title  அல்லது பட்டம்) ஆகும்.
“The word Nadar is also used as a title.  The titles Thiruppapur Nadar, Udaya Marthanda Nadar, Nagamani Marthanda Nadar etc were grantned to some facilities of Shanars by the ancient kings of Travancore”.  (Nagam Aiya – Travancore State Manual Vol.II – Page 393).

இதிலிருந்து என்ன புலனாகிறது.  அகஸ்தீஸ்வரத்து ‘நாடான்கள்’ என்று தங்களை உயர்த்தித் திரிகின்றவர்களின் பெண்களும் தங்களது மார்பகங்களை மறைப்பதற்கு இந்த திருவிதாங்கூர் தர்ம பூமியில் உரிமையில்லை என்பதைத் தானே காட்டுகிறது.  அவர்களும் கலகம் செய்திருக்கிறார்கள்.  ஆனால் மேல் சாதி இந்துக்களின் (இங்கே வெள்ளாளர்கள்) ஆதிக்கத்தை அவர்களால் தகர்த்தெறிய இயலவில்லை என்பதும் உண்மை.  அவர்களுக்கு துணை நிற்பதற்கு அன்று பிரிட்டீஷ் (சென்னை) மாகாணத்தில் வாழ்ந்த நாடார் சமுதாயம் முன் வரவில்லை.  அது ஏன்? உங்கள் ஆராய்ச்சி வட்டத்திலிருந்து இது ஏன் விடுபட்டு போனது.  மாறாக அகஸ்தீஸ்வரத்து நாடார் குல பெண்கள் 18 முழச் சேலையால் அவர்களது உடலை, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை மூடியிருந்தனர் என்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கூறியிருப்பதன் நோக்கம்தான் என்ன?  சந்திரியநாடான், சாணாரநாடான் என்ற பிரிவினையை மீண்டும் நாடார் சமுதாயத்தில் உருவாக்குவதற்குத்தானே இந்த முயற்சி. கால்டு வெல்லார் கூறியிருப்பது போன்று, இவர்களுக்கு சிந்தித்துப் பார்ப்பதற்கான திறன் குறைவு என்பதால்தானே நீங்கள் இருவரும் இப்படியொரு கடைவிரித்துள்ளீர்கள்?

“மார்பை மூடாமல், கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருந்த ஒரு இளம் பெண்ணை எப்படியோ பார்த்து விட்டார் அய்யா.  அண்ணாவிபோல் எழுந்து அவள் பின்னால் போய், பிரம்பால் அவள் முதுகில் ஒன்று வைத்தார்… எத்தனை மட்டஞ்சொல்லியிருக்கேன்* என் முன்னையே மூடாம வந்திருக்கியே மக்கா”.
(பொன்னீலன் – மறுபக்கம் – 2010 – பக்கம் – 232)
இதும் எதை காட்டுகிறது.  சாமித்தோப்பில் அய்யா முத்துக்குட்டி சாமியார் காலத்திலும் பெண்கள், இளம் பெண்கள் உள்ளடக்கம் மார்பகங்களை மறைக்காமல்தான் இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது அல்லவா?  தவிரவும் கன்னியாகுமரி ரயில்வே நிலையம் அருகில் திரு.குமரிஅனந்தனால் நிறுவப்பட்டிருக்கின்ற கலையரங்கை நீங்கள் இருவரும் சென்று பார்த்து வர வேண்டும்.  அங்கே, அய்யா முத்துக்குட்டிசாமியை அவரது தாயாரும், மனைவி பரதேவதையும் தொட்டில்பாடையில் சுமந்து திருச்செந்தூர் முருகன் சன்னதிக்கு செல்லுகின்ற காட்சியை ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தங்களது மார்பகங்களை மறைக்காமல் தான் செல்லுகின்றனர்.  முத்துக்குட்டிசாமி அவர்களின் காலம் கி.பி. 1808 – 1851 வரை ஆகும். அவர் காலத்திலும் அகஸ்தீஸ்வரத்து நாடார் குலப் பெண்கள் தங்களது மார்பகங்களை மறைத்திட இயலாமல்தான் இருந்துள்ளனர் என்பதை மேலே சுட்டப்பட்ட நிகழ்வுகள் சான்றளிக்கிறது.  இப்பொழுது கூறுங்கள் இவர்கள் எல்லாம் 18 முழச் சேலைகளைக் கட்டி, மாறாப்பு இட்டு தங்கள் மார்பகங்களை மறைத்திருந்தனர் என்பது உங்கள் கற்பனை அல்லது முத்துக்குட்டிசாமியார் நாடார் அல்ல பனையேறிச் சாணான் என்று* கூறுவீர்களா? உங்களால் கூறுவதற்கு தெம்பு உண்டா? முதலில் திருவிதாங்கூரில் நிலவி வந்த சமுதாய நிலையை சரியாக கற்றாpந்துவிட்டு ஆய்வு நூற்களை எழுத முயற்சியுங்கள். பிரிட்டீஷ்காரர்கள் ஆளுகின்ற சென்னை மாகாணத்தில் காணப்பட்ட சமுதாய நிலையின் வரலாறை ஒப்பிட்டு எழுதுவது தவறானது ஆகும்.  அங்கே நாடார் பெண்கள் 18 முழ சேலையால் முந்தாணை வைத்துக் கட்டி தங்களது மார்பகத்தை மறைத்திருந்தனர் என்பது முற்றிலும் உண்மை.  நாடான் வீட்டுப் பெண்களும், சாணான் வீட்டுப் பெண்களும், பறையன் வீட்டுப் பெண்களும், வெள்ளாளன் வீட்டுப் பெண்களும், பிராமணன் வீட்டுப் பெண்களும் சுதந்திரமாக தங்கள் மார்பகங்களை சேலையால் மறைத்திருந்தனர் என்பதில் இரண்டு கருத்தில்லை.  அதை மிஷனறிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.  ஏனென்றால் அங்கேயும் ஆங்கிலேயர் ஆட்சி இருந்தது.  அதனால் தான் அந்த சுதந்திரம் அனைத்து பெண்களுக்கும் கிடைத்திருந்தது.

பொதுவாக, தமிழகத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் திருவிதாங்கூர் என்ற இந்து தேசத்தின் ஆட்சிமுறை, பண்பாடு போன்றவைகள் எத்தகையது என்று அறியாதவர்களாகத்தான் காணப்படுகின்றனர்.  இந்த வகையில் இந்த சவர்ணர்களின் அதாவது உயர் இந்து ஆட்சியாளர்களின் உடை அலங்காரங்கள்தான் என்ன?  என்பது இவர்களுக்குப் புரியாத புதிராகவே உள்ளது.  திருவிதாங்கூரில் “மேலாடை”, அல்லது “Upper cloth” என்பதை மலையாளிகள் “மேல்முண்டு” என்றே அழைக்கின்றனர்.  நாயர் பெண்கள் இன்றும் இந்த மேல் முண்டை சில சமயச் சடங்குகள் மற்றும் திருமணச் சடங்குகளில் கடைபிடித்து வருகின்றனர்.  இவர்கள் சாதாரணமாக மூன்று முண்டுகளை பயன்படுத்துகின்றனர்.  ‘உடுமுண்டு’ அதாவது உடுத்திக் கொள்ளுகின்ற முண்டு (வேஷ்டி – ஒற்றை அல்லது இரட்டை), மார்பு துண்டு, அதாவது மார்பகங்களை மறைக்கின்ற கச்சை போன்ற வேஷ்டி, அதற்கும் மேலாக தோளோடு தோளில் இட்டு மறைக்கின்ற “மேல்முண்டு” அதாவது அங்கவஸ்திரம் போன்ற வேஷ்டித்துண்டுகளாகும்.  நம்பூரிப் பெண்கள் பொதுவாக மார்புமுண்டு அணியாமல், மேல்முண்டால் மார்பகங்களை இலைமறைவு காய்மறைவாக போர்த்திக் கொள்வர்.  இதை சித்தரிக்கின்ற வகையில் வரலாற்றாசிhpயர் சங்கை எஸ்.சாமுவேல்மேற்றீற் அவர்களின் தர்மபூமி (Land of charity) 1870-யில் பக்கம் 30-ல் படம் ஒன்று தந்துள்ளார். அதை தமிழக வரலாற்று ஆசிரியர்களின் தகவலுக்காகவும், தெளிவுக்காகவும் மறுபதிப்பாக இங்கே தரப்படுகிறது.  பார்த்து தெளிவுக்காகவும்கொள்ளுங்கள்.

நம்பூதிரியும் அவர் மனைவியும்

இதுதான் “தோள்சீலை”யே (மேல்முண்டு) தவிர  தமிழ்நாட்டு அய்யரும், நாடாரும் எண்ணுகின்ற ‘தோள் சேலை அல்ல’.  “தோள்சீலைக்கலகம் – தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்’ என்ற புத்தக முன் அட்டையில் தரப்பட்டுள்ள வரைபடம் போன்று பெண்களின் சேலை (Saree) முந்தாணை அல்ல தோள்சீலை என்பதை உணர்ந்து திருத்திக் கொள்வது சிறப்பு.  இந்த அடிப்படை வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் அதை விமர்சிப்பது அறிவீனமல்லவா?

திருவிதாங்கூர் நாட்டு இராணிகள் கூட இந்த மேல்முண்டை (தோள் சீலை) அணிவது இல்லை.  இதை திருவிதாங்கூர் வரலாற்றை விரிவாக எழுதின நாகம் ஐயாவின் முதல் பாகத்தில் பக்கம் 520-ல் காணலாம்.  தவிரவும் இவருக்கு முன்பு (1878-ல்) திருவிதாங்கூர் வரலாற்றை அதன் தொன்மைக்காலம் தொட்டு எழுதிய திரு.பி.சங்குண்ணிமேனன் கூட ராணி கவுரிலெட்சுமிபாய் (பக்கம் – 362) மற்றும் ராணி பார்வதிபாய் (பக்கம் – 383) மற்றும் இளையராணி ரூக்மணிபாய் (பக்கம் – 389) போன்றோர்களின் ஆடை அலங்காரமும், கீழ்முண்டு, மார்பு முண்டு, மேல்முண்டு (Upper Cloth) என்றுதான் காணப்படுகின்றது.  இந்த முறைதான் உயர் சாதி இந்துக்கள் அன்று அணிந்து வந்த ஆடை அலங்காரம்.  இந்த முறையில் இழிவு சாதி இந்துக்களும், மதம் மாறின கிறிஸ்தவர்களும், ஆடை அணிக்கூடாது என்பது மரபு ஆகும்.

நு}லின் 191-ஆம் பக்கத்தில் திரு. சிவந்தி ஆதித்த நாடான் மேல் ஆடையாக கோட்டையும், கீழ் ஆடையாக வேட்டியும் மற்றும் தலைப்பாகையுடன் காட்சி தருகிறhர். இவர் ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இவர் 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதில் வேறு கருத்திருக்க முடியாது.  இது சுமார் கி.பி. 1910-க்குப் பிறகேயாகும் என்று கருத வாய்ப்புண்டு.  இவருக்கு முன்பே, திருவிதாங்கூரில் அதுவும் தலித் சமுதாயத்தில் சீர்த்திருத்த கிறிஸ்தவத்தை தழுவிய முதல் தலித் குடும்பத்தில் உபதேசியாக பணியாற்றிய திரு.சி.மாசில்லாமணி அவர்கள் கோட்டும் கொம்பன் மீசையுமாகக் காணப்படுகிறhர்.  பார்க்க படம் 2. (Church History Travancore – by C.M. ஆகூர் – 1901 – பக்கம் – 1113).  இவர் திரு. C.M. ஆகூரின் தந்தை ஆவார்.  இவர் கி.பி. 1833-ல் பிறந்து, நாகர்கோவில் செமினறியில் கல்வி கற்று 1852 தொட்டு 35 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு 1898-ல் மறைந்தார்கள். எனவே திரு.சிவந்திஆதித்தன் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கோட்டு அணிந்தவர் என்ற பெருமை சுநஎ.சி.மாசில்லாமணிக்கு உண்டு. ஏற்றுக் கொள்ளுகிறீர்களா? அவரின் உருவப்படம் இங்கே தரப்படுகிறது.

மாசில்லாமணி உபதேசியார் (1833 – 1898)

தவிரவும் 1864 நவம்பரில் நெய்யூர் மெடிக்கல் மிஷனில் ஒரு மருத்துவ கல்வி நிலையம் தொடங்கப்பட்டு அதில் ஏழு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் தலைப்பாகையுடன் கோட்டு சூட்டு அணிந்து கம்பீரமாக காட்சி தருகின்றனர்.  அந்தப் படத்தையும் இங்கே தரப்படுகிறது.

இவைகள் எதைக் குறிக்கிறது என்றால் ஆங்கிலேய மிஷனறிகள் தென் திருவிதாங்கூரிலும், தென் திருநெல்வேலியிலும் கிறிஸ்தவப் பணியுடன் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் தொடங்கிய பிறகே சாணார் சமுதாயம் உட்பட கிறிஸ்தவ சமுதாயத்தவர்கள் கோட்டும், சூட்டும் அணியும் நாகரீகத்துக்கு மாறினர் என்பது வரலாறு.  அந்த வகையில் காயாமொழி நாடான் திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள் அணிந்திருக்கின்ற கோட்டு, ஏதாவது ஆங்கில மிஷனறி அன்பளிப்பாக அளித்ததுதான் என்பதில் சந்தேகமில்லை.  ஏனெனில் இந்தியாவில் கோட்டு சூட்டு தைக்கின்ற தையலகங்கள் அன்று இருந்ததில்லை.  அதற்கான வசதியும் இங்கே இல்லை. எனவே கோட்டு அணிந்தவர் நாடார்களில் இருந்தனர் என்பதும் அவர்கள் ஆட்சியில் நாகரீகத்தை மத வேறுபாடின்றி ஏற்றுள்ளனர் என்பதும் இதனால் ஊர்ஜிதமாகிறது.  இந்த நாகரீக மறுமலர்ச்சியை சாமித்தோப்பு முத்துக்குட்டி சாமிகள் கூட வரவேற்று தன் மக்களுக்கு அறிவுரை அளித்திருக்கிறார்.

“… பொதுவாக நாடான்மாருக்கு அய்யாவை பிடிக்காது.  இந்த சாணாச்சாமி ஏற்றுக்காரர்களை ஊழியஞ் செய்யாதே, ஏட்டோலை சுமக்காதே, வரிகட்டாதே, மீன் தின்னாதே, பேய்களைக் கும்பிடாதே, வேதத்தில் சேராதே, ஆனா, வேதக்காரன் மாதிரியே நிமிர்ந்து நில்லு, என்று தூண்டி விடுகிறhன்…”.
(திரு. பொன்னீலன் – மறுபக்கம் – 2010 – பக்கம் – 244)

குறிப்பு்
சாணாச்சாமி :  சாமித்தோப்பு முத்துக்குட்டி சாமியார்.
மீன் தின்னாதே: மீன் தின்றால் அதுவழி புற்றுநோய் பரவுவதற்கு
வாய்ப்பு உண்டு என்பதை உணர்ந்த அவர் அதை
உண்ணவே வேண்டாம் என்றும் கூறியிருக்கலாம்.
தவிரவும் அய்யா ‘சொற்யாசிஸ்’ என்ற ஒருவித தோல்
நோயால் அவதிப்பட்டார்.  இந்த நோய் வந்தவர்கள்
மீன் சாப்பிடக் கூடாது.  அது சாப்பிட்டால் இந்த
நோயின் தாக்கம் அதிகமாகும்.  அதனால் இதை அவர்
அனுபவத்தின் வாயிலாக கூறியிருக்கலாம்.

வேதத்தில் சேராதே
வேதக்காரன் மாதிரியே
நிமிர்ந்து நில்லு : சீர்திருத்த கிறிஸ்தவத்தில் சேராதே என்று பொருள்.
ஆனால் சீர்திருத்த கிறிஸ்தவன் மாதிரியே,
சவர்ணர்களால் உருவாக்கி மக்களை வருத்தி வந்த
சமுதாய சீர்கேடுகளை எதிர்க்கின்ற கிறிஸ்தவனைப்
போன்று நீயும் தைரியமாக அவர்களை எதிர்த்து நில்
என்பதாகும்.  இவர் இவ்வாறு சொல்வதற்கு முன்பே
பல்வேறு சீர்கேடுகளை கிறிஸ்தவர்கள் எதிர்த்து
களைந்து விட்டனர். அவைகளில் ஒன்றுதான்
பெண்களின் மார்பகங்களை குப்பாயத்தால் மூடி
மறைப்பது.

இந்த அறிவுரையை ஐயா 1840-க்கு முன்பே கூறியதால், கிறிஸ்தவத்தின் நற்பண்புகளுடன் அவருக்கு அபிமானம் இருந்தது என்பது வெளியாகிறது.

அய்யா முத்துக்குட்டியாரின் மதக்கோட்பாடு முற்றிலும் சீர்திருத்தக் கோட்பாடு என்று சொல்வதற்கு இல்லை என்றாலும், நிச்சயமாக அது சனாதன ஆகம கோட்பாடு முறை இல்லை என்று முடிவாகக் கூறலாம்.  அவரது பல போதனைகள் சீர்திருத்தக் கிறிஸ்தவக் கொள்கை போன்று உள்ளது.  இத்துடன் இந்து சமய நெறிமுறைகளையும் கலந்து அவரது போதனைகளை வகுத்துள்ளார் என்பது தெள்ள தெளிவு

முதல்நிலைச் சான்றாக அவர் சிலை வழிபாட்டைத் தவிர்த்ததிலிருந்து சீர்திருத்த கிறிஸ்தவத்தை அவர் முன் மாதிரியாக எடுத்துள்ளார் என்று காணலாம். அடுத்தது பூசை முறைகளில் அவர் செய்த இந்து முறைத் தவிர்ப்பு.  சிகப்புப் பூக்கள், சிகப்பு ஆடைகள் தவிர்ப்பு, திருநீற்றால் சைவக் குறியிடுதல், சாமி வலம் போன்றவைகளைத் தவிர்த்ததும், கிறிஸ்தவ முறைதான்,

“பொன்னுமக்கா எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.  தாலி அறுக்காதே, கோலம் குலைக்காதே எண்ணு.  அவன் செத்ததுக்கு நீயா பொறுப்பு… எல்லோரும் கேட்டுக்கிடுங்க. புருஷனைப் பறிகொடுத்தது சங்கடம்தான். அதுக்காக பொம்பளையள அலங்கோலப்படுத்தியது கடவுளுக்கு ஏற்காத கொடுமை.  பூட்டிய தாலியை நீக்கக்கூடாது.  கேக்குவு.
(பொன்னீலன் – மறுபக்கம் – இரண்டாம் பதிப்பு – 2010 – பக்கம் – 233).

இதுவும் கிறிஸ்தவர்களின் கோட்பாடு அல்லாமல் சனாதன கோட்பாடா?

அய்யாவழித் திருமணத்தில் கூட ஆகம முறைகளை களைந்துவிட்டு சீர்திருத்த முறைகளை புகுத்தியுள்ளார் அய்யா.  மாப்பிளையும் பொண்ணும் கீழ்திசை நோக்கி உட்காருவதை தவிர்த்துவிட்டு தென்திசை நோக்கி உட்காருவது சீர்திருத்த முறைதானே?  மணமேடையில் மந்திரம் ஓதுவதற்குப் பதிலாக :

“விவிலியம் நூலை வைத்து வழிபடும் முறையைப் பின்பற்றி, அய்யா வழியினர் ‘அகிலத்திரட்டினை’ வைத்து வழிபடத் துவங்கினர் என்றே எனக்குத் தோன்றுகிறது.  அய்யாவழித் திருமண முறையில் பாடப்படும் பாடல்முறைகள் எல்லாமே கிறிஸ்தவ முறையின் தாக்கம் என்றே கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை”.
(தமிழ்த்துறைப் பேராசிரியர் இரா. ஆண்டி – என் அனுபவங்கள் – 2002, பக்கம் – 50)

இதற்கு மேலும் சான்று தேவையா ஐயர் அவர்களே*  மேலும் கேளும்,

“என்னை யீடேற்றி இரட்சிக்கும் பெம்மானே
மன்னே பிதாவே மாதாவே யென்தாயே”       (அகிலம் 10 – 409 – 410)

“இன்றுமுதலெ ல்லோரும் இகபரா தஞ்சமென்று
ஒன்று போ  லெல்லோரும் ஒரு புத்தியாயிருங்கோ
காணிக்கையிடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ…”
(அகிலம் 12,519, 521)
தவிரவும் பிராமண சமயத்தில் காணப்படுகின்ற திருநீறு பூசுதல், குங்குமப் பொட்டு வைத்தல் போன்ற சம்பிரதாயங்களையும் இவர் களைந்தார்.  இவைகள் அனைத்தும் சீர்திருத்த கிறிஸ்தவத்தின் எச்சங்கள்தனே? ஆகையால் அய்யாவழியை சீர்திருத்த இந்து சமயம் என்று கருதுவதிலும் தவறில்லை.  அது இந்து சமயத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதையும் காணலாம்.  ஆனால் இப்பொழுது அய்யாவழியினர் சிறுகச் சிறுக பிராமண கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு தான் வருகின்றனர்.  சிறிது காலங்களுக்குப் பிறகு ஆரிய தாக்கத்தால் அய்யாவின் சமாதியில் கண்ணாடியையும், குத்து விளக்கையும் அப்புறப்படுத்திவிட்டு சனாதன கோட்பாட்டு கடவுள் ஒருவர் நிலை கொள்வார் என்பதற்கான அறிஞறிகள் இன்று காணப்படுகின்றன. இல்லையென்றhல் நாடார் பதிக்கு அத்வானியும், ஜெயலலிதாவும், இராம.கோபாலனும் மற்றும் இந்துத்துவசாமிகளும் வந்து போவதின் சூட்சுமம் என்ன? என்பதை இப்போது புரிந்து கொள்ளும் தன்மையில் அய்யா வழியினர் இல்லை என்பது உண்மை.

அது போன்ற காயாமொழி நாடார்களுக்கு கிறிஸ்தவம்பால் ஈர்ப்பு இருந்தமையால்தான் மேற்கத்திய உடையான ‘கோட்டை’ திரு. ஆதித்திய நாடான் அணிவதற்கு முதற்காரணம்.  அதை நிச்சியமாக கிறிஸ்தவ மினறிமார்கள்தான் இவருக்கு அளித்திருப்பர்.  ஒருவேளை அன்பளிக்காக.

நாடார்கள் நாடாண்டவர்கள் என்று கூறுகின்ற இத்தகைய ஆய்வானர்கள், எந்த நாட்டை இவர்கள் ஆண்டார்கள், அந்த நாட்டின் எல்கைகள் தான் என்ன?  என்று எவரும் குறிப்பிடுவதில்லை.  குறிப்பிட அவர்களால் இயலவில்லை.  பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் நாடார்கள் என்று வைத்துக் கொண்டால்கூட, அவர்களது கொடி அடையாளம் நாடார்களுக்குப் பொருத்தமானதாக இல்லை.  “மீனை”க் கொடி அடையாளமாகக் கொண்டமையால் பாண்டியர்கள் ‘மீனவர்கள்’ என்று இப்பொழுதுக் கூறி வருகின்றனர்.  அவ்வாறிருக்க நாங்கள்தான் பாண்டிய மன்னர் பரம்பரை என்று கூறித் திரிவதில் உண்மை எதுவுமில்லை.

பாண்டிய நாட்டில் “சாணார்கள்” தீண்டத்தகாதவர்களாகவே நடத்தப்பட்டு வந்தனர் என்று வரலாறு உரைக்கிறது.  பேராசிரியர். கே.இராசைய்யன் எழுதுகிறhர்:-

“As the rulers extented their support to the as cendancy of caste distinctions, the society came to be divided into caste Hindus and the untouchables… worse still the communities the Pallis, the Parayar, the Chakkilyar, the Shanar and the Maraver, who supported the society through their labour, were condemned as untouchables and unapprochables.  The irony was that while they were a detested lot, the food and services that they generated through their manual labour were not considered as polluted.”

(History of Tamil Nadu, Past to Present – 1995 – Page 106)

பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் சாணார்கள் அல்லது நாடார்கள் என்றால் மன்னர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1263 – 1310 – AD) காலத்தில் நிலவிய சாதி முறையில் ஏன் இவர்கள் தீண்டத் தகாதவர்களாகவும், அருகில் வர உரிமை இல்லாதவர்ககளாகவும் (untouchables and unapproachable)   உயர் இந்துக்கள் கருதினர்?  அன்று நாடார்கள் இல்லை சாணார்கள் மட்டும் தான் இருந்தனரா?  சாதி வரிசையில் இவர்கள் பள்ளர், பறையர் மற்றும் சக்கிலியர்களுக்குப் பிறகுதானே வைக்கப்பட்டிருக்கின்றனர்.  அவ்வாறிருக்க நாடார்கள் (சாணார்கள்) எந்த நாட்டை ஆண்டனர்?

தவிரவும், பாண்டிய நாட்டு மக்கள் ஆடை அணிவதிலும் அரை நிர்வாணமாக இருந்தனர் என்று வரலாறு சான்று பகருகிறது.

“The garments of the inhabitants were not only simple but also scanty.  This could be expected in a hot country as Pandyamandalam was.  In the opinion of Marcopolo there were no tailors too.  He described the people, whether they were princes or soldiers as going about naked.  Obviously this was because they went about half naked without knowing how to make a shirt or blouse…”

(History of Tamil Nadu – Past to present – Prof: K. Rajayyan, M.A., M.Lit., A.M., Ph.D., – 1995 – Page 107 – under the heading ‘the Pandyas of Madurai’).

அய்யரே! இப்பொழுது சொல்லும்! காயாமொழி திரு. சிவந்தி ஆதித்த நாடானுக்கு “கோட்டு” யார் கொடுத்தார் என்று?  இந்த ஆதித்த நாடான் குடும்பமும் சேரநாட்டுக்காரன் ஆகும்.  அவர்களுக்கு சிறப்பை உருவாக்கியவனும் சேர மன்னன் என்று கருதுவதற்கு இடமுண்டு.
“The Thenthirupperai Thiruppanai Malai’ composed in the seventeenth century, tells about the endowments made by a Cheraking Veerakerala Athithan to the Mahara Nedung Kulaikaathar Temple at Thenthiruperai and informs the temple honours given to the descendants of the Maharaja, who were living in Thenthiruperai.  The descendants of the Athithan Maharaja enjoyed the honour of flagging of the temple car festival by symbolically touching the ropes of the temple car”.

(Thoothukudi District Gazatter Vol. –I, 2007 – by Govt. of Tamil Nadu – Page 236)

தவிரவும்,

“ஐப்பசி மாதத்தில் சுபப்பிரமணியனுக்கு (திருச்செந்தூர் முருக ஆலயம்) திருக்கல்யாண உற்சவம் நடக்கும்போது முதல் நாளில் மாப்பிள்ளை வீட்டுச் செலவாகத் திருமாங்கல்யம் செய்து கொடுத்தல், கல்யாண விருந்தும், ஊரடங்க பிராமண போஜனங்கள் ஆதித்த நாடார்களால் நடத்தப்படும்… ஆவணி மாதத் திருவிழா நாட்களில் திருவாங்கூர் மகாராஜாவால் நடத்தப்படும் உற்சவத்தின் இரண்டாம் சேவை ஆதித்த நாடார்களுக்குரியது”
(மரிய அந்தோணி நாடார் – சான்றேhர் வரலாறு – பக்கம் 184).

இந்த ஆதித்தன் வழி வந்தவர்களாக காயாமொழி ஆதித்தன் குடும்பம் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆயினும் இவர்களுக்கு உறுமல்கட்டும், உடைவாளும் அணிவிக்கும் ஜமீன்தார் பட்டமளிப்பு சடங்கு செய்வதற்கு உரிமையில்லை.  அந்த உரிமை நாடாத்தி திருவழதி நாடார் குடும்பத்துக்கு மட்டும் உரியதாகும்.  இந்த குடும்பம் நாடாத்தி ஜமீன் குடும்பம் என்பதால் அவர்கள் இந்த அந்தஸ்தை பெற்றுள்ளனர்.  நாடாத்திகள் என்றால், “நட்ட பாண்டியர்களோடு சினேகம் கொண்ட அத்தியர்” என்பதைக் குறிக்கின்ற நட்டாத்தியர் பாண்டிய சோழ கலப்பு இனத்தவர் ஆவர்.  இவர்களைத் தவிர மற்ற நாடார்கள் எல்லோருக்கும் உறுமல்கட்டும், உடைவாளும் (உறைக்கத்தி) அணியும் உரிமையில்லை.  அத்தகைய உரிமையைக் கொள்ளுகிறவர்கள் ‘கள்ளன்’ ஆவர்.  தங்களை சத்திரியர்கள் என்று கூறிக் கொண்டு ‘பூனூல்’ அணிந்தவர்களும் இந்த சமுதாயத்தில் உண்டு.  இவர்கள் ஆரிய – சந்திரியர்களாக இருக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட விவரச்சுவடி கூறுகின்றது. தவிரவும் இவர்களை ‘நிலமைக்காரர்கள்’ என்றும் கூறுகின்றனர்.  ‘நிலமைக்காரர்கள்’ என்றால் பெரும் நிலம் உடையவர்கள் (Feudal barons) என்று கருதலாம்.  இது அன்று எல்லா சமூகத்திலும் காணப்பட்டது. திருவிதாங்கூரில் இவர்களை “எட்டு வீட்டுப் பிள்ளைகள்” மற்றும் “மாடம்பிகள்” என்றும் கூறினர்.  மக்களிடத்தில் இருந்து வரி பிரிக்கவும், குறிப்பிட்ட இடங்களுக்கு பிரபுகளாகவும் இருந்து அரசனுக்கு தரகன்களாக நின்று வரி பிரித்து வந்தனர்.  இவர்களை மன்னர் மார்த்தாண்டவர்மா முடித்து வைத்தார். இவர்களைப் போன்றே பாண்டிய நாட்டில் காணப்பட்ட நிலமைக்காரர்கள்.  நாஞ்சில் நாட்டில் பறையர்களின் நிலமைக்காரர்கள் “சாம்பான்” என்ற பட்டப் பெயரில் காணப்பட்டனர்.  இன்று அவர்கள் பறையர் சமுதாயத்தில் உயர் குலத்தான் என்று கருதப்படுகின்றனர்.
“The Nilamaikarars lived like barons and adopted several customs and practices of Kshatriyas.  They used to wear sacred thread, used Sandal paste, sacred ash and Kumkum and used to wear dotis with Panchakachcham… They do not merely mean that they were the original kings of the soil, but they are descended from the Ariyan – Kshatriyars”.

(Thoothukudi District Gazetter – Govt. of Tamil Nadu – 2007 – Page 240)

ஆரிய வருணாசிரம் அடிப்படையில் ஆரிய மக்களை பிராமணர் (Priest class) சத்திரியர் (நாட்டுப் பாதுகாவலர் – Kings) வைசியர் மற்றும் சு{த்திரர் என்று நான்கு வர்ணங்களாக வகுக்கப்பட்டுள்ளனர்.  அதில் சத்திரியர்கள் இரண்டாம் நிலையில் இருந்தனர்.  ஆனால் தமிழர்களில் அரசன் (King), அர்ச்சகன் (Priest) வெள்ளாளன் (Agriculturist) கைகோலர் (Artisans) என்று வகுக்கப்பட்டிருந்தனர்.  பூனூல் அணிந்து கொண்டால், பிராமணன் அல்லது மன்னர் ஆகிவிட முடியாது.

இன்று பூனூல் அணிகிற சமுதாயங்கள் பல உள்ளன.  விசுவகர்மாக்கள் அனைவரும் (கல்லாசாரி, தச்சசாரி, கொல்லன், பொற்கொல்லன் போன்றோர்) பூனூல் அணிகின்றனர்.  இவர்களைத் தவிர சட்டிபானை செய்கின்ற குயவன், பட்டாடை நெய்கின்ற சவுராஷ்டிரன் போன்றோரும் பூனூல் அணிகின்றனர்.  இவர்கள் அனைவரும் சத்திரியர்களா, அல்லது பிராமணர்களா?  என்ன ஐயரே பூனூல் அணிந்த சாணாரை உமது இனத்தான் என்று ஏற்றுக் கொள்வீரா?

“ஐn வாந ளுயnhபயஅ யனே ஆநனநைஎயட டவைநசயவரசநஇ டிச in வாந iளேஉசipவiடிளே நபேசயஎநன pசiடிச வடி 16வா ஊநவேரசலஇ வாநசந ளை nடி அநவேiடிn டிக வாந றடிசன ளுhயயேச் Aடளடி வாந றடிசன Nயனயn ளை nடிவ சநகநசசநன யள ய உயளவந யேஅநஇ Nயனயசள உடயiஅ வாயவ வாநலஇ நெiபே டிநே வாந நயசடநைளவ யனே டயசபநளவ உடிஅஅரnவைல வடி நஒiடிவ in கூயஅடை Nயனரஇ வாநல யசந உயnடிசளஇ சநகநசசநன pசடிகரளநடல in டவைநசயவரசநள யனே iளேஉசipவiடிளே”…
“In the Sanhgam and Medieval literature, or in the inscriptions engraved prior to 16th Century, there is no mention of the word Shanar; Also the word Nadan is not referred as a caste name, Nadars claim that they, being one the earliest and largest community to exiot in Tamil Nadu, they are canors, referred profusely in literatures and inscriptions”…

“In 1910, P.V. Pandiyan, son of Sattampillai of Nazarath requested to register the Shanars as Kshatriya Shanrdrors.  The Madras Govt. in 1921 census, recorded, them as Nadars and their occupation as Lords of the soil”.

(Ibid – Pages 239 and 241)

எனவே நாடார் அல்லது நாடான் என்ற சொல்லாக்கம் 1921-ல் ஆங்கில அரசால் சாணார்களுக்கு அளித்த பெயராகும். அதையும் ஒரு கிறிஸ்தவனின் வேண்டுகோளைத் தொடர்ந்து கிடைத்த ஈவு ஆகும். ஆனால் இந்த தமிழ் குலத்துக்கு ‘சாணான்’ என்ற பெயர் எப்படி வந்தது என்று யாரும் ஆய்வு நடத்தவில்லை.  அது குறித்து ஐயத்திற்கிடமின்றி எவரும் சொல்லவுமில்லை.

தமிழகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்களின் ஆட்சி கி.பி மூன்றாம் நூற்றhண்டில் களப்பிரர்களால் முடிவுக்கு வந்தன.  தென்னகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்கள் பிராமணீயத்தின்பால் அதிக கவர்ச்சி கொண்டு அதை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக செயலாற்றிக் கொண்டிருந்தனர். இந்த பிராமண ஆதிக்கத்தை கி.பி. 250 வாக்கில் முடிவுக்கு கொண்டு வந்தனர் கனப்பிரர் என்ற குல மன்னர்கள். இவர்கள் ஆரியத்தை எதிர்த்து திராவிடக் கொள்கைகளை அமல்படுத்தினர்.  இவர்கள் ஆட்சி காலத்தில் பவுத்தமும், சமணமும் தென்னாட்டில் ஆதிக்கம் கொண்டது. பவுத்தர்களும், சமணர்களும் தென்னாட்டில் பல பள்ளிகளையும், கல்விச்சாலைகளையும் நிறுவி, மக்களுக்கு புதிய கலாச்சாரத்தை உருவாக்கித் தந்தனர்.  இவர்கள் ஆட்சி காலத்தில் ஏராளம் சமண கோயில்களும், பவுத்தவிகரர்களும் நிறுவி, கல்விச் சாலைகள் அமைத்தனர்.  தமிழ் மொழியில் பதினென்கீழ்கணக்கு நு}ற்களும், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலைப் போன்ற பெருங்காப்பியங்களும் அவர்கள் காலத்தில் உருவாயின.  திருக்குறளும் இந்த காலத்தில்தான் எழுதப்பட்டது.  இவர்களின் ஆட்சி கி.பி 575-ல் முடிவுக்கு வந்தது.
(மயிலை சீனி வெங்கடசாமி – களப்பிரர் ஆட்சியில் தமிழகம் – 2001 – பக்கம் – 6)

சேரநாட்டில் சமணக்கோயில்கள் பெருமளவில் காணப்பட்டன.  களப்பிரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு அவைகள் ஆகமக் கோயில்களாக மாற்றினர்  ஆரியப் பிராமணர்கள்.  அவ்வாறு மாற்றப்பட்டவைகளில் முக்கியமானவைகள் நாகர்கோயில் நாகரம்மன் கோயில்; வெள்ளிமலை முருகன்கோயில், திருநந்திக்கரை சிவன்கோயில், சிதறhல்மலைக்கோயில், மார்த்தாண்டம் வெட்டுமணி சாஸ்தா கோயில் போன்றவைகளைச் சொல்லலாம்.  நாகபட்டிணத்தில் இருந்த பவுத்த விகாரை திருமங்கையாள்வார் தலைமையில் இடித்து நொறுக்கி, அதில் இருந்த தங்கத்தால் ஆன முழு உருவப் புத்தர் சிலையை உடைத்து, விற்று காசாக்கி அப்பணத்தைக் கொண்டு _ரங்கத்தில் அரங்கநாதருக்கு கோயில் அமைத்த வரலாறு ஐயர்வாளுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.  சுமார் 3000 சமணர்களை கமுகு மரத்திலேற்றி கொன்று குவித்தனர் இந்த பார்ப்பனர்கள்.  எனவே களப்பிரர் காலத்திலும், அதற்குப் பிறகும் சமணத்தை கடைபிடித்தவர்களை “சமணர்கள்” என்றனர்.  இவர்கள் ஆகம சமயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.  ஆனால் களப்பிரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் ஆரிய சமயம் அரங்கத்திற்கு வந்தது.
“Their exit from political scene represented the return of Brahmanical system, marked by vedic rites, agraharas, caste system, untouchability, neglect of Tamil and persecution of Jains and Buddhist”.

(History of Tamil Nadu, Past to Present – Prof: K. Rajayyan, 1995 – Page – 51)

இதற்குப் பிறகு சமணர்கள் என்பவர்களைக் கொச்சைப்படுத்தும் முகமாக பார்பனர்கள் “சாணார்கள்” என்று விளிக்கத் தொடங்கினர்.  “சமணர் காசு” சாணாரக்காசு ஆனது, சமணக்காவு (கணவாய்), சாணார் கணவாய் ஆயிற்று.  அதன் எச்சமாக இன்றும் இந்து நாடார்களிடையே சில சமண கோட்பாடுகள் சிலவற்றைக் கடைபிடிக்கின்றனர்.  பெரிய தெய்வங்களை வணங்குவதைத் தவிர்த்து சிறு தேவதைகளை வணங்குவதும் இவர்களின் கோட்பாடானது.  மங்கலநாண் கட்டுவது, இருப்புக் குழியில் இறந்தவர்களை சமாதி வைப்பது போன்றவைகள் யாவும் இதன் எச்சங்கள் ஆகும்.  ஐயரே சரிதானே?

தமிழக அரசால் 2002-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மாவட்ட விவரச்சுவடி (ழுயணநவவநநசள) யில் மேலும் பல விவரங்கள், நாடார்களைக் குறித்து தரப்பட்டுள்ளன.
“But, as for as Tamil Nadu is concerned there is not a separate community of kshatryars.  Tolkapier equates the word Anthanor to Brahmins, Arasar to Kshtriyars, and vellalas to Sudras though he retains the word Vanigar (Vaisyas) as it is (Govt. of Tamil Nadu, Thirunelveli District Gazetteers – Vol – I.  Page 322)

இதனடிப்படையில் ஆராய்ந்தால் தமிழகத்தில் “சத்திரியர்” என்று ஒரு சாதி இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.  தவிரவும் “நாடார்கள்” என்ற சொல் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.
“Formerly the Nadars were called as Shanars is considered a derogatory term.  There is no mention about this people in the Sangam literature.  But the Nadars have given an explanation that the word San or (rhd]nwhh]) has changed into Shanar.  They were considered as toddy tappers from the Palymyra tree …. (Ibid Page – 333)

இதன் அடிப்படையில் பனை ஏறுகிறவர்கள் அனைவரையும் “சாணார்” என்று வகைப்படுத்த முடியுமா?  முடியவே முடியாது*  பனை ஏறுதல் ஒரு தொழில்.  யார் வேண்டுமானாலும் இத்தொழிலைச் செய்யலாம்.  செய்வதற்கு உரிமை உண்டு.

“இந்தத் தொழில் ஒரு தனிப்பட்ட சமுதாயத்துக்கு மட்டும் உரிமைப்பட்டது என்று செய்யப்படுவதல்ல.  தமிழகத்தில், கள்ளர், பணிக்கர், இடையர், கவரைகள், கவுண்டர், கடையர், மகமதியர் போன்றோரும், முதலி, பிள்ளை, நாயிக்கர் என்ற அந்தசுள்ளவர்களும், மலையாள நாட்டில் ஈழவர், தண்டான்கள் போன்றவர்களும் இத்தொழிலில் ஈடுபட்டு வாழ்கின்றனர்.  மதுரை சார்பு நீதிமன்றத்தில் O.S.33,1898 நவம்பர் தாவாயில் மேலே கூறப்பட்ட பல சாதியினர் நீதிமன்றத்தில் ஆஜராகி, தாங்களும் கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.  செங்கோட்டைத் தாலுகாவில் சில பிரதேசங்களில் குறவரும், ஊத்துமலை மற்றும் _வைகுண்டம் தாலுகாவில் சாயர்பூரம் அருகில் பள்ளரும், திருச்செந்தூர் தாலுகாவில் இடையார்குளம் பகுதியில் நவிதரும் பனைத்தொழில் செய்து கள் இறக்குவதாக “நாடார் குல வரலாறு” வாயிலாக உறுதிப்படுத்துகிறது.”
(நாடார் சரித்திரம் (மலையாளம்) – காஞ்சிரம் குளம் கெ. கொச்சு கிருஷ்ணன் நாடார் – 1956 – பக்கம் – 83)

எனவே ஐயர்வாளும், நாடாரும் எண்ணுவது போன்று, பனைத்தொழில் செய்கின்ற ஏனையோரை “சாணான்” என்று வகைப்படுத்த இயலாது.  வேறு வழியின்றி, ஏழ்மையின் காரணமாக பல நாடார்கள் பனைத்தொழிலை ஏற்றிருக்கலாம்.  பனைத் தொழிலை ஏற்றதால் அவர்கள் “சாணாரும்”, கள்ளத் தராசு, கலப்படம், ஆக்கறைத் தொழில்களைச் செய்து பணம் சேர்த்து சமுதாயத்தில் உயர்ந்த ‘சாணான்’ தன்னை ‘நாடான்’ என்றும், சத்திரிய – நாடான் என்றும் விலாசமிட்டுக் கொண்டால் ‘சாணான்’ இழிவு அகன்று விடும் என்று எண்ண வேண்டாம்.   சாணான் என்றும் சாணான்தான்.  இந்தப் பெயர் இழிவானது என்று கருதி, 1921-ல் நாசரேத் மூக்குப்பேரி சட்டாமபிள்ளையின் மகன் திரு.P.ஏ.பாண்டியனின் வேண்டுகோளையும் நாடார் மகாஜன சங்கத்தின் வேண்டுகோள்களையும், ஏற்று சென்னை மாகாண அரசு (ஆங்கில அரசு) “நாடார்” என்ற பெயரை சாணாருக்கு அளித்தனர் என்பதே வரலாறு. இந்த அரசு ஆணைக்குப் பிறகுதான் “சாணான்” “நாடான்” ஆனான்.  நாம் இதை உணர்ந்து கொண்டாலும் அடுத்தவன் இதை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றhன்.

“குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் வாழும் சாணார் என்று ஆரம்பத்திலும் பின்பு நாடார் என்றும் அழைக்கப்பட்ட மக்களையும் வெள்ளாளர்கள் மோசமாகவே நடத்தினார்கள்”.
(நாஞ்சில் நாடன் (க. சுப்பிரமணியன்) – நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை – 2003 – பக்கம் – 85)

இந்த ஆசிரியர் “நாஞ்சில் நாடன்” என்ற புனைப் பெயருடன் எழுதுகிறார்.  அதனால் இவரை ‘நாடார்’ இனத்தான் என்று ஐயரும், நாடாரும் எண்ணி விட வேண்டாம்.  இவர் நாஞ்சில் நாட்டு மக்கள் வழி வெள்ளாம்பிள்ளை ஆவார்.  ‘நாடார்’ என்று மட்டும் எழுதிவிட்டால் அவர் நிம்மதி அடையமாட்டார்.  உங்களை குத்திக்காட்டி எழுதினால்தான் அவர்களின் எழுத்தில் நிறைவு பெற்று விட்டதாக நினைப்பு.   இதை புரிந்து கொள்வதற்கு இயலாத நாடார்களையே (சாணார்) கால்டு வெல்லார் “மந்த புத்திக்காரன்” என்ற உண்மையைச் சொன்னார். அதற்கு அவர் மீது உங்களுக்கு கோபம் ஏன்?  இந்த நூலை எழுதும்போது, திரு.கணேசனை முதல் ஆசிரியராகவும், திரு.இராமச்சந்திரனை இரண்டாம் ஆசிரியராகவும் போட்டிருக்கலாம்.  ஏன் போடவில்லை.  முன்னவர் ஐயர், இரண்டாமவர் “நாடார்”.  மேல்நிலை, கீழ்நிலை என்று பிரித்து தான் தாழ்ந்தவன் என்று எடுத்து இயம்புகின்ற நிலையைத்தான் “மந்த புத்தி” என்று கால்டுவெல் சொன்னாரேத் தவிர நாடார்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டு அல்ல என புரியாதது தங்களின் தாழ்வு மனப்பான்மையைத்தானே சுட்டுகிறது.  இந்த தாழ்வு உணர்ச்சியே ‘மந்த புத்திக்கு’ அடையாளம் ஆகும்.

கன்னியாகுமரி சாமித்தோப்பு அய்யா முத்துக்குட்டி சாமியாரை ‘நாடார்’சாமி என்றுதானே அனைவரும் விலாசமிடுகின்றனர்.  பூஜிதகுரு பாலபிரஜhபதி அடிகளார் அவரை “ஐயா – வைகுண்டர்” என்று விலாசமிடுகிறhர்.  ஆனால் இவர் யார்?  உங்கள் பகுத்தாய்வின் அடிப்படையில் இவர் ‘சாணான்’ ஆவார்.  ஏனெனில் இவர் பனையேற்றை தன் தொழிலாகக் கொண்டிருந்தார். இவர் தந்தையார் பொன்னுமாடனும் பனைத்தொழில் செய்தவர் ஆவார்.  இவரது மனைவியார் திருமதி. வெயிலான் (வயலாள் என்ற கிறிஸ்தவப் பெயரை வெயிலாள் ஆக்கினர் என்று நான் கூறினேன்) யாரும் மறுக்கவில்லை.  இவர்கள் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடிக்கு அருகாமையில் உள்ள ஆணைக்குடியில் இருந்து பஞ்சம் பிழைப்புக்காக தென் திருவிதாங்கூர் வந்து பூபாண்டையார் பனந்தோப்பில் குடியமர்ந்து பனைத்தொழில் செய்தார்.  அந்த தம்பதியினருக்கு கி.பி. 1809-ம் ஆண்டு முத்துக்குட்டி பிறந்து, வளர்ந்து தந்தையைப் போன்று இவரும் பனைத்தொழில் செய்தார்.   பிற்காலத்தில் இவர் தீட்சை பெற்று மகான் முத்துக்குட்டி ஆனார்.  அதனால் அவரை ‘சான்றோன்’ என்று பக்தர்கள் அழைத்தனர்.  எனவே சாணான் தான் ‘சான்றோன்’ என்றாகின்றானர்.  ஆனால் ‘சான்றோன்’ என்பதன் பொருள் வேறு.  ஐயர் நினைப்பது போன்று அது ஒரு சாதிப் பெயர் அல்ல*  காண்க திருக்குறள்

“ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் தன் மகனைச்
சான்றேhன் எனக் கேட்ட தாய்”              (குறள் – 69)

‘தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய் அவனைப் பெற்றெடுத்த பொழுதை விட பெரிது மகிழ்வாள்’ என்பது இதன் பொருள் ஆகும்.  அதுவும் அறிவுடையோர் சொல்வதுதான் தாய்க்கு மகிழ்ச்சி தரும்.  ஐயர்வாள் போன்றேhர் சொன்னால் அது மகிழ்ச்சி தருமா?  நாடாரின் தாய் மகிழமாட்டாள்.  திருவள்ளுவர் இங்கே தவறு செய்துவிட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது. நாடான், நாடாண்டவன், நாட்டார் என்று பொருள்படும்படியாக அவர் கூறவில்லை என்று திரு.கணேசன் சாடவில்லையே. அதை இவ்வாறு திருத்தி எழுதலாமே*

“ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் தன் மகனை
நாடான் என கேட்ட தாய்”
என்று மாற்றியமைக்கலாம்.  சரிதானே நாடாரே*

இப்பேர்பட்டவர்களையே கால்டு வெல்லார் ‘மந்த புத்திக்காரன்’ என்றா ரேத் தவிர அறிவுடையேரைப் பற்றி அல்ல.  அறிவுடைய ஐயரை கால்டு வெல்லார் மந்த புத்திக்காரன் என்று சொல்லவில்லையே*  ஏன் அவரும் சேர்ந்து கால்டுவெல்லைச் சாடுகின்றனர்?

திருவிதாங்கூரில் நாயர் சமுதாயத்தை குறித்து ஆய்வாளர் திரு.றா   பின் ஜெப்றி இவ்வாறு கூறுகிறhர்.
“No Nair knows his father” (Robin Jeffy – The decline of Nair Dominence 1979 – Page 108)
உண்மையும் அதுவே.  திருவிதாங்கூரில் மருமக்கள்த் தாய முறையை ஒழிப்பதற்கு முன்பு வரை உடனே நாயர்கள், குறுப்புகள், மேனோன்கள், பிள்ளைகள், தம்பிகள், தங்கச்சிகள் போன்ற நாயர் சமுதாயப் பிரிவுகள் கொதித்தெழுந்து றாபின் ஜெப்றியை தாக்குவதற்கோ, தரக்குறைவாக பேசுவதற்கோ, எழுதுவதற்கோ முன் வரவில்லை.  ஆனால் சாணார்கள் “மந்தபுத்திக்காரர்கள்” என்ற உண்மை பிறவிக்குணத்தை கண்டு, உணர்ந்து எழுதிய கால்டுவெல்லாரை தாக்குவதற்கும், தரக்குறைவாக பேசவும், எழுதவும் துணிந்த சாணார்களை ‘மந்தபுத்திக்காரன்’ என்று அல்லாமல் அறிவாளி என்றா     கூற முடியும்.  நாடார்களின் தோற்றத்தைக் குறித்து எழுதுகிறவர்கள், இவர்கள் பத்திரகாளியின் புதல்வர் என்றுதானே எழுதுகிறhர்கள்.  அதைச் சொல்லி பெருமைப்பட்டும் கொள்ளுகின்றனர்.  ஆனால் சாதித்தோப்பு அய்யா முத்துக்குட்டிச் சாமியார் என்ன கூறுகிறhர்.  பத்திரகாளி குழந்தைகள் பெறுவதற்கு தகுதியற்றவள், அதாவது அலி என்று தானே கூறுகிறhர்.  இதைக் கவனத்தில் கொள்ளாமல், காளிபுத்திரர் என்றுதானே சொல்லுகிறhர்கள்.

“… கண்ணான காளி காரிகையே நீ கேளு
தரித்துப் பிறக்கத் தகாதே மாகாளி
மரித்துப் பிறக்காத மாகாளி யேயுனக்கு…”
(அகிலத் திரட்டு அம்மாணை – இரா. அரிகோபாலன் 2000 (இரண்டாம் பதிப்பு) பக்கம் 68

இதிலிருந்து காளி மக்கள் எனப்படுகின்ற ஏழு பேரும் தாய்ப்பால் அருந்தாதவர்கள் என்பதால் அவர்கள் மந்தபுத்திக்காரர்கள்தானே*  தாய்ப்பால் குடித்து வளராத பிள்ளைகள் பொதுவாக மந்த புத்திக்காரர்களாக இருப்பார்கள் என்பது மனிதவியலார் கூறுகின்ற உண்மை.  என்ன அய்யரே சரிதானே?

நாகர்கோவிலில், மிஷனறி மீடு அய்யர் 1819-ம் ஆண்டு ஒரு செமினறியைத் ஆரம்பித்தார். ஐயரும், நாடாரும் சொல்லுகின்றனர்; இங்கே கிறிஸ்தவப் போதகர்களை உருவாக்கி அவர்களைக் கொண்டு அஞ்ஞானிகளை கிறிஸ்தவர்களாக்குவதற்காகவே, என்று.  ‘Seminary’ என்ற ஆங்கில பதத்துக்கு Place of education or development என்பது முதல் பொருளும், Training college for priests என்பது இரண்டாவது பொருளாகவும் தரப்படுகிறது. See “the concise ford dictionary – page 936”. ஆனால் ஐயரும், நாடாரும் சொல்வது போன்று கிறிஸ்தவ பாதிரியார்களை மட்டும் உருவாக்குகின்ற பாடசாலை அல்ல ‘Seminary’ என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  இவர்களது கண்ணும் மூளையும் மஞ்சள் ஆகிவிட்டதால் இந்த சித்தப்பிரக்ஞை உருவாகிவிட்டது. இந்த செமினறியில் பயின்று திருவிதாங்கூரில் உயர் பதவிகளை வகித்தவர்களின் பட்டியல் பாரீர்.
“It has supplied two Dewans of Travancore – (N. Nanoopillai and T.Rama Rao) to the state and the first Head Master and organisor of the Rajas Free School, Mr. Roberts, was drawn from it.  Mr. Mead who had settled at Nagercoil established several schools besides the Nagercoil seminary.  His long and intimate connection with English education induced the government to appoint him as superintendent of schools in 1855 and in this capacity he did much to further the cause of education in Travancore.  He was also the pioneer of Female Education in the state.  He established Industrial schools and did much about to bring about the abolition of slavery…”

(Nagam Aiya – Travancore State Manual)

தொடர்ந்து இந்த செமினறி பள்ளிக்கூடம் 1893-ல் இரண்டாம் நிலை கல்லூரி ஆனது.  அதில் முதல் முதலாக 12 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.  அவர்களில் 6 பேர் கிறிஸ்தவர்கள். மீதம் 6 பேர் இந்துக்கள் ஆவர். அவர்கள் முறையே C.சுப்பைய்யாபிள்ளை, குமாரசாமிப்பிள்ளை, (இருவரும் நாஞ்சில்நாட்டு வெள்ளாளர்கள்) சத்தியவாகீஸ்வர ஐயர், அனந்த சுப்பிரமணி ஐயர், மகாதேவ ஐயர், சேதுராம அய்யர், (இவர்கள் நால்வரும் பிராமணர்கள்) ஆவர்.  இவர்கள் அனைவரும் நமது நண்பர்களின் ஆய்வின்படி பைபிளை கையில் ஏந்தி பாதிரிமார்களாகவா?  சென்றனர்.  பொய் சொல்லுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா?

தவிரவும், நாகர்கோவில் செமினறி ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தரம் உயர்ந்த வேளையில் அங்கே பணியாற்றியப் பேராசிரியர்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களே.  அவர்களில் திரு.ஆர். கிருஷ்ணமாச்சாரி, திரு.டி.கே.நாராயண ஐயர், திரு.சுந்தரேஸ்வர ஐயர், திரு.ஆர். பஞ்சவாகீஸ்வர சாஸ்திரி, திரு.டி.எஸ்.சேதுராமன், திரு.ஜp.பி.செல்லம், திரு.கே.சி.ராமசுவாமி, திரு.என்.தாணு ஐயர், திரு.எஸ்.அருணாசலம், திரு.எம்.வேலுப்பிள்ளை, திரு.வி.வெங்கடசுப்பன். திரு.நாராயணஐயர், திரு.சுப்பிரமணியமூசாத் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.  இன்று ஒரு வசதி படைத்த நாடான் நடத்துகின்ற IAS அக்கடமியில் கிறிஸ்தவர்களுக்கு பிரவேசம் கிடைப்பது அரிதிலும் அரிது என்பதையும் நாம் உணர வேண்டும்.  கிறிஸ்தவ மிஷனரிகளின் கல்வித் தொண்டைப் பற்றி மேலும் விவரமாக அறிய வேண்டுமென்றhல் நாகர்கோவிலில் இருந்து ஜுலை 2011-ல் வெளிவந்த “சமுதாய சிந்தனை” என்ற சஞ்சிகையைப் படித்து தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள்.  என்ன! தெளிவு அடைவீர்களா?  அல்லது இருட்டில் குருட்டு யானை போன்று வழி தவறிச் சென்று இத்தகைய ஆய்வுப் பணியில் இறங்குவீர்களா?

இந்தியாவில் சிந்திக்கின்ற ஆற்றலை உருவாக்கித் தந்தவர்கள் ஆங்கிலேயர்களும், ஆங்கில கிறிஸ்தவ மிஷனறிகளும் என்பதில் சந்தேகமே இல்லை. இவர்கள் சாதாரண மக்களுக்கு, ஏன் பிராமணர் போன்ற உயர் சாதியானுக்குக் கூட சிந்திக்கின்ற ஆற்றலை உருவாக்குவதற்கென சென்னை, பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்களை உருவாக்கித் தந்தனர் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? இல்லை இந்த பல்கலைக்கழகங்கள் உருவாகுவதற்கு முன்பு எந்த இந்து மன்னனோ, இந்து ஆட்சியாளனோ அல்லது உயர் இந்துக்களோ பல்கலைக் கழகங்களையோ, கல்வி நிலையங்களையோ உருவாக்கி, சாதாரண இந்தியனுக்கு கல்வி புகட்டியதுண்டா?  பட்டியலிட உங்களால் முடியுமா?

கல்கத்தா பல்கலைக் கழகத்தை 24.01.1854-லும், பம்பாய் பல்கலைக் கழகத்தை 18.07.1857-லும், சென்னை (ஆயனசயள) பல்கலைக் கழகத்தையும் 22.09.1857-லும் ஆங்கிலேயர்கள் தானே உருவாக்கினர். ஏன், சென்னை உயர் நீதிமன்றத்தைக்கூட 1862-ல் உருவாக்கித் தந்தவர் அய்யரா? நாடானா? பல்கலைக்கழகம் தோன்றியதால்தானே உங்களைப் போன்ற அறிவு செம்மல்கள் உருவாயினர். பண்டித ஜவஹர்லாலும், தேசத்தந்தை மகாத்மாகாந்தியும் அம்பேத்காரும் இங்கிலாந்தில் கல்வி கற்றதனால்தான் உயர்ந்த மனிதர்கள் ஆனார்கள் என்பது உலகறிந்த உண்மை.  இல்லை என்று கூற முடியுமா?  ஆனால் நீங்கள் இன்று கிறிஸ்தவத்தையும், கிறிஸ்தவனையும் இகழ்வதில் இன்பம் காண்கிறீர்கள். பாலும் சாப்பிட்டுவிட்டு தாயின் மூலையையும் அறுக்கின்ற பண்பைத்தானே உங்களிடம் காண முடிகிறது.

ஆங்கிலேயர்களும் மிஷனறிகளும் மக்களுக்கு கல்வி அளித்தது, அவர்களை கிறிஸ்தவர்களாக்கியது பிறநாட்டு காலனிகளில் கூலியாட்களாக பயன்படுத்திக் கொள்வதற்காகவே என்ற ஒரு இழிவான கருத்தையும் இங்கே தரப்பட்டிருக்கிறது.  வெளிநாடுகளில் வேலை செய்வதற்கு இந்தியர்களை யாரும் கடத்திக் கொண்டுச் சென்றதாக புகார்களோ, தகவல்களோ இன்று வரையிலும் இல்லை.  அங்கே சென்றவர்கள் எல்லாம் பெரும் முதலீட்டி வசதியாகத்தான் வாழ்ந்தனர், வாழ்கின்றனர்.  தமிழ் ஈழத்தை உருவாக்குவதில் முனைப்புடன் பணியாற்றி உயிர் தியாகம் செய்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூதாதையர் திருநெல்வேலியைச் சார்ந்த இந்து பிள்ளைவாள்தான்.  அவர்களை எந்த மிஷனறி தூக்கிச் சென்றான் என்று கூற முடியுமா?  ஆனால் அவர்களையெல்லாம் கொன்று குவித்தவர்கள் உங்களைப் போன்றே இந்தியர்கள்தானே.  ஆங்கிலேயனா?  அல்லது மிஷனறியா கொன்றனர்!  கேரளத்து மலையாளியும், கேரளத்தில் பாங்கோடு அரசு ஆயுதக் கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களால் தானே ஈழத் தமிழ் தலைவர்களை தீர்த்துக் கட்டினர்.  இது காலனி ஆதிக்க வெறியில்லையா?

தமிழர்கள் நாட்டை இன்று வரை ஒரு தமிழனால் ஆள முடியவில்லையே.  தெலுங்கன் ஆண்டான்.  மலையாளி ஆண்டான்.  கன்னடத்தான் ஆண்டான், ஆளுகிறான்.  அப்படியானால் தமிழகமும் அயலானின் காலனிதானே?  ஒரு பச்சைத்தமிழன் முதலில் ஆளத் தொடங்கினான்.  அன்னியனுடன் சேர்ந்து ஒரு நாடான் அவனை அடித்து வீழ்த்தினான்!  அவனும் தமிழன்தான்.  அப்படியானால் அவனும் காலனி ஆதிக்கவாசிகளுக்கு கூலியான்தானே. அவ்வாறhயின் மிஷனறிகளும் காலனி ஆதிக்கவர்க்கத்தினரும் கூலிப்படைதான்.  சரியா, தவறா! நாடாரே சொல்லும்.

தமிழ்நாட்டின் தலைநகருக்கு தமிழ்ப் பெயர் ஒன்று இல்லை.  தெலுங்கனின் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது.  அதையும் ஒரு தெலுங்கன்தான் சூட்டினான்.  நாடார் சமுதாயத்தை சத்திரியன் சூத்திரன் என்று பிரிப்பதற்கு முயற்சி எடுப்பதை கைவிட்டு விட்டு, முதலில் உனது  மண்ணான தமிழ்நாட்டின் தலைநகர் பெயரை “ஒரு தமிழ் பெயர்”சூட்டுவதற்கு முயற்சியும், நாடாரே*

கல்லணையைக் கட்டுவதற்காக சோழ மன்னன் கரிகாற்ச் சோழன் ஈழத்தின் மேல் படையெடுத்து, 40,000 நபர்களைக் கைதிகளாக கொண்டு வந்து அணையைக் கட்டினானே.  இது என்ன ஆதிக்கம்.  காலனி ஆதிக்கமாக அல்லது வேறு எதுவுமா! தமிழகம், கேரளம், ஆந்திரம் போன்ற தென் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கில் பிராமணர்கள் குடும்பசமேதம் கானடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பணிபுரிகிறhர்களே!  இதையும் கிறிஸ்தவர்களின் காலனி ஆதிக்கம் என்று சொல்லுவீரோ?  பிழைப்புக்காக அவனவன் உலகில் எங்கெல்லாமோ சென்று வாழ்கிறான்.  அவர்கள் எல்லாம் மிஷனறிகளின் காலனி ஆதிக்கம் என்று நாடாரும், அய்யரும் கூட்டாக ஓலமிடுவதன் பொருள் என்ன?  இந்த நாட்டில் அவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லையென்பதைத்தானே காட்டுகிறது.  அதே போன்றுதான் அன்றும் இந்நாட்டில் வாழ்வாதாரம் இல்லாதவர்கள் ஆங்கிலேயர்களின் காலனிகளில் சென்று, பணி செய்து வாழ்ந்தனர். அங்கு சென்றவர்கள் வாழ்க்கையில் முன்னேறினர்.  அப்பேர்பட்டவர்களில் சிலர்தான் இந்தியாவில் காப்பி, தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களை நிறுவி செல்வந்தர்கள் ஆயினர் என்ற உண்மைகளை ஏன் நீங்கள் நினைவுப்படுத்தவில்லை?  அவர்களின் பட்டியல் தெரியாது போலும்*

ஏன், தற்போழுது உள்ள நிலவரம் என்ன?  “சவுதி அரேபியாவைச் சேர்ந்த துபாய் உட்பட பல நகரங்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில் உள்நாட்டு மக்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்க சவுதி அரேபியா அரசு திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் நலஅமைச்சர் அடல்அல்பாகித் தெரிவித்துள்ளார்…”.
(செய்தி தினகரன் – நாகர்கோவில் – 01.06.2011 பக்கம் 12).

சவுதி அரேபியா இந்தியாவின் காலனியா?  இவர்களையெல்லாம் எந்த கிறிஸ்தவப் பாதிரிகள், அல்லது இசுலாமிய அமைப்புகள் கடத்தி அங்கே பணிக்கு இழுத்துச் சென்றனர்.  பிழைப்பு நாடித்தானே இவர்கள் அங்கே சென்றனர்.  ஆங்கில காலனிகளில் வேலைக்காக அழைத்துச் சென்றவர்கள் அங்கே நிரந்தர குடியுரிமை பெற்று வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர் என்பது ஐயருக்கும், நாடாருக்கும் தெரியாததல்ல.  குறை சொல்ல வேண்டும்.  அதுவே ஆய்வாளர்களின் நோக்கம் (Hypocrisy)

முதன் முறையாக மிஷனறிப் பெண்மணிகள் (மீடு ஐயரின் மனைவியும், மால்ட் ஐயரின் மனைவியும்) பெண்களின் மார்பகங்களை மறைத்து ஒரு ஒழுக்க முறையை ஏற்படுத்துவதற்காக மட்டும், ரவிக்கை என்ற டடிடிளந தயஉமநவ-டை வடிவமைத்து, கையால் தைத்துக் கொடுத்து அணியச் செய்தனர். இந்த ரவிக்கை உயர் சாதியினர் அணிகின்ற ரவிக்கை போன்றல்லாமல், பிறில் வைத்த மாடல் ஆகும். இந்த நிகழ்ச்சியைக் குறித்து ஆய்வாளர்கள் எழுதும் போது,

“சார்லஸ் மால்ட், இவர்கள் அணிவதற்கு ஏற்ற ரவிக்கைகளை தையல் இயந்திரம் மூலம் ஒரே நேரத்தில் பெரிய எண்ணிக்கையில் தைப்பதற்கு ஏற்பாடு செய்தார். இத்தகைய ரவிக்கை அணியத் தொடங்கிய பெண்டிற் அதற்கு மேல் தம்முடைய புடவையின் முன்றhணையை வழக்கம் போல இடப்பக்கத்து தோள் மீது அணிந்து கொண்டனர்”

இந்த தகவலை படிக்கின்ற பாண்டி நாட்டு நாடார் குலப் பெண்கள் தங்களைப் போன்று திருவிதாங்கூரிலும் பெண்கள் முழுமையாக ஆடைகள் அணிந்து வந்துள்ள என்ற தவறான செய்தியை உண்மையென நம்பிவிடுவர். ஏனெனில் ஆய்வாளர்களுக்கு திருவிதாங்கூரில் உயர் குலத்தோன் பயன்படுத்திய ரவிக்கையும், மேல்முண்டும் (தோள்சீலை) எவ்வாறானது என்று அறிந்திருக்கவில்லை என்பதை முன்பே கூறினோம்.  சேலைக்கும், சீலைக்கும் வேறுபாடு தெரியாத இவர்கள் குப்பாய ரவிக்கைக்கும், ரவிக்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதும் இவர்களுக்குத் தெரியாது.  உங்கள் அனைவரது பார்வைக்காக அப்படங்களை இங்கே Reprint போடப்பட்டுள்ளது. பார்த்து தெளிவடைந்து கொள்ளுங்கள்.

இந்தச் செய்தியால் மிஷனறிகள் “Readymade” கடைகள் வைத்து அதில் கிறிஸ்தவ சாணாட்டிகளுக்கு விற்பதற்கு எனப் பெரிய அளவில் ரவிக்கைகளும், சேலைகளும் இருப்பு வைத்திருந்தனர் என்ற மாயையை இந்து நாடார்களிடம் உருவாக்குவதற்கே இந்த புரட்டைக் கூறுகின்றனர்.  ரவிக்கை அணிவதற்கான உரிமையை கர்னல் மன்றோ (Resident) 1813-ல் வழங்கப்பட்டு கிறிஸ்தவப் பெண்கள் அன்று முதல் பகிரங்கமாக அணிந்து கொண்டனர்.  இதில் கவனத்திற்குரிய விஷயம் என்ன என்றhல், துணிகள் தைப்பதற்கான தையல் இயந்திரத்தை ஆங்கிலேயரான சிங்கர்துரை 1851-ல் தான் கண்டுபிடித்து சீர்படுத்தினார்.  (Vide page 162 of siscobook – inventions that changed the world)   இது இவ்வாறிருக்க 1822-ல் மால்டு ஐயரும் மீடு ஐயரும் தையற் கடையை எப்படி தொடங்க முடியும். பாப்பாரப்பிள்ளை நண்டு பிடிக்கிற கதையாகிவிட்டது இவர்களின் ஆய்வு.

மிஷனறிகள் அல்ல குப்பாயத்தை வடிவமைத்தது.  அவர்களின் மனைவிகளே இதை உருவாக்கி கையால் தைத்துக் கொடுத்தனர். இதை உருவாக்கிக் கொடுப்பதற்கான காரணத்தை அவர்கள் கூறும் பொழுது
“… that the Shanars and such other castes women, as have embraced Christianity ought to wear an upper cloth for the sake of decency when they go to church, the fairs, markets and similar places, and they were instructed to do so and that it ought to be ordered agreeably to Christianity…”  No doubt at this fag end of the nineteenth century it passes strange a government should make restrictions and laws as to the domestic economy and dress of individuals; but the Travancore Govt. was so unenlightened in those days that it made such indecent restrictions regarding the dress of inferior women”.  (C.M. Augur – Church History of Travancore – 01.10.1902 pages 781, 782)

இது எதைக் குறிக்கிறது?  திருவிதாங்கூரில் இழிவு சாதியினர், குறிப்பாக நாடார் பெண்களுக்கு ஒழுக்கமுறை வேண்டி மார்பகங்களை மறைப்பதற்கு உரிமை இல்லை என்பதைத்தானே சுட்டுகிறது. இதற்காகவே உகந்த மேலாடைகள் தைப்பதற்கு நாடார் பெண்களுக்கு ஊசித் தையல் கலையை பயிற்றுவித்துள்ளனர்  மிஷனறிகள்.

“… Mrs. Mead taught them plain sewing, spinning, knitting etc., Mrs. Mault taught them crochet and embroidery work and in 1821 introduced  the Pillow lace”.

(Ibid – Page 766)

இவைகளையல்லாமல் மிஷனறிப் பெண்கள் தையல் இயந்திரங்களை எடுத்து வந்து, துணிகளை மொத்தமாகத் தைத்து ரெடிமேடு (Readymade) ஆடைகள் விற்பனை அங்காடிகளை வைக்கவில்லை. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா, அய்யரே நாடாருக்குத்தான் மரமண்டையென்றால் உமது அறிவு எங்கே போயிற்று?  உமக்கு தலையில் களிமண் என்று தோன்றுகிறது.

ஒரு நாட்டிற்கு ஒரு கலாச்சாரம் உண்டு என்றாலும், கேரள நாட்டில் பல அருவருப்பான கலாச்சாரங்கள் உண்டு. குறிப்பாக பார்பனரிடம் காணப்படுகின்றவைகள் மிகவும் அருவருப்பானது கேளும்.

“இதைவிடக் கொடுமையான ஒரு பழக்கமும் இவர்களிடத்தே (நம்பூதிரி பிராமணர்கள்) காணப்படுவதாக ‘ஆபேடூபே’ என்ற வரலாற்று ஆசிரியர் விவரிக்கிறhர்,
“Among these same people, again, is another distinct caste called Namboodiri, which observes one abominable and revolting custom.  The girls of this caste are usually married before the age of puberty, but if a girl who has arrived at an age, when the sign of puberty are apparent, happenes to die before having had intercourse with a man, caste custom rigorously demands that the inanimate corpse of the deceased shall be subjected to a monstrous connection.  For this purpose the girls’ parents are obliged to procure by a present of money some wretched fellow willing to consummate such a disgusting form of marriage for were the marriage not consummated the family world consider itself dishonoured”.

(Abbi J.A. Dubois – Hindu manners, custom and ceremonies – 1906 – Page 16)
இப்பேர்பட்ட ஈனச் செயல்களைப் புரிகின்ற உயர் இந்து என்று பெருமை பாராட்டுகின்ற நம்பூதிரிப் பிராமணர்கள், கேரளத்தில் தாழ்ந்த சாதிப் பெண்கள் மார்பகங்களை மறைத்து மானமாக வாழ்வதற்கு அனுமதித்திருப்பார்களா?  பெண்கள்  இன்னொரு வெறிச் செயலைக் குறித்து கூறுகிறhர்கள்.
“An old Brahmin attending a feast in a temple caught hold of a young Nair girl, full grown with bare blooming breast and caressed her in front of all others present”.

(T.K. Ravendran – Assantand Social Revolution in Kerala – 1933; as quated by R.N. Yesudhas in “A people’s revolution in Travancore” – Page 6)

இத்தகைய ஈன பண்பாடுகளை நாகரீகமாகக் கொண்டுள்ள திருவிதாங்கூரில் மக்களை அரை நிர்வாணிகளாக வைத்திருந்ததில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.  இதிலிருந்து நாடான் ஆனாலும் சரி, சாணான் ஆனாலும் சரி அனைவரும் இவர்களுக்கு முன் ஒன்று போன்றவர்களே.  அதனால், எந்த கீழ் சாதிப் பெண்களும் 18 முழம் சேலையைக் கட்டி, முந்தாணையுடன் இங்கே வாழ்ந்தனர் என்பது கட்டுக் கதைதான்.  பிரிட்டீஷ் மாகாணத்தில் இவைகள் ஒருவேளை சரிதான். நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.  ஆனால் இங்கேயும் நாடார் பெண்கள் சேலையால் மார்பகங்களை மூடிக் கொண்டு வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரம் என்ன?  நிழற்படம் ஏதாவது உண்டா?    தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராசர் ஆட்சி காலத்தில் கூட பெண்கள் மார்பகங்களை மறைப்பதற்கு ரவிக்கை அல்லது குப்பாயம் அணியாமல் காணப்பட்டனர் என்பதற்கு சான்று உண்டு.

ஜுலை 2011-ல் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு மலராக வெளிவந்த நாடார் மக்கள் ஜோதியில் 34-வது பக்கத்தில் ஒரு போட்டோ படம் பிரசுரமாகியுள்ளது.  அதில் மூதாட்டி ஒருவர் பெருந்தலைவரிடம் ஏதோ பிராது சொல்வதாகத் தெரிகிறது.  அந்த பெண்மணி ரவிக்கை அணியாமல் நிற்பதைக் காணலாம்.  திரு.காமராஜரின் ஆட்சி காலம் 1954 முதல் 1963 வரையாகும். இவர் காலத்திலும் பெண்கள் ரவிக்கை அணியவில்லையெனறால் அவருக்கு 150 வருடங்களுக்கு முன் பெண்கள் நிலை எவ்வாறு இருந்திருக்கும்.

மிஷனறி மீடு அய்யர் 1820-ல் நாகர்கோவிலில் ஒரு அச்சகம் (Printing press) உருவாக்கினார்.   திருவிதாங்கூரில் இதுவே முதல் அச்சகம் ஆகும்.  அரசுக்குக் கூட அன்று சொந்தமாக அச்சகம் இல்லை.  தஞ்சை தரங்கம்பாடியிலிருந்து இந்த அச்சகத்தையும், அதற்குத் தேவையானப் பொருட்களையும், தொழிலாளர்களையும் இவர் கொண்டு வந்தார்.  அச்சடிப்பதற்கு கடுதாசி (Paper) தேவை.  இவைகளை மீடு அய்யர் கள்ளத்தனமாக கடத்திக் கொண்டு வந்து, அரசுக்கு வரி ஏய்ப்பு உருவாக்கிவிட்டார் என்று ஐயரும் நாடாரும் குறைபட்டுக் கொள்கின்றனர்.  வரி ஏய்ப்பு, கலப்படம், கள்ளத்தராசு, கடத்தல் போன்ற சட்ட விரோதச் செயல்கள் யார் செய்கிறார்கள் என்பது நாடார் அறியாததல்ல.  ஆனால் மீடு அய்யர் வரி ஏய்ப்பு செய்தாரா? என்று ஆவணங்களை சரிபார்த்து எழுதுவதற்குக் கூட புத்தியில்லாத மரமண்டைகளான இந்த பீற்றை ஆய்வாளர்களின் கவனத்திற்காக இதை எழுதுகிறோம்;
“He brought to the notice of her Highness the Ranee’s Government that the reams of printing paper etc, required for the press were sent to him from charitable institutions from England and were intended for the use of schools and other benevolent institutions already existing and to be established in Travancore and that it would be a great help in his work if they were allowed to be imported free of duty.  H.H. the Ranee very kindly complied with Mr. Meads request and issued orders to that effect to the commercial agent”.

(C.M. Augur – Church History of Travancore – 1902 – Page 747, 748)

அரசிடமிருந்து ஆணை பெற்றுத்தான் அச்சகப் பொருட்களை மீடு பாதிரியார் இறக்குமதி செய்தாரே தவிர, நம்மவர்களைப் போன்று கடத்தல் பணியால் அல்ல.  தனது புத்தகத்தில் 91-ம் பக்கத்தில் “இறக்குமதி வரியின்றி அச்சுத்தாள் இறக்குமதி செய்து” என எழுதிவிட்டு பக்கம் 92-ல் “வரிவிலக்களிக்கப்பட்ட காகிதத்தை இறக்குமதி செய்து” என்று ஏன் எழுத வேண்டும்.  இரண்டிற்கும் பொருள் ஒன்றhக இருக்கும் போது “இறக்குமதி வரியின்றி” என்று சொன்னால் சாதாரண மனிதன், மீடு ஐயர் ஒரு கடத்தல்காரன் என்று எண்ணுவான் என்ற பார்பனீய யுக்திக்காக இதை ஐயர் எழுதியிருக்கலாம். இது நடந்தது 19-ம் நூற்றhண்டு முற்பகுதியில், 20-ம் நூற்றhண்டில் கூட இப்பேர்பட்ட சலுகைகளை அரசிடமிருந்து பெற்றுக் கொண்டு சுமார் 750 ரூபாய் மதிப்புடைய புத்தகங்களை வெறும் 50 ரூபாய்க்கு சில மத நிறுவனம் பிரசுரித்ததுண்டு.  சான்றுக்கு கீதா பிறஸ், கோரக்பூர், 273005, 1999-ல் வெளியிட்டுள்ள “_மத்மகவத்கீதா”வைக் கூறலாம்.  1024 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் அன்றைய விலைக்கு குறைந்தது 750 ரூபாய் மதிப்புடையதாகும்.  எனவே கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்திக் கொள்வது சிறந்தது என்ற கோட்பாட்டை மீட் ஐயர் பயன்படுத்தியிருப்பதில் தவறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.  எதுவானாலும் மீட் பாதிரியாரை குறை கூறி நாடார் மத்தியில் கிறிஸ்தவத்துக்கு அவப் பெயர் உண்டு பண்ண வேண்டும்.  உயர்சாதியானின் பண்புதானே இத்தகையோர் எழுத்துமுறை.

ஐயர் அவர்கள் “இவர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, 1820-ம் ஆண்டில் மட்டும் 3,000 சான்றோர் குலத்தவரை புரோட்டஸ்டண்டு கிறிஸ்தவர்களாக மதம் மாற்றினார்” என்று கூறுகிறhர்.  இதற்கு இவர் என்ன ஆதாரம் தருகிறhர்.  ஒன்றும் தராமல் இவ்வாறு எழுதிவிட்டால் உண்மை வரலாறு ஆகிவிடுமா?  வேண்டுமானால் புராணம் ஆகலாம், ஆனால் வரலாறு ஆகாது.  “தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி” என்று இவர் குறிப்பிடுவது ஒரு வேளை மீட் பாதிரியாரின் “நீதிபதி” நியமனத்தைக் குறிப்பிடுகிறhர் என்று எண்ணுகிறேன்.  இவரை திருவிதாங்கூர் அரசு 1818-ல் நாகர்கோவில் நீதிபதியாக அமர்த்தியது.  1820-ல் மீட் பாதிரியார் நீதிபதியாக இருக்கவில்லை என்பது தான் உண்மை.
“His appointment as judge of the Nagercoil Court by the Government of Travancore in 1818 him with no choice… However Mead resigned his judicial appointment with in a few months as the London Mission Society did not favour it”.

(Mrs. Joy Gnanadason – A forgotton History – 1994 – Page 68).

இங்கே “with in a few months”/  என்று குறிப்பிட்டிருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு வருடத்துக்கு குறைவான காலமே இவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். அந்த வருடத்திலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தும் விட்டார்.  இதில் தனது அதிகாரத்தைப் 1820-ல் பயன்படுத்தி 3000 சான்றேhர் குலத்தவரை (நாடார்களை என்று வைத்துக் கொள்ளலாம்) மதம் மாற்றினாராம்.  1820-ல் மீட் பாதிரியார் மாவட்ட கலெக்டராகவா இருந்தார்?  அவ்வாறானால்தான் இவருக்கு மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்த முடியும். இத்தகைய பித்தலாட்டம் நாடார்களிடம் செல்லுபடியாகலாம்.  ஆனால் சான்றோர்களிடம் செல்லுபடியாகாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளும் ஓய்*

பேராயர் கால்டுவெல்லாரைக் குறித்து தோள்சீலைக் கலகத்துடன் சார்புபடுத்தி எதற்காக எழுத வேண்டும். அவர் திருவிதாங்கூரில் மிஷனறிப் பணிபுரிவதற்கு வரவில்லை.  பிரிட்டீஷ் இந்தியாவில் தூத்துக்குடி பக்கம் உள்ள இடையன்குளத்தை தனது தலைமையிடமாக்கி தமிழ்மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் ஆவார்.  அவர் நாடார் சமுதாயத்தைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்குடனே” அவர்கள்“dull headed Shanars” என்று எழுதவில்லை.  இவர்கள் உயர் சாதிக்காரனை மிஞ்சும்படியான புத்தி கூர்மையில்லாதவர்கள் என்ற உணமைக் கருத்தை முன் வைத்து, இவர்களுக்கு கல்வி மூலம் அறிவைத் தந்து உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படி எழுதினார். ஆனால் இவரது கணிப்பு இன்று உண்மைதான் காணப்படுகிறது.

பச்சைத்தமிழன் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அரசியல் களத்திலிருந்து அடித்து சாய்ப்பதற்காக, ஒரு சாணான் (நாடார் என்று தான் வைத்துக் கொள்வோம் அல்லது ஐயர் குறிப்பிடுவதைப் போன்று சத்திரியன் என்று கூடக் வைத்துக் கொள்ளலாம்) தனது பண பலத்தால், பத்திரிகை பலத்தால், மாற்றhனுடன் அதாவது வடுகமேளக்காரனுடன் இணைந்து காமராசர் பிறந்த மண்ணிலேயே சாயத்தானே, இந்த செயலை எவ்வாறு விலாசமிடுவது?  புத்திசாலித்தனம் என்றா அல்லது மரமண்டைத்தனமென்றா?  பச்சைத் தமிழனை, குறிப்பாக நாடானை வீழ்த்துவதற்கு நாடானே களம் இறங்கிய ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு, இந்த சமுதாயம் அறிவில்லாத சமுதாயம் என்பது நிரூபணமாகிறதல்லவா? இது அன்றைய சட்டாப்பிள்ளைக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் இந்நாள் அ.கணேசனுக்குக் கூட தெரியவில்லையே*  ஏன்?  ஐயருக்கு கீழ்வாள்தானே இவரால் பிடிக்க முடிகிறது.  மேல்வாளை நாடார் ஐயர் கையில் தானே கொடுத்திருக்கிறார்.  இதன் பொருள் என்ன?  மேல் சாதிக்காரனை மிஞ்சுகின்ற புத்தி கூர்மை கீழ் சாதிக்காரனுக்கு இல்லை என்பதைத்தானே திரு.கணேசன் செய்கை வாயிலாக நாம் காண்கிறோம்.  அவ்வாறிருக்க மிஷனறி கால்டுவெல் மீது இவர்களுக்கு ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி.  உணர்ச்சி மிகவும் தெளிவானது, சிந்தித்தால் தெரிய வரும்*

ஒரு தமிழனால் செய்ய முடியாத சேவையை கால்டுவெல்லார் தமிழ்மொழிக்கு செய்துள்ளார்.  தமிழ்மொழி “செம்மொழி” என்று (Classical Language) உலகிற்கு முதல் முதலாக அறிவித்தவர் இவர் மட்டுமே.  ஒத்துக் கொள்கிறீர்களா?  ஒரு வேளை திரு.கணேசன் ஒத்துக் கொள்ளலாம்.  ஆனால் திரு.எஸ். ராமச்சந்திரன் ஐயர் ஒத்துக் கொள்ளமாட்டார். ஏன்?  ஆரிய மொழி மட்டும்தான் ‘செம்மொழி’ என்று தம்பட்டமடித்தவர்கள், தமிழ் மொழிதான் ‘செம்மொழி’இ தவிரவும் மூத்தமொழி என்றால் ஆரியருக்கு எப்படியிருக்கும்.  அதனால் கால்டுவெல்லாரைப் பழி தீர்த்துக் கொள்வதற்கு தற்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினார் ஐயர்வாள். அதற்கு தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையாக திரு. அ. கணேசன் தரம் தாழ்ந்து நிற்கிறார்.

குமரி மாவட்டம் அம்மாண்டிவிளை பேராசிரியர் திரு.வி.ற்றி.செல்லம் அவர்கள் “சமஸ்கிருத” மொழி உருவானதே ஆதி தமிழ்மொழியில் இருந்தே என்று நிரூபித்துள்ளார்.  இவரையும் பழிதீர்த்துக் கொள்வதற்கு என்ன திட்டத்தை இவர்கள் வகுத்துக் கொண்டிருக்கிறhர்களோ*  யார் அறிவர்?

அதுமட்டுமா* தென்னகத்து மொழிகள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்றவைகள் அனைத்தும் திராவிட மொழிக் குடும்பம் ஆகும் என்று தனது ‘ஒப்பிலக்கண’ ஆராய்ச்சியால் நிரூபித்துக் காட்டிவிட்டார் பால்டுவெல்லார். அதுவரையிலும் இருந்த “ஆரியமொழிக் குடும்பம்” என்ற கருத்தை வேருடன் பிறிதெறிந்தவர் இந்த கால்டுவெல்லார்தான்* பொறுப்பாளர்களா பார்பனர்கள்*  இதனால்தான் இந்த பார்பன ஆராய்ச்சியாளர்கள் கால்டுவெல்லை’ காலனி ஆதிக்க நாயகன் என்று தூற்றுகின்றனர். அவ்வாறாயினும் கால்டுவெல்லுக்கும் திருவிதாங்கூரில் நடந்த பெண்களின் மேலாடை சம்பந்தமான போருக்கும் என்ன தொடர்பு?

கால்டுவெல்லாரைப் புகழாத தமிழனே இல்லை! இவர்கள் இருவரையும் தவிர.

“… அத்தகைய அரும்பெறலாராய்சியைச் செய்து முடித்துத் தமிழ்மொழிக்கு ஏற்றம் அளித்த பெரியார் ரைட்ரெவரெண்டு ராபர்ட் கால்டுவேல் டி.டி.; எல்.எல்.டி ஆவார்.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலிருந்து தமிழ்நாடு போந்து கிறித்து சமயத்தொண்டுடன் தமிழ்த் தொண்டும் புரிந்த ஐரோப்பியர்கள் பலருள்ளும் கால்டுவெல்ஐயர் தலைசிறந்தவராவர். அவர் இயற்றியளித்த “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற ஒப்பரிய ஆராய்ச்சி நூல் தமிழ்மொழிக்கு உலக மொழிகளிடையே வியக்கத்தக்கதோருயர் நிலையையளித்தது; தமிழ் மக்களின் பண்பாட்டைப் பெருமைக்கும் நாகரீகச் சிறப்பிற்கும், கலை வளத்திற்கும் என்றும் அழியாச் சான்று பகர்ந்தது; பகரா நின்று வருகின்றது” என்று சிறப்பிக்கின்றனர், திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
(பதிப்புரை – கால்டுவெல் ஒப்பிலக்கணம் – மறுபதிப்பு, 2001 – பக்கம், iஎ, எ).

இந்த ஒப்பிலக்கணம் ஆரிய மொழிக்கு இழுக்கு உருவாக்கியுள்ளது என்பதை சீரணித்துக் கொள்வதற்கு இயலாத வண்ணமிருந்த ஐயர்வாள் அதற்கென சம்பந்தமில்லாத இப்புத்தகத்தில் தனது காழ்ப்புணர்வை கொட்டித் தீர்த்துள்ளார்.  அதற்கும் ஒரு நாடாரை துணைக்கு வைத்துக் கொண்டுதான் அதை செய்துள்ளார்.  சத்திரியன் என்றும் பிராமணனுக்கு தடிக்கம்புக்காரன்தானே என்பதையும் திரு.கணேசன் நிரூபிக்கும் விதமாக இங்கே காட்சி தருகிறார்.  இதைத் தவிர இந்த நூலில் சத்தான எதுவும் இல்லை என்றே கூறலாம்.

இந்தப் பெண்களின் போராட்டத்தில் சாமித்தோப்பு முத்துக்குட்டி சாமியார் எங்கே வந்தார்?  முத்துக்குட்டி சாமியார் 1808-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் தேதி (கொல்லமாண்டு மாசி மாதம் 20-ம் நாள்) பிறந்தார்.  இவரது தாய் தந்தையர் திருநெல்வேலி மாவட்டம், இடையன்குடியிலிருந்து பனைத்தொழில் செய்து பிழைப்புக்காக திருவிதாங்கூர் வந்தனர். வாலிப பருவத்தில் இவர் பனைத்தொழிலையே செய்தார்.  எனவே எஸ். இராமச்சந்திரன் சித்தாந்தத்தின்படி இவர் நாடான் அல்லது சத்திரியன் ஆக முடியாது் இவர் சாணான் ஆகவே முடியும். இவர் நோய்வாய்ப்பட்டு, திருச்செந்தூர் முருகன் சன்னிதானத்திற்கு தரிசனத்துக்காகத் தூக்கிச் சென்ற வேளையில், 1833 ஆம் ஆண்டு, தனது 25-ம் வயதில் விஞ்சைப் பெற்று ஊர் திரும்பினார்.  அதனைத் தொடர்ந்து சுவாமிகள் தவ வாழ்க்கை மேற்கொண்டு 1834 ஆம் ஆண்டில் தனது சமயத் தொண்டைத் தொடங்கினார். இதற்கும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1838 முதற்கொண்டு அருளாசிகள் வழங்கத் தொடங்கி புகழ் அடைந்தார்.  இவரது கொள்கையான “ஏக கடவுள், ஏகச் சமயம், ஒரே சாதி” என்ற கோட்பாட்டால் சாணார் மக்கள் அனேகர் ஈர்க்கப்பட்டு இந்து சமயத்தைவிட்டு இப்புதிய சமயத்தைத் தழுவினர்.  1851 ஆம் ஆண்டு தனது 43 வயதில் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.  இவரது பூத உடல் பூவண்டர்தோப்பு என்ற சாமித்தோப்பில் சமணமுறை போன்று உட்கார்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டு, அதன்மேல் தலைமைப்பதி நிறுவப்பட்டுள்ளது.

இவரது மக்கள் தொண்டு 1838-ல் தான் தொடங்கப்பட்டது.  ஆனால் தோள்சீலைப் போராட்டம் 1822-ல் தொடங்கப்பட்டுவிட்டது.  அதன் இரண்டாவது கட்டப் பேராட்டம் கூட 1829-ல் தொடங்கப்பட்டது.  அதாவது சாமியார் மக்கள் தொண்டு தொடங்குவதற்கு முன்பே, (1838-ல்) ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே கலகத்தின் இரண்டாவது நிலை எட்டிவிட்டது.  எனவே பெண்கள் தோள்சீலை (Upper Cloth) அணிவதில் இவருக்கு எந்தவித பங்களிப்பும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம்.  தோள்சீலைப் போராட்டம் முழு வெற்றி பெற்றது 1859-ல் ஆகும். இதற்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே சாமியார் காலமாகிவிட்டார்கள்.  அந்த வகையிலும் அவருக்கு பங்கு எடுத்துக் கொள்ள இயலவில்லை. அவரது ஆயுட் காலத்தில் சில குறுகிய காலகட்டங்களில் தோள்சீலைப் போராட்டம் நடந்தது என்பது உண்மை.  இப்போராட்டங்களை கிறிஸ்தவ மிஷனறிமார்கள் முன்னின்று நடத்தினார்களேத் தவிர, முத்துக்குட்டிசாமிகள் முன்னின்று, குறைந்தபட்சம் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களிடத்தில் கூட விரிவாகச் செய்யவில்லை.

‘பூமகள் நிதமுடன் போட்ட
தோள்சீலை தன்னைப் போடாதே
என்றடித்தானே சிவனே அய்யா”   என்று  இறைவனிடம் ஆவலாதி கூறுகிறாரேத் தவிர, அடித்த உயர்சாதியானனைப் பார்த்து “ஏய் நீ ஏன் எங்கள் பெண்ணை அடிக்கிறாய், அடித்தால் உன் கையை நான் உடைப்பேன்” என்றாவது கூறி இவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  தவிரவும் பெண்களை அழைத்து “ஏ, கண்மணிகளா சேலையைக் கட்டிக் கொண்டும், ரவிக்கையை அணிந்து கொண்டும் தைரியமாக நடமாடுங்கள், அதனால் என்ன வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பெண்களுக்கு இவர் ஊக்கமளித்ததாகக்கூட அகிலத்தில் குறிப்பு உண்டா?  பிறகு ஏன் அவரைத் தோள்சீலைக் கலகத்துடனே இணைத்தனர் இந்த ஆய்வாளர்கள்.  அவர் நாடான் என்று எண்ணிவிட்டனர் போலும்.  அவரும் பனைத்தொழில் செய்த சாணான்தான்.

பக்கம் 91-ல் “1812-13 இல் தச்சன்விளையில் அனந்த பத்மனாபன் வம்சத்தைச் சேர்ந்த பொன்னின் பெருமாள் லண்டன் மிஷன் சொசைட்டிக்கு சர்ச் கட்ட 6 சென்று நிலம் வழங்கினார். அங்கு 1814-ல் சிறு சர்ச் கட்டப்பட்டது” ஏன்? என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  இவர்கள் கூறுகின்ற கால அளவில் மிஷனறி றிங்கல் தௌபேதான் மிஷனறிப் பணி செய்து கொண்டு இருந்தார்.  அவர் காலத்தில் தச்சன் விளையில் அப்படி ஒரு சிறு சர்ச் கட்டப்படவும் இல்லை.  அதற்கான பூமிதானமும் வழங்கப்படவில்லை.  அவரது பணிகள் அகஸ்தீஸ்வரம் தாலுகாவை  மட்டுமே சுற்றி நின்றது.  மயிலாடி அவரின் தலைமைப் பணியிடமாக இருந்தது.  அவர் 1816 ஜனவரி 23-ம் நாள் திருவிதாங்கூரில் தனது பணிகளை முடித்துக் கொண்டு உடல் நலம் குன்றி நாடு திரும்பினார்.  அவர் திரும்பும்போது, மொத்தம் எட்டு சர்ச்சுகளைக் கட்டியிருந்தார்.  அவைகள் முறையே மயிலாடி, பிச்சைக்குடியிருப்பு (தற்போதைய nஜம்ஸ் டவுண் அருகில்) தெங்கம்பார் (புத்தளம்), கோவில்விளை, ஆத்திக்காடு, ஈத்தாமொழி, தாமரைக்குளம் மற்றும் அம்மாண்டிவிளையாகும். (C.M. Augur – Church History of Travancore – 1902 – Page 564, 565) என்பதே உண்மை.  இவ்வாறிருக்க 1814-ல் தச்சம்விளையில் 6 சென்று நிலத்தில் றிங்கல்தௌபே சர்ச் கட்டினார் என்ற விவரத்துக்கு எங்கிருந்து இவர் ஆதாரம் திரட்டினார். தச்சன்விளை அனந்தபத்மனாபன்நாடார் வகையறhக்கள் 6 சென்று நிலம் கொடுத்ததை இவ்வளவு பெரிதாக ஊதிப் பெருக்குகின்ற ஐயர் குழுமம் 25 ஏக்கர் நிலத்தை மிஷனறிகளுக்கு நற்காரியத்துக்கு அளித்ததைக் குறித்து குறிப்பிடுவதற்கு ஏன் மறந்து விட்டனர்.   இன்று நெய்யூரில் செயல்படுகின்ற பள்ளிக்கூடம், சர்ச், மருத்துவமனை, தாதியர் பள்ளி, புற்றுநோய் சிகிட்சை மையம் போன்ற மக்கள் நலன் நிறுவனங்கள் நிலை கொண்டிருக்கின்ற அந்த வளாகம் நெய்யூர் காரியாவிளை வீட்டு நாயர் தறவாடு உறுப்பினரான கணக்கு இராமன் தம்பிக்குச் சொந்தமானது ஆகும்.  இதைவிட 6 சென்றை உயர்த்திப் பிடிப்பதற்கு காரணம் என்ன? அந்த இடத்திற்கு றிங்கல்தௌபே பணி நிமித்தம் சென்றது கூட இல்லாத நிலையில், யார் அந்த சர்ச்சை கட்டினர்.  ஒருவேளை ஆய்வாளர்களின் மூதாதையர்கள் கட்டியிருக்கலாம்? அவர்களின் பெயரைச் சொன்னால் சபை வரலாற்றில் புதிதாக “விடுபட்டது” என்று கூறி சேர்த்துவிடலாம். கப்சா அடிப்பதற்கும் அளவு வேண்டாமா, ஆரியர்களின் மாயையில் இதுவும் ஒன்று.  வரலாற்றை திரிக்கலாம், புரட்டலாம் அல்லது மறைக்கலாம்.  பொய் சொல்வது உங்களுக்கு புண்ணியம் தரலாம்.  ஆனால் அது பித்தலாட்டம் என்பதை அறிவுடையோர் கருதுவர்.  ஆரியர்களுக்கும் உண்மைக்கும் சம்பந்தம் இருக்க முடியாதே.

பக்கம் 90-ல் 3,000 சான்றேhர்களை மீடு பாதிரியார் கிறிஸ்தவர்களாக்கி விட்டாராம்.  சான்றோர்கள் அனுபவித்து வந்த துயரங்களைப் போக்குவதற்காகவே அவர்கள் கிறிஸ்தவத்தைத் தழுவினார்களேத் தவிர, அவர்களை பாதிரியார் வலுக்கட்டாயமாக மதம் மாற்றி இழுத்துச் சொல்லவில்லை.  இதனால் நாயர்களும், வேனானர்களும் கொலைவெறி கொள்ளவில்லை. அதற்கு காரணம் வேறு.  அக்காரணத்தை ஆங்கில ரசிடென்று கர்னல் கல்லன் மிகத் தெளிவா ஆங்கில அரசுக்கு எழுதுகிறhர்.

“… That they indiscriminately supported their Convert’s claim to exemption on account of their assumed religion from services which they were bound to perform by law”.

(C.M. Augar – Page 928)

நாயர்களுக்கும், வெள்ளார்களுக்கும் கிறிஸ்தவ சாணார்கள் ஊழியம் செய்வதை நிறுத்தி விட்டமையால் அவர்களது சோம்பேறி உல்லாச வாழ்வுக்கு இடையூறு விளைந்துவிட்டது என்ற அழுத்தத்தினால்தான் கிறிஸ்தவர்களைத் தாக்கினார்களேத் தவிர, மீடு ஐயர் 3000 பேரை மதமாற்றம் செய்ததனால் அல்ல.  மேற்படி தாக்குதல் நடந்தது Rev. Cox ஐயர் காலத்திலாகும் (1855-ல்). ஆய்வாளர்கள் கூறுவது போன்று 1820-ல் அல்ல. தோள்சீலைகலகம் தொடங்கியதே 1822-ல்தான் என்பதையும் இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.  தொடர்பு இல்லாமல் நிகழ்வுகளை வகைப்படுத்துவது ஆராட்சியல்ல.  புரட்டு ஆகும்,  அல்லது ஆரியமயமாக்குதல் என்று கூடச் சொல்லலாம்.  வரலாற்றுப் புரட்டு என்று கூறுவதே மிகப் பொருத்தமானது.

93-ம் பக்கம் இவர்கள் குறிப்பிடுகின்ற “கத்தனார்விளை” என்பது கொத்தனார்விளையாகும். அதைக் ‘கத்தனார்’ என்று திரித்துக் கூறினால் மற்றவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்ற நினைப்பு. அங்கு சில கிறிஸ்தவர்களிடமிருந்து இந்து சமயத் திருவிழாவுக்கு ஊர்வரி கொடுக்கவில்லையாம். அதனால் அவர்களை இந்துக்கள் தாக்கியுள்ளனர்.  தவிரவும் அவர்கள் மீது பொய் பிராது கொடுத்தனர்.  அதை மீடு பாதிரியார், உயர் அதிகாரிகளை (ரசிடென்று) சந்தித்து ரத்து செய்தது தவறு என்றால், இவர்கள் தீவானுக்கோ அல்லது மன்னருக்கோ பிராது செய்ய வேண்டியதுதானே?  கிறிஸ்தவ ஆலயத் திருவிழாக்களுக்கு இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் ஊர்வரி கொடுப்பார்களா?  அல்லது கொடுத்ததாக ஏதாவது சான்று தர இயலுமா?  இதனால் வேளாளர்களின் மனதில் கிறிஸ்தவ விரோதம் உருவாகவில்லை.  ஏனென்றால் வேளாளர்களில் அனேகர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர்கள் உண்டு. கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், மதுரை மாவட்டம் போன்ற பிற மாவட்டங்களில் நிறைய பேர் உண்டு.  அவர்களிடையே இந்து, கிறிஸ்தவன் என்று மதப்பிணக்கு உருவானதாக ஏதாவது சான்று தர இயலுமா?  வெள்ளாளர்களில் கிறிஸ்தவனும் உண்டு என்ற விவரத்தைத் தருவதற்கு அகஸ்தீஸ்வரத்தில் யாரும் கிடைக்கவில்லையா?

கிறிஸ்தவத்தை வரித்துக் கொண்டவர்கள், வெள்ளானுக்கோ, நாயருக்கோ அல்லது இந்து கோயில்களுக்கோ அல்லது மகாராணியாருக்கோ ஊதியம் பெறாமல் ஊழியம் செய்வதற்கு இணக்கம் தரவில்லை.  மிஷனறிகளின் பின்பலம் இருந்தது என்பது உண்மை.  ஆனால் அரசும் அதிகாரமும் உயர் சாதி இந்துக்களிடம்தானே அன்றும் இருந்தது. அதைப் பயன்படுத்தித்தானே கிறிஸ்தவர்களை மட்டுமின்றி இந்துக் கீழ்ச்சாதியினரையும் இவர்கள் துன்புறுத்தி வந்தனர்.  இதனால் அவர்கள் அனைவரும் மேல் சாதியினரை எதிர்த்தனர்.  திருவிதாங்கூரில் புலையர்கள் கூட, அவர்களின் தலைவர் அய்யன் காளியின் தலைமையில் நாயர்களின் வயல்களில் ஊதியமின்றி வேலை செய்வதில்லையென்று ஒரு வருடம் பணி முடக்கம் செய்தனர்.  நாயர்கள் உழவு செய்து பார்த்தனர். மீனவன் பனைத்தொழில் செய்தது போலானது இவர்களின் முயற்சி. ஒரு வருட காலத்தில் நாயர்கள், புலையர்களிடம் வந்து சரணடைந்தனர் என்ற வரலாறு திருவிதாங்கூருக்கு உண்டு. அதேபோன்று கிறிஸ்தவதை தழுவிய சான்றேhர்களும், பறையர்களும் உயர் சாதி இந்துக்களுக்கு எதிராக கலகம் செய்தனர்.  மிஷனறிகள் அவர்களுக்கு துணை நின்றனர்.  வெற்றி பெற்றனர்.  ஆள்பலம், அரசுபலம், அதிகாரப்பலம், பணபலம் அனைத்தும் இருந்தும் ஏன் ஆதிக்க இநந்துக்கள் தோல்வியைக் கண்டனர்.  அடக்குமுறை எங்கேயும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. ஹிட்லர்கூட தோல்வியைத்தான் கண்டார்.  பிறகு இராமசந்திரனும் கணேசனும்*  எம்மட்டும்*

1829-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் நாள் திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட நீட்டில் (அரசு ஆணையில்) இந்து மதத்தில் நீடிக்கின்ற சாணார் பெண்டிர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சாணார் பெண்டிர் போன்று குப்பாயம் அணியலாம் என்று கூறப்படவில்லை.  இவர்கள் தருவது தவறhன தகவல்.  அந்த அரசு அறிவிப்பில் இவ்வாறு காணப்படுகிறது.
“… As it is not reasonable on the part of the Shanar women to wear cloths over their breasts, such custom being prohibited, they are required to abstain in future from covering the upper part of their body.  An order (circular) had been issued on the 7th Edavam 989, to all places prohibiting the Shanar women of the families of such Sanars as may have embraced Christianity from wearing cloths, over their breasts, and requiring them to substitute for these the Kuppayam (a kind of short bodice used by their Christians and by Mohamadan native females) but with regard to their (the Shanars) allegation as an authority for wearing clothes over their breasts, that a decree has been passed subsequently by a law court, permitting the Shanar women on the contrary the use of clothes on the upper part of their body.  Such a decision since if it be admitted as establishing a rule, it would be a direct contravention of the order alluded to, cannot but be considered as invalid.  Therefore the order referred to is hereby republished to be held as a document (or authority) in their respect”

(C.M. Augur – Church, History of Travancore – 1902 – Appendix XVIII – Page vii)

இந்த உத்தரவுப்படி இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கு தங்களது மார்பகங்களை மறைப்பதற்கு உரிமை வழங்கவில்லை என்பது வெட்ட வெளிச்சம். இதனால் கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கப் பெற்ற உரிமையும் பறிபோயிற்று.  சுருக்கமாகக் கூறின் ்-
“As it is reasonable on the part of the Sanar women to wear clothes over their breasts, such custom being prohibited, they are requested in future to abstain from covering the upper part of the body, etc”.

“There is a saving clause to this that “those who have embraced Christianity” can wear coopayms like those used by Mohamadan females agreeably to a previous order.  But the degree of the court obtained by Mr. Mead in 1822 giving freedom to Christians to wear clothes anyway they liked was expressly cancelled”

(Ibid – Page – 843).

ஆங்கிலத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளும் தன்மை கூட இவர்களிடம் காணப்படாத நிலையில், ஆய்வு என்ற புனிதப் பணியை இவர்கள் செய்யத் துணிந்தது, அவர்களின் அறியாமையைத்தான் பறைசாற்றுகிறது.  இவர்களின் இத்தன்மையைத்தான் கால்டுவெல்லார்“Dull headed Shanars” என்று கூறுகிறhர்.  இதில் என்ன தவறு இருக்கிறது?

இதனால்தான் மீண்டும் போராட்டம் தொடர்ந்தது.  இப்பேராட்டத்தை மிஷனறிகள் பொறுப்பேற்று நடத்தினர்.  ஆனால் இப்போராட்டத்தைப் பூனூல் அணிந்த சத்திரிய நாடார்கள் எதிர்த்தனர்.  ஆனாலும் சாணார் கிறிஸ்தவர்கள் சற்றும் சளைக்காமல் நாயர்களை எதிர்த்துப் போராடி 1859-ல் வெற்றிவாகை சூடினர்.  “அதன் பயனாக 1859 ஆம் ஆண்டு ஜுலை 26-ம் நாள் அதிகாரபூர்வ அரசு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அனைத்து சமயத்தைச் சேர்ந்த நாடார் பெண்களும், கிறிஸ்தவப் பெண்களைப் போன்று குப்பாமிட்டுக் கொள்ளவோ, மீனவப் பெண்களைப் போன்று கட்டிச் (Coarse) சீலை உடுத்திக் கொள்ளவோ செய்யலாம் என்றும், ஆனால் உயர் சாதிப் பெண்கள் (நாயர், நம்பூதிரிகள், வெள்ளாளர்கள்) மேலாடை அணிவது போன்று அணியாமல் வேறு எவ்விதத்திலாவது மார்பை மறைத்துக் கொள்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என அந்த அறிக்கை தெரிவித்தது”.

(Proclamations from 1858 – 1874 – AD proclamation of 1859 – AD, சமயத் தொண்டர்களும் சமுதாய மறுமலர்ச்சியும் – 1999 – Pயபந 157)

இந்த நீட்டுப்படித்தான் இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கும் புனூல் பூண்ட நாடார் பெண்களுக்கும் சேர்த்து குப்பாயம் அணியும் உரிமை கிடைத்தது. ஆயினும் இவ்வுரிமை தாழ்ந்த சாதிப் பெண்களுக்குக் கிடைக்கவில்லை.  தாழ்த்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு இவ்வறிப்பால் உரிமை கிடைக்கவில்லை.  எனவே இந்த ஆணையைக் கண்டித்து மிஷனறிகள் ஆங்கில அரசிடம் மீண்டும் மேல்முறையீடு செய்தனர்.  சென்னை மாகாண ஆளூனர் சார்லஸ்ட்ரெவிலின் திருவிதாங்கூருக்கான ஆங்கிலப் பிரதிநிதி மால்ட்பியை நேரடியாக அழைத்துப் பேசினார்.  திருவிதாங்கூரில் பெண்கள் உடை அணிவதில் இருக்கின்ற எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்க ஆங்கிலப் பிரதிநிதி மகாராஜாவிடம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  மால்ட்பி இதனைக் குறித்து மகாராசாவிடம் (ஆயில்லியம் திருநாள் ராமவர்மா – 1860 – 1080) பேசினார்.  ஆங்கில அரசின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் ஆங்கில அரசுடனான தங்களது உறவு பாதிக்கப்படும் என்றுணர்ந்த மகாராஜா 1865-ம் ஆண்டு மற்றோரு அறிவிப்பு வெளியிட்டார்.  இதன் மூலம் இந்து கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு மேலாடை அணிவதற்குக் கொடுக்கப்பட்ட உரிமை அனைத்து சாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது.  ஆனால் நாயர் பெண்களைப் போன்று ஆடை அணியும் உரிமை மட்டும் அனைவருக்கும் மறுக்கப்பட்டிருந்தது”.

Neetu Vol. 71/ PP.210/ 211/ Proclamation of 19 Mithunam 1040ME, (1865-AD, Central Archieves, Trivandrum as quoted by Dr. Ivy, Pepeter, supra stated, page 158)

இதில் உங்களுக்கு தெரிந்த பொய் என்ன என்று கூற முடியுமா?  இது சம்பந்தமாக ஒரு விளக்கம் கேட்டு 28.06.2011-ல் நான் திரு. எஸ். ராமச்சந்திரன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.  அதன் சுருக்கம் இவ்வாறhகும்.

“… தோள் சீலைக் கலகம் என்பது தென் திருவிதாங்கூரில் நாடார் சமுதாயத்திற்கு (சாணார்) எதிராக மாலையாளிகள் குறிப்பாக நாயர்கள் தொடுத்த, ஒரு “தொடர்போர்” அல்லது “கலகம்” ஆகும்.  ஆனால் இதில் தெரிந்த பொய்கள்தான் என்ன? தெரியாத உண்மைகள்தான் என்ன? என்பதை 1, 2, 3 … என கோடிட்டுக் காட்டினால் படிப்பதற்கு எளிதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.  பதில் கிடைத்த உடன் மீண்டும் தொடர்ந்து படிப்பேன்”.  (அவர் எழுதிய மேற்படி புத்தகத்தை)

ஆனால் இதற்கான பதில் இன்று வரை உரியவர்களிடமிருந்து கிடைக்கவில்லை.  இவர்கள் ஏன் பதில் எழுதவில்லை?  எழுத முடியாது.  இவர்கள் எழுதுவதுதான் “பொய்” என்றிருக்கும் போது “மெய்” என்ன என்பது அவர்களுக்கே தெரியாது. பிறகு எவ்வாறு பதில் தருவார்கள்* நாடார் மக்கள் இதை அறியமாட்டார்களா?

திருவிதாங்கூரில் கிறிஸ்தவப் பெண்கள் தங்கள் மார்பகங்களை மானமாக ஆடையால் மறைப்பதற்கு, உயர் இந்து சாதிகளுக்கு எதிராக நடத்திய நீண்டகால போராட்டத்தின் போது (1822 முதல் 1865 வரை) சுமார் ஐம்பது ஆண்டுகள் அடைந்த இன்னல்கள், உயிர் இழப்புகள், பொருளாதாரத் தடுமாறல்கள், பள்ளிக்கூடங்கள் எரித்தல்கள், சார்ச்சுகள் இடித்தல், தீ வைத்தல், சிறைவாசங்கள் என்ன? என்ன? என்ற உண்மைகளை அறிந்த பொய்கள்” என்று எழுதுவதற்கு திருவாளர்கள் எஸ்.இராமச்சந்திர ஐயருக்கும், அ.கணேசநாடானுக்கும் அப்படி என்ன வந்தது?  (கிறிஸ்தவர்களின் நல்லதொரு செயல்பாடுகளுக்காக 25 ஏக்கர் நிலத்தை மீடு பாதிரியாருக்கு தானமாக அளித்த உயர் நாயர் சாதியைச் சார்ந்த நெய்யூர் காரியாவிளை கணக்கு இராமன் தம்பியின் கடிதத்தைப் பார்த்தாலே “எது தெரிந்த பொய், எது தெரியாத உண்மைகள்” என்று தெரிந்து கொள்ளலாம்.
“… During that time a Christian Shanar named Essakimaden of Pillepannam and others of Aatoor Adegaram of Kalkulam District complained to the said Dewan against the Pidayacareers of Aathoor burning down two or three of the chapels and for beating, ill-treating and tearing the upper cloth of their Shanar women which they were privileged to wear by the decree of the court”.

(Petition of Kanakku Ramen Tambi of Neyoor Kariyavilai Veedu dated July 3rd. 1009 (M.E)
இதுவும் இவர்களுக்கு ‘தெரிந்த பொய்’ தானோ?  மிஷனறியோ, சாணானோ இதை எழுதியிருந்தால் ஒரு வேளை பொய்தான் என்று கருதலாம்.  ஆனால் இதை எழுதியவர் ஒரு உயர் சாதி இந்து ஆன நாயர் பிரதானி.  இதற்காக இவர் பல வருடம் கடுஞ்சிறை கொண்டார் என்பதும் “தெரிந்த பொய்தானோ”.  இவர்கள் சொல்வது மட்டும்தான் ‘மெய்’ மற்றவையெல்லாம் ‘பொய்’.  இதுதான் ஆரியமாயை என்பது*

பக்கம் 144-ல் கால்டுவெலாரைக் குறித்து ஒரு புரட்டு வரலாறை தந்து அவர் ஒரு பெரிய காப்பி எஸ்டேட் உரிமையாளர் என்ற மாயையை மக்களிடையே பரப்புவதற்கு இவர்கள் துணிந்துள்ளார்.  ஆராய்ச்சியாளர் எழுதுகிறhர்.  “இத்தகைய தொடர் புகழின் விளைவாகக் கி.பி. 1865 ஆம் ஆண்டில் திருவிதாங்கோடு அரசிடம் இருந்து அசம்புமலை என்ற மலைப்பகுதியையே குத்தகைக்கு எடுத்து காப்பி எஸ்டேட் ஒன்றை உருவாக்கினார் கால்டுவெல்” இந்த தகவல் இவருக்கு எங்கிருந்து கிடைத்ததோ?  தெரியவில்லை.  மக்கள் மத்தியில் குறிப்பாக இந்து நாடார்கள் மத்தியில் கிறிஸ்தவ மிஷனறிகளைக் குறித்து பழித்துக் கூறி மிஷனறிகள் சுரண்டல்க்காரர்கள் என்று காண்பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்குடனே தவறhன தகவல்களைக் கொண்டு புரட்டு ஆய்வுகளைத் தருகிறார்.  கால்டுவெல்லுக்கும், காப்பித் தொழிலுக்கும் என்ன சம்பந்தம்.  அந்த தொழில் குறித்து இவருக்கு ஏதாவது முன் அனுபவம் உண்டா என்று கூடக் ஆராயாமல் இவ்வாறு புரட்டுகிறhர்.  உண்மை இதோ்-

திருவிதாங்கூரில் காப்பி விவசாயத்தை அறிமுகப்படுத்திய திரு.தேவ சகாயம் கண்டாக்காவார். இலங்கையில் காப்பித் தோட்டத்தில் சுமார் 10 ஆண்டுகள் கண்டாக்கா பணியாற்றியதில்தான் பெற்ற அனுபவத்தை தனது சொந்த நாடான திருவிதாங்கூரில் புகுத்த வேண்டும் என்ற ஆவலுடன் இங்கு வந்து தனது பூர்வீக ஊரான நாகர்கோவிலில் தங்கினார்.

“காப்பி தொழிலைக் குறித்து முற்றிலும் அறிந்திருந்தபடியாலும் தேவையான மூலதனம் கையில் உள்ளபடியாலும், அவற்றை திருவிதாங்கூர் காடுகளிலுள்ள வளங்களை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்த எண்ணினார்.  ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்ற தமிழ் பழமொழியால் தூண்டப்பட்டு கடல் தாண்டிய முதல் கிறிஸ்தவ வாலிபரான மோட்சக்கண்ணைப் போல், திருவிதாங்கூர் மலைகளில் காப்பி பயிர் செய்யும் தொழிலில் முதலாவதாக ஈடுபட்டவர் திரு. தேவசகாயம்தான்.  1859-ல் அவர் திருவிதாங்கூர் அரசிற்கு விண்ணப்பம் செய்து வரிகட்டுவதற்காக ஜhமீன் வைக்க வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்த பின்னர் நாகர்கோவிலிருந்து 12 மைல் வடக்கே உள்ள அஷம்பு மலையில் 60 ஏக்கர் வனபூமி மானியமாகப் பெற்றhர்.  1861-ல் ஒரு பரந்த பாறையின் மீது ஒரு ஷெட் கட்டினார்.  காட்டை அழித்து வனவிலங்குகளை அங்கிருந்து துரத்திவிட்டு அஷம்பு மலையின் கன்னி மண்ணில் இலங்கையிலிருந்து கொண்டு வந்த காப்பி விதைகளைப் பயிரிட்டார்”.  (பி. தேவசகாயம் – நாகர்கோவிலின் தேவசகாயம் வாழ்க்கை குறிப்பு – 2002 – பக்கம் – 9)

அசம்பு மலையில் யார் காப்பி எஸ்டேட் தொடங்கினார் என்று இப்போது வாசகர்களுக்கு புரிந்திருக்கும். வரலாற்றை புரட்டுவதற்கென்றே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவைப்படுமா? என்று சிந்தியுங்கள்.  இது ஒருவித ஆரியமாயை.  உண்மையை பொய்யாக்குவதற்கு பொய்யானவற்றை புனைதலைத்தான் “ஆரியமாயை” என்று சொல்வது.  இப்பணியால்தான் திராவிடர்களின், குறிப்பாக தமிழர்களின் வரலாறை திரிக்கும் பணியில் ஆரியப் பிராமணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்கள் பாதுகாப்புக்காக ஒரு துணையை கூடவே வைத்துக் கொள்வதும் இத்தகையவரின் தந்திரம் ஆகும்.  அதுதான் இங்கேயும் நடந்தேறியுள்ளது.  குட்டுவாங்குவது நாடான்.  பிராமணனுக்கு நட்டம் ஒரு செம்பு ஜலம்.

திருவிதாங்கூரில் உயர் சாதி இந்துக்கள் சோம்பேறிகள் மட்டுமல்லாமல் உப்பரிகை வாழ்க்கையும் நடத்தி வந்தனர்.  இது ஒரு வித பிரபுத்துவ (Feudalistic) முறையாகும்.  அவர்களது உல்லாச வாழ்க்கைக்கு உழைத்துக் கொடுப்பதற்கு என்று மக்கள் கூட்டம் வேண்டும். தீண்டத்தகாதவர்கள், காணத்தகாதவர்கள் சஞ்சரிக்க சுதந்திரமில்லாதவர்கள் என்று ஒரு கூட்டம் இழிவு இந்துக்கள் இங்கே உண்டு.  இவர்களின் உழைப்பால் உருவாகின்ற அனைத்தும் உயர் சாதியினருக்குச் சொந்தம்.  அதில் தீட்டு இல்லை.  நெல்லை உற்பத்திச் செய்கிறவன் பட்டினி கிடக்க வேண்டும்.  பனைவெல்லம் உற்பத்திச் செய்கிறவன் அதை சாப்பிடக்கூடாது.  பசு வளர்க்கின்றவன் பால் கறக்கக்கூடாது.  அதைப் பருகக்கூடாது.  இப்படி ஒரு கூட்டம்.  இவர்கள் செய்வது ஊழியம் அல்லது இறையிலி என்று வகுத்துக் கொண்டனர்.

இன்னொரு கூட்டம் அடிமைகள் (soil slaves).    இது ஒரு வியாபாரப் பொருள்.  யஜமானனுக்கு அவன் கொத்தடிமை.  சொல்வதை உடனே சிரமேற்கொண்டுச் செய்ய வேண்டும்.  மறுத்தால் தண்டனை மரணம்.  அது உயர் சாதியானின் உரிமை.  ஆக அடிமைகளும், ஊழியக்காரர்களும் மனிதர்கள் அல்ல.  மிருகத்தைவிட கேடுகெட்டவர்கள்.  இது தான் திருவாங்கூரில் நிலையில் இருந்த சமுதாய நிலை.  இந்த சீர்கெட்ட சமுதாய அமைப்பை மாற்றியமைத்தது சீர்திருத்த கிறிஸ்தவம், இதற்கு வித்திட்டவர்கள் மிஷனறிகள் என்றhலும் களமிறங்கி செயலாக்கம் தந்தவர் சுநளனைநவே திவான் கர்னல் மன்றேh ஆகும்.

கர்னல் மன்றோ திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானங்களுக்கு ஆங்கில அரசின் பிரதிநிதி.  இவர் கர்னல் மெக்காலேயைத் தொடர்ந்து, 1810-ல் பொறுப்பேற்றhர்.  அதாவது இராணி கவுரி லச்சுமிபாய் திருவிதாங்கூர் அரசியலாக (1811-1915) பொறுப்பேற்றதற்கு சுமார் ஓராண்டு முன்பாகவே ஆங்கிலப் பிரதிநிதியாக திருவிதாங்கூர் வந்தார்.  இவ்வம்மையார் ராணியாக பட்டம் ஏற்கும் போது 20 வயதே ஆன இளையவர் ஆவார்.  ஆனாலும் அவர்கள் மனத்துணிவு (Brave) மிக்க ராணி ஆவார் என்று திரு. நாகமையா கூறுகிறhர்்
“She was a brave Rani though young, and the following speeh delivered by her when she was placed on the musnud, shows of what stuff she was made”.

(V. Nagam Aiya – Travancore State Manual – Vol.I – 1906 – First re-print – 1990 – Page 456, 457)

ஆய்வாளர்கள் கருதுவது போன்று இவர் துர்பலையல்ல என்பதை அன்னார் செயல்கள் தௌpவுபடுத்துகின்றன.  தவிரவும் இந்த அம்மையார் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது அரசில் நிலவிய நிலைக் குறித்து நாகமைய்யா மேலும் எடுத்துக் கூறுகிறhர்்-
“The new sovereign began her reign with a determination to get rid of her unscrupulous Dewan Ommini Thami, the feeling towards whom was embittered further by her coming to know of his misappropriation of articles and ornaments worth more than half a lae of rupees and belonging to the late Dewan Velu Thampi and of other principal men, which had been confiscated to the state”.

(Ibid – Page 457)

நாட்டின் திவானே கொள்ளையனும், மனசாட்சியில்லாதவனும், பழி பாவங்களுக்கு அஞ்சாதவனுமாக இருந்தமையால், நாட்டை நிர்வகிப்பதில் அரசிக்கு எவ்வளவு சிரமங்கள் இருந்திருக்கும்.  தனது உயிருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில்தான் அவர்கள் கர்னல் மன்றேhவிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறhர்்-
“… I cannot do better than to place myself under the guidance and support of the Honorable East India company, whose bosom had been an asylum for the protection of an infant like Travancore, since the time Sri Padmanabhaswamy had effected an alliance with such a respectable company of the European nation.  To you, Colonel, I entrust every thing connected with my country, and from this day I look upon you as my own elder brother and so I need say no more… As I consider the gentlemen of the company in the light of parents, and myself as their daughter, I have committed my cares and services to them and expect the comfort and happiness of myself and my country from their justice and protection only…

“The Rani wrote that ‘there was no person in Travancore that she wished to elevate to the office of Dewan; and that her own wishes were that the resident should superintendent the affairs of the country as she had a degree of confidence in his justice, judgement and integrity which she could not place in the conduct of any other person”

(Ibid 457, 458)

இதனைத் தொடர்ந்து ராணியார் உம்மிணித் தம்பியை திவான் பதவியில் இருந்து நிக்கினார். அப்பதவிக்கு கொளோனல் மன்றேhவை திவானாக நியமனம் செய்தார்.
“Her Highness the Rani accordingly issued neets under her signature to all the functionaries announcing Ummini Thampii’s removal and the residents assumption of the duties of the administration at her instance… Col: Munoo was appointed on the 18th Edavam 986 M.E. (June 1811 AD)

(Ibid Page 459)

(ஐbனை Pயபந 459)

இப்போது Col. Munro-வுக்கு இரட்டைப் பொறுப்பு வந்துவிட்டது.  ஆங்கில அரசுக்கு நிலுவையில் இருக்கின்ற கப்பத்தொகையும், நடப்பாண்டுகளுக்கான கப்பத்தையும் தொய்வின்றிக் கட்ட வேண்டிய முதல் பொறுப்பு.  அத்துடனே நாட்டை செவ்வனே நிர்வகித்து, கப்பம் கட்டுவதற்கான நிதியையும், நாட்டு நிர்வாகத்திற்கான நிதியையும், இராணியின் குடும்ப பராமரிப்பிற்கான நிதியையும் மற்றும் இந்து கோயில் நிர்வாகம் மற்றும் பிராமணர்கள் ஊட்டுப்புரைச் (Brahmin feeding)  செலவுகள் போன்ற அனைத்து நிர்வாகங்களுக்குத் தேவையான நிதி வருவாயைப் பெருக்கும் இமாலயப் பொறுப்புகளும் கர்னல் மன்றோவின் தலையில் சுமத்தினார்.  சிறுமி என்று இந்தப் போலி ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்படுகின்ற ராணியார்.

அதற்கான ஆணையையும் இராணியார் பிறப்பித்தார்.  அவர் மன்றோவுக்கு எழுதுகிறhர்்-
“All the systems established by my ancestors for the maintenance of the Various charitable institutions, as well as for the protection and advancement of the welfare of my subjects, I request the colonel will see conducted according to mamool and without the least different…

“The subject of paying the Brahmins who had been deputed for Sethusnanam (nrJtpy] jPh]j]jkhly]) (Pilgirimoge to Rameswaram) and who have been complaining of non-payment has already been brought to your notice by me requesting early disbursement of the same”.

(Ibid – Page 459)

நாட்டு ‘மாமூல்’ சிலவுகளில் பெருந்தொகை பிராமணர்களை ஊட்டுவதிலும், அவர்களது புண்ணிய யாத்திரைகளுக்கும் செலவானது.  திருவிதாங்கூரில் பிராமணர்கள் ஊட்டுப்புரை, சுசீந்திரம் கோயில், பத்மனாபபுரம் அரண்மனை (தினம் 1000 பிராமணர்களுக்கு) திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் (தினம் 1000 பிராமணர்கள்) களில் நடைபெற்று வந்தன. இங்கே சாப்பிடுவதற்கென்றே பிராமணர்கள் நாள் கணக்கில் நடந்து செல்வார்களாம்.  வரலாற்று ஆசான் பேராசிரியர் இராஜய்யன் எழுதுகிறhர்்-
“The Telugu Brahmins, by virtue of their religious hold and linguistic affinity exercised an overwhelming influence over the rulers… The rulers entertained them with free food in feeding centres, gifts, positions and lands.  According to Barbosa they never worked but enjoyed eating.  The walked six days journey to enjoy a good meal”.

(History of Tamil Nadu, Past to Present 1995 – Page 126)

இவ்வாறு வெளி மாநிலங்களில் இருந்து திருவிதாங்கூர் வருகின்ற பிராமணர்களை அறுசுவையுடனே உணவு அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.  நீவிர் கூட ஒரு தெலுங்கு பிராமணனாக இருந்து, Col. Munro காலத்தில் திருவிதாங்கூர் வந்திருந்தால் கூட கோட்டயம் சர்க்கரையால் தயாரிக்கப்பட்ட மலையாள பாயாசம் (பிரதமன்) உட்பட அறுசுவை விருந்து சாப்பிட்டிருக்கலாம்.  அது மட்டுமா, இளம் பெண்கள் (நாயர்) மார்பகங்களை தழுவவிட்டு காம சுகம் காணுவதற்குக் கூட உம்மால் முடிந்திருக்கும்.  ஆனால் நீர் கொடுத்து வைக்காதவர்.  அதனால் தான் இன்று தமிழ்நாட்டில் வந்து பிறந்துவிட்டீர்கள்.  அதுவும் இ.வே.ராமசாமி பெரியார் காலத்தில் தோன்றியுள்ளீர். ‘பாம்பை அடிக்காதே, பாப்பானை அடி’ என்ற சித்தாந்தக்காரர் அல்லவா பெரியார்.  எனவே நாங்கள் சொல்லிலாவது அடிக்கத்தானே வேண்டும்.

இப்பேர்பட்ட மாமூல் செலவுகளுக்கு வேண்டிய நிதிக்கு , Col. Munro எங்கே செல்வார்.  இன்று திருவனந்தபுரம் _பத்மநாபர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பல லட்சம் கோடிகள் மதிப்பு வருகின்ற நிதியை மன்றேh காலத்தில் கிடைந்திருந்தால் கூட அவர் நில சீர்திருத்த முயற்சியில் இறங்கியிருக்கமாட்டார். அன்று யார் நிலத்தை வைத்திருந்தனர்.  பிரம்மசுவம் என்ற பெயரில் பிராமணர்களும், தேவசுவம் என்ற பெயரில் கோயில்களும், _பண்டாரவகை என்ற பெயரில் இறையிலிக்கார குடும்பங்களும்தான் வைத்திருந்தனர். இவர்களுக்கு வரிகள் அன்று விதிக்கப்படவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மண்ணின் மைந்தர்களிடத்தில் இருந்து தலைவரி முதல் முலைவரி வரை அரசு வசூலித்தது.  இந்த வரியைக் கூட வசூலித்து, தங்களது Lion’s Share-யை எடுத்துவிட்டு ஒரு சிறு தொகையை மட்டும் அரசு கஜானாவில் சேர்த்தனர். வரி வசூலிப்பதற்காக நாயர்களையும், வெள்ளாளர்களையும் அரசு நியமித்திருந்தது.  தாழ்த்தப்பட்டவர்களை மேலும் கசக்கிப் பிழிவதற்கு Col. Munro இணக்கம் தரவில்லை.  அதனால் அவர் சில சீர்திருத்தங்களை நாட்டில் அமல்படுத்தி, அரசின் வருவாயைப் பெருக்கினார்.

அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் நிர்வாகச் சீர்திருத்தமும், வரி வசூல்முறைச் சீர்திருத்தமும் ஆகும்.  மன்றோ திவானாக பதவி ஏற்பது வரை நாட்டு நிர்வாகத்தை, வலிய சர்வாதிக்காரியக்காரர்கள், சர்வாதிக்காரியக்காரர்கள், காரியக்காரர்கள், புரோவர்த்திக்காரர்கள் போன்றோர் நிர்வகித்து வந்தனர்.  காரியக்காரர்களுக்கு உதவியாக கணக்குப் பிள்ளைகளை நியமித்திருந்தனர்.  இவர்கள் காரியக்காரர்களைவிட அதிக அதிகாரங்களை கையிலெடுத்து மக்களை பிழிந்து பணம் பறிக்கவும், அரசு வருவாயைக் கொள்ளையடிக்கவும் துணிந்தனர்.  இதனால்தான் அரசு கஜானாவில் பணம் வந்து சேரவில்லை.  எனவே மன்றோ, வலிய சர்வாதிக்காரியக்காரர் மற்றும் சர்வாதிக்காரர் போன்ற பதவிகளை ஒழித்துக் கட்டினார்.  தவிரவும் காரியக்காரர்கள் கையாண்டு வந்த Judicial மற்றும் Magisterial அதிகாரங்களை குறைத்து, அவர்களது அதிகாரத்தை வருவாய் வசூலுக்கு மட்டுமாக பயன்படுத்தப்பட்டது.  இதனால் பிரிக்கப்படுகின்ற வரிகள் அனைத்தும் அரசு கஜானாவுக்கு வர வேண்டியதாயிற்று.  வரிப்பணம் அரசு கஜானாவுக்கு வந்தது.  இதனால் உயர் சாதியினருக்கு வந்து கொண்டிருந்த பணவரவு நின்று விட்டது.  அதனால் அவர்களின் உப்பரிகை வாழ்க்கை சரிந்துவிட்டது.  இவர்களின் கிறிஸ்தவ குரோதத்துக்கு முதற்காரணம் ஆக இது அமைந்தது.
“Colonel Munro therefore first aimed at remodeling the service and establishing order and regularity in the administration.  He introduced a system of corporal punishments in the case of erring public servants.  The servants so punished were not dismissed but were asked to continue and work on right lines… He went on circuit throughout the length and breadth of the land from Parur to Thovalai, checking abuses and punishing miscreants.  The resuls was that in the course of a year order and discipline restored”.

(V. Nagam Aiga – Vol.I – Page: 461)

இவ்வாறு துணிச்சலுடன் அரசு ஊழியர்களை கைகாரியம் செய்தமையால் நாட்டின் வருவாய் பன் மடங்கு உயர்ந்தது.  அதே வேளையில் நாயர் மற்றும் வெள்ளாளர்களின் கொள்ளை முற்றிலும் நின்று விட்டது.  இதனால் தான் இவர்களின் கிறிஸ்தவ குரோதம் உருவானது. ஆய்வாளர்கள் ஆய்நது கூறியிருக்கின்ற விதமாக கிறிஸ்தவ குரோதம் இங்கே உருவாகவில்லை.

மன்றோவின் அடுத்த சீர்திருத்தம் நீதித்துறையின் பால் திரும்பியது.  அன்று வரையிலும் காரியக்காரிடம் குவிந்திருந்த நீதிமன்றம் சார்ந்த மற்றும் தண்டனை சார்புடைய அதிகாரங்களை எடுத்து, அதற்கென்று நிறுவப்பட்ட மேல்முறையீடு நீதிமன்றங்களை நிறுவி ஆங்கில நாட்டு முறைப்படியான நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டும் தண்டனை வழங்கப்பட்டது.  இது நடைமுறையில் இருந்த ஓர வஞ்சனை நீதி நிர்வாகத்துக்கு முடிவுக் கட்டியது.  இதனாலும் உயர் சாதியினரின் லஞ்ச வகையிலான வருவாய் நின்று போயிற்று. இதனாலும் உயர் இந்து சாதியினர் கிறிஸ்தவர்கள் மீது குரோதம் கொண்டனர்.

தவிரவும் வருவாய்த்துறையை சீர் செய்யப்பட்டது.  காரியக்கார் என்று இருந்த பதவியை ‘தாசில்தார்’ என்ற புதயி பதவியாக மாற்றி அமைத்தார்.  இவருக்குக் கீழ் ஒரு கணக்கரும் (Accountant)/ ஏராளம் provertikars அதாவது பார்வத்திக்கார்களையும் நியமித்தார். இவர்களின் தலையாய கடமை நிலங்களுக்கு விதிக்கப்பட்ட நிலவரியை வசூலித்து அரசு கஜானாவில் அடைப்பது மட்டும் ஆகும்.  இதனாலும் உயர் இந்துக்களது நிலங்களுக்கு எல்லாம் நிலவரி விதிக்கப்பட்டு, அதை தவறாமல் வசூலிக்கப்பட்டது.  இதுகாறும் வரிகளைக் கட்டாது உல்லாச வாழ்வு நடத்தி வந்தவர்கள் உடைந்து போனார்கள்.  இதனாலும் கிறிஸ்தவர்கள் மீது இவர்கள் கடும் சினம் கொண்டனர்.

கர்னல் மன்றோவின் இத்தகைய விவேகம் சார்ந்த சீர்திருத்தங்களால் நாட்டின் நிதிநிலை சீரடைந்தது.  வருவாய் உயர்ந்தது.  நாட்டில் மாமூல் காரியங்கள் தங்கு தட்டுப்பாடின்றி நடந்தேறின. ஆங்கிலேயர்களுக்கான கப்பத்தொதைகளும் உரிய காலங்களில் கட்டுவதற்கு முடிந்தன. இந்த சூழ்நிலையில்;
“Munro then abolished several vexatious taxes such as the tax on the inheritance of property, the capitation tax on all males from 16 to 60 except Nayars, Moplas and Artizans the tax on nets and fishermen, taxes on Christian festivals, etc.

(Ibid – Page 463)

இவ்வாறு 110 வித வரிகளை பல நிலைகளாக மாற்றப்பட்டது என்று 1864-ம் ஆண்டு அறிக்கை தகவல் தருகின்றது.  இவைகள் அனைத்தும் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயங்களான சாணார்கள், ஈழவர்கள், பறையர்கள், புலையர்கள், மீனவர்கள் போன்றேhர்களிடமிருந்து அரசுக்காக ஆதிக்க இனத்தவர்கள் வசூலித்து வந்தவைகள் ஆகும்.  இதனால் இந்த உயர் இனத்தவர்களின் வருவாய் நின்று போயிற்று.  அதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் களிப்படைந்தனர்.

இந்த ஆணையின்படி, கிறிஸ்தவத்துக்கு மாறின சாணார் பெண்கள் தங்கள் மார்பகங்களை குப்பாயம் போன்ற மேலாடையால் மறைத்துக் கொண்டு ஒழுக்கமாக நடமாடலாம் என்று தனி ஆணையை வழங்கினார்.  இதனால் கிறிஸ்தவ சாணார் பெண்கள் மார்புகளை மறைத்ததுமல்லாமல், அதற்கு மேல் ஒரு முண்டையும் அணிந்தனர்.  இந்த மேல்முண்டைத்தான் “தோள்சீலை” என்று ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர்.  இந்த செயல்தான் மேல் சாதி இந்துக்களான வெள்ளாளர்களும், நாயர்களும் களமிறங்கி சாணாட்டிகளின் மேலாடைகளை உரிந்தெறியத் தொடங்கினர். இதனால் மேல் சாதியரின் கிறிஸ்தவ காழ்ப்புணர்வை வெளிப்படையாக காட்டுவதற்கு காரணமாயிற்று.

இவைகளுக்கு எல்லாம் மேலாக ‘ஊழியம்’ மற்றும் ‘விருத்தி’ப் பணிகளை ஒழித்ததுதான் அவர்களால் சீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்த கொடுமையை முடிவுக்குக் கொண்டு வருவதில் மிஷனறிகள் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டனர்.  கர்னல் மன்றோவின் முயற்சியைத் தொடர்ந்து 1815-ல் கிறிஸ்தவத்தைத் தழுவிக் கொண்ட கீழ் சாதியினர். இந்துக் கோவில்களுக்கு ஊழியம் செய்யத் தேவையில்லை என்று ஆணை வழங்கப்பட்டது.  தவிரவும் கிறிஸ்தவர்களாக மதம் மாறின சாணார்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் யாருக்கும் ஊழியம் செய்ய வேண்டியதில்லை என்றும் அரசு ஆணை பிறப்பித்தது.

இந்த ஆணைகளால்தான் உயர் சாதி இந்துக்கள் பெரும் சினம் கொண்டனர்.  அவர்களது சொந்த நலன் கருதி வாங்கப்பட்டு வந்த ஊழியம் அதாவது கூலி கொடுக்காமல் வேலை வாங்குவது நின்று போனதால் இவர்களது சுகபோக வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.  இதனால் வயல்களில் வெறும் கஞ்சிக்கு மட்டும் வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை.  கோயில்களுக்கு குறிப்பாக யானைகளுக்கு ஓசியில் தீனி கிடைக்கவில்லை.  இதற்கெல்லாம் முதற்காரணம் கிறிஸ்தவமும், அதை இங்கே கொண்டு வந்து தாழ்த்தப்பட்டவர்களிடம் பரப்பி, அவர்களை விழிப்படையச் செய்தது மிஷனறிகளே எனக் கண்டு, கிறிஸ்தவத்தையும், மிஷனறிகளையும் திருவிதாங்வரில் வேரறுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே உயர் சாதி இந்துக்களின் கலகத்துக்கு காரணமே தவிர, ஆய்வாளர் கூறுகின்ற காரணங்களால் அல்ல.

கிறிஸ்தவ தாக்கத்தினால் நாயர்கள் மற்றும் வெள்ளாளர்களின் அதிகாரமும் செல்வாக்கும் சரிந்தது.  இதனால் அவர்களின் செல்வச் செருக்குக்கு இறக்கம் கண்டது.
“Moreover, the temporal blessings which Christianity everywhere of necessity confers, in the spread of education and enlightment, liberty, civilization, and social improvement, were exemplified to all in the case of the converts already made”

(Samuel Mateer – Land of charity – 1870 – Page 268)

மேலும்,
“The economic changes of the late 19th century, and straight jacket of the new legal system had ruined many taravads.  There was growing evidence of a transfer of wealth from Nayers to Christians and even Avarna Hindus.  Such a transfer coupled with the spread of egalitarian ideas among the same groups, posed a threat to the social position and local political dominence of Nayars which few could ignore”.

(Robin Jeffery – The Deeline of Nayar dominance – 1976 – Page 267)

தவிரவும், திருவிதாங்கூரில் நாயர் பட்டாளத்தை, நிர்மூலமாக்கியவர் வேலுத்தம்பிதளவாய் ஆவார்.  ஆனால் கர்னல் மன்றோவின் ஆட்சி காலத்தில் நாயர் படைப்பிரிவை மீண்டும் தொடங்கினார்.
“The reorganization of the Nair Brigade was started by Colo: Munro, the resident of Travancore… By proposing the reorganisation in April 1817, Munro wanted to increase the strength and efficiency of the Rance’s troops and to place an European officer in command.  The proposal was to increase the strength the of the small body of Nair infantry to one thousand two hundred as against the old Army of seven hundred men”

(Dr. S. Krishnan Nadar – The military history of Travancore – 1993 – Page 67)

ஆகையால் நாயர்களுக்கு Col. மன்றோ மீது பகை பாராட்டுவதற்கு எந்த முகாந்தரமும் இல்லை என்பது இதனால் அறியலாம்.

உள்நாட்டு அடிமைமுறை ஒழிப்பால் நிலச்சுவான்தாரர்களுக்கு விவசாயப் பணிக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுவது சரியானதல்ல.  திருவிதாங்கூரில் அடிமைமுறை என்பது, “தல்லுவதற்கும், கொல்லுவதற்கும்” யஜமான்களுக்கு உரிமையுள்ள முறையாகும்.  அவர்கள் மாடுகளைப் போன்று யஜமானவர்களுக்கு அல்லும் பகலும் உழைக்க வேண்டும்.  மிருகங்களுக்கு நான்கு கால்கள். அதைப்போன்று அடிமைகளுக்கு இரண்டு கால்களும், இரண்டு கால்களுமாக நான்கு கால்கள். யஜமான் பார்வையில் இவர்களும் மிருகங்கள்தான்.  இத்தகைய வேதனையை ஒழித்ததில் ஆய்வர்களுக்கு ஏன் இவ்வளவு ஆதங்கம்? கொத்தடிமைகளைப் போன்றது கூட அல்ல இந்த அடிமைமுறை.  நரக வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்களை, சமூகத்தில் கேவலமாக நடத்தப்பட்டவர்களை, விடுவித்தது பிராமணர்களுக்கு, நாயர்களுக்கு மற்றும் வெள்ளாளர்களுக்கு தங்கண்ணா சிரமங்களை உருவாக்கிற்று என்பது உண்மையே.  விடுதலையடைந்த அடிமைகள் அத்தனை பேரும் வெளிநாடுகளுக்கு ஓடிப் போகவில்லை.  அங்கேதான் இருந்தனர்.  ஆனால் இந்த யஜமான்களுக்கு விடுவிக்கப்பட்ட அடிமைகளை கூலி கொடுத்து மீண்டும் பணியிலமர்த்துவதற்கு மனம் வரவில்லை.  கூலி கொடுத்தால் அவர்கள் வேலை செய்ய தயாராக இருந்தனர். அப்படியும் வேலை செய்யவில்லையென் றால்தான் ஆளில்லை என்ற பிரச்சனை எழும்.  இந்த இறுமாப்புக்காரர்களுக்கு ஒரு ஆணவ நினைப்பு.  எவ்வாறேனும் பட்டினியை தீர்ப்பதற்கு விடுவிக்கப்பட்டவர்கள் தங்களிடம் திரும்பி வர வேண்டுமே தவிர வேறு வழி அவர்களுக்கில்லை, என்று எண்ணினர். ஆனால் விடுவிக்கப்பட்டவர்கள் எவரும் அவர்களிடத்திற்கு திரும்பவில்லை.  மிஷனறிமார்களிடத்தில் அவர்கள் புகலிடம் கண்டனர்.  சிலரை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று பணி கொடுத்து, ஊதியம் கொடுத்து, குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து சீரிய நிலையில் பராமரிக்கப்பட்டனர்.  விடுதலைப்புலித் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூதாதையர்களும் இவ்விதமாக நெல்லையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள்தானே* அவர்கள் அங்கே சென்று உணவுக்கு கையேந்தினார்களா? நல்ல ஊதியம் பெற்று உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள்தானே. அவர்கள் தமிழர்கள் என்பதனால்தானே கேரளத்தில் பாங்கோடு என்ற இந்திய இராணுவ ஆயுதக்கிடங்கிலிருந்து, மலையாளி ஜவான்களால் அழிப்பு ஆயுதங்களை இரவு வேளைகளில் குமரி மாவட்டம் வழியாக, ஜெட் விமானங்களில் அனுப்பி வைத்து அழித்ததே இந்திய அரசு.  இங்குள்ள தமிழன் வாழாவெட்டியாக இவைகளையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்ததை ஆய்வாளர்கள் அறிந்ததுதானே.  இப்பேர்பட்ட மனிதநேயமற்றப் பணியை அன்று ஆங்கில மிஷனறிகள் செய்யவில்லையே* அவர்களுக்கு உதவத்தானே செய்தனர். நாயர்களும், வெள்ளாளர்களும், பிராமணர்களும் வயலில் இறங்கி உழவுத்தொழில் செய்ய வேண்டியதுதானே.  ஓட்டலில் தொழிலாளி பணிக்கு வரவில்லையென் றால் முதலாளியே அப்பணியைச் செய்வதில்லையா?  ஆனால் அவர்களுக்கு விவசாயம் செய்யத் தெரியாது.  உழுவித்து உண்பவர் அல்ல நாஞ்சில்நாட்டு வெள்ளாளன் மற்றும் நாயர்கள்.  இவர்கள் உழுது உண்பவர்கள்.  இவனுக்கு வெள்ளாளன் அந்தஸ்து வேறு*

நாஞ்சில்நாட்டு வெள்ளாளனைக் குறித்து ஆய்வாளருக்கு என்ன தெரியும்?  சொல்லுங்கள் பார்க்கலாம்.  இவர்களின் உண்மை வரலாறுதான் என்ன?

வெள்ளாளர்கள் என்றால் வேளாண்மைத் தொழில் செய்பவர்கள் என்றுதான் பொருள்.  உழுது உண்பவன் உழவன்.  அவன்தான் வெள்ளாளன்.  ஆனால் உழுவித்து உண்பவர் யார்?  வெள்ளாளனா?  இல்லையே.  அவன் நிலச்சுவான்தார்.  உழுவித்து உண்பவர்கள் அனைவரும் வெள்ளாளர்கள் என்றால் நிலச்சுவான்தாரர்கள்(Feud Lords)  அனைவரும் வெள்ளார்கள்தானே.  பிராமணர்கள் உழுவித்து உண்கிறார்கள்.  நாயர்கள் உழுவித்து உண்கிறார்கள்.  நாடார்கள் உழுவித்து உண்கிறார்கள்.  ஈழவர்கள் உழுவித்து உண்கிறார்கள்.  கேரளத்து முதலிகள் உழுவித்து உண்கிறார்கள். இசுலாமியார்கள் உழுவித்து உண்கிறார்கள்.  அப்படியானால் இவர்கள் அனைவரும் வெள்ளாளர்கள் தானே*  ஆனால் நாஞ்சில் நாட்டில் மட்டும் உழுவித்து உண்கிறவர்களை வெள்ளாளர்கள் என்று கூறுவானேன்?

நாஞ்சில்நாடு என்பது மங்கலம் என்ற ஊர் தொட்டு மணக்குடிக் காயல் வரையில் பரந்து கிடக்கின்ற நெற்களஞ்சிய இடம் ஆகும்.  சங்க காலம் தொட்டு இப்பூமியை வெள்ளாளர்கள் என்று முதலிலும், பிறகு பறையர்கள மற்றும் சாம்பவர் என்ற இனத்தாருக்குச் சொந்தமானதாகும்.  அவர்கள்தான் இங்கே தொன்றுதொட்டு நெல் விவசாயம் செய்து வந்தனர்.  பெருங்காலஙகளாக இந்நிலம் பாண்டிய மன்னர்களின் இறையான்மையில் இருந்து வந்தது.  பிந்திய காலங்களில் சோழர்களுக்கும், சேரர்களுக்கும் இவ்விடம் கைமாறியது.  முகலாயர்களின் ஆட்சி தென்னகத்தில் உருவான வேளையில் இது அவர்களுக்குச் சொந்தமாயிற்று.  முகலாயர்களை விரட்டிவிட்டு, விசய நகரத்தார் 1379-ல் மதுரையில் தங்களது ஆட்சியை நிறுவினர்.  அவர்களது ஆட்சி 1406 வரை நீடித்தது.  இந்த வேளையில் நாஞ்சில் நாடும் விஜய நகரத்தார் இறையான்மையின் கீழ் வந்தது.  கி.பி 1371-க்குப் பிறகு மதுரையில்  எந்த பாண்டியனும் அரசாளவில்லை.  (கே. ராஜய்யன் – பக்கம் – 117).

இவர்களுக்குப் பிறகு நாயக்கர்கள் ஆட்சி மதுரையில் தொடங்கியது.  மதுரையில் முதல் நாயக்க மன்னனாக விசுவநாத நாயக்கம் (1529 – 1564) அரியணையேறினான்.  அரியநாத முதலியாரின் துணையுடன் விசுவநாத நாயக்கன் தென்பாண்டி நாட்டில் சிதறி வாழ்ந்து சிற்றாட்சி நடத்தி வந்த திருநெல்வேலி பஞ்ச பாண்டியர்களை தோற்கடித்து பாண்டிய நாட்டை மதுரை தொட்டு குமரி வரை தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான்.  இதற்கு அரியநாத முதலியார் பெருந்தொண்டாற்றினர்.  இவர் தனது இருப்பிடமாக திருநெல்வேலியை அமைத்துக் கொண்டார்.  இவர் தொண்டை மண்டலத் தலைநகரமான காஞ்சிபுரம் அருகில் அமைந்த மப்பேடு என்ற பகுதியைச் சார்ந்தவர் ஆவார்.

“Viswanatha Nayaka faught a series of wars against the Tamil powers, Ariyanatha Mudali who betrayed the cause of the Tamils, ably assisted his Telugu Master in his wars against the Pancha Pandyas of Thirunelveli and in the suppression of the local powers”.
(Prof: K. Rajayyan, Ph.D. – History of Tamil Nadu, Past to present 1995
– Page 145)

திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு விசுவநாத நாயக்கன் சார்பில் திருநெல்வேலியையும், நாஞ்சில்நாட்டையும் அவன் நிர்வகித்து வந்தான்.  திருநெல்வேலிச் சீமையில் நீர்வளமும், நிலவளமும் நிறைந்த தாமிரபரணி ஆற்றுப்படுக்கையிலும், நாஞ்சில் நாட்டில் பழையாற்றுப்படுக்கையிலும் தனது பிரதிநிதிகளை அதிபதிகளாக அமர்த்தி வரி வசு{லுக்கு ஏற்பாடு செய்தார்.  இதற்காக மப்பேட்டில் இருந்து தனது உறவினர்களை முதலில் மதுரை சோளவந்தானுக்கும், அங்கிருந்து திருநெல்வேலிக்கும், அங்கிருந்து நாஞ்சில் நாட்டிற்கும் குடிபெயர்த்தி தங்க வைத்தார்.  அவ்வாறு குடி அமர்த்தப்பட்டவர்களின் தலைவன் அழகப்ப முதலியார் ஆவார்.  இவர் அழகியபாண்டியபுரத்தில் தனது தலைமையிடத்தை அமைத்துக் கொண்டு, பெரிய வீட்டு முதலியார் என்ற சிறப்புப் பெயருடன் நாஞ்சில் நாட்டை ஆளூமைச் செய்தான். இவருக்கு துணைபுரிவததற்காக 12 ஊர்களில் 12 முதலியார் துணை ஆளூனர்களை நியமித்து, நாஞ்சில் நாட்டு விவசாயிகளிடமிருந்து திறை வசூலித்து நாயக்கர் மன்னர்களுக்கு செலுத்தி வந்தனர்.  இவர்கள் மதுரை நாயக்க அரசின் அதிகாரிகள் என்ற நிலையில் பெரும் செல்வாக்கையும், அதிகாரத்தையும் பெற்றிருந்தனர்.  இவர்கள் மக்கள்த்தாயிகள் ஆகையால், நாஞ்சில்நாட்டு நிற்வாகம் தந்தை வழி மக்கள் உரிமை இந்த 12 பிடாகைக்காரர்களுக்கும் கிடைத்தது.  இவர்கள் அனைவருமம் உழுவித்துண்டு வாழ்ந்தனர்.  இவர்கள் வரவிற்கு முன்பு நாஞ்சில் நாட்டு பாசன நிலங்களுக்கு சொந்தக்காரர்களான பறையர்களும் அவர்களது ஊர் தலைவர்களான சாம்பவர்களும் மதுரை நாயக்கர்களின் பிரதிநதிகளான முதலியார்களுக்கு காராளர்களாயினர்.  அதாவது உழவர்கள் ஆயினர்  காலப் போக்கில் இவர்கள் நில அடிமை (land slaves) களுமாயினர்.

“இவ்வாறாக நாஞ்சில் நாட்டில் அரியநாத முதலியாரால் குடியேற்றப்பட்ட வெள்ளாளர்கள் அன்று மிகக் குறைவாகவே காணப்பட்டதால், வலியப் பறித்த தமிழ் நிலங்களில் நேரடியாக தாங்களே இறங்கி வெள்ளாழ்மை செய்ய இயலாது என்ற நிலை வெறுப்பைத் தருவதாயிருந்தது.  எனவே மண்ணைப் பறித்தனரே அந்தக் தமிழரையே, அவர் தம் சொந்த நிலங்களிலேயே குடியானர்களாகவும், பண்யைடிமைகளாகவும்,கொத்தடிமைகளாகவும் அமர்த்திப் படைவழியில் ஒருவந்தேறி பொருளியலை கட்டியமைக்க வேண்டியிருந்தது”.
(குண – மண்ணுரிமை – 2,000 பக்கம் 206)

இந்த முதலியார்கள் நாஞ்சில் நாட்டில் 12 பிடாகைகளில் அமர்ந்து காரார்களிடமிருந்து ஊழியப் பணியும் திறையும் பிரித்து வந்தனர்.  இவர்கள் உயர் சாதியென்று பிரகடனப்படுத்தி அரசு மற்றும் ஆளூமைத் தாங்கலுடன் ஒரோப் பிடாகைக்கும் தனிக்கொடி, கோட்டு வாத்தியங்கள் அந்தஸ்துகளும் அமைத்துக் கொண்டனர். இவர்களுக்கெல்லாம் தலைவனாக அழகியபாண்டியபுரம் வலிய வீட்டு முதலியாரான அழகப்ப முதலியார் கோலோச்சிவ ந்தார்.  இன்றும் இந்த பாரம்பரியம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.  இவர்கள் நாஞ்சில் நாட்டுக்கு வந்தேறிகள்தான் என்று நாஞ்சில் நாடன் என்ற ஆசிரியர் “நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை” என்ற புத்தகத்தில் பக்கங்கள் 22, 23-ல் குறிப்பிடுகின்றhர்.  இவர்களில் மக்கள் வழி, மருமக்கள் வழி என இரண்டு பிரிவினர் இப்பொழுது உண்டு.

“மருமக்கள் வழி வெள்ளாளர் என அழைக்கப்படும் பிரிவினர் பூர்வ குடிகளாகவும், மக்கள் வழி வெள்ளாளர் பாண்டிய நாட்டிலிருந்து வந்து குடியேறியவர் என்றும் கருத வலுவான சமூகக் காரணங்கள் உண்டு.  ‘வந்தெட்டி, வரத்தெட்டி’ என்றொரு பிரயோகம் நாஞ்சில் நாட்டு வெள்ளார்களுக்கிடைய மக்கள் வழியைக் குறிக்க இன்றும் வழக்கில் உள்ளது.  பிற பகுதிகளில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது இதன் பொருள்”.
(நாஞ்சில் நாடன் (க. சுப்பிரமணியன்) – நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் வாழ்க்கை – 2003 – பக்கம் 22, 23)

இதிலிருந்து நாஞ்சில் நாட்டு மக்கள் வழி வெள்ளார்கள் (கறுப்பர்கள்) நாஞ்சில் நாட்டுக்குச் சொந்தக்காரர்கள் அல்ல என்பதும், அவர்கள் உண்மை வெள்ளாளர்கள் அல்ல என்பதும், அவர்கள் அரியநாத முதலி வகையறhக்களான “முதலியார்” கள் ஆவர் என்பதும் வெளிச்சப்படுகிறது.  இவர்கள் உழுவித்து உண்கின்ற நிலச்சுவான்தாரர்கள் ஆவர்.  கி.பி. 16-ம் நு}ற்றhண்டில் பாண்டிய நாட்டில் நாயக்கர் ஆட்சி அமைந்த வேளையில் இங்கே குடியேறியவர்களும், ஆட்சியாளர்களால் தாங்கப்பட்டு இறையாண்மையை பிடித்துக் கொண்டவர்களுமாவர்.

ஆனால் பூர்வகுடி வெள்ளாளர்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்பாக நாஞ்சில் நாட்டு மண்ணின் மைந்தர்களாக இருந்து வேளாண்மைத் தொழில் செய்து வந்த தமிழர்கள் ஆவர். மன்னர் மார்த்தாண்டவர்மா நாஞ்சில் நாட்டை 1754-ம் ஆண்டு ஆற்க்காட்டு நவாபிடமிருந்து கிரயம் பெற்ற பின்பு இவ்விடங்கள் திருவிதாங்கூர் நாட்டிற்கு சொந்தமாயிற்று.  ஆயினும் இதன் எல்கை கன்னியாகுமரி வரை அன்றும் பரவி நிற்கவில்லை.  இதனால் இதன் எல்கை கடுக்கரை முதல் கன்னியாகுமரிக்கு அடுத்த மணக்குடி வரை கட்டப்பட்டள்ள கோட்டை வரையில்தான் இருந்தது  இதற்கும் தென் கிழக்குப் பாகம் ஆர்க்காட்டு நபாபுடன் தான் இருந்தது.  இவ்விடங்களை பொதுவாக “புறத்தாய நாடு” என்று அழைக்கப்பட்டது.  இந்த புறத்தாய நாட்டையும், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலையும், மன்னர் ராமவர்மா (தர்மராஜ;) நபாவிடமிருந்து விலைக்கு வாங்கினார்.  எனவே இன்றைய அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளைத் தாலுகாக்கள் திருவிதாங்கூர் விலைக்கு வாங்கிய இடங்களாகும்.  ஆகையால் அவ்விடங்களில் வாழ்கின்ற பாண்டியநாட்டு நாடார் மக்களும், வெள்ளார்களும் பாண்டிய நாட்டு பண்பாடுகளை இங்கே தொடர்ந்ததில் ஆச்சரியப்படுவதற்கில்லை.  இருப்பினும் திருவிதாங்கூருடன் இணைந்த பிறகு அவர்களுக்கும் தீண்டாமை, காணாமை, தொடாமை மற்றும் மார்பு மறைக்காமை போன்ற சனாதனத் தீங்குகள் உருவாயின.  இவைகளுக்குச் சான்று கன்னியாகுமரி தாலியறுத்தான் சந்தையில் இந்து சமய நாடார் பெண்களின் தேள் சேலையை மேல்சாதியான் உரிந்ததும் அவர்கள் அணிந்திருந்த தாலியை அறுத்ததையும் கூறலாம்.  இதை செய்தவர்கள் பஞ்சலிங்கபுரம் பிராமணர்களும் அவர்களின் ஏவலர்களான வெள்ளாளர்களும், செட்டிமார்களும் ஆகும்.

இது தவிர ஐயா முத்துக்குட்டி குடும்பத்தாரையும் இதற்கு சான்றாகக் கூறலாம்.  ஐயாவின் தாயாரும், மனைவியும் மார்பகங்களை மறைக்காமல் வாலிபரான முத்துக்குட்டியை தொட்டில் பாடையில் திருச்செந்தூர் முருக சந்நிதிக்கு சுமந்து செல்கின்ற காட்சியை சான்றhக்கலம்.  இந்த படம் கன்னியாகுமரியில் குமரி அனந்தனின் பண்பாட்டு மையத்தில் சுவர் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.  தவிரவும் ஐயாவின் மதப்பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்ட பெண்களும் மார்பகங்களை மறைக்காமலேதான் பங்கேற்றதற்கான ஆதாரங்களை முன்பு கூறினோம்.  எனவே ஆய்வாளர்கள், சத்திரிய நாடார்களின் பெண்கள் மேலாடை அணிந்துதான் உலா வந்தனர் என்று கூறுவது திரவிதாங்கூரைப் பொறுத்தமட்டும் சாத்தியமில்லை.  இதைச் சான்று பகரும் விதமாக அக்காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்லது வரைபடம் எதையாவது தந்து உங்கள் வாதத்தை நிலைநாட்டுங்கள், பார்க்கலாம்*

விலைக்கு வாங்கி திருவிதாங்கூருடன் இணைக்கப்பட்ட நாஞ்சில் நாட்டில் 12 பிடாகைக்காரர்களான முதலியார்கள் தங்களை வெள்ளாளர்கள் என்று பிரகடன்படுதம்தியவர்கள் மக்கள்த் தாயிகளாவர்.  இன்றும் அவர்கள் மக்கள் வழி பிள்ளைகள் என்றுதான் அழைக்கப்படுகின்றனர்.  ஆனால் இன்னொரு பெரும் பிரிவு பிள்ளைமார்கள் மருமக்கள்த் தாயிகளாக இருப்பதற்கும், திருவிதாங்கூர் அரச குடும்பத்தாருடன் இறுகிய நட்பு பாராட்டபடவும் காரணம் என்ன?  என்று யாரும் ஆய்ந்து எழுதவில்லை.  இருசாரரையும் ஒன்றhக்கி நாஞ்சில் நாட்டு வெள்ளாளன் என்றே கூறியும், எழுதியும் வருகின்றனர்.

மக்கள் தாய் வெள்ளாளர்கள் என்பவர்கள் காஞ்சிபுரம் மப்பேட்டு முதலியர்கள் என்பதை முன்பே குறிப்பிட்டோம்.  அவர்கள் நாஞ்சில் நாட்டில் ஒரு வித ஏகாதிபத்திய ஆட்சிமுறையை கடைபிடித்து வந்தனர்.  மதுரையில் வடுகர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு இவர்கள் தனிக்காட்டு ராஜhக்களாக 12 பிடாகைகளிலும் கோலோச்சினர்.  இவர்களுக்கென்று ஒரு சபை (நாஞ்சில் நாட்டார் பிடாகைக்காரர் தேசீய சபை) இருந்தது.  இச்சபை வருடத்துக்கு ஒருநாள், அதாவது டிசம்பர் மாதம் சுசீந்திரம் தாணுமாலையன் கோயில் திருவிழாவின் போது, சுசீந்திரத்தில் கூடி, கீழ் சாதியினர் சாதிக் கட்டுப்பாடுகளை ஒழுங்காக கடைபிடித்து வருகிறhர்களா என்பதைக் குறித்து ஆய்ந்து, கட்டுப்பாடுகளை மீறுபவர்களை மரண தண்டனை வரை அளித்து வந்தனர்.  திருவிதாங்கூர் அரசர்கள் கூட தங்கள் விருப்பங்களை செயல்படுத்த முடியாத அளவிற்கு இந்த சபை செல்வாக்கு மிகுந்ததாக இருந்தது.  (டாக்டர். ஐ.வி. பீட்டர் – சமயத் தொண்டர்களும் சமுதாய மறுமலர்ச்சியும் – 1999 – பக்கம் 53-95)

இந்த சபை திருவிதாங்கூர் அரச குடும்பத்துடன் பகைத்துக் கொண்டு, தன்னாட்சி நடத்தி வந்தனர்.  இந்நிலையில் மன்னர் மார்த்தாண்டவர்மா அரசர் பட்டமேற்றhர்.  முதல் வேலையாக, அரசு குடும்பத்துக்கு எதிரிகளாக நின்று செயல்பட்டு வந்த எட்டு வீட்டுப் பிள்ளைகளையும் மாடம்களையும் (நாயர் தறவாடுகள்) பிராமணப் போற்றிகளையும் குல மறுத்தார்.  அவர்கள் உடமைகளை நாடார் ஆசான்களுக்கு பட்டயமிட்டுக் கொடுத்தார்.  இவர்கள் பெண்களை மீனவர்களுக்கும், நில அடிமைகளுக்கும், மறவர்களுக்கும் பிடித்துக் கொடுத்தார்.  இந்த நிகழ்ச்சியில் நாஞ்சில் நாட்டில் நில அடிமைகளாக இருந்த சாம்பவர் மற்றும் பறையர் சமுதாயத்திற்கு பெருமளவில் மாடம்பிக்களின் (நாயர் தறவாடுகள்) பெண்களை தானமாகக் கொடுத்தார்.  இந்த கலப்பு சமுதாயமே நாஞ்சில் நாட்டுப் பிள்ளை சமுதாயமாக பிறகு உறுவாயிற்று.  நாயர் பழக்க வழக்கங்களை இப்புதிய சமுதாயம் கடைபிடித்தது.  மார்த்தாண்டவர்மா மருமக்கள்தாய முறையை கடைபிடித்தமையால், அவரால் உருவான இந்த புதிய சமுதாயமும் மருமக்கள்த் தாயிகளாக உருமாறியது. அதனால் அரச குடும்பத்துடன் இவர்கள் விசுவாசமாகவும், அம்மச்சி உறவு முறையை ஏற்படுத்திக் கொண்டும் சமூகத்தில் உயர்ந்தவைகளாக பரிணாமித்தனர்.  அவர்களது பேச்சு மொழியாக மன்னர் மொழியான மலையாளத்தைக் கடைபிடித்தனர்.  ஆனால் மக்கள் வழி வெள்ளாள முதலியார்கள் தமிழையே தாய் மொழியாகக் கொண்டனர்.  இவ்வாறு நாஞ்சில் நாட்டில் மருமக்கள் வழி வெள்ளாளர்கள் என்ற புதிய சமுதாயம் உருவாயிற்று.  இந்த சமுதாயம் மக்கள் வழி சமுதாயத்தாரிடம் கொள்வினையோ கொடுப்பினையோ வைத்துக் கொள்வதில்லை. மக்கத்தாயிகள் மருமக்கள்த் தாயியரை விட தாழ்ந்த நிலையினர் என்று கூறி அவர்களை தள்ளி வைத்தனர்.  இந்த முறை இன்றும் தொடர்கிறது.   (நேர்முகப் பேட்டி – திரு.

வேலுத்தம்பி, மன்னர் பாலராமவர்மருக்கு எதிராக கலகம் செய்தபோது, மக்கள்த்தாய வெள்ளாளப் பண்ணைகள் (பிடாகைக்காரர்கள்) அவருடன் இணைந்து செயல்பட்டனர்.  மருமக்கள்தாயிகள் தம்பியின் வேண்டுகோளை நிராகரித்தனர்.  இந்திய சுதந்திரப் போராட்டவேளையில் கூட திருவிதாங்கூர் மன்னரின் நிலைக்கு எதிராக, திருவிதாங்கூர் ஸ்டேட்டு கங்கிரசில் தங்களை இணைத்துக் கொண்டு மக்கள் வழியினர் பேராட்டங்கள் நடத்தினர்.  இந்த மக்கள் வழியினரின் அட்டூழியங்களைக் குறித்து கவிமணி தேசீகவினாயகம் பிள்ளை இவ்வாறு கூறுகிறhர்்-

“நஞ்சிலும் கொடியவன் நாஞ்சில் நாட்டான்” என்று.

இந்த மக்கள்த் தாய வெள்ளாளர்கள் குறிப்பாக பிடாகைத் தலைவர்களின் கல் நெஞ்சுகளைக் குறித்து பெயர் அறியப்படாத ஒரு கவிஞன் இவ்வாறு பாடுகிறhன்
‘தாழக்குடியில் பைரவனும், தமிழ்தேரூரில் சந்திரனும், கழம்
பெருத்தமுளை நல்லு}ர் குறும்பன் அணஞ்சபெருமாளும்
நாளையிவர்கள் தலை தெறிக்கின் நன்றhய் வாழும் நாஞ்சில் நாடே’.
(எஸ். அலக்ஸ் குரூஸ் முத்தையா – மானவவீர நாடும் ஆற்றங்கரை பள்ளியும் – பக்கம் 32)

இப்பாடல் வாயிலாக பைரவன், சந்திரன் மற்றும் அணஞ்சபெருமாள் போன்ற பிடாகைத் தலைவர்களின் (மக்கள் வழி வெள்ளாளர்கள்) கொடுமைகளால் மக்கள் எவ்வாறு துயரமடைந்தனர் என்பதை உணர்த்துவதாக உள்ளது.  மேலும், பைரவனின் மனிதநேயமற்றச் செய்கையை இந்த ஆய்வாளர்கள் அறிந்து கொண்டால் அவர்களுக்கு வக்காலத்து வாங்கி அனுதாபப்படுவதை தவிர்த்திருப்பார்.

தாழக்குடி நிலக்கிழார் பைரவன்.  நாஞ்சில் நாட்டில் இவரது வயலில் முதல் விதை விழுந்த பிறகே மற்ற நிலங்களில் விவசாயம் தொடங்க வேண்டும் என்றெhரு எழுதப்படாத நியதி இருந்தது.  அவ்வேளையில் ஊராரும், பண்ணை அடிமைகளும், ஆண்களும், பெண்களும் பண்ணைக் களத்துமேட்டில் வருகை தந்திருக்க வேண்டும்.  இப்பண்ணையில் மாடத்தி என்ற பறையர் சமுதாய அடிமைப் பெண்ணும், கணவர் புலமாடனும் வேலை செய்து வந்தனர்.  அன்று அவள் நிறைமாத கர்ப்பிணி.  சு{லை இறக்கும் சமயம்.  எனவே அவளால் களத்துமேட்டுக்கு வர இயலவில்லை.  அங்கே அவளைக் காணததால் ஆத்திரமடைந்த பைரவன் கர்ஜpத்தான்.  ‘எங்கே மாடத்தி’?  இது கேள்வி ் ‘அவள் நிறைமாத கர்ப்பிணி.  தவிர நோய்வாய்ப்பட்டு இருக்கிறhள்’ இது புலமாடனின் ஈனக் குரலில் வந்த பதில்.  அடுத்து ‘இழுத்து வாங்கடா, மாடத்தியை’.  மாடத்தி இழுத்து வரப்பட்டாள்  ‘கட்டுங்கடா அவளை எருதின் மறுபக்கம்’.  பைரவனின் இந்த ஆணை நிறைவேற்றப்பட்டது.  புலமாடனைப் பார்த்து “ஓட்டுடா ஏரை” என்ற இடியோசை பைரவனின் வாயில் இருந்து புறப்பட்டது.  ஏரை நடத்தினான் கணவன்.  மனைவி ஏரின் ஒருபக்கம் இழுக்கத் தொடங்கினாள். உலகமே இந்த அநியாயத்தைப் பார்த்து அதிர்ந்து நின்றது.  சு{ரிய பகவான் கூட மேகங்களில் சென்று மறைந்து கொண்டதாம்.,  ஒரு சுற்று ஏர் வந்தது.  அடுத்த சுற்றுக்கு ஏர் நீங்கவில்லை.  மாடத்தி சுருண்டு கீழே விழுந்தாள்.  உயிர் அவளிடத்திலிருந்து விடை பெற்றுக் கொண்டது.  இதுதான் அன்றைய அடிமைகளின் நிலை.  வெள்ளானின் கல் நெஞ்சுக்கு வேறு சான்று வேண்டுமோ?

இன்னும் சொல்லலாம்.

இராஜாக்கமங்கலம்  நாடார்கள் நெருக்கமாக வாழும் பெரிய கிராமம்.  அதன் அருகாமைச் சிற்றூர் முருங்கைவிளை.  இந்த இரண்டு ஊர்களுக்குமிடையில் ஒரு சிறிய தெரு, தெற்கூர் என்று பெயர்.  இவ்வூரில் குடியிருப்பவர்கள் அனைவரும் பிடாகை வெள்ளாளர் வழி வந்தவர்கள்.  நாடார்களிடமிருந்து வரி பிரிப்பது இவர்களது பணி.  வரி பிரிப்பதற்காக ஒருநாள் இந்த வெள்ளாளன் நாடார் குடிசை ஒன்றுக்குச் சென்றhர்.  இவ்வீட்டுத் தலைவி பச்சிளம் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தாள்.  பண்ணையாரைக் கண்ட உடனே எழுந்து நின்று மரியாதை செலுத்த அவளால் இயலவில்லை.  முலைப்பால் குடித்துக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை உதறிவிட்டு எழுந்து நிற்க எந்த தாயக்கு மனம் வரும்.  இதை பெருத்த அவமானம் என்று கருதிய வெள்ளாளன், தனது தடிக்கம்புக்காரர்களை அழைத்து வந்து, கணவன், மனைவி பச்சிளம் குழந்தை மூவரையும் குடிசை வீட்டினுள் தள்ளி, கதவை வெளியில் பூட்டிவிட்டு நெருப்பு வைத்து எரித்தனர்.  குழந்தையின் மரண ஓலத்தை இவன் கேட்டும் இவனுக்கு இரக்கம் பிறக்கவில்லை.  அவர்களின் ஓலம் அடங்கியது.  பூனு}ல் போட்ட நாடான், பனையேறிச் சாணான், கள்ளத்தரசு ஆக்கறைச் சாணான், யாவரும் இந்த கொடுமையைத் தட்டி கேட்பதற்கு மனதிடம் இல்லாமல் தான் அன்றும் நின்றிருந்தனர்.

இது போன்ற கொடுமைக்கார பிடாகை வெள்ளாளனை ஒரே நாளில் அடக்கி ஒழித்துக் காட்டிய பெருமை கர்னல் மன்றேh என்ற ஆங்கில கிறிஸ்தவனுக்கே உரித்தாகும்.  கர்ணல் மன்றேh, இந்த வெள்ளாள – நாயர் கூட்டணிக்காரர்களுக்கு அநியாயம் செய்து விட்டாராம்.  அவர்களது அடிமைகளுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துவிட்டாராம்.  அதனால் அவர்களது வாழ்க்கைத்தரம் சீர்கெட்டுவிட்டதாம்.  சொந்த நிலங்களில் இறங்கி வேளாண்மை செய்ய இயலாமல் வெள்ளார்களும். நாயர்களும் தங்கள் வாழ்வை இழந்துவிட்டனராம்.  விசனப்படுகிறhர்கள் எஸ். இராமச்சந்திரனும், அ. கணேசனும்* அடிமைகளை விடுவித்துக் கடத்திக் கொண்டு இலங்கைக்கு சென்ற விட்டனராம் கிறிஸ்தவ மிஷனறிகள்.  உண்மைதான்.

திருவிதாங்கூரில் அன்று அரசு அடிமைகள் என்றும், தேவஸ்தான அடிமைகள் என்றும், தனி நில உடமைக்காரர்களின் அடிமைகள் என்றும், தனிநபர் அடிமைகள் என்றும் பல்வேறுவித அடிமைகள் துன்பப்பட்டிருந்தனர்.  இவர்களுக்கெல்லாம் விடுதலை வாங்கித் தந்தனர் மிஷனறிகள்.  இதற்கு காரணம் மனிதநேயம் அல்லது சுயலாபநோக்கு என்று எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.  இந்திய நாட்டிற்கு ஆங்கிலேய ஆட்சியில் இருந்து இந்திய தேசீய காங்கிரஸ் தலைவர்கள், குறிப்பாக மகாத்மாகாந்தி, ஜவஹர்லால்நேரு போன்றேhர் சுதந்திரம் வாங்கித் தந்தார்கள்.  அதனால் இந்திய மக்களை அரசு அனாதைகளாக விட்டு விட வேண்டும் என்பதல்ல பொருள்.  அவர்களுக்கு வாழ்வளிக்க வேண்டிய கடமை தலைவர்களுக்கு உண்டல்லவா?  அந்த கடமை கிறிஸ்தவ மிஷனறிக்கு விடுவிக்கப்பட்ட அடிமைகள்பாலும் உண்டு அல்லவா?

அடிமைகள் விடுதலையடைந்த பிறகு அரசாவது அவர்களுக்கு வாழ்வளிக்க முன் வந்திருக்க வேண்டும்.  அவர்களுக்கு முன் போலவே பணி கொடுத்து அதற்கான கூலியையும் கொடுத்திருந்தால் அடிமைகள் சொந்த நாட்டிலேயே வளமடைந்திருப்பர். அரசுதான் இதைச் செய்ய முன் வராவிட்டாலும் நிலச்சுவான்தாரர்களான நம்பூதிரிகள், நாயர்கள், வெள்ளர்களாவது முன் வந்து ஊழியத்திற்கு உகந்த ஊதியம் கொடுத்திருந்தால் அவர்களும் இங்கே வாழ்ந்திருப்பார்களே.  ஏன் அவர்கள் அதைச் செய்ய முன் வரவில்லை.  உழைப்புக்கு ஊதியம் கேட்ட தேவசகாயம் நாடாரை அரசு அதிகாரிகளே அன்று அடித்துக் கொல்லவில்லையா?

அனைவரும் அடிமைகளை கைவிட்ட நிலையில் அவர்களது உயிர் காக்கும் பொருட்டு, அந்தப் பொறுப்பை மனிதாபிமான முறையில், தங்கள் கடமையாகக் கருதி மிஷனறிகள் அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டனர். அனைவரையும் உள்நாட்டில் தங்க வைத்து பணி கொடுப்பதற்கு மிஷனறிகளுக்கு என்ன வசதி இருந்தது.  எனவே அவர்களுக்கு வாழ்வளிக்க அங்கே பணி செய்வதற்கு அழைத்துச் சென்றனர்.  பணியும் கொடுத்தனர்.  ஊதியமும் கொடுத்தனர்.  கல்வியும் கொடுத்தனர்.  அதனால் அந்த நாஞ்சில் நாட்டு அடிமைகள், இன்று இலங்கையில் தனி தமிழ் ஈழம் வேண்டும் என்று கோரும் நிலைக்கு வளர்ந்து நிற்கின்றனர்.  அவர்களின் தலைவர்களை இந்திய அரசும், கேளரத்து மலையாளிகளும், பிள்ளைகளும் சேர்ந்து கொன்று குவித்ததை தமிழ் மக்கள் அறியமாட்டார்களா?  இதில் உங்கள் நிலைதான் என்ன? என்று எழுதவில்லை.  இது ஒருவேளை உண்மையாக இருக்குமோ?

இவர்களின் காமாலைக் கண்களுக்கு குற்றவாளியாகக் காணப்படுகின்ற கர்ணல் மன்றேhவை திருவிதாங்கூர் அரச குடும்பத்தாருக்கும், சாதாரண மக்களுக்கும் அவரைச் சிறந்த சீர்திருத்தவாதியாகத்தான் காண்கின்றனர்.  திருவிதாங்கூர் திவானாக மூன்று ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மட்டுமே பணியாற்றினார் மன்றோ அவர்கள்.  ஆயினும் இவரை திருவிதாங்கூர் இன்றும் ஞாபகம் வைத்துள்ளது, நன்றியுடன்.

“He has left an imperishable name in the Hearts of the people of the Travancore population for justice and probity. The most ignorant pesant or cooly in Travancore knows the name and fame of Munrole Sahib… He worked with a single hearted devotion to the interests of the state. He knew the country and admired to conservative institutions… He was dewan for three years and refused to take any kind of remuneration… He was British resident for ten years and these ten years were years
of great activity and progresss… Colonel Munro lived to a good oldage and died on the 26th January 1858 in his scotch home. When to sad news reached India, the 56 Travancore Government desired to perpetuate his memory in some useful way and consulting the wishes of his daughter putup lights in all the lakes and backwaters of the state for the use of the travelers and called them Munro Lights”…
என்று புகழ்கிறhர்கள் (திரு.வி. நாயம்மய்யா.  ஏ.  V. Nagam Aiya – Travancore State Manual Vol – I, – 1906 – Reprint, 1999 – Page 472/ 473)

ஆனால் ஐயரும், நாடாரும், நாயர்கள் மற்றும் வெள்ளாளர் பக்கம் நின்று கொண்டு மன்றேhவை இகழ்கிறதைப் பார்க்கும்போது, இதன் பின்னணி என்ன என்று நம்மால் உணர முடிகிறது.  இந்திய நாட்டிற்கு குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிறிஸ்தவர்கள் செய்த நன்மைகளை சீரணித்துக் கொள்ள இயலாத இந்த ஆரியமாயைக்காரர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி கிறிஸ்தவர்களை சிறுமைப்படுத்துவதில் இன்பம் காண்கின்றனர், பூரிப்படைகின்றனர். மனித இனத்துக்கு பயன் அளிக்கக்கூடிய எதையாவது உலகளவிலானாலும் சரி, இந்தியா அளவினாலும் சரி இந்த ஆரிய வாதிகளோ அல்லது அவர்களின் மூதாரையோரோ, கண்டுபிடித்துள்ளார்களா?  அவைகளை வரிசைப்படுத்துவதற்கு இவர்கள் முன்வருவார்களா?  கேரளாவில் இருந்து வெளியிடப்பட்ட “Inventions changed the world – Sisco Books Publication” என்ற புத்தகத்தில் சுமார் 250 கண்டுபிடித்தங்களின் விவரம் தரப்பட்டுள்ளன.  இதில் இந்தியாவின் பங்கோ இரண்டுதான்.  ஒன்று வயோலின் என்ற நரம்புவாத்தியம், மற்றது நூல் நூற்கின்ற சர்க்கா மட்டுமே.  மற்றவைகள் அனைத்தும் அயல் நாட்டினரே, ஆவர்.  இவைகளில் கிறிஸ்தவர்களின் பயனளிப்பு ஏராளம்.  இப்படி நிலைமையிருக்கும்போது இந்துத்துவாக்கள் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதன் நோக்கம் என்ன?  இதன் நோக்கம் பிற்போக்குவாதத்தையும், ஆரியமாயையும் திரும்பவும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் ‘சமயம்’ என்ற கருவி மூலம் தந்து மக்களிடையே பிரிவினையையும், அடிமைத்தனத்தையும் மீண்டும் கொண்டு வந்து பிராமணர்களின் ஆதிக்கத்தை புனர் நிர்மாணிக்கும் பணியை பிறசமய எதிர்ப்பு என்ற போர்வையில் செயல்படுத்தி வருகின்றனர்.  இந்தியாவில் கிறிஸ்தவர் சென்றடையாத மாநிலங்களில், சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் சட்டீஸ்கர் மாநிலத்தில் கல்வி அறிவு இன்னும் எட்டவில்லை.  அங்குள்ள எம்.எல்.ஏ-வுக்கு எழுதப்படிக்க கூட தொpயாதாம்.

“… பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்று சட்டீஸ்கர்.  தண்டிவாடா மாவட்டத்தில் உள்ள நாகராஸ் கிராமம்தான் மிகவும் பின் தங்கிய கிராமமாகக் கருதப்படுகிறது.  இந்தக் கிராமத்தைச் சார்ந்த யாருக்குமே எழுதப் படிக்கத் தெரியாது. இந்த கிராமத்தை சேர்ந்த காவாசி லாகாமாதான் 1998-ம் ஆண்டு முதல் தண்டீவாடா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.  ஆனால் இவருக்கு எழுதப்படிக்க தொpயாது”.

அவர் கூறியதாவது்-

1998 ஆம் ஆண்டு முதல் முதலாக நான் போட்டியிட்ட போது வாக்களிக்க செல்லுமாறு என் தந்தையிடம் கூறினேன்.  வாக்களித்துவிட்டு வந்தவரிடம் ‘எதற்கு வாக்களித்தீர்கள்’ என்று கேட்டேன். பா.ஜ.வின் தாமரை சின்னம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.  அதில் வாக்களித்தேன் என்றhர்”.  (தினகரன் – நாகர் – 23.02.2009 – பக்கம் 14)

இதுபோன்ற நிலை கிறிஸ்தவர்கள் ஊழியம் செய்கின்ற மாநிலங்களில் இல்லை. அறியாமை மக்களிடத்தில் மீண்டும் உருவானால் ஆரியமயமாக்காரர்களின் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டலாம் என்ற எண்ணத்திhல், கிறிஸ்தவத்தைக் கொச்சைப்படுத்துகின்ற முயற்சியில் இந்த ஆய்வாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.  எந்த நோக்குடன் களமிறங்கினாலும் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அதைவிட்டு விலகமாட்டார்கள் என்பது உறுதி.  சுதந்திர இந்தியாவில் மீண்டும் மலம் சுமக்க எவனும் முன் வரமாட்டான் என்பதை இவ்வித வரலாற்றுப் புரட்டர்கள் மனதில் நிறுத்துவது நல்லது.  எங்களைப் போன்ற அறிவாளிகள் இன்னும் அனேகர் இருக்கின்றனர். உங்களது பொய்யையும் புரட்டல்களையும் சம்மட்டியால் உடைத்தெறிவதற்கு*

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களை கிறிஸ்தவன் என்றும் இந்து என்றும், இரு பிரிவினர்களாக உருவாக்கி மோதவிட்டு வேடிக்கைப் பார்க்கின்ற உயர் சாதியினரைப் போன்று, பாண்டி நாட்டிலும் (தமிழகத்தில்) நாடார் மக்களை ஆதிக்கவர்க்கம் என்றும், அடிமைவர்க்கம் என்றும், அதாவது பணம் படைத்த சத்திரிய நாடான் என்றும், பனைத் தொழில் செய்கின்றவனை சாணார் நாடான் என்றும் இரண்டாகப் பிளந்து அங்கேயும் ஆரியர்களின் ஆதிக்கத்தை உருவாக்குவற்காக எடுக்கப்பட்ட முதற்முயற்சியே இந்த ஆய்வு நூல்.

இந்த பிரிவினைக்கு வித்திட்டது 1982-ல் மண்டைக்காட்டில் நடந்த கலவரமாகும். இக்கலவரம் கிறிஸ்தவ மீனவர்களுக்கும் சில இந்து நாடார்களுக்குமிடைய நடந்த பிணக்கு ஆகும்.  ஆனால் இதை மதக்கலவரம் என்று தமிழக M.G.R அரசு ஊதிப் பெருக்கி குமரி மாவட்டத்தில் அமைதியைக் கெடுத்தனர்.  இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவ சமுதாய எழுத்தாளர் nஜh. தமிழ்ச் செல்வன் எழுதுகிறhர்்-

“இந்த கலவரத்துக்கு காரணகர்த்தா நாயர்களும் குறுப்புகளுமே.  இந்து நாடார்களை கிறிஸ்தவ நாடார்களிடமிருந்து பிரிப்பதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்ட மதவெறி வன்முறைக் கலவரம்தான் மண்டைக்காட்டு கலவரம்.  அதற்காக இந்து நாடார்களை பகடையாக பயன்படுத்திக் கொண்டனர்.  இந்து நாடார்கள் இந்த சு{ட்சுமத்தை அப்பொழுது புரிந்து கொள்ளவில்லை”.  (nஜh. தமிழ்ச் செல்வன் – மறு பக்கத்தின் மறுபக்கம் – 2011, பக்கம் 42)
இதே முயற்சிதான் இப்பொழுது தமிழ்நாட்டில் நடந்தேறி வருகிறது.  ஆனால் ஒன்றை உறுதியாகக் கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். கிறிஸ்தவ சாணார்களுக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு.  ஒருவர் இந்து நாடார்கள், மற்றவர் இசுலாமியர்கள்.  விவிலியத்தின் அடிப்படையில் இஸ்லவேலர் இசுரவேலர்களுக்கு மூத்த அண்ணன்.  அவன் எங்களை கைவிடமாட்டான்.  சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே நல்லது என்று சான்றோர் கூறுவர்.  அவர்களிடம் நாங்கள் அடைக்கலம் கோருவோம்.  அவர்களும் எங்களுக்கு அடைக்கலம் தருவர்.  இதற்குத் துணையாக ஒரு நாடாரை கீழ் நிலையில் தன்னுடன் வைத்திருக்கின்ற எஸ். இராமச்சந்திர ஐயரின் சாணக்கியம் நாளடைவில் பயன் தரலாம்.
தமிழகத்தில் சாதி அடிப்படையில் பார்ப்பதனால் நாடார் சமுதாயம் (இந்துவும் கிறிஸ்தவனும் சேர்ந்து) சுமார் 20 விழுக்காடுகள் வரும்.  அதனால் தமிழ்நாட்டின் ஆட்சி அரங்கில் இவர்களின் பங்கு வெறும் 5 விழுக்காடுகள் கூட வருவதில்லை.  இதையும் முற்றிலும் அழித்து விடுவதற்குத்தான் நாடார்களிடையே மேலும் பிரிவினையை சாதி சமய அடிப்படையில் உருவாக்குவதற்கான முதல் முயற்சிதான் இந்த “தோள்சீலைக்கலம்் தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்” என்ற புரட்டுப் புத்தகம் வாயிலாக தொடங்கப்பட்டுள்ளது.  சில இந்து நாடார்கள் வட்டாரத்தில் இந்த நூலுக்கு வரவேற்பாம் ் ஐயருக்கும் நாடாருக்கும் நல்ல பணவரவு.  அவர்களுக்கு எங்கள் பதில் சம்மட்டி அடியாக இறங்கும்.
இப்புத்தக நூலாசிரியரிடம் நான் “தெரிந்த பொய்கள் மற்றும் தெரியாத உண்மைகள் தான் என்ன?” என்று தெளிவுப்படுத்தி எனக்கு ஒரு சிறு குறிப்பு தரக் கேட்டேன்.  இன்னும் அவர்களால் தர இயலவில்லை.  எனவே இவர்களது நோக்கம், நாடார் மக்களிடையே ‘பணத்தின்’ அளவுகோலை பிரித்தாளும் முதல் முயற்சி இந்த நு}ல் என்பது உறுதியாகிறது.  மறுக்க முடியுமா?

இங்கே தரப்படுகின்ற விளக்கங்கள் நு}லாசிரியர்களின் தௌpவுக்காக மட்டும் எழுதப்படவில்லை.  விஷயம் தெரியாத நாடார் சமுதாய மக்கள், இப்பேர்பட்ட குழப்பவாதிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கங்கள் தரப்படுகின்றன.
தவிரவும், சத்திரிய நாடான், சாணான், நிலைக்கார நாடான், வைசிய நாடான், சு{த்திர நாடான் என்றெல்லாம் பிரித்துப் பகமை வளர்ப்பது நாடார் சமுதாயத்தின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும்.  பாதிப்படைந்துவிட்டது என்பதை புள்ளி விவரங்கள் திரட்டிப் பார்த்தால் கண்டு கொள்ளலாம்.  சமுதாய வளர்ச்சி பணத்தின் வளர்ச்சி மட்டுமல்ல என்பதை நாம் அறிவது நல்லது.  இச்சமுதாய மக்கள் எத்தனை பேர் அரசு நிர்வாகத்துறையில் உயர் பதவிகளில் உள்ளனர் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால்தன் சமுதாயம் வளர்ந்துள்ளதா? அல்லது பின் தங்கியுள்ளதா என்று துல்லியமாகக் காண முடியும்.  தமிழ்நாட்டில் தோராயமாக 20ு நாடார் மக்கள் இருப்பதாக சில புள்ளி விவரங்கள் கூறுகின்றன.  அவ்வாறhயின் அரசில் அனைத்துத் துறைகளிலும் குறைந்தது 20 விழுக்காடு பதவிகளிலும் நம்மவர்கள் வீற்றிருக்க வேண்டும்.  அதற்கு மேலும் நம்மவர்கள் இருந்தால்தான் நாம் வளர்ந்துள்ளோம் என்று பொருள்.  தற்போதைய நிலைமையை கணக்கிட்டுப் பார்த்தால் 5% பதவிகளில் கூட நம்மவர்கள் இல்லாததையே காணலாம்.  தமிழ்நாடு சட்மன்றத்தில் கூட நம்மவர்கள் சுமார் 47 பேராவது இருந்திருக்க வேண்டும்.  ஆனால் எத்தனை நாடார் M.L.A க்கள் உள்ளனர்.  வெறும்      பேர்கள்.  நமது பங்கைக் கூட கேட்பதற்கு வக்கில்லாத நாடார்கள அவர்களையே அழித்துக் கொள்ள முனைப்புடன் செயல்படுகின்ற சம்பத் போன்றவர்களை நாம் ஊக்குவிப்பது அறிவுடமையல்ல*  அறிவீனம்.
திரு. கணேசன் அவர்களே இராமச்சந்திர ஐயரைக் கேட்டு பாடம் கற்றுக் கொள்ளும்.  திரு. இராமச்சந்திரன் பிராமண சமுதாயத்தைச் சார்ந்தவர் ஆவார்.  பிராமண சமுதாயத்தில் பல உட்பிரிவுகள் உண்டு.  நம்பூதிரிப் பிராமணன், ஐயர், ஐயங்கார், போற்றி, பட்டர் மற்றும் கோபாத பிராமணன், ஷடபாத பிராமணன், தைத்திரிய பிராமணன் போன்ற பிரிவுகள் உண்டு.  ஆனால் பிராமண சமுதாயம் என்று வரும்போது இவர்கள் அனைவரும் ஒருமுகமாக நின்று செயல்படுகிறhர்கள்.  அதனால், மக்கள் தொகையில் வெறும் 2 % வருகின்ற இவர்கள் அனைத்து பதவிகளிலும் முதல் நிலையில் இருக்கிறார்கள். சமுதாய வளர்ச்சிக்காக ஒட்டுமொத்தமாக அவர்கள் ஒருங்கிணைந்து சேவை செய்வதால்தான் அந்த வளர்ச்சி நிலையை எட்டினர். அவர்கள் என் றாவது முற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வர வேண்டும் என்று விரும்புகிறார்களா?  ஆனால் நீங்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தாருங்கள் என்று கேட்பதிலிருந்தே சமுதாய அளவில் நீங்கள் இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பதைத்தானே வெளிப்படுத்துகிறது.  இது குறித்து ஆய்வு செய்து, சிந்தித்து சமுதாயம் வளர்ச்சி அடைவதற்கு உகந்த வழிமுறைகளைக் கூறhமல் தேவையற்ற முயற்சிகளில் இறங்குவது அறிவு சார்ந்த கோட்பாடு ஆகாது.

ஐயரே, நாடாருக்கு புத்திமதியாவது கூறக்கூடாதா?